Monday, January 31, 2011

மிரட்டுராய்ங்கண்ணா!

தலைப்பைப் பார்த்து மிரளாமல் வந்ததற்க்கு முதற்க்கண் என் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இது மொக்கைங்கோவ். ச்ச்சும்மா உங்களை மிரட்டுவதற்க்குத்தான்(??!!)

நீங்கள் அறுபதுகளில் பிறந்தவர்களா? அல்லாதவர்களாக இருந்தாலும் பரவாயில்லை, இது உங்களை கண்டிப்பாய் மிரளவைக்கும் என நம்புகிறேன். தினமும் கம்ப்யூட்டரை பாக்ரீங்கல்ல, கண்ணு நல்ல கண்டிஷனா தான் இருக்கும்.

ரைட்டு, இப்ப அப்படியே கீழ்வரும் வரிகளை வரிசைப்படி படித்துவிட்டு கடைசியில் காணும் 'கை'யில்(ஹைப்பர்லிங் தான் சார்!)கிளிக்குங்கள் மிரள்வதற்க்கு..


1.- கடைசியில் இருப்பதை கிளிக்கினால் வரும் விண்டோவில் "click me to get trippy" என்று இருப்பதை கிளிக்கவும்.

2.- கிடைக்கும் படத்தின் மையத்தை குத்துமதிப்பா 30 வினாடிகள் தொடர்ந்து பார்க்கவும்.

3.- மவுசிலிருந்து கையை எடுக்கக்கூடாது சார். 30 வினாடிகளுக்குப்பின் அப்டியே உங்கள் மவுஸ்பிடித்த கையை முதலில் பார்க்கவும். கண்டிப்பாய் ஷாக்காவீர்கள், ஆகவில்லை என்றால்?

4.- இன்னொரு 30 வினாடிகள் பார்த்துவிட்டு நீங்கள் ஆணாயிருந்தால் பக்கத்திலிருக்கும் உங்கள் மனைவியை பார்க்கவும். ஒருவேளை பெண்ணாயிருந்தால் பக்கத்தில் இருக்கும் உங்கள் கணவரை பார்க்கவும். கண்டிப்பாய் மிரள்வீர்கள்!

இங்கே சுட்டவும்..மிரட்டுராய்ங்கண்ணா!

ரைட்கிளிக் பண்ணி (Option வந்தால்!), புதிய விண்டோவுக்கு தள்ளவும், திரும்பி வந்து கமெண்ட் எழுத வசதியாக இருக்கும். (ஹி... ஹி.... ஹி....)

இதுக்கு பேரு "cenesthetic hallucination" ங்களாம், யாருக்கு தெரியும், நான் அப்பாவிங்க.

அன்புடன், வசந்தா நடேசன்.

Sunday, January 30, 2011

பாஸ்போர்ட்டை பாத்துக்குங்க எசமான்!

வீட்டிற்க்கு வந்தும் கொஞ்சம் சொந்தவேலைகள் தொடர்வதால் இனி இந்த வாரம் கொஞ்சம் இதுபோல் சில மொக்கைகள் தான்.. தாங்கிக்கொள்ளுங்கள் நண்பர்களே.

கீழ்வரப்போவது வெளிநாடுகளில் வாழ்பவர்கள் கண்டிப்பாய் தெரிந்திருக்கவேண்டியது. எப்டில்லாம் ஏமாத்துரனுக பாருங்க சார்? இது கொஞ்சநாள் முன்பு வந்த ஈமெயில், பதிவு எழுதப்போவதை உத்தேசித்து பதுக்கி வைத்திருந்தது. இன்னும் கொஞ்சம் கைவசம் உள்ளது, இன்று இது மட்டும்.. ஒரு நாளைக்கு ஒரு மொக்கை போராதோ? ஆங்கிலத்தில் வந்ததை அப்படியே கொடுத்துள்ளேன்! ஸ்பெல்லிங் மிஸ்டேக், கிராமர் மிஸ்டேக்லாம் பாக்கலீங்ணா..

=============================================
Be Careful At the Indian Airports,
This is a well-organized conspiracy by Indian Immigration, Police,
Customs and Air India staff with networking at all the Indian
International Airports. Be watchful whenever you give your passport to
Immigration/ Customs/Air India staff.. The passport can be easily
tampered and can create trouble to you. They have found easy way of
making money from NRIs.


This is the way it works. At the time of the passenger's departure, if
the passenger is not looking at the officer while he is stamping the
exit, the officer very cleverly tears away one of the page from the
passport. When the passenger leaves the immigration counter, the case
is reported on his computer terminal with full details. Now all over
India they have got full details of the passenger with Red Flag
flashing on the Passport number
entered by the departure immigration officer. They have made their
money by doing above.

On arrival next time, he is interrogated. Subject to the passenger's
period of stay abroad, his income and standing etc., the price to get
rid of the problem is settled by the Police and Immigration people. If
someone argues, his future is spoiled because there are always some
innocent fellows who think the honesty is the basis of getting justice
in India ... Which is wrong...Please advise every passenger to be
careful at the airport.

Whenever they hand over the passport to the counters of Air India , or
immigration or the customs, they must be vigilant, should not remove
eyes from the passport even if the officer in front tries to divert
their attention. Also, please pass this information to all friends,
media men and important politicians.

Every month 20-30 cases are happening all over India to rob the NRIs
the minute he lands. Similar case has happened with Armco¢s Arifuddin.
He was traveling with his family. They had six passports. They got the
visa of America and decided to go via Hyderabad from Jeddah. They
reached Hyderabad ..Stayed about a month and left for the States. When
they reached the States,the page of the American visa on his wife's
passport was missing. At the time of departure from Hyderabad it was
there, the whole family had to return to Hyderabad helplessly.
On arrival at Bombay back, the police caught them and now it is over 2
months, they are running after the Police, Immigration officers and
the Courts. On going in to details with him, he found out the
following: Onecannot imagine, neither can believe, that the Indian
Immigration dept canplay such a nasty game to harass the innocent
passengers.All the passengers traveling to & fro India via Bombay and
Hyderabad must be aware of this conspiracy. Every month 15 to 20 cases
are taking place, at each mentioned airport, of holding the passengers
in the crime of tearing away the passport pages.. On interviewing some
of them, none of them was aware of what had happened..

They don't know why, when and who tore away the page from the middle
of the passport. One can imagine the sufferings of such people at the
hands of the immigration, police and the court procedures in India
after that.. The number of cases is increasing in the last 2-3 years.

People who are arriving at the immigration, they are questioned and
their passports are being held and they have to go in interrogations.
Obviously, the conspiracy started about 2 to 3 years ago, now the
results are coming. Some of the Air India counter staff too is
involved in this conspiracy.

KINDLY SEND THIS TO AS MANY AS YOUR FRIENDS ACROSS THE WORLD AND ALSO

REQUEST THEM TO CHECK THE PASSPORT AT THE CHECKING COUNTERS AND BEFORE

LEAVING THE AIRPORT.

====================================================================

உஷார இருந்துக்கோங்க சார், சொல்லுரத சொல்லிப்புட்டேன், பாஸ்போர்ட்டை கையில கொடுத்துட்டு காஞ்சமாடு கம்புல பாஞ்சது போல், பொண்டாட்டிய பாக்கப்போர சந்தோஷத்துல ஓவரா மெய்மறந்துராதீங்க.. சம்பாதிப்பதுக்காக பயபுள்ளைகள் எதுக்கும் துணிஞ்சிருச்சி போல இருக்கு..

அன்புடன், வசந்தா நடேசன்.

Saturday, January 29, 2011

நீங்களுமா டாக்டர்?

விஜய் டிவி வீட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது.. இங்கே இரவு 9,45..

எக்ஸ்பயர்டு மெடிசன் பற்றிய நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. காலவதியான மாத்திரை மற்றும் மருந்துகளை சாப்பிட்டு ஒரு குழந்தை இறந்து விட்டது குறித்தும், ஒரு சிறுமி கண்பார்வை இழந்ததை குறித்தும் சமீபத்தில் பிரிண்ட் மீடியாவில் பரபரப்பாக இருந்த விஷயம் குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

பார்மஸிகளை பற்றி சொல்லிவிட்டு டாக்டர்களுக்கும் ஆப்படித்துக்கொண்டிருந்தார்கள். எல்லா குற்றச்சாட்டுகளும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருந்தது. சமீபத்திய என் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளலாமே என்று இந்த பதிவு.

அதற்க்கு முன் நிகழ்ச்சியில் நான் பார்த்த ஒருவேளை நீங்கள் விட்டிருந்தால் கீழ்வந்தவற்றை குறித்துக்கொள்ளுங்கள்.

பேட்டியில் ஒரு நபர் டாக்டர்கள் மருந்து விற்ப்பதை தடை செய்யவேண்டும் என்றார்.. எனக்கும் இது சரி என்றே படுகிறது. அவர்களே மருந்து விற்ப்பதால் அவர்களிடம் இருக்கும் மருந்தை மட்டுமே எழுதுவார்கள், சுற்றுவட்டாரத்தில் எங்குமே அது கிடைக்காது. வேறு வழிஇல்லாமல் அங்கேயே வாங்கவேண்டியதிருக்கும் அதிக விலையில். டாக்டர்கள் மருத்துவத்தை மட்டுமே பார்த்துக்கொள்ளவேண்டும். வியாபாரத்தை வியாபாரிகள் பார்த்துக்கொள்ளட்டுமே.

தேவையில்லாமல் அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட் என்று எடுக்க வைப்பார்கள் என்றார்கள். பலநேரங்களில் எனக்கும் இந்த சந்தேகம் வந்திருக்கிறது. இதை தவிர்ப்பதற்க்கு எல்லா டெஸ்டுகளுக்கும நிர்ணயிக்கப்பட்ட விலை போல் அரசே கட்டணத்தை தீர்மானிக்கவேண்டும் என்றார்கள். டாக்டர்களின் கமிஷனை ஒழிப்பதற்க்கு.

இரண்டுமே நல்ல பாயிண்டுகள். நான் இந்த இரண்டையுமே ஒத்துக்கொள்கிறேன். அரசு இதில் தலையிடவேண்டும். டாக்டர்கள் பில்டிங் கட்டியிருப்பதற்க்கும் மெஷினரி வாங்கியதற்க்கும் நோயாளிகளிடம் காசை பிடுங்குவது சரியில்லைதான்.

மற்ற ஒரு நல்ல விஷயம் பார்த்தது, துணைமுதலமைச்சர் ஸ்டாலின் கண்பார்வை இழந்த சிறுமிக்கு கண்பார்வை ஆப்பரேஷனுக்கான எல்லா செலவையும் அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்து விட்டதாக சொன்னார்கள். பாராட்டப்படவேண்டிய விஷயம். நான் திமுக இல்லை, தற்போதைய அரசியல்வியாதிகள் மேல் எனக்கு நம்பிக்கை போய் பல வருடங்கள் ஆகிவிட்டது.

சரி, இப்போது என் அனுபவத்திற்க்கு வருகிறேன். ஊருக்குச் செல்லும் போது நான் அனேகமாக வருடத்திற்க்கு ஒருமுறை எல்லா டெஸ்ட்டுகளும் ஊரில் செய்து விடுவது வழக்கம். இங்கே மருத்துவகட்டணம் மிக அதிகம், மற்றும் இன்சூரன்ஸ் காசுக்கு ஆசைப்பட்டு டாக்டர்கள் மற்றும் பார்மஸிகள் என்னவேண்டுமானாலும் செய்வார்கள். நானே பார்த்திருக்கிறேன், அதை எல்லாம் எழுதினால் நாறிவிடும், வேண்டாம்.. விடுங்கள். நாம் இந்தியாவில் நடப்பதைப்பார்ப்போம்.

நான் பல ஆண்டுகளாக இந்த டெஸ்டுகளை ஒரே டாக்டரிடம் செய்து வருகிறேன். அவர் இப்போது கட்டியிருக்கும் பெரிய ஆஸ்பத்திரியை கட்டுவதற்க்கு முன் ஒரு சிறு கிளினிக்கில் இருந்தபோதே நான் அவர் கஸ்டமர்(?). நன்கு அறிமுகமானவர். இப்போது பெரிய ஆளாகிவிட்டார். பெரிய ஆஸ்பத்திரி, பல வார்டுகள், புது பில்டிங் என்று மிக வளர்ந்துவிட்டார். மிக மிக பிஸியானவர்.

அப்பாயின்ட்மென்டுடன் போனாலே குறைந்தது 2 மணிநேரம் காவல் இருக்கவேண்டும். நான் எப்போதும் என் மனைவியுடன் சேர்ந்து அங்குள்ள நர்சுகளை கலாய்த்துக்கொண்டிருப்பேன், எல்லோரையும் தெரியும் அதனால்.

இந்த முறை சென்றபோது இரண்டு டெஸ்ட் முடிந்து மூன்றாவது டெஸ்ட்டுக்கு காவல் இருந்தேன். முதல் நாளே அடுத்தநாள் முதல் நம்பர் டோக்கன் எடுத்தும் காலையிலேயே போய் 12 மணி அப்போது. டாக்டரே நேரிடையாக செய்யவேண்டியது என்பதால் வேறு வழி இல்லை. என் மனைவி போய்விட்டாள் வீட்டிற்க்கு வேறு கெஸ்ட் வருகையும் அன்றே இருந்ததால். நான் கூடக்கொஞ்சம் கலாய்த்துக்கொண்டிருந்தேன் என்று வையுங்கள்;-)

கடைசியாய் மூன்றாவது டெஸ்ட்டுக்கு ஒருவழியாக வந்தார்.. எப்படி, என்னை டெஸ்ட் பண்ணிக்கொண்டே வெளியிலிருந்தும் ஒவ்வொரு பேஷன்ட்டாக என்னை டெஸ்ட் எடுத்துக்கொண்டிருந்த அறைக்குள் (கன்ஸல்ட்டிங் ரூமை அடுத்து உள்ள டெஸ்ட் ரூம்) அழைத்து நோயை கேட்டு பிரிஸ்கிரிப்ஷன் எழுதி கொண்டு ஓரக்கண்ணால் என்னையும் கவனித்துக்கொண்டு, நான் சட்டையில்லாமல் இருக்கிறேன்.. மற்றவர்கள் அப்படி வந்து சென்றது எனக்கு படு அன் ஈஸி ஆக இருந்தது. எனக்கு மண்டை காய்ந்து கோபம் வந்தது.. என்னடா நடத்துறீங்கன்னு கத்தியிருப்பேன் வேறு சூழ்நிலையில், நாகரீகம் கருதி வாய்மூடி இருந்தேன். நீண்ட காலம் தெரிந்த நபரான எனக்கே இந்த கதியென்றால் புதிதாக வருபவர்கள் கதி என்னவாக இருக்கும். அந்த க்ஷணத்தில் முடிவெடுத்தேன், அதுவே அங்கு கடைசி விசிட் என்று. கைராசியும் மண்ணாங்கட்டியும், நமக்கு மரியாதை வேண்டாம் சார், ஒரு பேஷியன்ட்டை பேஷியன்ட்டாகவே மதிக்க வில்லை என்றால்? இனிமேல் கூட்டமில்லாத ஒரு டாக்டரை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே வேறு வழியில்லாமல் ஒருவழியாய் எல்லாம் முடித்து வந்தேன் இந்தமுறை.

டாக்டர்களே தயவுசெய்து மருத்துவம் மட்டும் பாருங்களேன். பார்மஸியை வியாபாரிகள் கவனித்துக்கொள்ளட்டும். டெஸ்ட்டுகளை லாபரேட்டரிகள் பார்த்துக்கொள்ளட்டுமே, உங்களுக்கு ஏன் இந்த வீண்வேலை.. நீங்களே எல்லாவற்றையும் பார்க்க நினைப்பதால் தான் இந்த குழப்பங்கள் எல்லாமே.

நம் டாக்டர்கள் திருந்துவார்களா??

அன்புடன், வசந்தா நடேசன்.

மோகத்தீ!

மோகத்தீ எறிகிறதே..
என் செய்வேன், என் செய்வேன்?
காமத்தீ அணைத்திடவே
காதலியும் இங்கில்லை..

ஐம்பதுக்கு ஆள்கிடைக்கும்
கூடவே நோய்கிடைக்கும்!
ரஷ்யாவா? சைனாவா?
சுந்தரத்தெலுங்கா? சுவைமிகு மலையாளமா?

கன்னடத்து பைங்கிளியா? கல்கத்தா மேங்கோவா?
எல்லாமே ஐம்பது தான்..
எந்த மொழி எந்த நாடு?
எல்லாமே ஐம்பது தான்!

போகாதே போகாதே..
இது எதற்க்கும் போகாதே!

நோய் வந்து மடிந்திடுவாய்,
நொடியிலே மாறிவிடும்
உந்தன் குடும்பமும்
சொந்தப் பிள்ளைகளும்...

தேவையா மானிடனே?
தேவ(ர)டியா வேண்டாமே.

தேவையென்று நீ நினைத்தால்
லீவெடுத்து சென்றுவிடு
ஜல்லிக்கட்டு காளையென...
ஜில்லிட்டு வந்து சேர்பின்!

வந்த வேலை முடியுமுன்னே
நொந்துபோய் திரும்பிடாதே.
எல்லாமும் மாற்றிவிடு..
இல்லாமை மாற்றிவிடு.

பணத்திற்க்காக தானே
பாலையில் உழைக்கின்றோம்
சோலை, சுகமெல்லாம்
நம் தலையில் இல்லை போலும்.

சின்ன மழலையையும்,
சிங்காரச் சிறுக்கியையும்,
சிந்தனையில் வைத்துவிட்டு..
சீர்கெட்டு போய்விடாதே!

கால்பந்து விளையாடு
கோல் நோக்கி முன்னேரு,,
வீரநடை போட்டு
வீழ்ந்தவற்றை மீட்டெடுப்போம்!

தாழ்ந்து நின்றிடாதே..
எப்போதும் தலை நிமிர்ந்து,
உயர்ந்த சிந்தனையால்
உலகையே மாற்றிவிடு!

நியாயமாய், நீதியாய்
நித்தமும் நாம் உழைத்தால்,
முத்தங்கள் ஒன்றென்ன
ஒரு நூறு அவள் தருவாள்!

ஓராண்டு மோகத்தையும்
ஓரே மாதம் முடித்துவிட்டு
நேர்வந்து சேர் மகனே
சோர்வற்று உழைத்திடுவோம்...

அன்புடன், வசந்தா நடேசன்.

Friday, January 28, 2011

கம்ப்யூட்டரும், நானும்

படுக்கையில் இருக்கும் போதும், பயணம் செய்யும் நேரத்தையும் தவிர்த்து பிறசமயங்கள் இப்போதெல்லாம் கம்ப்யூட்டருடன் தான் கழிகிறது. முதன்முதலாய் எப்போது இந்த சாதனத்தை பார்த்தேன் என்று யோசித்துப்பார்க்கிறேன்.

1992 அல்லது 1993 என்று நினைக்கிறேன். அதற்க்கு முன்னர் பார்த்திருந்தாலும் அப்போதுதான் கம்ப்யூட்டரை வாங்கும் சந்தர்ப்பம் வந்தது.

இப்போது 40களில் இருக்கும் பலருக்கும் இன்னும் நினைவிருக்கலாம். அப்போது PMRY (Prime Minister's Rojgar Yojana)என்று ஒரு கடன் தரும் திட்டம் இருந்தது. எங்கள் ஊர் வங்கி மேனேஜரை கன்வின்ஸ் பண்ணும் திறமையும் அப்போது இருந்ததால் கன்வின்ஸ் பண்ணி ஒருவழியாக கம்ப்யூட்டர் வாங்கிவிட்டேன். வாங்கும் போது கம்ப்யூட்டர் பற்றி ஆனா ஆவன்னா தெரியாது.

இப்போது பெங்களூரில் ப்ராஜக்ட் மேனேஜராக சாப்ட்வேர் துறையில் இருக்கும் நண்பன் தான் என் கம்ப்யூட்டர் குரு, (தக்காளி, நாகர்கோவில் WCC காலேஜ் பக்கம் இருந்த V கம்ப்யூட்டர் செண்டரில் படித்துவிட்டு இப்போது ப்ராஜக்ட் மேனேஜராம் சார்!) அவனுடைய கம்ப்யூட்டர் திறமையால் முன்னுக்கு வந்தவன். அது இன்றும் பல வழிகளில் எனக்கு பயன் தருகிறது.


இன்றும் நாங்கள் தினமும் தொடர்பிலிருக்கிறோம். Google Docs ஷேர் பண்ணி இப்போதும் சில ப்ராஜக்டுகள் இருவருக்கும் பயன்தரும் வகையில் செய்து வருகிறோம்! அது தனிக்கதை.

முதன்முதலாய் கம்ப்யூட்டர் வாங்க கடைக்கு போய் ஏதோ தேங்காய், மாங்காய் வாங்குவது போல் ஒரு கம்ப்யூட்டர் வேணும் என்ன விலை என்றேன். வாங்க சார், என்ன கான்பிகறேஷன்ல வேணும் என்றபோது கான்பிகரேஷனா?? அப்டின்னா யன்னா?? என்றேன். கடைசியில் ஒருவழியாய், 386 ஸ்பீடில், 40mb ஹார்ட் டிஸ்க், அந்த பெரிய டிஸ்க் டிரைவ் பெயர் வரமாட்டேன் என்கிறது, 1.33 சிடி டிரைவ் என்று ஏதோ.. அதன் பின் 2.44 என்று ஒரு சிடி ட்ரைவ் மாற்றிய ஞாபகம். வி ஜி எ மோனோ மானிட்டர், எல்லாம் சேர்த்து 70000 ரூபாய்க்கு வாங்கினேன்.

அலுவலக செலவு, வொர்க்கிங் கேப்பிடல் அப்படி இப்படின்னு 85000 மொத்த லோன், தைரியமாய் ஐ ஓ பி கொடுத்தது. முதல் இரண்டு இன்ஸ்டால்மெண்ட் கட்டினேன், பின்னர் ரொம்ப மிரட்டும் போது கொஞ்சம் கட்டுவேன், தொழீல் சரிவரவில்லை, என்ன செய்வது. கடைசியாய் அந்த லோனை வெளிநாடு வந்து சம்பாதித்து முதல் ஆண்டு விடுமுறைக்கு வந்தபோது, ஒன்டைம் செட்டில்மென்ட் என்று ஏதோ நெகோஷியேட் செய்து ஒருவழியாய் கட்டிமுடித்தேன், என்னை நம்பி லோன் கொடுத்த மானேஜரின் மரியாதையை காப்பாற்றுவதர்க்காக.

நானும் என் நண்பனும் அப்போது கிளிப்பர் லாங்வேஜ் பயன்படுத்தி இரவு பகலாய் கண்முழித்து உழைத்து ஒரு அக்கவுன்ட்டிங் சாப்ட்வேர் பண்ணியது வாழ்வில் மறக்கமுடியாதது. அவன் ப்ரோக்ராமர், நான் அக்கவுனட்ஸ் விதிகள் அவனுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். படு யூசர் ப்ரெண்ட்லியாய் என் தொழிலுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருந்தது.

அக்கவுன்ட்ஸ் பற்றி மேலும் சொன்னால் உங்களுக்கு போரடிக்கலாம். மேட்டருக்கு வருவோம்.

கம்ப்யூட்டர் உலகம் பின்னர் 486, பென்டியம், செலிரான் என்று எங்கோ போய்விட்டது. என் கம்ப்யூட்டரை நானும் கடைசியாய் பெண்டியம்1 மற்றும் 480mb ஹார்ட் டிஸ்க் என்று மாற்றி வைத்திருந்ததாய் ஞாபகம்.

ஒரு விடுமுறையில் வீட்டிற்க்கு சென்றபோது 70000 கொடுத்து அப்போது வாங்கிய கம்ப்யூட்டரை 50 ரூபாய்க்கு ஆக்கருக்கு போட்டிருந்தனர் வீட்டிலிருந்தவர்கள். வைத்துக்கொள்ள இடம் இல்லை. இந்த தகரடப்பா எதற்க்கு இடத்தை அடைத்துக்கொண்டு என்று. ஆக்கர் வாங்குபவனும் வேண்டா வெறுப்பாய் தான் 50க்கு வாங்கி சென்றானாம். இல்லாவிட்டால் இவர்களே 25 கொடுத்து கொண்டுபோ என்றிருப்பார்கள் போல் இருக்கிறது. லாப்டாப் வந்த திமிர்.

அந்த கம்ப்யூட்டருடனேயே நாங்கள் கஷ்ட்டப்பட்டு உருவாக்கிய அந்த சாப்ட்வேரும் சோர்ஸ்கோடு அடக்கம் போய்விட்டது! உழைப்பின் வலி எங்களுக்குத்தானே தெரியும்.

இன்ட்டர்நெட் அப்போது தான் அறிமுகமாகியிருந்தது. (அல்லது எனக்கு அப்போதுதான் அறிமுகமானது என்றும் சொல்லலாம், ஹி, ஹி) அதற்க்கும் நம் நண்பர் தான் குரு. ஆபிஸில் அப்போது VSNL கனெக்ஷன் எடுத்திருந்தேன், நம் நண்பன் சொல்லித்தான். முதன்முதாலாய், இந்த பாரு, இப்படி கை மாதி வந்தால் அதில் ஏதோ மேட்டர் இருக்கு, அதுல கிளிக் பண்ணால் மேலும் விஷயங்கள் கிடைக்கும் என்று அவன் அன்று சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது. Yahoo search engine அப்போது மிக பிரபலம். (இப்போதும் தான், ஹி...ஹி...)

எனக்கு கம்ப்யூட்டரை இயக்க மற்றும் வேர்டு ஸ்ட்டார், டாஸ், லோட்டஸ் எல்லாம் கற்றுக்கொடுத்தது அப்போது என்னிடம் வேலை செய்த என் மனைவியின் அண்ணண், அதையும் சொல்லவேண்டும், இல்லன்னா குடும்பத்துல குழப்பம் ஆகிவிடும்! டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் அப்போது வழக்கில் இருந்தது, பின்னர் தான் விண்டோஸ் அறிமுகம்.


இப்போது நம்ப கஷ்ட்டமாக இருக்கலாம் ஆனால் அதுதான் உண்மை, நான் கம்ப்யுட்டர் வாங்கியிருக்கும் போது ஈமெயில் என்பதே வந்திருக்கவில்லை. என் கம்ப்யூட்டர் சர்வீஸ் நண்பனும் நானும் கையில் சிகரட்டுடன் அப்போது ஈமெயில் என்பதைப்பற்றி என்னுடைய ஆபிஸ் வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தது இன்னும் பசுமையாய் நினைவில் நிற்க்கிறது.

அமெரிக்காவில் இருந்து ஈமெயில் அனுப்பினால் அடுத்த நொடியில் நாம் இங்கே நம் கம்ப்யூட்டரில் பார்க்கலாம் என்று அவன் சொன்னபோது நான் நம்பமுடியாமல் ‘அப்படியா மக்கா?‘ ‘போல, கதை உடாதே‘ என்றேன். நம்புடா அங்க இருந்து அவன் அனுப்பினால் நாம் நம் டெலிபோன் லைன் வழியாக ஈமெயில்களை தரவிறக்கம் செய்து படித்துக்கொள்ளலாம். உலகம் மாறிட்ருக்கு மக்கா என்றான்.

பின்பு இன்ட்டர்நெட் கனெக்ஷன் எடுத்ததும் யாகூவில் ஐடி கிரியேட் பண்ணி போஸ்ட் மாஸ்ட்டர் என்று அப்போது இருந்த (இப்போதும் இருக்கக்கூடும்) ஈமெயில் தரவிரக்கி வழியாக பின்னொரு நாளில் அவனே செய்து காண்பித்தான். அப்போது டயல்அப் காலம். இயந்திர சப்தத்துடன் டயல் செய்து லைன் கிடைப்பது சமயங்களில் கஷ்ட்டமாக இருக்கும், அந்த சப்தமும் இன்னும் நினைவில் நிற்க்கிறது. இன்ட்டர்நெட் வந்த புதிதில் எக்ஸ்போர்ட், இம்போர்ட் அது இது என்று மண்டை காய்ந்து ஆபிஸில் இரவு 1 மணிவரை தேடி வீட்டிற்க்கு போய் என் மனைவியிடம் திட்டு வாங்கியதும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

இப்போது 44 வயது(சிவகுமாரன் சார், சொல்லிட்டேன்!)ஆகிவிட்டது, கிட்டத்தட்ட 19 ஆண்டுகளாக அல்மோஸ்ட் தினமும் கம்ப்யூட்டரோடு காலம் கழித்து வருகிறேன்.

ம்ம்ம், நல்லாத்தான் இருக்கிறது! (Those wonderful memorable days!)

அன்புடன், வசந்தா நடேசன்.

Thursday, January 27, 2011

மூட்டை பூச்சி, கரப்பான் தொல்லையா?

இந்தியாவில் இப்போது கரப்பான் மற்றும் மூட்டை பூச்சிகள் பெரும்பாலும் ஒளிக்கப்பட்டு விட்டது என்று நினைக்கிறேன். ஒன்றிரண்டு கரப்பான்களை அங்கங்கே பார்த்திருந்தாலும் மூட்டை பூச்சிகள் இந்தியாவில் வழக்கொழிந்து விட்டதாகவே நினைக்கிறேன். மற்ற நாடுகளைப்பற்றி தெரியவில்லை.. இருந்தாலும் இதைப்பற்றி பெரிதாக நினைக்காதவர்கள் அப்படியே அப்பீட் ஆகிக் கொள்ளலாம். இது அரபு நாடுகளில் உள்ள ஒரு தொல்லையை பற்றியது..

இங்கே வாழ்பவர்கள் கரப்பான்களுடனும், மூட்டை பூச்சிகளுடனும் தான் இன்றும் பெரும்பாலும் வாழ்ந்து வருகிறோம். கரப்பான்களை நிரந்தரமாக இங்கே அழிக்கவே முடிவதில்லை, மூட்டை பூச்சிகள் தியேட்டர் (தமிழ் மற்றும் மலையாள மொழி படங்கள் வரும் தியேட்டர்கள் மட்டும், பெங்காலி தியேட்டர்லாம் போனதில்லைங்க சார்!) போனாலோ அல்லது மற்ற ரூம்களில் தங்கிவிட்டு வரும் நண்பர்களாலோ வந்துவிடும்.

மூட்டைக்கு நான் ஒருவழியாய் மருந்து கண்டுபிடித்து வைத்திருக்கிறேன், ரூம் காலி செய்யவேண்டியதில்லை, மாஸ்க் எதுவும் தேவையில்லை, அப்படியே ஸ்ப்ரே செய்து விட்டால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு வருவதில்லை. துபாய்வாசிகள் தேவையென்றால் ஈமெயில் அனுப்பவும் அதை வாங்குவதற்க்கு சீக்ரெட் கோடெல்லாம் இருக்கிறது, அனுப்பித்தருகிறேன். 90 திர்கம் ஒருபாட்டில் விலை, ஒரு ரூமிற்க்கு அடிக்கலாம். எனக்கு கமிஷன்லாம் வேண்டாம் சார், இது ஒரு இலவச சேவை, கடை விலாசம் அனுப்பித்தருகிறேன் பாஸ்வேர்டுடன், போய் வாங்கிக்கொள்ளலாம்.

இருக்கும் ஃப்ளாட்டின் கீழே ஒரு மலையாளி ஹோட்டல் இருக்கிறதென்றால் கரப்பான் தொல்லை இன்னும் அதிகம்.. தமிழ் ஹோட்டல்லாம் கொஞ்சம் இல்ல இங்க துபாயில் ரொம்ப நீட்டாதான் இருக்கு சார்..

கரப்பானுக்கும் சமீபத்தில் ஒரு மருந்து கண்டுபிடித்து விட்டேன் ஒரு வழியாக.. இது ரொம்ப ஈஸி சார், வெரும் 8 திர்கம் தான் செலவு..

எச்சரிக்கை! (WARNING!)



குடும்பத்துடன் இருக்கும் புண்ணியவான்களோ, குழந்தைகளுடன் அரபுநாடுகளில் வசிக்கும் தாய்க்குலங்களோ இதை தயவுசெய்து டிரைசெய்யவேண்டாம்.. மீறி செய்தால் விளைவுகள் எதற்க்கும் நம் நிர்வாகம் பொருப்பல்ல! சிறுகுழந்தைகள் கீழே விளக்க இருக்கும் பொருளை (Product?) ‘ஏதோ ஜெம்ஸ் (Gems)என்று நினைத்து வாயில் போட்டுவிடும் ஆபத்து இருக்கிறது..‘ எச்சரிக்கை.

பக்கத்தில் இருக்கும் பார்மஸிக்கு போய் போரிக் ஆசிட் பவுடர் என்று கேளுங்கள், அங்கிருக்கும் மலையாளி கேரம் போர்ட் கழிக்கான் வேண்டியா? என்பான் உங்கள் ஆரோக்யத்தை பார்த்துவிட்டு, இது புண்ணிற்க்கு போடும் மருந்து! மண்டைய, மண்டைய ஆட்டிட்டு ஒங்கபாட்டு வாங்கிட்டு வாங்க, அதை பூராவும் ஒரு சின்ன பாத்திரத்தில் கொட்டி அதனுடன் சிறிதளவு கோதுமை மாவு (பசைத்தன்மை வருவதற்க்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டும்), சுகர் மற்றும் சிறிதளவு பால் (கரப்பானைக் கவர்வதற்க்காக), கொஞ்சம் தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து சிறு, சிறு உருண்டைகளாக செய்து கரப்பான் நடமாடும் எல்லா இடத்திலும் தரையில் போட்டுவிடுங்கள்.

பாத்ரூமில் கதவு நிலை மற்றும் ஜன்னல்கள் மேல்,வாஷ்பேசின் அடியில் மற்றும் தண்ணீர் படாத இடங்களில் வைக்கலாம்.

தினமும் இருக்கும் கரப்பான் ஸ்டாக்குக்கு தகுந்தபடி கரப்பான்கள் ஒழிய ஆரம்பிக்கும்.. ஒரு 15 நாள் கழித்து மீண்டும் ஒருமுறை இதேபோல் செய்யுங்கள். சுத்தமாக ஒழிந்துவிடும்.

நான் இப்போது கரப்பான் பூச்சி செகண்ட் டிரையலில் இருக்கிறேன் (very happy with the first trial! எங்காவது ஒழிந்திருக்கும் முட்டைகளிலிருந்து வந்துவிடக்கூடாது என்பதற்க்காக இந்த செகண்ட் டிரையல்!). இருந்தாலும் ஒரு பொதுசேவை செய்து வைப்போமே என்று எழுதியிருக்கிறேன், தொல்லையிருப்பவர்கள் தப்பித்துக்கொள்ளுங்கள் நான் விடுதலையடைந்தது போல்.. நான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக..

அன்புடன், வசந்தா நடேசன்.

Wednesday, January 26, 2011

குடியரசாம்ல..

இந்திய பிரஜைகள் அனைவருக்கும் குடியரசுதின வாழ்துக்கள்..

சின்ன வயதில் வடசேரி கிரவுண்ட் பள்ளிக்கூடத்தில் லைனில் நின்று இதை கொண்டாடிய ஞாபகம் இருக்கிறது.. இப்போது அந்த உணர்ச்சியே மறத்துப் போய்விட்டது. கீழ்வரும் என் நண்பனுடனான இமெயிலை படித்துப்பாருங்கள், கவனமாக பெர்சனல் இன்பர்மேஷனை அழித்திருக்கிறேன், விட்டிருந்தால் சொல்லுங்க சார்.
===================================================================================

Dai.....................Republic Dayda.......
On Tue, Jan 25, 2011 at 10:36 PM, Xxxx wrote:
நாளைக்கு ஏண்டா லீவு, அநியாயமா இருக்கு..

From: Xxxxxxxxxxxx
Sent: Tuesday, January 25, 2011 8:52 PM
To: xxxxxxxxxx
Subject: Re: Laptop is ready

Tomorrow is a holiday...hope you know....let us try to leverage the most.....

In my opinion...xxxxxxxx itself is going to take atleast another 10days...

Regards

xxxxxxxx
On Tue, Jan 25, 2011 at 8:35 PM, xxxxxx wrote:
DVD?? can’t you buy and download online?

From: xxxxxxxxxxxx
Sent: Tuesday, January 25, 2011 6:55 PM
To: xxxxxxxxx
Subject: Re: Laptop is ready

Thanks....but it may not be required...I will get the dvd by tomorrow....

==============================================================================

தமிழ் டைப்பிங் கற்றதும் நான் இப்படி இடையிடையே தமிழில் நண்பர்களிடம் லொள்ளு பண்ணுவது உண்டு.. நேற்று இரவு பதில் ஏதும் வரவில்லை,இங்க இரவு 10.30, சரி ஊருல மணி 12 ஆச்சு, பயபுள்ளை தூங்கிடிச்சு போலஇருக்குன்னு உட்டுட்டேன்.

இன்னிக்கு காலைல பாத்தா குடியரசு தினமாம்?? இப்போதும் பள்ளிகளில் மிட்டாய் குடுக்கறாங்களா சார்?

அன்புடன்

வசந்தா நடேசன்.

Tuesday, January 25, 2011

நான் துபாய்ல பேச்சிலர்ங்க!

துபாய் வாழ் பேச்சிலர்களைப்பற்றி ஒரு பதிவு எழுத நினைத்திருந்தேன், ஓயாத வேலை நெருக்கடிகளின் இடையில் இன்று தான் நேரம் வாய்த்தது. எங்கே முன்னாள் பதிவர் லிஸ்ட்டில் சேர்த்து விடுவார்களோ என்று அடித்து பிடித்து வந்திருக்கிறேன் சார்!

இங்கு இந்தியாவின் எல்லாமாநிலத்தை சேர்ந்த மக்களும் வசிக்கிறார்கள். கேரளத்தவர்கள் அதிகம். அதற்க்கு அடுத்த இடத்தில் தமிழர்களும், தெலுங்கர்களும் இருக்கக்கூடும். கேரளத்தவர்கள் அதிகம் இருக்கும் இடங்களில் தமிழர்களுக்கு கடும் நெருக்கடி இருக்கும், அதேபோல் தமிழர்கள் அதிகம் வேலை செய்யும் கம்பெனிகளில் மலையாளியின் பல் பிடுங்கப்பட்டிருக்கும். இதைப்பற்றி தனியே ஒரு பதிவு எழுதலாம், அதை அப்புறம் வச்சிக்கிறேன்.

திருமணம் ஆனவரும், ஆகாதவரும் குடும்பத்தை ஊரில் விட்டு வந்துவிட்டாலே எல்லோரும் இங்கே பேச்சிலர்தான். அதிக சம்பளத்துடன் பேமிலிவிசாவில் மனைவியுடன் இங்கே வருபவர்கள் அனைவரும் பாக்யசாலிகளே! நம்ம தலையெழுத்து வேறங்க..

திருமணம் முடிந்து 9 வருடங்கள் நான் குடும்பத்துடன் தான் ஊரில் வசித்தேன், பின்னர் வந்த ஒரு போதாத வேளை (நல்ல நேரமோ? பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டான்னு ஜனகராஜ் போல் அலராமல் வருடத்தில் பெரும்பாலும் இஷ்ட்டம் போல் வாழ்க்கை, நினைத்தபோது, நினைத்தபடி, நான் ரொம்ப நல்லவன் சார்!) இங்க வந்து மாட்டிக்கிட்டேன்.

இன்றே கம்பெனியில் திடீர்னு வீட்டுக்கு போடான்னு சொன்னா ஊருக்கு வந்தா ஒரு பொழப்பும் இல்லை. இப்ப லீவுல வந்தாலே நேரம் போவதில்லை, உடன் படித்த நண்பர்கள் எல்லாமே வேறு வேறு ஊரில் செட்டில் ஆகி விட்டனர். ஆகா, சுயசொறிதல் ஆரம்பித்து விட்டேனே.. மன்னிக்கவும், மீண்டும் கதைக்கு வருவோம்.

வந்த புதிதில் பெட் ஸ்பேஸ் தேடும் போது தான் ‘நான் பேச்சிலரா‘ன்னு ஒரு நிமிஷம் ஷாக்காகி ஒரு வழியாய் நானும் இங்க ஒரு பேச்சிலரானேன்.

புதிதாக வருபவர் எல்லோருக்கும் இங்கு பெட் ஸ்பேஸ் வாழ்க்கைதான். பெட் ஸ்பேஸ் வாடகை பல ரேஞ்சில் இருக்கும். குறைந்த பட்சம் 300 திர்கம் அதிகபட்சம் 1500 திர்கம். ஒரு பெட் ஸ்பேசுக்கு மட்டும் தான் சார்.

யாருடனும் எனக்கு ஒத்துப்போகாது, தனியே தான் வசிப்பேன் என்று அடம் பிடிச்ச கழுதையானால் 1500க்கு மேலும் கொடுக்க வேண்டியதிருக்கும். நான் 375க்கு பெட்ஸ்பேஸ் வாழ்க்கை ஆரம்பித்து இப்போது ஏதோ கிரைஸிஸ் புண்ணியத்தில் ஒரு சின்ன ஒன்பெட்ரூம் ஹாலில் பெட்ரூமை எனக்கு மட்டும் தனியே வைத்துக்கொண்டு ஹாலை வேறு நண்பர்கள் இருவருடன் பகிர்ந்துகொண்டு வாழ்ந்து வருகிறேன். (இது தேவையாடா மக்களுக்குன்னு கேக்காதிங்க சார், கொஞ்சம் இடையே சுயசொறிதலும் வந்துவிடுகிறது)

இங்குள்ள பேச்சிலர் வாழ்வு எப்படி இருக்கும் என்பது அவரவர்க்கு கிடைக்கும் சம்பளத்தை பொருத்து மாறுபடும். சம்பளம் அவரவர் படிப்பும், எக்ஸ்ப்பீரியன்சும், தகுதியும் பொருத்தது என்று எல்லோருக்கும் தெரியும். புதிதாக இங்கே வருபவர்களுக்கு 2000 திர்கம் முதல் 10000 வரை கிடைக்கும். வாடகை குறைவென்றால் குறைந்தது 10பேருடன் தங்க வேண்டியதிருக்கும், வாடகை கூடக்கூட நபர்களின் எண்ணிக்கை குறையும். இங்கே கொடுக்கும் வாடகையை பத்து வருடம் ஊரில் முதலீடு செய்தால் சொந்த வீடாகிவிடும்.

துபாயில் தான் வீட்டு வாடகை இப்படி அநியாயத்துக்கு அதிகம், இப்படி அதிகமாக இருப்பதால் கம்பெனிகளும் வீடு பற்றி இங்கே அதிகம் தலையிடுவதில்லை.. இவ்வளவு தருகிறேன், எங்க வேண்ணாலும் இருந்துக்கன்னுட்டு அவுக ஒதுங்கிருவாங்க.

இப்போது நிறைய புதிய வீடுகள் காலியாக இருந்தாலும் பர்துபாய் போன்ற நான் அதிகம் பழகிய இடங்களில் கிரைஸிஸ் தொடங்கிய நாட்களில் கொஞ்சம் குறைத்தார்கள், பின்னர் ‘வாடகை இவ்ளோ தான்ம்பூ, இருக்கறன்னனா இரு, இல்லன்னா நடைய கட்டு‘ கதைதான் சார்.

ஆனால் சவுதி, ஓமன் போன்ற அரபுநாடுகளில் வீட்டு வாடகை குறைவென்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதானல் அங்கே கம்பெனிகளே அவரவர் தகுதிக்கேற்ப்ப வீட்டைக்கொடுத்து விடுகிறார்கள்.

குடும்பத்தை ஊரில் வைத்து இங்கு தனிமரமாய் கழிந்தால் தான் ஏதோ கொஞ்சம் காசு வீட்டிற்க்கு அனுப்பி கொஞ்சம் மிச்சம் பார்க்கலாம்.

பல நண்பர்களுடன் இங்கே வசிப்பதால் நட்புக்கு பஞ்சமில்லை.. ரயில் பயணம் போல் எத்தனையோ பேர் 6 மாதம் 1 வருடம் வீட்டில் ஒன்றாய் வசித்துக்கொண்டு பின்னர் வேறு ஜாகைக்கு அல்லது வேறு ஊருக்கு சென்றுவிடுவார்கள். நிரந்தர நட்பு கொஞ்சம் குறைவுதான்.

சாப்பாடு மற்றும் இதர செலவுகள் சொந்தமாய் சமைத்தால் 300 முதல் 400க்குள் முடிந்து விடும். இதுவும் நபர்களின் எண்ணிக்கை பொருத்ததே, நபர் கூடக்கூட செலவு குறையலாம். ஹோட்டல் என்றால் 750 முதல் 800 ஆகலாம், நாமல்லாம் சொந்த சமையல்ங்க.. (ஈஸியாய் சமைப்பது எப்படி, என்னென்ன சமைக்கலாம்னு பதிவெழுதணும்னு ஒரு ஐடியா இருக்கு, பார்க்கலாம்)

பெரும்பாலும் அலுவலகமே போக்குவரத்தை கவனித்துக்கொள்ளும் இல்லையென்றால் அதற்க்கு இப்போதைய நிலவரப்படி 250 ஆகலாம்.

ஆக, வீட்டுவாடகை பற்றி சொல்லிவிட்டேன், சாப்பாட்டுச்செலவைப்பற்றி சொல்லி விட்டேன் இருக்கும் மற்ற சில பல பழக்கங்களையும் இந்த ரீதியில் கணக்கு பண்ணி (சிகரட் 90 முதல் 180 வரை பிராண்ட் பொருத்து, தண்ணி?? வீக் எண்ட் மட்டும் என்றால் 100, தினமும்னா 300) வீட்டுக்கு எவ்வளவு அனுப்ப வேண்டும் என்பதும் போக மீதியை வைத்து எங்கள் வாழ்க்கை இங்கே எப்படி இருக்கும் என்பதை ஒரு திர்கத்துக்கு ரூபாய் 12.50 என்று உத்தேசமாக ஒரு கணக்கு வைத்து ஒருவாறு நீங்களே கற்பனை செய்யலாம் என நினைக்கிறேன்.

இதைதவிர இங்கே எப்படி வாழவேண்டும், எப்படி வாழக்கூடாது என்பதையும் ஒரளவுக்கு அனுபவசாலி என்ற முறையில் தனிப்பதிவாக எழுதுகிறேன். இப்போதைக்கு நன்றி, வணக்கம்.

வசந்தா நடேசன்.

Friday, January 14, 2011

கப்ஸா!

அன்று காதல் இருந்தது,
கவிதையும் வந்தது!
இன்று காதலும் இல்லை,
கவிதையும் இல்லை!

எங்கோ ஓரிடத்தில் அவள்,
ஏழுகடல் தாண்டி நான்.
எப்படி வரும்?
ஏட்டுக்கவிதை!

இங்கு சோலையும் இருக்கிறது,
பாலையும் இருக்கிறது.
குளிரும் இருக்கிறது,
கடும் சூடும் இருக்கிறது,

கால்வயிற்றுக் கூழுக்காக
கடுமையாய் உழைக்கையில்
கவிதை எங்கே கவனம் வருகிறது?

ஏதேதோ கப்ஸாக்கள்...
இடையிடையே சோர்வை போக்க!

அன்புடன், வசந்தா நடேசன்.

டிஸ்கி :- 'கப்ஸா' - இந்த வார்த்தை இன்றும் வழக்கில் இருக்கிறதா?

Thursday, January 13, 2011

ஆணும் பெண்ணும் ஒன்றேதான்!

பெண்மை என்றும் உண்மை அல்ல
ஆண்மை என்பது பொய், பொய், பொய்....

பெண்மை என்பது உண்மை என்றால்
பெற்ற குழந்தையை எறிவாளா?
ஆண்மை என்பதை ‘ஆமாம்‘ என்றால்
சின்னக் குழந்தையை புணர்வானா?

அதனால்....

ஆணும் பெண்ணும் ஒன்றேதான்,
அமைப்பும், அமைவும் வெவ்வேறு!

புரிந்து கொள்வோம் வாறீரோ- பின்
புணர்ந்து கொள்(ல்?)வோம் வாறீரோ!

அன்புடன், வசந்தா நடேசன்.

டிஸ்கி :-

இது பத்துப்பாட்டோ எட்டுத்தொகையோ அல்ல, ஒரு சிறு கற்பனை மட்டுமே.
வேலை காரணமாய் எழுத நேரம் இல்லாத நேரங்களில் மனதில் தோன்றியவற்றை குறிப்பெடுத்து வைத்ததன் கோளாறு.. சிவகுமாரன் சார் எழுதிய கவிதைகளை படித்ததின் பின்விளைவு என்றும் கூறலாம். (மன்னிச்சுக்குங்க சிவகுமாரன் சார்.. நான் ரொம்ப நல்லவன்)

சரி, நம்ம ஆளுங்கல்லாம் எங்க ஆளைக்காணும்னு தேடுவாங்களேன்னு ஒன்னு எடுத்து உட்டுருக்கென் சார்!

Monday, January 10, 2011

அயல்நாட்டு முரண்கள் (முடிவு பகுதி)

ஒரு வழியாய் இன்று முடித்திருக்கிறேன்

ஃபைன்கட்ட சென்றவன், இன்னா வாரேன்னு சொல்லிட்டு வெளியே வந்து திரும்பவும் போன் செய்தான், நான் இதை எதிர்பார்த்தேன். சரி, முக்காலிஃபா யாரு கையில இருக்கு? என்று கேட்டேன், நான் தான் வைச்சிருக்கேன்னான், அப்டியே திரும்பிப்பாக்காம வண்டிய கொண்டு வந்துரு, 2 நாள் கழித்து பார்த்துக்கொள்ளலாம் என்றேன்.

2 நாள் கழித்து முதலாளியிடம் சொன்னதும் அவனால் இதை நம்ப முடியவில்லை, its not fair, disgracing அப்டி, இப்டினு புலம்பிட்டு சரி நான் நாளை போகிறேன், வேனை எனக்கு முன்னால அங்க அனுப்பிச்சிருன்னான்.

எதிர்பார்த்தது போலவே அடுத்தநாள் வண்டி உள்ளே விடாமல் வெரும் ஃபைன் கட்டி வந்துவிட்டது.

நான் இதை எழுத வந்தது, இந்தியர்கள் வெளிநாடுகளில் எப்படி வாழ்கிறார்கள் என்பதை கொஞ்சம் ஆவணப்படுத்தும் பொருட்டே. அவமரியாதைகள் இங்கே சர்வ சாதாரணம். சில நல்ல ஹபிபிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை மறுப்பதர்க்கில்லை.

ஒருமுறை நான் சிக்னல் கிராஸ் செய்யும் போதே லைன் சேஞ்ச் பண்ணினேன், சில வருடங்களுக்கு முன் நான் இங்கே கஷ்டப்பட்டு டிரைவிங் லைசன்ஸ் எடுத்த சமயத்தில், அடுத்த லைனில் வந்த ஹபிபி நிதானமாக என்னை கடந்து போகையில் இனி இப்படி செய்யாதே என்று அழகாக ரிக்வெஸ்ட் செய்வது போல் கை மற்றும் தலையை ஆட்டி சைகை செய்துகொன்டு சென்றார் ஆனால் பலர் டிரைவிங்கின் போது மிரட்டல் சைகையும் செய்திருக்கிறார்கள்.

என்னைப்பொருத்தவரை வெளியே செல்லும் வேலை அதிகம் இல்லை, ஆனால் உடன்வேலை செய்யும் மற்றவர்கள் சொல்லும் போது மிகவும் கஷ்டமாக இருக்கும். இதையும் சகித்து கொண்டு இங்கே ஏன் வாழ்கிறோம் என்பதை மீண்டும் ஒரு முறை சொல்வதை விட சென்றமாதம் அறிமுகமில்லா ஒரு நண்பர் எழுதிய அயல்நாட்டு அகதிகள் என்கிற கவிதையை நம்ம பொஸ்தகத்தில் தேடிப் படித்துக்கொள்ளுங்கள்.

உள்ளூரிலேயே உழைத்து கந்தலாயிருந்தாலும் கசக்கி கட்டிக்கொண்டு கஞ்சி குடிப்பது உன்னதமானது, நான் பாவம் உள்ளூரில் விலைபோகாமல் வெளியூரில் இருக்கிறேன் என்பது தான் உண்மை, பணம் இன்று இருக்கிறது நாளை வேறொருவரிடம் இருக்கலாம் ஆனால் நல்லது, கெட்டது இரண்டும் இல்லாமல் வாழ்கிறோம். உள்ளூரில் இருப்பவர்களுக்கு இருக்கும் பல சௌகர்யங்கள் எங்களுக்கு இல்லை என்பதே நிதர்சனம். பொறாமை என்று சில நண்பர்கள் புலம்பியதால் கொஞ்சம் திசைமாறிவிட்டேனோ தெரியவில்லை. நேரமும் காலமும் கூடிவந்தால் அனைவருக்கும் இந்த வாய்ப்பு விரும்பும் போது கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதை தவிர வேறு வழி இல்லை.

இதை எழுத தூண்டியது சமீபத்தில் நான் இன்டர்நெட் கனெக்ஷ்னுக்காக எடிசலாட் அலைந்தபோது பார்த்தது. அங்கே ஒரு காலத்தில் மெஜாரிட்டியாய் வேலை செய்தவர்கள் இந்தியர்கள், இப்போது சென்றபோது ஒரு அலுவலகத்தில் வேலைபார்த்த அனைவருமே ஹபிபிகள் இரு பிலிப்பைனிகளைத்தவிர. பிலிப்பைனிகள் அவர்கள் நாட்டவர்களுக்கு கொஞ்சம் உதவிசெய்து கொண்டே பரபரப்பாக மற்றவர்களையும் கவனித்துக்கொண்டிருந்தார்கள். நானும் ஒரு இந்தியன் கூட இல்லையா என்று சுற்று முற்றும் பார்த்தேன், கடைசியில் ஒரு மலையாளி காஃபிபாயாக டீ கொடுத்துக்கொன்று வந்தார், எத்தனை நாளைக்கோ என்று நினைத்துக்கொண்டு அவர் ஃப்ரீ ஆவாரா என்ற கவனித்துக்கொண்டு இருந்தேன்.

அதுவோ வாடிக்கையாளர் அதிகமாக வரும் முக்கியமான ஒரு செண்டர், டோக்கன் நம்பர் எடுத்து நானும் வரிசையில் காத்திருந்தேன். சேவைக்காக காத்திருந்தவர்களில் என்னைப்போல் ஆசியாவை சேர்ந்தவர்கள் 95 சதவீதம், மற்றவர்கள் 5 சதவீதம். இந்தகிளை இருக்கும் ஏரியா இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் இடம் வேறு.

டோக்கன், வரிசை எல்லாம் அங்கு வரும் மற்றவர்களுக்கு மட்டுமே, வரும் ஹபிபிகளுக்கு எல்லாம் இது கிடையாது, அவர்கள் நேரிடையாக கவுண்டருக்கே சென்று தங்கள் வேலைகளை முடித்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். சரி அவர்கள் நாடு, அவர்கள் பாடு.

இந்தியர் மற்றும் மற்றவர்களை அட்டெண்ட் செய்யும் மற்றவர்கள் பெரும்பாலும் போனிலும், பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசுவதிலுமே நேரம் கடத்திக்கொண்டுருந்தார்கள். என்னுடைய நம்பர் 334லோ ஏதோ, நானும் ஒரு மணிநேரம் பார்க்கிங் போட்டுக்கொண்டு வழக்கம் போல் காத்திருந்தேன். 281 ஓடிக்கொண்டிருந்தது நான் சென்று அங்குள்ள ஒரு வேலை முடிந்து அதன்பின் செய்யவேண்டிய அதன் தொடர்ச்சிக்காக காத்திருந்தேன்.

45 நிமிடம் கழித்து பொருமையிழந்து ஒருவழியாய் மலையாளி ஃப்ரீ ஆனதும், இதை வேறு கிளையில் சென்று முடிக்கலாமா என்று கேட்டேன், என்னிடம் இருந்த பேப்பர்களை பார்த்துக்கொண்டு, ‘இனி அவிட போய்க்கோண்ணா, இது இனி எவிட வேணங்கிலும் சப்மிட் செய்யாம்‘ என்றார்.

அடுத்த செண்டரில் இருந்தது மும்பையை சேர்ந்த ஒரு முஸ்லீம் பெண் மற்றும் ஒரு ஹபிபி, அலுவலகமே காலியாய் இருந்தது, மும்பை பெண்ணிடம் கொண்டு கொடுத்ததுமே வந்தவேலை 5 நிமிடத்தில் முடிந்தது.

இந்தியர்கள் பெரும்பான்மையாய் இருந்தும், இந்த நாட்டின் முன்னேற்றத்திர்க்கு முக்கியமானவர்களாக இருந்தும் புறக்கணிக்கப்படுகிறார்களே என்பதுவே இதை எழுத தூண்டியது, நான் எப்போதும் நினைப்பது போல் இது அவர்கள் நாடு, அவர்கள் பாடு.

பாவம் நாங்க, எங்களையும் கொஞ்சம் கண்டுக்குங்க சார்.

அன்புடன்

வசந்தா நடேசன்.

Thursday, January 6, 2011

அயல்நாட்டு முரண்கள்

என்ன தலைப்பு இதற்க்கு வைப்பது என்று மண்டை காய்ந்துவிட்டது. சமீபத்தில் கவனித்த சில முரணைப்பற்றி எழுத உட்க்கார்ந்திருக்கிறேன். நான் வசிக்கும் துபாயில் பார்த்தது, இங்கோ பத்திரிகை சுதந்திரம் மருந்துக்கு கூட கிடையாது, உள்ள வைச்சி காய்ச்சிருவாங்களோன்னு கொஞ்சம் பயம் தான், இருந்தாலும் சொல்ல வந்ததை நாசூக்காய் சொல்லிவிடலாம் என்று துணிந்துவிட்டேன். (நாமல்லாம் பத்திரிகை தான் எழுதுரோமா சார்?)

உங்களில் அனேகம் பேருக்கு தெரிந்திருக்கும், இந்த நாட்டில் வசிப்பவர்கள் 80 சதவீதம் வெளிநாட்டினர்களே! அந்த வெளிநாட்டு 80 சதவீதத்தில் 70 சதவீதம் ஆசியாவை சேர்ந்தவர்கள், மீதி 30 சதவீதம் தான் மற்றவர்கள். எதிலோ படித்த ஒரு கமென்ட் ஞாபகம் வருகிறது. 'if they continue this then the locals will become foreigners in their own country' என்று எழுதியிருந்தார்கள், வேறு வழி இல்லை, அதுதான் உண்மை.

அது உண்மை என்பது இங்குள்ள லார்ஜெஸ்ட், பிக்கஸ்ட் மால்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், பஸ், மெட்ரோ இதையெல்லாம் பயன்படுத்துபவர்களைப் பார்த்தால் தெரியும். அதுவும் இங்குள்ள பர் துபாய் மீனா பஜார், க்ரீக் ரோடு, ஓல்டு பாகிஸ்தானி கவுன்ஸலேட் ஏரியாவிலெல்லாம் பார்த்தால் அது ஏதோ இந்தியாவில் ஒரு பெருநகரத்தின் தெருக்களில் நடப்பது போலவே இருக்கும். தப்பித்தவறி கண்ணில் படும் ஒரு சில ஹபிபிகள் வெளிநாட்டினர் போல் கண்ணுக்கு தெரிவார்கள்.

என்ன செய்வது, நாம் பிழைக்க வந்திருக்கிறோம் என்பதை அடிக்கடி ஞாபகம் வைத்துக்கொண்டு நாம் தான் இங்கே foreigner என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இங்குள்ள ஆசியர்களை எல்லாம் ஒரு நாள் ‘போங்கடா, உங்க விசா காலம் எல்லாம் முடிந்தது, எல்லோரும் ஊருக்கு போகலாம்‘ என்று சொல்லிவிட்டால் இங்கு பல பகுதிகள் வெகு சீக்கிரம் பாழடைந்து விடும். ஆசியர்களின் கடும் உழைப்பிலேயே இந்த நாடு வளர்ந்திருக்கிறது என்பது அப்பட்டமான உண்மை. அவர்களிடம் பெட்ரோல் இருந்தாலும் அதை எடுத்து மார்க்கெட் செய்து பணமாக்கிக்கொடுப்பது பெரும்பான்மையாய் ஆசியர்கள் தான்.

ஆனால் அந்த ஆசியர்களுக்கு இங்கே மரியாதை என்பது துளி கூட கிடையாது. நான் ஒரு ஹிந்து என்பதால் இதை சொல்வதாய் நினைக்கவேண்டாம், நம் நாட்டு முஸ்லீம்களுக்கும் இங்கே இதே நிலைதான்.

எப்போது ஆசியர்களின் மரியாதை குறைவு தெரியும் என்றால், இங்குள்ள அரசு அலுவலகங்களுக்கு சென்றால் தெரியும் ஆசியர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது. ஒரு காலத்தில் இந்தியர்களால் டாமினேட் செய்யப்பட்ட போஸ்ட் ஆபிஸ், வங்கிகள் எல்லாவற்றிலும் இப்போது Front Deskல் ஹபிபிகள் தான். சரியப்பா உங்கள் நாடு, உங்கள் பாடு என்று விட்டுவிடலாம். நீண்டு செல்லும் போல் தெரிவதால் இரண்டு உதாரணம் மட்டும் சொல்கிறேன்.

இப்போதெல்லாம் இங்குள்ள வங்கிகளில் எல்லாம் 30 வரைவோலைகளுக்கு (தமிழ்ங்க) மேலே இருந்தால் தான் கவுண்டரில் வாங்கிக்கொள்வார்கள், 29 என்றால் போ, போய் மெஷினில் போடு என்று சொல்லிவிடுவார்கள். எங்கள் அலுவலகத்தில் சராசரியாக மாதம் 300 செக் களுக்கு மேல் ரெமிட் செய்ய வேண்டியிருக்கும், வாரம் ஒருமுறை அல்லது இருமுறை வங்கிக்கு நம் ஆட்கள் செல்வார்கள். 29 செக் என்றால் அதை கொண்டு செல்வது இந்தியன் அல்லது பிலிப்பைனி அல்லது பாகிஸ்தானி போன்ற ஆசியர்கள் என்றால் அவனை ஓட ஓட மெஷினுக்கு துரத்துவார்கள், ஸ்டேட்மென்ட்டில் அது ஒரே நாளில் 29 லைன்கள் வரும், ஸ்டேஷனரி செலவு அதிகம் இப்படி பல இருந்தாலும் இதை ஒரு ஐரோப்பியன், வெள்ளை தோல் அல்லது ஒரு ஹபிபி என்றால் கேட்பதற்க்கு ஒரு நாதியும் இருக்காது, அவர்கள் 2 செக் என்றாலும் கவுண்டரில் கொடுத்துவிட்டு போய் கொண்டே இருப்பார்கள்.

நம்ம ஆளுக என்றால் 29 செக்கையும் மெஷினில் வைத்து அழுத்துவதை தவிர நமக்கு வேறு வழி இல்லை. இவன் வங்கி வேலை முடித்து அடுத்து பல வேலைகளை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருப்பான், அதெல்லாம் அவர்கள் பிரச்னை இல்லை என்பது போல் பார்த்துக்கொண்டேயிருப்பார்கள், ஆசியர்கள் அவர்களை பொருத்தவரை பிழைக்க வந்த நாதாரிகள் என்பது போல் இருக்கும், வெள்ளையர்கள் அப்படி அல்ல. ஆனால் உண்மையில் கொள்ளையடிப்பது யார் என்று தெரியாது. இன்னொரு அநியாயத்தை கேளுங்கள்.

இதே மரியாதை தான் கார்களுக்கு ஃபைன் கட்ட சென்றாலும். 2004அல்லது 2002ல் இங்கு ஒரு சட்டம் வந்ததாம். சொந்தமாய் தனிநபர் பெயரில் டெலிவரி வேன் வைத்திருந்தால் அதற்க்கு சன் பிலிம் ஒட்டிக்கொள்ளலாம், ஆனால் கம்பெனி பெயரில் உள்ள வண்டி என்றால் ஒட்டக்கூடாது. இது பலருக்கு தெரியாது, எங்களுக்கும் தெரியாது.

அடிக்கும் 50 டிகிரி வெயிலில் சன்பிலிம் ஒட்டாமல் டெலிவரி வேனில் உள்ளே இருப்பது ரொம்ப கஷ்டம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இது தெரியாமல் நம்ம பய புள்ள ஒண்ணு சமீபத்தில் அஜ்மான் சென்றுவிட்டது, சன்பிலிம் ஒட்டிக்கொண்டு. அதைப்பிடித்து முக்காலிஃபா கொடுத்து விட்டார்கள். 500 திர்கம் ஃபைன்.

எங்கள் அலுவலகத்தில் சன்பிலிம் ஒட்டுவது கம்பெனி செலவு வராது. எங்கள் முதலாளி அதை ஒட்ட ஏனோ விரும்புவதில்லை, அவன் வைத்திருக்கும் காரிலும் ஒட்டமாட்டான். அவன் டிரைவ் செய்வது குறைவு, ஆனால் டெலிவரி வேன் நாள் முழுவதும் வெளியில் அலைய வேண்டியது இருக்கும், கொஞ்சம் கஷ்டம். யார் வேண்டுமானாலும் அவரவர் வைத்திருக்கும் கம்பெனி வண்டியில் ஒட்டிக்கொள்ளலாம் சொந்த செலவில். நம்ம பய சமீபத்தில் வாங்கிய புது வேனில் எல்லாம் சொந்த சிலவிலேயே ஒட்டி வைத்திருந்தான். ஆக ஃபைன் பையன் தலையில் விழுந்தது.

சரி, இந்தமாச சம்பளத்துல கொஞ்சம் போயிற்று என்று அவனும் தண்டம் கட்ட சென்றான், அங்க போனால் இது சிவியர் குற்றம், இதற்க்கு ஒரு மாசம் வண்டிய உள்ள வைக்கணும், தோ, அங்க கொண்டு உட்டுட்டு போ, 1 மாசம் கழிந்து வந்து தண்டம் கட்டிட்டு வண்டிய எடுத்துக்க என்று சொல்லவும் பய அலரி அடித்து போன் செய்தான், பிலிம் ஒட்டினேன், இது குற்றமா என்றான். சரி 2 நாள் கழித்து வந்து விடுறேன்னு சொல்லிட்டு வந்து சேரு என்றேன்.

எனக்கு தெரியும் ஹபிபிகள் வெள்ளையர்களுக்கு பயப்படுவார்கள் என்பது, நம்ம முதலாளி தான் வெள்ளையனாயிற்றே. சொன்னேன் அவனிடம், என்ன செய்வது வண்டிய உள்ள உட்ரலாமா? அல்லது நீ போய் பேசிப்பார்க்கிறாயா என்றேன்.

உள்ள வுட்ரதா? நம்ம டெலிவரி எல்லாம் என்ன ஆறது? சரி நான் போகிறேன் என்று போனான். அவனுக்கு ராஜ மரியாதை கொடுத்து, வண்டி ஒன்னுதா, சரி சரி, பரவால்லை, சன்பிலிம் எடுத்திட்டு வண்டியைக்காட்டு, ஃபைன் மாத்திரம் கட்டிட்டு வண்டிய கொன்டு போ என்று விட்டார்கள். அவன் அவனது ரேஞ்ச்ரோவரில் சென்றிருந்தான், வண்டியை எங்க காட்ரது, சரி நாளை வண்டிய அனுப்பறேன்னு வந்துவிட்டான்.

என்னிடம் வந்து சொன்னதும், சரி முக்காலிஃபால எதும் எழுதி, கையெழுத்து வாங்கினாயா? என்றேன். (நம்ம ஆளுங்க இதிலெல்லாம் கரெக்ட்டா இருப்பாங்க, சரி மக்கா, மை ஃப்ரெண்ட், இதுல ஒரு கையெழுத்து போட்ருன்னு நாம வாங்கிட்டு தான் வருவோம்) இல்ல, அங்க நல்லா பேசினாங்க, ரொம்ப நல்லவங்க, ஹி ஈஸ் நவ் மை ஃப்ரண்ட், நீ நாளைக்கு அனுப்பு, எல்லாம் சரியாயிரும் என்று சொல்லி விட்டு நான் 2 நாள் பஹ்ரைன் விசிட் போரேன்னு சொல்லிட்டு போயிட்டான். எனக்கு நன்றாகத் தெரிந்தது, இது நடக்கப் போவதில்லையென்று, சரி போ என்று விட்டுவிட்டேன்.

அடுத்த நாள் நம்ம பய போனான் அங்கே, போனஉடனேயே முக்காலிஃபாவை வாங்கி டேட் ஸ்டாம்ப் வைத்து, சரி அங்கே கொண்டு வுட்டுட்டு போ எனவும், பய ஆடிப்போய், இல்ல, எங்க பாஸ் நேத்து வந்தாரு, அவுரு ஃப்ரண்ட்ன்னு ஏதேதோ சொல்லியும் ஒன்றும் நடக்கவில்லை, இவனை அந்த அலுவலகத்தின் உள்ளே இருந்த அதிகாரியைப்பார்க்கவே அனுமதிக்கவில்லை.

சாரிங்கோவ், இனி நாளை வருகிறேன், 2 பக்கம் ஆகிவிட்டது. சத்தியமாய் நாளை வருவேன், கிட்டத்தட்ட முடித்துவிட்டேன், ஆனால் பாருங்கள் முடியலை, நாளை சந்திப்போமா?

அன்புடன், வசந்தா நடேசன்.

Tuesday, January 4, 2011

நண்டு கறி

விடுமுறை நாட்கள் துபாயில் கொஞ்சம் விஷேசமானவை. நான் துபாயில் இருப்பதால் துபாய் என்கிறேன், இந்தியாவை விட்டு வெளியே வாழும் எல்லா இடங்களிலும் இப்படியே இருக்கக்கூடும். அதுவும் என்போல் குடும்பத்தை பிரிந்து பிழைப்பிற்க்காக பிரிந்து வாழ்பவர்களுக்கு இந்த இடையிடையே வரும் விடுமுறை நாட்கள் குதூகலமானவை.

நண்பர்கள் எல்லாம் ஓரிடத்தில் கூடி பேசி மகிழ்ந்து அரட்டைக்கச்சேரி நடத்தும் நாட்கள். தினமும் பாத்த மூஞ்சியையே பார்த்துக்கொண்டிருப்போம், ஒவ்வொரு வீட்டிலும் ஸ்டேண்டர்டாக ஒரு 7 நாள் மெனு இருக்கும். சனிக்கிழமை இது, ஞாயிற்றுக்கிழமை இது.. இப்படி எப்போதும் ஒரே ஃபுட். புதிதாக செய்வதற்க்கு நேரம் இருந்தாலும் மனம் வராது. இதுவே போதுமென்று ஒரே பாணியில் போய்க்கொண்டிருக்கும் .

என்னைப்பொருத்தவரை இங்கே இரண்டு நாள் சேர்ந்தார் போல் லீவு வருவது கொஞ்சம் அபூர்வம், அரசு துரைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு வெள்ளி. சனி இரண்டு நாட்களும் விடுமுறை. மற்றும் சிலபல ஸ்டேண்டர்டு பெரிய கம்பெனிகளுக்கும் அப்படியே.

நான் வேலை பார்ப்பதும் ஸ்டேண்டர்டு கம்பெனி தான், இருந்தாலும் எங்களுக்கு அப்படி இல்லை. வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை அரை நாள் வேலை எனக்கு. வெள்ளி விடுமுறை.

போனவாரம் கிறிஸ்மஸ் என்பதால், சனிக்கிழமை விடுமுறை, இந்தவாரம் புத்தாண்டு என்பதால் சனிக்கிழமை விடுமுறை.

போனவாரம் தஞ்சை மற்றும் கோவையைச்சேர்ந்த நண்பர்கள் இருவர் வீட்டிற்க்கு வந்திருந்தனர். தஞ்சைக்காரர் சிறந்த கைப்பக்குவம் கொண்டவர். நெய்ச்சோறும், மட்டன் குருமாவும் அவரது ஸ்பெஷாலிட்டி.

நேற்று நண்டு வைப்போமா? என்றார். நான் இதுவரை நண்டு சாப்பிட்டதில்லை. எங்கள் வீட்டிலோ அல்லது எங்கள் சொந்தபந்தங்களோ யாரும் இதுவரை வைத்ததில்லை, என் மனைவிக்கும் சமைக்கத்தெரியாது என்றே நினைக்கிறேன்.

ஸ்டார் ஹோட்டல்களில் நடக்கும் ஆபிஸ் டின்னர்களில் உடன் வேலைசெய்பவர்கள் எடுத்து சாப்பிடுவதை பார்த்திருக்கிறேன். நான் ஒதுங்கி விடுவேன், நான்வெஜ் என்றால் என்னைப்பொருத்தவரை, மட்டன், சிக்கன், மீன் மட்டுமே.

சரி வித்யாசமாக இருக்கட்டுமே என்று எல்லோரும் ஓகே என்றதால் இன்றைய ஸ்பெஷல் நண்டுகறியென முடிவாயிற்று. முடிவானதும் பரபரவென எல்லாம் வாங்கிவந்து மணக்க மணக்க நண்டு கறியும், நெய்ச்சோரும் ரெடியானது.

எல்லாம் முடிந்ததும் எல்லோரும் சுற்றி அமர்ந்து ஒரு வெட்டு வெட்டினோம். சும்மா சொல்லக்கூடாது, சூப்பர் என்று தான் சொல்லவேண்டும், ஓட்டை உடைத்து எப்படி சாப்பிடுவது என்பதும் கற்றுக்கொண்டேன். அருமை, அருமை என நீண்ட நாட்களுக்குப்பிறகு மிக அருமையான ஒரு சாப்பாடு.

அது ஏனோ நண்டு வாங்குவதென்றால் பௌர்ணமிக்கு பின்பு வளர்பிறையில் தான் வாங்க வேண்டுமாம், நண்டு கொழுத்து நன்கு வளர்ந்து இருக்குமாம்.., தேய்பிறையில் வாங்கினால் நண்டு தேய்ந்து மெலிந்து போய் இருக்குமாம், (தாய்குலம்லாம் நோட் பண்ணிக்கோங்க) என்ன லாஜிக்கோ புரியவில்லை ஆனால் நாங்கள் வாங்கிய நண்டுகள் எல்லாம் நன்கு கொழுத்திருந்ததாகவே நினைக்கிறேன். எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும் நண்டு ஓடுகள் ஓட்டை ஒடிசல் மலை போல் குமிந்திருந்தது!

அப்படியே நியூஇயர் பிளான்களும், எங்கு செல்வது என்ன செய்வது எல்லாம் முடிவாகி நியூஇயர் அன்று மதியம் சிக்கன்பிரியாணி என்றும் முடிவாகி அதுவும் அருமையாக கழிந்து விட்டது, (தப்பிச்சீங்க, பிரியாணி கதை படிக்கவேண்டி வராது!)

இனி ஒரு நீண்ட விடுமுறையில்லா காலத்திர்க்குள் கால் வைத்தது போல் உள்ளது. ஆம் இனி இங்கே நோண்புப்பெருநாள் வரும்வரை ஒரு நீண்ட நெடிய பயணம் போகவேண்டும். விடுமுறை இல்லா பெரும்பயணம். இப்போதே ஆபிஸில் ஆப்படிக்க ஆரம்பித்து விட்டார்கள்,

இரண்டு நாட்களாய் உங்களுடன் பேசக்கூட நேரமில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். லீவு எடுத்தில்ல, வீட்டுக்கு கொண்டுபோய் வேலைபாப்பியோ என்ன செய்வியோ எனக்கு இப்ப ரிப்போர்ட் வேணும்னு அடம் புடிக்கிராய்ங்க சார், அதுல வேர ஐரோப்பிர்களெல்லாம் ஜாலியாக அவர்களின் நீண்ட விடுமுறையைக் கொண்டாடிவிட்டு இன்று தான் திரும்பி வந்து விட்டதெல்லாம் இன்னைக்கே புடிக்கணும்னு பறக்கிறாங்க, அஞ்சமாட்டோம்ல வந்த அத்தனை ஈமெயில்களுக்கும் ஆப்படித்தாகிவிட்டது. நேற்று எங்கடா போனீங்கன்னா, பயபிள்ளைகளுக்கு சனிகிழமை நியூஇயர் வந்ததால் திங்கள் லீவாம், இந்த வயித்தெரிச்சலை எங்கபோயி சொல்வது?

யாரவது ஒரு லண்டன் விசா குடுங்க சார், நல்லா இருப்பீங்க.

அன்புடன், வசந்தா நடேசன்.

Saturday, January 1, 2011

புத்தாண்டு நினைவுகள்

இந்த புத்தாண்டு தினத்தில் ஏனோ இந்த புத்தாண்டு மலரும் நினைவுகள்.

முன்பெல்லாம் ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, தமிழ்புத்தாண்டு இந்த மூன்று நாட்களும் நானும் என் நண்பர்களும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து அன்று மட்டும் வித்யாசமாக வேஷ்டி மற்றும் சட்டையில் எங்கள் ஊர்க்கோயில்களுக்கு செல்வது வழக்கம்.

முதலில் எங்கள் ஊர் நாகராஜா கோவில், பின்பு குமாரகோவில், அதன் பின்பு சுசீந்தரம் அல்லது கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில். எல்லாம் முதல் நாள் இரவே பிளான் போட்டு அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு எல்லாம் அவரவர் வண்டியில் குறித்த இடத்தில் கூடி சரியாய் 9 அல்லது 10 மணிக்கு இதை செய்து முடித்திருப்போம்.

நல்ல சைட் அடிக்கலாம் அதற்க்காக கோவிலுக்கு சென்றோம் என்றாலும் வெறும் சைட் அடிப்பதற்க்காக மட்டுமே என்று சொல்வதர்க்கில்லை. அதன் பின்னால் ஒண்ணாம் தேதி நல்ல விஷயங்களை பார்க்க வேண்டும், செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணமும் இருந்தது நிஜம் தான்.

இன்று துபாயில் நண்பர்கள் எல்லாம் காலையில் கோயிலுக்கு போகவேண்டும் என்று நேற்றே முடிவு செய்தார்கள், நான் வரலைங்க, நீங்க எல்லாம் போய்ட்டு வந்திருங்கன்னு நேற்றே சொல்லிவிட்டேன். நான் சோம்பேறி ஆகிவிட்டடேனா?

இங்கு கோவில் அதன் முழுமையான வடிவத்தில் இல்லை என்பது ஓரு பக்கம், அங்கேயும் ஒரு ஹாலில் தான் சாமியை வைத்திருக்கிறார்கள், நம் வீட்டிலும் அப்படித்தான் வைத்திருக்கிறோம், பொறவு ஏன் அங்க வர என்று தான் நினைக்கிறேன்.

எல்லோரும் கோவிலுக்கு போய்விட்டு பதினொன்றரை மணிக்கு வந்துவிட்டார்கள், வீட்டில் என்னுடனிருந்த மற்ற நண்பர்கள் காலையிலேயெ எழுந்து இட்லியும் சட்னியும் ரெடி பண்ணியிருந்தார்கள். நான் வழக்கம் போல் கடைசியில் எழுந்து குளித்துவிட்டு வந்து டிபன் சாப்பிட்டேன்.

ஒன்றாம் தேதி நல்ல விசயங்களை பார்ப்பது, நல்லவிசயங்களைப்பேசுவது என்ற எங்கள் நண்பர் வட்டத்து அந்தகாலப்பழக்கம், எங்களுக்கு நல்லதையே தந்திருக்கிறது, இன்று எனக்கும் என் நண்பர்களுக்கும் எந்த குறையும் இல்லை, எல்லோரும் நிறைவாகவே இருக்கிறோம், அந்த நாகராஜர், தாணுமாலையன் அல்லது முருகன் அருளால். அனைவருக்கும் நன்றி கூறி என் புத்தாண்டு வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன், வசந்தா நடேசன்.