Showing posts with label உள்நாட்டு முரண்கள். Show all posts
Showing posts with label உள்நாட்டு முரண்கள். Show all posts

Sunday, August 7, 2011

கலைஞர் சொத்து

முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது டெல்லியிலிருந்து வெளியாகும் தி அதர் சைட் பத்திரிகை.

இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஜார்ஜ் பெர்ணான்டஸ். கருணாநிதியின் நீண்ட கால நண்பரும் கூட.

இந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள விவரங்களைப் பார்த்து பிரதமர் உள்ளிட்ட டெல்லி தலைவர்கள் ஆடிப் போய்விட்டதாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

லாலுவோ சும்மா கிரங்கிப்போய் கெடக்காராம்.
மாயாவதி மலைச்சிப்போய் நிக்கராங்களாம்.
சோனியா சும்மா சொக்கிப்போய் படிச்சாங்களாம்.

அந்த பத்திரிகை வெளி​யிட்டு உள்ள பட்டியல்:

1. 6,124 சதுர அடிகள் பரப்பளவு​கொண்ட கருணாநிதியின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

2. முரசொலி மாறனின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி.

4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி.

5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.

6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.

7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.

8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி.

9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.

10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.

11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.

12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.

13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.

14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.

15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.

16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.

17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.

18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.

19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.

20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.

21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.

22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.

23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.

24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு - 48 கோடி.

25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.

26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.

27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.

28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.

29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை

30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை

31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.

32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.

33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.

34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி.

35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்

36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.

37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.

38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.

39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.

40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.

42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி.

44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.

45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம்.

46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.

49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

50. சென்னைக்கு அருகில் சோழிங்​கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.

51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு - ரூ 3 கோடி.

52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.

53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.

54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.

56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு - தெரியவில்லை.

57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.

58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.

59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.

60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.

61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.

62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி.

63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை

64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.

65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.

66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்த​மான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்​களுடையதே.

67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.

68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்​துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.

69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.

- இவ்வாறு அந்தப் பத்திரிகை பட்டியல் இட்டுள்ளது.

ம்ம்ம்ம், வாழ்த்துக்கள் தலைவா ன்னுதான் சொல்லணும், வேற என்னத்த சொல்ல? அம்மையாரும், சசிகலாவும் என்னென்ன வச்சிருக்காங்களோ, இல்ல இப்பதான் சேத்துகிட்டு இருக்காங்களோ? அது எப்பவாவது வந்தா அதையும் போட்டுடறேன்.

அன்புடன், வசந்தா நடேசன்.

நன்றி தட்ஸ்தமிழ் ஒன் இந்தியா.

Friday, June 10, 2011

ஊழல்?

நாடெங்கும் ஊழல் குறித்து பரபரப்பாக இருக்கும் போது சரி நம் எழுத்துக்கடையில் அதுபற்றி எழுதாவிட்டால் நன்றாக இருக்காது என்பதால் ஒரு சிறு பதிவு.

அன்னா ஹசாரே இது குறித்து ஒரு போராட்டத்தை ஆரம்பித்த போது அவர் போட்டோவை பார்க்குமுன்பு சரி ஏதோ இளைஞர் போல் இருக்கிறது, நியாயம் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள், சரி இந்தியா இனி உருப்பட்டுவிடும் என நினைத்தேன். பின்பு அவர் போட்டோவை பார்த்ததும் இது என்ன எழவுடா இது, இந்த மனிதர் இத்தனை நாள் எங்கிருந்தார்?? என்ற எண்ணம் தான் மனதில் வந்தது.

60 அல்லது 70 வயதுக்குக்கு மேல் திடீரென்று ஒருநாள், சரி, எல்லாரும் வாங்க, ஊழலை ஒழிக்கலாம் என்றால்?? ஒரு வேளை நம் ராசாக்களும், கனிகளும் தென்னகத்திலிருந்து சென்று செய்த மெகா ஊழல்களை பார்த்து மலைத்துப்போய், அடடா.. நாம் வட இந்தியாவில் இத்தனை நாள் இருந்தும் இது தெரியாம போச்சே என்று ஷாக்காகிப்போய் திடீரென்று முளைத்து வந்த காளானைப் போல தான் என்று சரியோ, தவரோ ஒரு எண்ணம் வந்தது நிஜம்.

இந்த கூத்தை பார்த்து விட்டு அப்புறம் ராம்தேவ் யோகா சாமியார்? அடுத்தது! காங்கிரஸ் தனக்கு மாற்று இல்லை, போட்டி இல்லை என்று தெனாவட்டாய் இருந்து கொண்டிருக்கும் போது இப்படி ஆளாளுக்கு ஆரம்பிப்பதை பார்த்து என்னடா நடக்கிறது என்று அவர்களும் இப்போது மண்டை காய்ந்து புதிதாக ராம்தேவின் சொத்து என்ன, பத்து என்ன என்று புதிதாய் கணக்கு பார்த்து, கேட்டு, அந்த சாமியாரும் எனக்கு 1100 கோடி சொத்து இருக்கிறது என்று டிக்ளேர் செய்வதும், மேலும் என்னென்ன நிறுவனங்கள் இருக்கிறது என்றால் சொல்ல மாட்டேன் என்பதும் மனதில் ஏதேதோ எண்ணங்களை வரவைக்கிறது.

சாமியாருக்கு எதுக்குடா சொத்தும், பங்களாவும்? இந்த ஆள் பின்னால் தொடர்வதற்கு எங்கிருந்து கூட்டம் வருகிறது? நம் மக்கள் எத்தனை பட்டாலும் திருந்த மாட்டார்களோ??

இதற்கிடையே நம் கலிஞ்ங்கர்ஜீ தாத்தா திடீரென்று முழித்துக்கொண்டு நாங்கள் 1971லியே ஊழலை ஒழிக்கும் தீர்மானம் போட்டுவிட்டோம் என்று நானும் உண்டு என்று ஆரம்பித்துள்ளார். இவர் சைலன்ட்டாய், சத்தம் காட்டாமல் ஊழல் செய்வது எப்படி என்பதை சொல்லிக் கொடுக்க ஒரு கல்லூரியே ஆரம்பிக்கலாம், அத்தனை அனுபவசாலி என்று ஊருக்கே தெரியும்.

காங்கிரஸ் இப்போது ராம்தேவ் பின்னால் ஆர்.எஸ்.எஸ் உள்ளது என்று பிரச்சாரம் பண்ண ஆரம்பித்திருப்பது வீணாய் பி.ஜே.பியின் வாக்கு வங்கியை அதிகரிக்கத்தான் உதவப்போகிறது. என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் ஏதேதோ சொல்கிறார்கள்.

அ.தி.மு.க வினர் வெற்றி மமதையில் ஏதேதொ செய்து கொண்டிருக்கிறார்கள், பாடம் படித்திருந்தால் சரி, இல்லாவிட்டால் நம் வாக்காளர்களுக்கு இன்னொரு பாடம் படிப்பிக்கும் வேலை இருக்கும்.

தலைகீழ் ஆட்சி மாற்றம் வந்த பின்னும் அரசியல் வாதிகள் வாக்காளர்களின் பலத்தை தெரிந்து கொண்டதாய் தெரியவில்லை, நடுநிலையாளர்களின் வாக்குகள் தான் வெற்றி தோல்வியை அன்றும் தீர்மானித்தது, இன்றும், இனிமேலும் தீர்மானிக்கப்போகிறது, தற்கால அரசியல் மூடர்கள் என்று இதை புரிந்து கொள்ளப்போகிறார்களோ தெரியவில்லை.

என்னை பொருத்த வரை எந்த லோக்பால் வந்தாலும் இந்தியாவில் இனி ஊழல் ஒழியப்போவதில்லை. அதை ஒழிப்பது என்றால் இளைஞர்கள் கையில் தான் இருக்கிறது, அவர்கள் ஒரு கூட்டு இயக்கம் போல் ஒன்றை ஆரம்பித்து வேரிலிருந்து அதை அழிக்க வேண்டும், நான் சொல்வது புரட்சி போன்றது அல்ல, மக்கள் இயக்கம், சாத்வீகமான மக்கள் இயக்கம்.. ஒருவருக்கொருவர் ஊழல் பற்றி பேசி, லஞ்சம் கொடுப்பதில்லை என்பதில் உருதியான செயல்பாடுகளை கொண்டு வருவது. அதை பரவலாக்குவது. இப்படி புதிதாக ஆரம்பித்தால் மக்கள் ஆதரவும் இருக்கும் என்றே தோன்றுகிறது.

ம்ம்ம், பார்த்துக்கொண்டிருப்போம், நம் மக்களுக்கு நன்றாகவே தெரிகிறது, ஆப்படிப்பது எப்போது என்பது அந்த ஒரு மகிழ்ச்சி இப்போது இருப்பது உண்மைதான்.

அன்புடன், வசந்தா நடேசன்

Sunday, May 8, 2011

சீனாவில் மலிவு ஏன்??

நண்பர்களே நீண்ட நாட்களுக்குப்பின் ஒரு சிறு பதிவு..

இன்று நண்பர் அனுப்பிய ஒரு ஈமெயிலில் பார்த்த கீழ்கண்ட படங்கள் இதை எழுதத்தூண்டியது..

பொதுவாக இந்திய பொருட்களை விட சீனத்துப்பொருட்களுக்கு விலை குறைவு, நம்மில் பலர் இதை கவனித்திருப்போம், அதே நேரம் சீனாவில் சில கம்பெனிகள் தரமான பொருட்களையும் தயாரிக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

பொதுவே நம் அரசின் கொள்கைகளும் சீனாவின் கொள்கைகளும் மாறுபட்டவை, கீழே ஒரு உதாரணம் பாருங்கள்.. ஒரு கடத்தலை அங்குள்ள அதிகாரிகள் எவ்வாறு நேரிட்டனர் என்பதனை இப்படங்கள் விளக்குகின்றன.

முதல் படம், ஒரு சிறுவனை அங்குள்ள ஒரு பெரிய கட்டிடத்தின் அறையில் கடத்தி வைத்துவிட்டு கடத்தல் காரன் தன்னிடம் மூன்று கோரிக்கைகள் உள்ளதாய் கூறுகிறான்.



அடுத்தபடத்தில், சிறிது நேரத்தில் வந்த போலீஸார் அல்லது அதிரடிப்படையினர், எவ்வாறு இதனை நேரிடுவது என்று சிறு ஆலோசனையிடுகிறார்கள்.



பேச்சுவார்த்தை தொடங்குவது போல் பாவ்லா காட்டிக்கொண்டே எவ்வாறு சிறுவனை காப்பாற்றுவது என்பதன் டிரையல் தொடங்குகிறது..

அதிரடி ஆரம்பம்..



ஆட்டம் குளோஸ்!


மொத்த செலவு £0.25

இதுவே நம் ஊர் என்றால் யோசித்துப்பாருங்கள்? குறைந்தபட்சம் 24 மணிநேரத்திற்கு அந்த தெருவில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கும்.

அதிகாரிகள் வந்து பேச்சு வார்த்தை நடத்த இன்னொரு 24 மணி நேரம்!

பேசிமுடித்து ஒரு 10 லட்சமோ 1 கோடியோ சிறுவனின் வசதியை பொருத்து பேரம் படிந்திருக்கும். அதுவரை கடத்தல் காரனுக்கும் சிறுவனுக்கும் சாப்பாடு, தண்ணீர் மற்றும் எல்லா சவுகரியங்களும் கிடைத்திருக்கும், உறவினர்கள் கண்ணீரோடு கதறுவது சன் டிவியில் செய்தியாய் லைவ் ஓடிக்கொண்டிருக்கும்!

கடைசியில் ஒருவேளை பையனை காப்பாற்றியிருப்பார்கள், கடத்தல் காரன் சிறையில் பொதுமக்கள் செலவில் நன்கு சாப்பிட்டு ஐந்தாறு வருடம் ரெஸ்ட் எடுத்துவிட்டு வந்து மீண்டும் தொழிலை ஆரம்பிப்பான்!

சீனாவில் எவ்வளவு சிம்பிளாய் முடித்துவிட்டார்கள் பாருங்கள்! நம் ஊரில் அப்படியே நடந்தாலும் நம் மனித உரிமை பாதுகாவலர்கள் விடுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?

நம் பொருட்களின் விலை அதிகம் தான், நம் திருடர்கள் மற்றும் கொள்ளைக்காரர்களுக்கு பொதுமக்களின் வரிப்பணம் செலவாவது தொடர்வது வரை!

அன்புடன், வசந்தா நடேசன்.

Monday, March 14, 2011

குழந்தை தொழிலாளர்கள்!

இன்று சன் டிவியில் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன், மிகவும் மனதை பாதித்ததால் அதை பற்றிய ஒரு பதிவு இங்கே. நிகழ்ச்சியை பார்த்தவர்கள் மேலே தொடரவேண்டாம், சன் டிவியை விட நான் அதிகம் சொல்லப்போவதில்லை.. இது என் பாணியில், என் பார்வையில். (நம்ம கடைக்கு வார ஒரு முப்பது கஷ்டமருக்காக??)

நம் சமூகம் இன்னும் எத்தனை விஷயங்களில் மறுமலர்ச்சி அடையவேண்டியதிருக்கிறது என்பதை நினைத்தால் ஒரு வித திகைப்பே மிஞ்சுகிறது.. இத்தனைக்கும் இதை தடுக்க பல சட்டங்களும் பல அரசு அதிகாரிகளும் இதற்க்காக நம் நாட்டில் வேலை செய்கிறார்கள்.

சிவகாசி போன்ற தொழில்வழம் மிக்க நகரங்களில் இந்த அதிகாரிகள் கொஞ்சம் வேலை பார்த்து சில வற்றை கண்டு தடுத்திருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.. பிற நகரங்களில் இவர்களுக்கு வியாபார நிறுவனங்களை மிரட்டி காசு வாங்குவதற்கே நேரம் சரியாக இருக்கிறது போலும்!

ஆனாலும் இன்று நான் பார்த்தது தொழில் சார்ந்ததில்லை.. சொல்லப்போனால் பல வருடங்களுக்கு முன் இது போல் ஒரு சம்பவம் நம் தமிழ்நாட்டிலும் நடந்தது நினைவு இருக்கிறது.. பத்து வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இன்று பார்த்தது, தமிழ்நாட்டிலிருந்து இரண்டு பதினாலு வயதுக்கும் குறைந்த பருவம் கொண்ட சிறுமிகளை கேரளாவுக்கு வேலை செய்ய அனுப்பியிருக்கிறார்கள், ஒரு ஏழை தாயும், தகப்பனும். பள்ளியில் படித்தவர்களின் படிப்பையும் நிறுத்தி. மிக குறைந்த அளவு பணம் வாங்கிக்கொண்டு. பண ஆசையா?? இல்லை, படித்துக்கொண்டிருந்த குழந்தைகளை என்னுடன் கேரளாவுக்கு வேலைக்கு அனுப்பி வை, மாதம் நல்ல சம்பளம் தருவார்கள் என்று வற்புருத்தி தாயின் அண்ணன் முறையிலான ஒருவரே அழைத்துச்சென்றிருக்கிறார்.. அழைத்துச்சென்றவருக்கும் அவர் மலையாளி பெண் பார்ட்டனுருக்கும் இதில் கிடைத்தது 15000 ரூபாய்கள்.

அங்கே போனதிலிருந்தே ஒரு குழந்தையை நாய் கூண்டில் அடைத்து வைத்து சாப்பாடு கொடுக்காமல் வேலை வாங்கி, சிகரட் சூடு, அடுப்பிலிருந்து எரியும் நெருப்பை வைத்து சூடு போட்ட காயங்கள் இத்யாதி, இத்யாதி... முடிவில் குழந்தை 15 நாட்களிலேயே கொடுமை தாங்காமல் இறந்து விட்டது.

இன்று அந்த மலையாளி தம்பதியை கைதுபண்ணியிருக்கிறார்கள், எல்லாம் நடக்கிறது, தண்டனை கிடைக்கும் என்று நம்புவோம், நான் சொல்ல வந்தது இனி என்ன நடக்க வேண்டும், எப்படி இதை தடுப்பது என்பதை பற்றி சிறிது அலசவே.

கேட்ட இன்னொரு அதிர்ச்சி தகவல், கேரளத்தில் இதுபோல் கிட்டதட்ட 5000 குழந்தைகள் வேலை செய்கிறார்களாம், இதற்கான நெட்ஒர்க் பல வருடங்களாய் நடந்து கொண்டிருக்கிறது. கிட்டதட்ட ஒரு வேனில் பல குழந்தைகளை அடைத்து வைத்து கொண்டு போய் வேண்டியவர்களுக்கு பணத்தை வாங்கிக்கொண்டு விற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்று இதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த தன்னார்வ தொண்டர் பேசினார். என்ன கொடுமை சார் இது??

சரி, இனி என்ன பண்ணலாம் என்று என் பார்வையில்.. (சன் டிவியில் சொல்லாதது!!)

தமிழகத்தில் இது பற்றிய ஒரு விழிப்புணர்ச்சியை உடனே கொண்டுவரவேண்டும், பத்திரிகை விளம்பரங்கள் மற்றும் டிவி விளம்பரங்கள் மூலம் இது சாத்தியமாகலாம், அஃப்கோர்ஸ் அரசு தான் இதில் தலையிடவேண்டும். இப்போது இதற்காக இருக்கும் அரசு அலுவலர்களுக்கு இது குறித்த விழிப்பணர்வு பயிற்ச்சி வகுப்புகள் எடுத்து கொஞ்சம் வேலை செய்ய சொல்லலாம்.

பள்ளிகளில் படிக்கும் பதினைந்து வயதுக்கு குறைவான குழந்தைகள் படிப்பை திடுதிப்பென்று நிப்பாட்டினாலோ அல்லது அடுத்த வருடம் படிப்பை தொடராவிட்டாலோ அது குறித்து பள்ளிகள் உடனடியாக பக்கத்தில் இருக்கும் தொழிலாளர் துறை அலுவலகத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும். அவர்கள் இது குறித்து விசாரித்து ஒரு அறிக்கை தயாராக்க வேண்டும். இதுவும் அரசின் கைகளில்.. சட்டமாக்கப்பட வேண்டும். பின்னாளில் காணாமல் போன குழந்தைகள் என்றால் நேராக தொழிலாளர் துறைக்கு மக்கள் நடக்கும் நிலை வரவேண்டும்.

சரி எல்லாம் அரசிற்கே விட்டால் பொதுஜனத்திற்கு என்ன வேலை?? நமக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் விழிப்பணர்வு தேவை மக்களே!! நீங்கள் ஒரு ஆசிரியராக இருந்தால் இது குறித்து உடனே குழந்தைகளின் பெற்றோரை அழைத்து விசாரிக்கலாம் நம் அரசு விழித்துக்கொள்ளும் வரை.

நீங்கள் ஒரு வாடிக்கையாளராக எங்காவது குழந்தை தொழிலாளர்களைக்கண்டால் உடனே இது குறித்து தொழிலாளர் துறைக்கு ஒரு புகார் அனுப்பலாம்.

முக்கியமாக உங்கள் பக்கத்து வீட்டிலோ அல்லது உங்கள் பார்வையிலோ ஏதும் இது போல் கொடுமை நடக்கிறது அல்லது குழந்தை காணாமல் போகிறது என்றால் உடனே உடனே இது குறித்து தொழிலாளர் துறைக்கு ஒரு புகார் அனுப்பலாம். அட்லீஸ்ட் காவல் நிலையத்துக்கு ஒரு அனானி கால் பண்ணியாவது சொல்லுங்கள் பொதுஜனமே!

இது குறித்து பல விவாதங்களும், விழிப்புணர்சியும் பரவலாக வேண்டும் என்பதே என் ஆசை..

அன்புடன், வசந்தா நடேசன்.

Tuesday, February 15, 2011

‘நை‘ நை‘ நை‘நை‘ ‘ளை‘ ‘ளை‘‘ளை‘.....

நீங்கள் அறுபதுகளில் பிறந்தவர்களா?? ஆம் உங்களையும் பாதித்த ப்ரச்னை இது, அதற்க்கு முன் பிறந்தவர்களென்றால் ஒருவேளை இதை கண்டும் காணாது கடந்து சென்றிருக்கலாம், அதற்க்குப்பின் பிறந்தவர்கள் அறியாத ரகசியம் இது.

நான் பிறந்தது 1966, விளக்கப்போகும் குழப்பங்கள் ஒருவேளை அந்த வருடத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும் வந்த சோதனையா அல்லலது 60துகளில் பிறந்த எல்லோருக்கும் சோதனையா என்று உறுதியாக தெரியவில்லை என்றாலும் எனக்கு இன்று ‘மேட்டர்‘ வேண்டுமே..

எங்களுக்கெல்லாம் 'னை' அல்லது 'ளை' என்பதை சின்னஞ்சிறுவயதில் அறிமுகப்படுத்திய விதமே ‘பிரமாதம்‘ என்பேன்.. 'னை' அல்லது 'ளை' என்பது ‘ன‘ அல்லது ‘ள‘ போட்டு ‘ன‘ வுக்குமுன் யானை தும்பிக்கையை சுருட்டி மேலே தூக்கியிருப்பது போல் ஒரு கொம்பு வைக்க வேண்டும், ‘ளை‘ என்பதற்க்கும் அப்படித்தான். இப்போது ‘னீ‘ என்பதற்க்கு ஒரு கொம்பு பின்பக்கம் பார்த்துக்கொண்டிருப்பது போல் அப்போது ‘னை‘ க்கு இதே கொம்பு முகத்தை திருப்பி அப்படியே முன்பக்கம் இருக்கும்.

நான் என் சிறுவயதில் யானைப்படம் அழகாய் வரைவேன், இந்த தும்பிக்கை ளை அல்லது னை போட்டுவந்த அனுபவத்தால் தான் என்று நினைவு.



நான் சிறு வயது அரைகிளாஸ் முதல் படித்தது அப்படித்தான். ஆனால் நாலாப்பு அல்லது அஞ்சாப்பு படிக்கும் போது கொண்டுவந்தார்கள் பாருங்கள் ஒரு சீர்திருத்தம்?? அருகே படத்தில் பட்டியலிட்டது போல் தான் இன்றுமுதல் எழுதவேண்டும் என்றார்கள்.

அதை அப்டி போட்டா என்ன? அல்லது இப்டி போட்டா என்ன?? னையும், ளையும் ஒங்களை எங்கய்யா குடைஞ்சது??? பச்சைமண்ணுகள (நாங்கதான்!) பரிகசிச்ச கொடுமை.. தமிழ் வளர்க்க (படிக்க??) பட்ட கஷ்ட்டம் கொஞ்சமா, நஞ்சமா? ம்ம்ம் எங்க சின்னவயசு நிலைமை? கேக்கறதுக்கு ஆள் இல்லை சார்.

எத்தனையோ ‘கொட்டு‘ வாங்கி ஏதோ தேறீருக்கோம்!

ஏதோ கஷ்ட்டப்பட்டு, வேதனைப்பட்டு ஒரு 'ளை' படித்து.. துக்கப்பட்டு, துயரப்பட்டு ஒரு 'னை' போடப்படிச்சிருந்தேன் சார்.. அதை வந்து மாத்திச்சு பாருங்க பயயுள்ளைங்க??

நாளைலருந்து இப்டி தான் நீ ளை போடணும் என்று?? அநியாயத்தை கேட்கணுமே. கையில பெரம்பை வச்சிகிட்டு மெரட்டுன கொடுமைய என்னன்னு சொல்ல. என்னா ஒரு வில்லத்தனம்?? நாங்களும் உப்பு சப்பு இல்லாம அதை கேட்டுக்கிட்டோம் அது வேறவிஷயம். வேறவழி!

ஆக நாங்கல்லாம் மிரண்டு கொஞ்சம் கொழம்பினது தான் மிச்சம்.. இன்னைக்கும் ‘உரைப்பதற்க்கு‘ன்னு சொல்லணுமா இல்ல ‘உறைப்பதற்க்கு‘ ன்னு சொல்லணுமா (இதுக்கும், அதுக்கும் என்னடா சம்பந்தம்னு நீங்க நினைக்கிறது கேட்கிறது, வேண்டாம்... அழுதுருவேன்.. ம்ம்ம்ங்ங்ங்) என்ற ஒரு குழப்ப நிலை அல்லது ம(க்கு)ந்த நிலைக்கு இதுதான் காரணம் யுவர் ஆனர்???

அன்புடன், வசந்தா நடேசன்.

டிஸ்கி:- எழுத்துச்சீர்திருத்தம்... அச்செழுத்தை சிக்கனப்படுத்த அப்போது கொண்டுவரப்பட்டது என தெரிந்தேதான் எழுதியிருக்கிறேன். இதனால் டைப்ரைட்டரில் சில எழுத்துக்கள் குறைந்தது உண்மைதான், ஆனால் தமிழ் எழுத்தின் அழகு கொஞ்சம் குறைந்துவிட்டது போல் ஒரு குறை எனக்கு. ஏதோ கொஞ்சம் மை மிச்சமாக வேண்டும்/டைப்ரைட்டரில் மூன்று பட்டன் குறைந்தது என்பதற்க்காக நம் பாரம்பரிய தமிழ் எழுத்துக்களை வேரோடு அழித்தது சரியா? செருப்புக்காக காலை வெட்டியது போல் இல்லையா? ஏதோ ஒரு சின்ன ஆதங்கம், வேற ஒண்ணும் பிரச்னை இல்ல சார்.. யாரும் இதுக்காக கல்லை தூக்கவேண்டாம்.

Tuesday, February 1, 2011

நாகதேவதை??

விஜய் டிவி யில் இப்பத்தான் பாத்தேன் சார்... என்ன கருமமோ விஜய் டிவில தான் எனக்கு எப்பவும் மேட்டர் கிடைக்குது.

சுமலதா என்று ஒரு பெண் தன்னை நாகதேவதை என்று சொல்லிக்கொண்டு நாகதேவதையாகவே வாழ்கிறாராம்.

மக்கள் அவர் காலில் விழுகிறார்கள், அவரும் தலையை பிடித்து தன் காலோடு அழுத்துகிறார்???

நாகப்புற்றோடு முட்டிபோட்டு குனிந்து பாலை புற்றின் மேல் வைத்து அருந்துகிறார். பாம்புபோல் படுத்து கொண்டு செய்திருந்தாலும் ஏதோ பாம்பு போலவாவது இருந்திருக்கும்.

காலில் விழுந்தவர்களை மூன்றுமுறை சாட்டையால் அடிப்பாராம், நோய் மற்றும் கஷ்டங்கள் விலகிவிடுமாம்..

ஜெயலலிதா பரவாயில்லை போல் இருக்கிறதே! அம்மாவிடம் சாட்டையெல்லாம் இல்லை.

என்ன கஷ்டம்டா இது?

மக்களே கடவுள் நம்பிக்கை வேண்டியது தான், நம்பிக்கை சார்ந்த விஷயங்களை கேள்வி கேட்க கூடாது தான்.. ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் இல்லையா சார்.

விஜய் டிவி இதுபோல் நிகழ்ச்சிகளை தவிர்க்கவேண்டும் என நினைக்கிறேன், இது இன்னும் சிலரை இதுபோல் மாறத்தூண்டிவிடாதோ?

நானும் நாகர்கோவில் நகரில் பிறந்தவன் தான். மனிதர்கள் ஒருநாளும் கடவுளாக முடியாது என்பதை நம்புகிறவன்.

இது என்ன எழவுடா இது, நம் மக்கள் திருந்தவே மாட்டார்களா சார்??

ஆற்றாமையுடன், வசந்தா நடேசன்.

டிஸ்கி:- கடவுள் இருக்கிறாறா இல்லையா என்பதை விவாதிக்க போகும் பதிவல்ல இது, தயவுசெய்து அதுபோன்ற கருத்துக்களை பகிரவேண்டாம். அவை பிரசுரமாகாது. ‘சுயமரியாதைகள்‘ மற்றும் ‘பகுத்தறிவுகள்‘ குறித்த பதிவும் அல்ல, மக்களின் ‘கண்மூடித்தனமான‘ நம்பிக்கைகள் குறித்ததே.

Saturday, December 25, 2010

ஒரு நடிகையின் முரண்!

நடிகைகள் என்ன சொன்னாலும் நாம் நம்பித்தான் ஆக வேண்டும் போல் இருக்கிறது!

சன் டிவியில் இதோ ஒளி பரப்பாகிக்கொண்டிருக்கிறது. சுடச்சுட எழுதுகிறேன்! ஆவி பறக்கிறது.

நிறைய மகாஜனங்கள் இதை நோட் பண்ணியிருக்கக்கூடும். ஆனாலும் இதை முதலில் ஆவணப்படுத்துவதில் பெருமைகொள்கிறேன்(!), எதாவது அவார்டு இருந்தா கொடுங்கப்ப்ப்பூ!

இரண்டு நாட்களுக்கு முன் விஜய் டிவியில் நடிகை சரண்யா பங்குகொண்ட வாங்க பேசலாம் என்று ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். யாரு கெட்டநேரமோ நான் அதை பார்த்து தொலைத்துவிட்டேன். அதில் சரண்யா பேசியதன் சுருக்கம் கீழே.

அவர் சினிமாவில் நடிக்கவந்த கதையை சொல்லும் போது, அவருடைய அப்பா, ஒரு டைரக்ட்டராக இருந்தும் இவர் நடிக்க ஏனோ சம்மதிக்கவில்லையாம், ஒரு நாள் யாரோ ஒரு டைரக்டர் இவரை கல்லூரியிலிருந்து திரும்பி வரும்போது போட்டோ எடுத்ததாகவும், அதை வைத்துக்கொண்டு இவர்தான் நடிக்கவேண்டும் என்று ஒரு வாரம் போல் இவர் வீட்டுக்கு அலைந்ததாகவும், இவருக்கு நடிக்க விருப்பம் இருந்தும் அவர் அப்பா விடவில்லையாம், இவர் அடம் பிடிச்ச கழுதையாக அடம்பிடித்து, சரி இந்த ஒரு படம் மட்டும் நடிச்சுக்கோ என்று அவர் அப்பா ஒரு வழியாக பெர்மிஷன் கொடுத்ததாகவும் நமக்கெல்லாம் இவரைதிரையில் பார்க்கும் பாக்யம்(!)கிடைத்ததாகவும் சொன்னார். நானும் வாயை பொழந்துட்டு பாத்துக்கிட்டுருந்தேன் சார்.

நான் முதன் முதலாய் CA எக்ஸாம் எழுத போய்க்கொண்டிருக்கும் போது, இவர் முதன் முதலாய் மேற்ச்சொன்னபடி நடித்த ‘நாயகன்‘ படம் பெங்களூர் பல்லவி தியேட்டரில் ரிலீஸ் ஆகியிருந்தது. போஸ்டரைப்பார்த்து விட்டு ‘ஆஹா‘ என்று பல்லவி தியேட்டர் எதிரில் இறங்கி படம் பார்க்க போய்விட்டேன் (அடுத்த ஸ்டாப்பில் எக்ஸாம் நடக்கிற காலேஜ் இருந்தது!) எக்ஸாம் இனி ஆறு மாசம் கழித்து வரும் பார்த்துக்கொள்ளலாம் என்று அந்த வயதில், ஏதோ நாயகனை இப்ப விட்டால் இனி பார்க்கவே முடியாது என்பது போல்.

ஆனால் இன்று இயக்குநர் சங்க 40வது ஆண்டுவிழாவை சன்டிவியில் ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள். நம் முன்னாள் கனவுக்கன்னி ராதாவை திரும்ப திரும்ப காண்பித்து சன் டிவி ஓரளவிற்க்கு நம்மை அந்த நிகழ்ச்சியை பார்க்க ரெடி பண்ணியிருந்தது!

சரியென்று ராதாவைத்தேடி (ரொம்பநாளாயிடிச்சு சார் பாத்து) சன் டிவி முன் உட்கார்ந்ததில், முதன்முதலாய் நடிகை சரண்யா பேசவந்தார். சரி என்ன சொல்கிறார் என்று சைலன்ட்டாய் கவனித்தால், பயபுள்ளை ரெண்டு நாள் முன் விஜய் டிவில சொன்னதுக்கு நேர் மாறாய் கீழ்க்கண்டவாறு சொன்னது.

அவரும் அவர் அப்பாவும் டைரக்டர் முக்தாசீனிவாசன் அலுவலகத்தில் டைரக்டர் மணிரத்னத்தைப்பார்க்க உட்கார்ந்திருந்ததாகவும், அவருக்கு முன்பே மணிரத்னம் அங்கு வந்து ஏதோ பத்திரிகையை புரட்டிக்கொண்டிருந்ததாகவும், அப்போது சன்டிவி கிடையாதாம், அதனால் இவருக்கு மணிரத்னத்தைப்பார்த்தும் அடையாளம் தெரியவில்லையாம், பின் அவர் வந்து மணிரத்னத்தை அறிமுகப்படுத்தி வைத்ததாகவும், அதனால் அவருக்கு நாயகன் படத்தில் சான்ஸ் கிடைத்ததாகவும் கூறினார்.

ஆடிப்போயிட்டேன் சார் ஒரு நிமிஷம்!

என்ன எழவுடா இது? ரெண்டு நாளைக்கு முன் அப்படி சொன்ன சரண்யா இன்று இப்படி வுல்ட்டா ஆனது ஏன்? அவரை விஜய்டிவி வாங்க பேசலாமில் பேட்டி எடுத்த டெல்லி கணேஷ் (கூட இருந்த SSசந்திரன் இப்ப போய் சேர்ந்துட்டார், இரண்டு நாள் முன்பு வந்தது ரீடெலிகாஸ்ட்டாக இருக்க வேண்டும்) இப்ப இதை பார்த்தால் என்ன நினைப்பார்?

விஜய் டிவி ரெண்டு நாள் முன்பு இதை மறுஒளிபரப்பியதில் ஏதேனும் உள்குத்து இருக்குமோ?

சரி, இப்ப நியூஸ் முடிந்ததும் ராதாவைப்பார்க்க வேண்டும், வாங்க போலாம்.

மன்மதன் அம்பு வேறு பாக்கி இருக்கிறது, பாக்றேன்னா பாரு, பாக்காட்டி போன்னு வேற சொல்றாய்ங்க சார், இத திருட்டு சிடில அல்லது நெட்ல தான் பாக்கணும்னு இருக்கேன். வந்தா கொஞ்சம் சொல்லுங்க சார், புண்ணியமாப்போகும்.

ரசிகன், வசந்தா நடேசன்.