நண்பர்களே..
உடன் இருந்த ஒரு நண்பரை ஹார்ட் அட்டாக்கிற்க்கு பலி கொடுத்துவிட்டு சோகத்தில் இருப்பதால், நான் எழுத வருவதற்கு இன்னும் கொஞ்சம் நாட்கள் ஆகும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் வரும் இரண்டாம் தியதி (02.04.2011) என் குடும்பத்தினர் இங்கே துபாய் வந்து விடுவர், பள்ளி விடுமுறையை கழிப்பதற்க்காக. நானும் அதை மிக எதிர்பார்த்திருக்கிறேன்.. இப்போது நண்பரை இழந்த சோகத்திலிருந்து விடுபட...
அலுவலகத்திலும் வேலை நெருக்கடி அதிகம், வருடக்கடைசி என்பதால் (அக்கவுண்டிங் இயர் எண்ட்).. அனேகமாய் ஏப்ரில் கடைசியில் அலுவல் நெருக்கடிகள் முடியும், மே மாதம் என் பதிவுகளை மீண்டும் துவங்க முடியும் என எண்ணுகிறேன்.
இது வரை தொடர் வருகை புரிந்து ஆதரவழித்த அனைத்து நண்பர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்ள கடமை பட்டுள்ளேன். நெருங்கிய நண்பர்கள் கைபேசி வழியாக கால் பண்ணி தேட ஆரம்பித்துவிட்டதால் இதனை எழுத வந்தேன். கிட்டதட்ட ஏழு ஆண்டுகள் உடன் வசித்த நண்பரை இழப்பது மிக துயரம், வேறு ஏழுதுவதற்கு இப்போதைக்கு ஏதுமில்லை.. வருகிறேன், இரண்டு மாதங்கள் கழித்து இன்னொரு சமயம் சந்திப்போம். மீண்டும் நன்றி.
அன்புடன், வசந்தா நடேசன்.
Showing posts with label துபாய் ஜீவிதம். Show all posts
Showing posts with label துபாய் ஜீவிதம். Show all posts
Monday, March 28, 2011
Wednesday, March 16, 2011
காளீஸ்வரன் கதை.. [4]
ஒரு நாள் அலுவல் முடிந்து அறைக்கு வந்தபோது காளீஸ்வரன் படு சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். கேட்டபோது வேலை போய்விட்டதாகவும், டிக்கட்டும் கொஞ்சம் பணமும் கொடுத்து ஒரு வாரத்தில் ஊருக்கு போக ரெடியாகுமாறு கம்பெனியில் சொல்லிவிட்டதாக சொன்னான்.
எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.. அது நான் வந்து ஒரு 6 மாதம் ஆன புதிது.. இங்குள்ள நடைமுறைகள் அப்போது நிறைய தெரிந்திருக்கவில்லை. பின்னர் நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். காளீஸ்வரன் வந்து ஒரு இரண்டு அல்லது இரண்டரை ஆண்டுகள் ஆகியிருக்கும். இது வரை ஊருக்கு போகவில்லை, ஊர் விட்டு வந்ததிலிருந்து. வீட்டிற்கு மூத்த பிள்ளை. ஒரு முறையோ இரண்டு முறையோ ஊர் போகும் பிறரிடம் அவனுடைய தங்கைக்கும், தம்பிக்கும், அப்பா, அம்மாவிற்கும் கொஞ்சம் நகைகளும், வாட்ச், ஸ்ப்ரே போன்ற சமாச்சாரங்களும் கொஞ்சம் சாக்லேட்களும் அவ்வப்போது கொஞ்சம் பணமும் அனுப்பியிருப்பதாக சொல்லியிருக்கிறான்.
நிறைய யோசித்து ‘கல்லிவல்லி‘ ஆகி விடுவது என்று முடிவெடுத்தான். கல்லிவல்லி அல்லது கல்லிவெல்லி என்றால் இங்கு தங்கி வேலை பார்ப்பதற்கான விசா எதுவும் இல்லாமல் என்ன வேலை வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். இது போல் தங்கி இருப்பவர்களை கல்லிவெல்லிகள் என்பார்கள்.
நம் ஊரில் காந்தி பிறந்த நாள் மற்றும் அண்ணா பிறந்த நாள் போன்ற சமயங்களில் சிறைகளில் கைதிகளுக்கு மன்னிப்பு கொடுத்து அனுப்புவது போல் இங்கும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுமாப்பு என்று ஒன்று கொடுப்பார்கள் அப்போது இந்தியா செல்லலாம் சிறைக்கு போகாமல். நடுவில் மாட்டிக்கொண்டால் சிறை தண்டனை, தண்டனை முடிந்து யாராவது நண்பர்கள் டிக்கெட் எடுத்துக்கொடுத்தால் சிறையிலிருந்து நேரே ஏர்போர்ட் கொண்டு ப்ளைட் ஏற்றி அனுப்பி விடுவார்கள். தண்டனையை வேண்டும் என்றே அதிகம் விளக்காமல் விட்டிருக்கிறேன் ம்ம்ம், அதெல்லாம் வேண்டாம் இங்கு.
பொதுமாப்பிற்கு காத்திருக்க வேண்டும்.. காளீஸ்வரன் இந்த நிலைக்கு துணிவாக முடிவெடுத்ததற்கு தம்பியின் படிப்பு, தங்கையின் திருமணம், வீட்டுக்கடன் என்று ஏதாவது இருக்கும், அது ஏழை இந்தியர்களின் சோகம். அங்கு எல்லோரும் ஒன்றும் ராசா அல்லவே.
பின்னர் ஒருநாள் அவன் அலுவலகம் சென்று கிடைக்கவேண்டிய பணத்தை வாங்கிக்கொண்டு அலுவலகத்திலிருந்து விமான நிலையம் அழைத்துப்போய் பாஸ்போர்ட்டை கையில் கொடுத்து எக்ஸிட் ஆகிறானா என்று பி.ஆர்.ஓ கவனித்துக்கொண்டிருக்கும் போது அவன் கண்ணைத்தப்பி வெளியே வந்து விட்டான், இது எல்லாம் நம் மக்களுக்கு சர்வ சாதாரணம். பி.ஆர்.ஓ கண்ணில் காணாத உடன் சரி பயபுள்ளை உள்ள போயிடிச்சி என்று போய் விடுவான்.
இப்படி ஆள் வெளியேறாமல் உள்தங்கிவிட்டால் ஸ்பான்சர் பாடு திண்டாட்டம், அதை விளக்கி அவன் புகைப்படத்துடன் ‘காணவில்லை‘ என்று இங்குள்ள ஒரு நாளிதழில் விளம்பரம் கொடுத்து அவனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று முடித்து விட்டு அவன் வேலையை பார்ப்பான்.
காளீஸ்வரன் இப்படி கல்லிவெல்லியாய் வேலையை தொடங்கினான், முன்பு சொன்னது போல் இவனுக்கு திறமை இருந்ததால் எங்கும் வேலை கிடைத்தது, என்ன... அரசு அலுவலகங்கள், மற்றும் free zone பகுதிகளுக்குள் சென்று வேலை செய்ய முடியாது.. எப்போதும் லேபர் அலுவலகத்திலிருந்து செக்கிங் வருகிறானா என்று கவனத்துடன் வேலை செய்ய வேண்டும். அவ்வளவுதான்.
நல்ல வேலை செய்து பின்னர் ஒரு மலையாளியுடன் சேர்ந்து அவன் கம்பெனியில் பார்ட்னர்ஷிப் வைத்து காண்ட்ராக்ட் எடுக்கும் அளவுக்கு சென்று விட்டான், கையில் பணம் புரள ஆரம்பித்தது. அந்த மலையாளி இவனை வைத்து வேலை வாங்கி அவன் அதிகம் எடுத்துக்கொண்டு இவனுக்கும் இவன் திருப்திக்கு கொடுத்து நல்லபடியாய் நடந்தது, மலையாளிக்கு கம்பெனி இருந்தது ஆனால் வேலை தெரியாது.. இவனுக்கு வேலை தெரியும் ஆனால் விசா கிடையாது.. அவன் ஆட்களை வைத்து இவன் வேலை வாங்கி நல்ல சம்பாதித்தான்.
அந்த மலையாளிக்கு இவனை காலையில் வந்து அழைத்துச் செல்ல வேண்டும், பில்கள் பாஸ் பண்ணி வாங்குவதற்காக வேலை செய்த இடங்களுக்கு அலைய வேண்டும், பின்னர் மாலையில் இவனை வீட்டிற்கு கொண்டு வந்து விடவேண்டும், இதுதான் வேலை. எப்போதும் ட்ராயிங் பார்த்து கொட்டேஷன் போடுவது, ஆட்களை வேலை வாங்குவதும் இவன் வேலை. அப்போதே இந்த வசதிகளுக்காக ரூமில் ஒரு டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் வாங்கி வைத்திருந்தான். மலையாளிக்கு வேறு வழியில்லை என்பதால் இவனை அட்ஜஸ்ட் பண்ணி போய்க் கொண்டிருந்தான்.
இப்படி போய்க்கொண்டிருக்கும் போது தான் துபாயில் வேலை செய்யும் நம் நண்பர்கள் எந்த பாதையில் செல்லக் கூடாது என்று நான் சொல்ல நினைத்தேனோ அந்த பாதையில் காளீஸ்வரன் செல்ல ஆரம்பித்தான், அது என்ன பாதை அது அவனை எங்கு வரை கொண்டு சென்று விட்டது என்பது இன்னொரு நாள்.
அன்புடன், வசந்தா நடேசன்.
காளீஸ்வரன் கதை..[1] [2] [3]
எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.. அது நான் வந்து ஒரு 6 மாதம் ஆன புதிது.. இங்குள்ள நடைமுறைகள் அப்போது நிறைய தெரிந்திருக்கவில்லை. பின்னர் நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். காளீஸ்வரன் வந்து ஒரு இரண்டு அல்லது இரண்டரை ஆண்டுகள் ஆகியிருக்கும். இது வரை ஊருக்கு போகவில்லை, ஊர் விட்டு வந்ததிலிருந்து. வீட்டிற்கு மூத்த பிள்ளை. ஒரு முறையோ இரண்டு முறையோ ஊர் போகும் பிறரிடம் அவனுடைய தங்கைக்கும், தம்பிக்கும், அப்பா, அம்மாவிற்கும் கொஞ்சம் நகைகளும், வாட்ச், ஸ்ப்ரே போன்ற சமாச்சாரங்களும் கொஞ்சம் சாக்லேட்களும் அவ்வப்போது கொஞ்சம் பணமும் அனுப்பியிருப்பதாக சொல்லியிருக்கிறான்.
நிறைய யோசித்து ‘கல்லிவல்லி‘ ஆகி விடுவது என்று முடிவெடுத்தான். கல்லிவல்லி அல்லது கல்லிவெல்லி என்றால் இங்கு தங்கி வேலை பார்ப்பதற்கான விசா எதுவும் இல்லாமல் என்ன வேலை வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். இது போல் தங்கி இருப்பவர்களை கல்லிவெல்லிகள் என்பார்கள்.
நம் ஊரில் காந்தி பிறந்த நாள் மற்றும் அண்ணா பிறந்த நாள் போன்ற சமயங்களில் சிறைகளில் கைதிகளுக்கு மன்னிப்பு கொடுத்து அனுப்புவது போல் இங்கும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுமாப்பு என்று ஒன்று கொடுப்பார்கள் அப்போது இந்தியா செல்லலாம் சிறைக்கு போகாமல். நடுவில் மாட்டிக்கொண்டால் சிறை தண்டனை, தண்டனை முடிந்து யாராவது நண்பர்கள் டிக்கெட் எடுத்துக்கொடுத்தால் சிறையிலிருந்து நேரே ஏர்போர்ட் கொண்டு ப்ளைட் ஏற்றி அனுப்பி விடுவார்கள். தண்டனையை வேண்டும் என்றே அதிகம் விளக்காமல் விட்டிருக்கிறேன் ம்ம்ம், அதெல்லாம் வேண்டாம் இங்கு.
பொதுமாப்பிற்கு காத்திருக்க வேண்டும்.. காளீஸ்வரன் இந்த நிலைக்கு துணிவாக முடிவெடுத்ததற்கு தம்பியின் படிப்பு, தங்கையின் திருமணம், வீட்டுக்கடன் என்று ஏதாவது இருக்கும், அது ஏழை இந்தியர்களின் சோகம். அங்கு எல்லோரும் ஒன்றும் ராசா அல்லவே.
பின்னர் ஒருநாள் அவன் அலுவலகம் சென்று கிடைக்கவேண்டிய பணத்தை வாங்கிக்கொண்டு அலுவலகத்திலிருந்து விமான நிலையம் அழைத்துப்போய் பாஸ்போர்ட்டை கையில் கொடுத்து எக்ஸிட் ஆகிறானா என்று பி.ஆர்.ஓ கவனித்துக்கொண்டிருக்கும் போது அவன் கண்ணைத்தப்பி வெளியே வந்து விட்டான், இது எல்லாம் நம் மக்களுக்கு சர்வ சாதாரணம். பி.ஆர்.ஓ கண்ணில் காணாத உடன் சரி பயபுள்ளை உள்ள போயிடிச்சி என்று போய் விடுவான்.
இப்படி ஆள் வெளியேறாமல் உள்தங்கிவிட்டால் ஸ்பான்சர் பாடு திண்டாட்டம், அதை விளக்கி அவன் புகைப்படத்துடன் ‘காணவில்லை‘ என்று இங்குள்ள ஒரு நாளிதழில் விளம்பரம் கொடுத்து அவனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று முடித்து விட்டு அவன் வேலையை பார்ப்பான்.
காளீஸ்வரன் இப்படி கல்லிவெல்லியாய் வேலையை தொடங்கினான், முன்பு சொன்னது போல் இவனுக்கு திறமை இருந்ததால் எங்கும் வேலை கிடைத்தது, என்ன... அரசு அலுவலகங்கள், மற்றும் free zone பகுதிகளுக்குள் சென்று வேலை செய்ய முடியாது.. எப்போதும் லேபர் அலுவலகத்திலிருந்து செக்கிங் வருகிறானா என்று கவனத்துடன் வேலை செய்ய வேண்டும். அவ்வளவுதான்.
நல்ல வேலை செய்து பின்னர் ஒரு மலையாளியுடன் சேர்ந்து அவன் கம்பெனியில் பார்ட்னர்ஷிப் வைத்து காண்ட்ராக்ட் எடுக்கும் அளவுக்கு சென்று விட்டான், கையில் பணம் புரள ஆரம்பித்தது. அந்த மலையாளி இவனை வைத்து வேலை வாங்கி அவன் அதிகம் எடுத்துக்கொண்டு இவனுக்கும் இவன் திருப்திக்கு கொடுத்து நல்லபடியாய் நடந்தது, மலையாளிக்கு கம்பெனி இருந்தது ஆனால் வேலை தெரியாது.. இவனுக்கு வேலை தெரியும் ஆனால் விசா கிடையாது.. அவன் ஆட்களை வைத்து இவன் வேலை வாங்கி நல்ல சம்பாதித்தான்.
அந்த மலையாளிக்கு இவனை காலையில் வந்து அழைத்துச் செல்ல வேண்டும், பில்கள் பாஸ் பண்ணி வாங்குவதற்காக வேலை செய்த இடங்களுக்கு அலைய வேண்டும், பின்னர் மாலையில் இவனை வீட்டிற்கு கொண்டு வந்து விடவேண்டும், இதுதான் வேலை. எப்போதும் ட்ராயிங் பார்த்து கொட்டேஷன் போடுவது, ஆட்களை வேலை வாங்குவதும் இவன் வேலை. அப்போதே இந்த வசதிகளுக்காக ரூமில் ஒரு டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் வாங்கி வைத்திருந்தான். மலையாளிக்கு வேறு வழியில்லை என்பதால் இவனை அட்ஜஸ்ட் பண்ணி போய்க் கொண்டிருந்தான்.
இப்படி போய்க்கொண்டிருக்கும் போது தான் துபாயில் வேலை செய்யும் நம் நண்பர்கள் எந்த பாதையில் செல்லக் கூடாது என்று நான் சொல்ல நினைத்தேனோ அந்த பாதையில் காளீஸ்வரன் செல்ல ஆரம்பித்தான், அது என்ன பாதை அது அவனை எங்கு வரை கொண்டு சென்று விட்டது என்பது இன்னொரு நாள்.
அன்புடன், வசந்தா நடேசன்.
காளீஸ்வரன் கதை..[1] [2] [3]
Monday, March 7, 2011
மனசாட்சி!!
வழக்கமாய் வேலைக்கு போவதை தவிற வெளியே செல்லாத மனோ அன்று மாதம்தோரும் தவறாமல் செய்யவேண்டிய வங்கிபணிகளுக்காக அலுப்புடன் வெளியே கிளம்பினான்.. டிவியில் இந்தியா, அயர்லாந்து மேட்ச் நடந்து கொண்டிருந்தது.. அயர்லாந்தின் மிக குறைந்த ஸ்கோரை இந்தியா சேஸ் செய்து கொண்டிருந்தது..
வெளியே சென்று வங்கி பணிகளை இன்று முடிக்காவிட்டால் தாரளமாய் லேட்பேமன்ட் கட்டணம் போட்டுத்தாக்கிவிடுவார்கள் என்பதால் கடுப்புடன் வெளியே கிளம்ப வேண்டிய கட்டாயம்.
நேராக சென்று வங்கியிலிருந்து பணம் எடுத்துக்கொண்டு மணி எக்ஸேஞ்ச் நோக்கி நடக்கையில் வழியில் இருந்த நைட்கிளப்பை கடக்கும் போது பழைய நினைவுகள் மனோவின் மனதில் வந்து சென்றது, ஒரு இரண்டு வருடங்களுக்குமுன் அந்த கிளப்பில் சர்வ் செய்த அந்த பெண்ணின் ஞாபகம் வந்தது!
ம்ம்ம், என்று மனதை நேராக்கி மீண்டும் யூஏயி எக்ஸ்சேஞ்ச் போய் கிரடிட் கார்டுகளுக்கான பணத்தை அடைத்துவிட்டு ஊருக்கு பணம் அனுப்புவதற்காக அடுத்த எக்ஸ்சேஞ்ச் நோக்கி நடந்து கொண்டிருந்தான், மீண்டும் அந்த நைட்கிளப் கடக்கவேண்டிய மற்றொரு சந்தர்ப்பம். மனதில் வந்த சலனத்தை அடக்கி கொண்டு நேராக போகவேண்டிய எக்ஸ்சேஞ்ச் போய் ஊருக்கான பணத்தை அனுப்பி விட்டு திரும்பி வீட்டிற்கு நடக்கையில் மீண்டும் சலனம் எட்டிப்பார்த்தது.
வீட்டிலும் நண்பர்கள் யாரும் இல்லாததால் மனம் இந்தமுறை வெற்றிபெற்றது. வீட்டிற்கு சென்று தனியே பார்ப்பதை விட இங்கே நாலுபேரோடு சேந்துபாக்கலாமே என்று மனசாட்சிக்கு பதில் சொல்லி சமாளித்தாயிற்று. மனசாட்சி மீண்டும் கொடூரமாய், அதுமட்டும் தான் காரணமா?? என்று கேட்டுமுடிக்கும் போது மனோவின் கால்கள் கிளப்புக்குள் நுழைந்து சீட் தேடிக்கொண்டிருந்தது.
ஏனோ கிளப்பில் எதிர்பார்த்த கூட்டமில்லை, நல்ல வசதியான சீட் கிடைத்தது.. டிவி முன்பே வசதியான சீட் பிடித்து அமர்ந்துகொண்டு, மனசாட்சி, அடேய் கிராதகா.. என்று அலரும்போதே சர்வர், அதேபெண்.. வந்து சிரித்துக்கொண்டு என்ன சாப்பிடுகிறீர்கள்?? என்பது போல் ஒரு பார்வை பார்த்தது. அவளுக்கு இவனை ஞாபகம் இல்லை.. அதுவும் நல்லதற்கே என்று நினைத்துகொண்டே ‘ஒன் பைன் ஹனிக்கேன்‘ என்றான். அங்கு எத்தனையோ வருவார்கள், செல்வார்கள்.. இவனை ஞாபகம் வைப்பதற்கு இவன் ஷேக் மகமூத் அல்லவே.
சிரித்துக்கொண்டே டிவியில் மேட்சை கவனிக்க ஆரம்பித்தான். ஹனிக்கேன் உடன் பாப்கார்ன் மற்றும் வறுகடலை அடக்கம் டேபிளுக்கு வந்தது. அந்த பெண் இன்னும் கொஞ்சம் செழிப்பாயிருந்தாள்.. சரி, நல்லாயிருக்கட்டும் என்று அங்கிருந்த அவளையும், மற்ற சர்வர்களையும் ரசித்துக்கொண்டே மேட்ச்சும் ஓடிக்கொண்டிருந்தது.
இது நடந்து கொண்டிருக்கும்போதே மண்டை காய்ந்து போயிருக்கும் உங்களுக்கு நான் இதுவரை உங்கள் மனதில் எழுந்திருக்கும் கேள்விகளுக்கெல்லாம் விடைசொல்வதுதான் முறை..
மனோ துபாயில் வசிக்கும் ஒரு சேல்ஸ்மேன்.. சேல்ஸ்மேன் என்றாலே சம்பளம், கமிஷன் இத்யாதி, இத்யாதி எல்லாம் இருக்கும் இங்கே, அவரவர் திறமையை பொருத்து. மனோ ஒரு திறமையான சேல்ஸ்மேன், அலுவலக உதவியாளனாய் சேர்ந்து வாழ்கையின் உயரங்களுக்கு சென்றவன். ரொம்ப கட்டுப்பாடான ஜென்டில்மேன்.. நைட்கிளப் போனால் ஜென்டில்மேன் அல்ல என்று யாராவது சொன்னால், எஸ், யுவர் ஆனர், இவன் முன்பு ஜென்டில்மேன் அல்ல.
ஆனால் இப்போது சென்று இரண்டு வருடங்களுக்கு பின் இப்போதுதான் செல்வதால் ஒரு அரைகுறை குஞ்சுமோன் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள். மனோவிற்கு அதை பற்றி கவலையில்லை.
துபாயின் நைட்கிளப் சமாச்சாரங்கள் ரொம்ப பிரபலம், அந்த அந்த மாநில மக்களை கவர்வதற்காக அந்த அந்த மாநில மொழிகள் பேசும் பெண்களை வைத்து நைட்கிளப்புகள் மற்றும் டேன்ஸ்கிளப்புகள் இங்கே சர்வ சாதரணம். எல்லாவற்றையும் நடத்துவது 75 சதவீதம் மலையாளியாய் தானிருப்பான். இதில் ரெண்டு வகை, ஒன்று சும்மா அழகழகான பெண்கள் உங்களுக்கு வேண்டியதை அழகாய் கருத்துடன் உங்களுக்கு பரிபாருவார்கள், மது, சாப்பாடு எல்லாம்.. மனைவிகள் கூட அப்படி பரிமாரியிருக்க மாட்டார்கள், அவ்வளவு அன்பாய் கவனித்து கொள்வார்கள்.
இன்னொன்று டேன்ஸ்கிளப் என்று சொல்லப்படும், கிளப்பின் நடுவே ஒரு மேடையில் நடன அழகிகள் உங்களுக்கு பிடித்த பாட்டுகளுக்கு டேன்ஸ் ஆடுவார்கள். கிட்டே போகவோ, தொடவோ அனுமதி இல்லை.. அதுக்கெல்லாம் ரொம்ப செலவாகும்.. உங்களுக்கு பிடித்த பாட்டுக்கு, உங்களுக்கு பிடித்த ஆள் ஆடவைக்கலாம்.
மலையாளிக்கு தெரியும், உங்களுக்கு என்ன தேவையென்று கனகச்சிதமாய்.. அதை நேக்கா கொடுத்து காசு பார்த்துக்கொண்டிருப்பான்.. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளி பெண்கள், மற்றும் சில நார்த் இன்டியன் பெண்களும் இருப்பார்கள்.. உங்கள் விருப்பத்திற்கு தேர்வு செய்ய.
மனைவி, குழந்தைகளை ஊரில் விட்டு தனிமரமாய் இங்குவந்து தவிக்கும் ஆண்களுக்கு இது சொர்க்கமாய் இருக்கும்.. இது குறித்து தனிபதிவே எழுதலாம் என்பதால் இங்கே விடுகிறேன், இதுபற்றி இதற்குமுன் யாராவது எழுதியிருந்தாலோ, இல்லை நீங்கள் படித்திருந்தாலோ கமென்டில் சொல்லுங்கள், எனக்கு எழுதும் வேலை மிச்சமாகும்(??)
மனோ கதைக்கு வருவோம், பாவம் பையன், திருப்தியாய் சாப்பிட்டு நிறைய நாட்களாகிவிட்டது என்று ரெண்டு ஆப்பமும், ஒரு சில்லி சிக்கனும் சாப்பிடலாம் கொஞ்சம் பீருடன் என்று வந்தவன், இரண்டு பைனும், ஒரு கேனும் குடித்துவிட்டு, வயிரு பெருத்து, மனசாட்சிக்கு பதில் சொல்வதற்காக, ரெண்டு ஆப்பமும் சில்லிசிக்கனும் வாங்கிவைத்துக் கொண்டு கண்ணாமுழி திருக விழித்துக்கொண்டிருந்தான். இந்தியா ஜெயித்துவிட்டது உற்சாக கைதட்டல் அதிர.
இதற்கிடையில் அந்த பெண்ணுடன் தமிழில் பேச ஆரம்பித்து கொஞ்சம் நெருங்கியிருந்தான்.. கடைசியில் ஒருவழியாய் பெருத்த வயிருடன் போதும், விட்டுரலாம்னு பில் கேட்கும் போது அந்த பெண் அருகில் வந்து ரொம்ப சோகமாய், எங்களுக்கு இங்கே டிப்பு மட்டும்தான்.. சம்பளம் கிடையாது என்று சொன்னாள்..
மனோ, ஏன் வேலை பாக்குற, உட்டு தொலைச்சிட்டு வேற தேடவேண்டியது தானே??
ம்ம்ம், கேன்சல் அடிக்கப்போறேன்.. ஊருக்கு போறேன் என்றாள்..
எந்த ஊரு என்று மனோ கேட்கவும், இலங்கை.. கண்டி பக்கம் என்றாள்.
ஓ.. இப்பம் எப்படி நிலைமை..
இப்ப பரவாயில்லை.
பிரபாகரனுக்கு அப்புறம் பரவாயில்லையா??
இல்லை.. அவர் இருக்கும் போது பிரச்சனையாக இருந்தது.. இப்ப அதிகம் பிரச்சனை இல்ல, ஊருக்கு போகலாம் என்றாள்.
சரி என்று சொல்லிவிட்டு மனோ 20 திர்ஹம் டிப்ஸ் கொடுத்தான், ஏதோ தமிழ் என்று சொல்கிறாளே என்று, கொடுத்துவிட்டு நடையை கட்டவும், கௌம்புறிகளா?? இனி எப்பம்??
ம்ம்ம், பாக்கலாம்..
பய பெருத்த வயிருடன், வீங்கி, வீங்கி நடக்கும் போதே அவளுக்கு தெரிந்திருக்கவேண்டும் இனி இவன் எப்போது வருவான்னு அவனுக்கே தெரியாதென்று..
மனோவிற்கு இன்னொரு முறை நேரம் கிடைத்து அந்த வழியாக செல்லநேர்ந்தால், மீண்டும் ஒன்றிரண்டு வருடத்திற்குபின் போகலாம், கிடைக்குமா?? பார்ப்போம்..
அன்புடன், வசந்தா நடேசன்.
டிஸ்கி:- இது சத்தியமாய் துபாயில் வசிக்கும் மனோதான், அவனைப்பற்றி எழுதவேண்டும் என்று ரொம்ப வேண்டி, விரும்பி கேட்டதால்தான் எழுதினேன், இப்டி எழுதுவேன்னு பய நினைச்சிருக்க மாட்டான்!!
வெளியே சென்று வங்கி பணிகளை இன்று முடிக்காவிட்டால் தாரளமாய் லேட்பேமன்ட் கட்டணம் போட்டுத்தாக்கிவிடுவார்கள் என்பதால் கடுப்புடன் வெளியே கிளம்ப வேண்டிய கட்டாயம்.
நேராக சென்று வங்கியிலிருந்து பணம் எடுத்துக்கொண்டு மணி எக்ஸேஞ்ச் நோக்கி நடக்கையில் வழியில் இருந்த நைட்கிளப்பை கடக்கும் போது பழைய நினைவுகள் மனோவின் மனதில் வந்து சென்றது, ஒரு இரண்டு வருடங்களுக்குமுன் அந்த கிளப்பில் சர்வ் செய்த அந்த பெண்ணின் ஞாபகம் வந்தது!
ம்ம்ம், என்று மனதை நேராக்கி மீண்டும் யூஏயி எக்ஸ்சேஞ்ச் போய் கிரடிட் கார்டுகளுக்கான பணத்தை அடைத்துவிட்டு ஊருக்கு பணம் அனுப்புவதற்காக அடுத்த எக்ஸ்சேஞ்ச் நோக்கி நடந்து கொண்டிருந்தான், மீண்டும் அந்த நைட்கிளப் கடக்கவேண்டிய மற்றொரு சந்தர்ப்பம். மனதில் வந்த சலனத்தை அடக்கி கொண்டு நேராக போகவேண்டிய எக்ஸ்சேஞ்ச் போய் ஊருக்கான பணத்தை அனுப்பி விட்டு திரும்பி வீட்டிற்கு நடக்கையில் மீண்டும் சலனம் எட்டிப்பார்த்தது.
வீட்டிலும் நண்பர்கள் யாரும் இல்லாததால் மனம் இந்தமுறை வெற்றிபெற்றது. வீட்டிற்கு சென்று தனியே பார்ப்பதை விட இங்கே நாலுபேரோடு சேந்துபாக்கலாமே என்று மனசாட்சிக்கு பதில் சொல்லி சமாளித்தாயிற்று. மனசாட்சி மீண்டும் கொடூரமாய், அதுமட்டும் தான் காரணமா?? என்று கேட்டுமுடிக்கும் போது மனோவின் கால்கள் கிளப்புக்குள் நுழைந்து சீட் தேடிக்கொண்டிருந்தது.
ஏனோ கிளப்பில் எதிர்பார்த்த கூட்டமில்லை, நல்ல வசதியான சீட் கிடைத்தது.. டிவி முன்பே வசதியான சீட் பிடித்து அமர்ந்துகொண்டு, மனசாட்சி, அடேய் கிராதகா.. என்று அலரும்போதே சர்வர், அதேபெண்.. வந்து சிரித்துக்கொண்டு என்ன சாப்பிடுகிறீர்கள்?? என்பது போல் ஒரு பார்வை பார்த்தது. அவளுக்கு இவனை ஞாபகம் இல்லை.. அதுவும் நல்லதற்கே என்று நினைத்துகொண்டே ‘ஒன் பைன் ஹனிக்கேன்‘ என்றான். அங்கு எத்தனையோ வருவார்கள், செல்வார்கள்.. இவனை ஞாபகம் வைப்பதற்கு இவன் ஷேக் மகமூத் அல்லவே.
சிரித்துக்கொண்டே டிவியில் மேட்சை கவனிக்க ஆரம்பித்தான். ஹனிக்கேன் உடன் பாப்கார்ன் மற்றும் வறுகடலை அடக்கம் டேபிளுக்கு வந்தது. அந்த பெண் இன்னும் கொஞ்சம் செழிப்பாயிருந்தாள்.. சரி, நல்லாயிருக்கட்டும் என்று அங்கிருந்த அவளையும், மற்ற சர்வர்களையும் ரசித்துக்கொண்டே மேட்ச்சும் ஓடிக்கொண்டிருந்தது.
இது நடந்து கொண்டிருக்கும்போதே மண்டை காய்ந்து போயிருக்கும் உங்களுக்கு நான் இதுவரை உங்கள் மனதில் எழுந்திருக்கும் கேள்விகளுக்கெல்லாம் விடைசொல்வதுதான் முறை..
மனோ துபாயில் வசிக்கும் ஒரு சேல்ஸ்மேன்.. சேல்ஸ்மேன் என்றாலே சம்பளம், கமிஷன் இத்யாதி, இத்யாதி எல்லாம் இருக்கும் இங்கே, அவரவர் திறமையை பொருத்து. மனோ ஒரு திறமையான சேல்ஸ்மேன், அலுவலக உதவியாளனாய் சேர்ந்து வாழ்கையின் உயரங்களுக்கு சென்றவன். ரொம்ப கட்டுப்பாடான ஜென்டில்மேன்.. நைட்கிளப் போனால் ஜென்டில்மேன் அல்ல என்று யாராவது சொன்னால், எஸ், யுவர் ஆனர், இவன் முன்பு ஜென்டில்மேன் அல்ல.
ஆனால் இப்போது சென்று இரண்டு வருடங்களுக்கு பின் இப்போதுதான் செல்வதால் ஒரு அரைகுறை குஞ்சுமோன் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள். மனோவிற்கு அதை பற்றி கவலையில்லை.
துபாயின் நைட்கிளப் சமாச்சாரங்கள் ரொம்ப பிரபலம், அந்த அந்த மாநில மக்களை கவர்வதற்காக அந்த அந்த மாநில மொழிகள் பேசும் பெண்களை வைத்து நைட்கிளப்புகள் மற்றும் டேன்ஸ்கிளப்புகள் இங்கே சர்வ சாதரணம். எல்லாவற்றையும் நடத்துவது 75 சதவீதம் மலையாளியாய் தானிருப்பான். இதில் ரெண்டு வகை, ஒன்று சும்மா அழகழகான பெண்கள் உங்களுக்கு வேண்டியதை அழகாய் கருத்துடன் உங்களுக்கு பரிபாருவார்கள், மது, சாப்பாடு எல்லாம்.. மனைவிகள் கூட அப்படி பரிமாரியிருக்க மாட்டார்கள், அவ்வளவு அன்பாய் கவனித்து கொள்வார்கள்.
இன்னொன்று டேன்ஸ்கிளப் என்று சொல்லப்படும், கிளப்பின் நடுவே ஒரு மேடையில் நடன அழகிகள் உங்களுக்கு பிடித்த பாட்டுகளுக்கு டேன்ஸ் ஆடுவார்கள். கிட்டே போகவோ, தொடவோ அனுமதி இல்லை.. அதுக்கெல்லாம் ரொம்ப செலவாகும்.. உங்களுக்கு பிடித்த பாட்டுக்கு, உங்களுக்கு பிடித்த ஆள் ஆடவைக்கலாம்.
மலையாளிக்கு தெரியும், உங்களுக்கு என்ன தேவையென்று கனகச்சிதமாய்.. அதை நேக்கா கொடுத்து காசு பார்த்துக்கொண்டிருப்பான்.. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளி பெண்கள், மற்றும் சில நார்த் இன்டியன் பெண்களும் இருப்பார்கள்.. உங்கள் விருப்பத்திற்கு தேர்வு செய்ய.
மனைவி, குழந்தைகளை ஊரில் விட்டு தனிமரமாய் இங்குவந்து தவிக்கும் ஆண்களுக்கு இது சொர்க்கமாய் இருக்கும்.. இது குறித்து தனிபதிவே எழுதலாம் என்பதால் இங்கே விடுகிறேன், இதுபற்றி இதற்குமுன் யாராவது எழுதியிருந்தாலோ, இல்லை நீங்கள் படித்திருந்தாலோ கமென்டில் சொல்லுங்கள், எனக்கு எழுதும் வேலை மிச்சமாகும்(??)
மனோ கதைக்கு வருவோம், பாவம் பையன், திருப்தியாய் சாப்பிட்டு நிறைய நாட்களாகிவிட்டது என்று ரெண்டு ஆப்பமும், ஒரு சில்லி சிக்கனும் சாப்பிடலாம் கொஞ்சம் பீருடன் என்று வந்தவன், இரண்டு பைனும், ஒரு கேனும் குடித்துவிட்டு, வயிரு பெருத்து, மனசாட்சிக்கு பதில் சொல்வதற்காக, ரெண்டு ஆப்பமும் சில்லிசிக்கனும் வாங்கிவைத்துக் கொண்டு கண்ணாமுழி திருக விழித்துக்கொண்டிருந்தான். இந்தியா ஜெயித்துவிட்டது உற்சாக கைதட்டல் அதிர.
இதற்கிடையில் அந்த பெண்ணுடன் தமிழில் பேச ஆரம்பித்து கொஞ்சம் நெருங்கியிருந்தான்.. கடைசியில் ஒருவழியாய் பெருத்த வயிருடன் போதும், விட்டுரலாம்னு பில் கேட்கும் போது அந்த பெண் அருகில் வந்து ரொம்ப சோகமாய், எங்களுக்கு இங்கே டிப்பு மட்டும்தான்.. சம்பளம் கிடையாது என்று சொன்னாள்..
மனோ, ஏன் வேலை பாக்குற, உட்டு தொலைச்சிட்டு வேற தேடவேண்டியது தானே??
ம்ம்ம், கேன்சல் அடிக்கப்போறேன்.. ஊருக்கு போறேன் என்றாள்..
எந்த ஊரு என்று மனோ கேட்கவும், இலங்கை.. கண்டி பக்கம் என்றாள்.
ஓ.. இப்பம் எப்படி நிலைமை..
இப்ப பரவாயில்லை.
பிரபாகரனுக்கு அப்புறம் பரவாயில்லையா??
இல்லை.. அவர் இருக்கும் போது பிரச்சனையாக இருந்தது.. இப்ப அதிகம் பிரச்சனை இல்ல, ஊருக்கு போகலாம் என்றாள்.
சரி என்று சொல்லிவிட்டு மனோ 20 திர்ஹம் டிப்ஸ் கொடுத்தான், ஏதோ தமிழ் என்று சொல்கிறாளே என்று, கொடுத்துவிட்டு நடையை கட்டவும், கௌம்புறிகளா?? இனி எப்பம்??
ம்ம்ம், பாக்கலாம்..
பய பெருத்த வயிருடன், வீங்கி, வீங்கி நடக்கும் போதே அவளுக்கு தெரிந்திருக்கவேண்டும் இனி இவன் எப்போது வருவான்னு அவனுக்கே தெரியாதென்று..
மனோவிற்கு இன்னொரு முறை நேரம் கிடைத்து அந்த வழியாக செல்லநேர்ந்தால், மீண்டும் ஒன்றிரண்டு வருடத்திற்குபின் போகலாம், கிடைக்குமா?? பார்ப்போம்..
அன்புடன், வசந்தா நடேசன்.
டிஸ்கி:- இது சத்தியமாய் துபாயில் வசிக்கும் மனோதான், அவனைப்பற்றி எழுதவேண்டும் என்று ரொம்ப வேண்டி, விரும்பி கேட்டதால்தான் எழுதினேன், இப்டி எழுதுவேன்னு பய நினைச்சிருக்க மாட்டான்!!
Saturday, March 5, 2011
ஆணவம்..
இது என் நண்பரை பற்றிய கதை..
1972ல் நம் கோவை மாநகரில் ஒரு நாளைக்கு ரூபாய் 2.50 என்று வேலை செய்ய ஆரம்பித்து, வாழ்கையில் பல பகுதியை பார்த்து முன்னேறி வந்த ஒரு சாதாரண தமிழனின் கதை..
திறமை மட்டும் போதாது, வேலையிலிருந்த திறமையால் அந்த ஆணவம் வந்தது என்றாலும் ஆணவம் ஒரு மனிதனை எங்கு வரை கொண்டு செல்லும் என்பதற்கு இவர் வாழ்க்கையை தவிற வேறு உதாரணம் கண்டுபிடிப்பது கடினம்.
வெல்டிங் என்றால் இவர் அடிப்பதுதான் என்று அப்போதே இருந்தவர்.. இவர் வெல்டிங் என்றால் பெரிய பெரிய கம்பெனிகள் கூட ஒன்றும் சொல்லாமல் அந்த காலத்தில் ஏற்றுக்கொள்ளுமாம். வெறும் டிராயிங் மட்டும் கொடுத்து விட்டால்போதும், வேலை முடிந்திருக்கும்.
என்னைவிட 10 வயது அதிகம் அவருக்கு, என்றால் அவர் வயது அப்போது 16 இருக்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் வேலைக்கு சேர்ந்து வாழ்க்கை முழுவதும் வெல்டிங், வெல்டிங் என்று வாழ்க்கையை அற்பணித்தவர்.. ஒரு தேர்ந்த பிரபல வெல்டர் இன்று.
வாழ்கையின் அடிமட்டத்திலிருந்து மேலேறி வந்தவர், 1982ல் அவர் சம்பளம், ஒரு நாளைக்கு ரூபாய் 12.86 பைசா என்றால் அவருடைய உழைப்பின் வலிமை புரிகிறதா?? இளமையின் உக்கிரத்தை... வாழ்வின் வக்கிரத்தை என்னென்று சொல்ல??
இளம் ரத்தம், நம் நண்பர் அந்த காலத்தில் அந்த வேலையை (எவரெஸ்ட் இஞ்சினியரிங், கோவை) ஆணவத்துடன் தொலைத்தவர், காரணம் கேளுங்கள், அவரின் பின்னே அதே கம்பெனியில் சேர்ந்தவருக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 12.87?? ஆனால் நிர்வாகம் இவருக்கு அதே சம்பளத்தை கொடுக்க மறுத்து விட்டது. நம் நண்பர், கேட்டிருக்கிறார், ஏன் என்னை விட அவனுக்கு ஒரு பைசா அதிகம்?? எனக்கும் அதையே கொடு, வேலை செய்கிறேன், இல்லை வேண்டாம்.. என்று தினமும் கம்பெனிக்கு செல்வார் ஆனால் வேலை செய்ய மாட்டார், இவருடைய பஞ்சை அடித்து இவரின் ஹெல்பர்கள் வேலை செய்வர்.. பொருப்பு இவருக்குத்தான்.
அதை பார்க்கும் சூப்பர்வைசர்கள், ஏன், நீ வேலை செய்யவில்லையென இவரை கேட்கவும் முடியாது.. ஒரு கட்டத்தில் அந்த வேலையே விட்டு விட்டு வெளிநாடுகளில் வேலை செய்ய வர ஆரம்பித்து கஷ்டப்பட்டு அவரின் ஐம்பதாவது வயது வரை பல கஷ்டப்பட்டு, 50 வயதில் இங்குள்ள அரசு துரையொன்றில் வேலைக்கு சேர்ந்தவர்.. இங்கு அரசு துரையில் ஐம்பது வயதுக்கு மேலுள்ள ஒரு முஸ்லீமுக்கு வேலை கிடைப்பது கொஞ்சம் இன்ப்ளூயன்ஸ் இருந்தால் சாத்தியம் தான், ஆனால் இவர் ஒரு ஹிந்து?? அவருக்கு வேலை கிடைத்தது அவரின் திறமையால்.. ம்ம்ம், திறமை??
திறமை மட்டுமல்ல, அவர் அவரது ஆணவத்தை விட்டொழித்து, என்னால் இனி முடியாது, உன் கருணையிருந்தால் மனது வை என்று பல வெளிநாட்டு கஷ்டங்களுக்குப்பின் கடவுளை சரணடைந்தபோது..
இன்று அவரின் 55 வது வயதில், நன்றாக இருக்கிறார்.. சொந்த வீடு, வசதி, வாழ்கை என்ற பல நிறைவேறியிருக்கின்றன.. ஆனால் இன்று அவர் நினைத்து பார்ப்பது அவர் திறமையை அல்ல.. கடவுளை.
இன்று அவர் சொல்லும் ஒரே வார்த்தை தன் திறமையை பற்றிய ஆணவம் மட்டும் ஒருவனுக்கு இருந்தால் போதாது, அதிலும் மேலானது கடவுள் கருணை.., அதற்கு வேண்டிக்கொள்ளுங்கள், அதற்கு முயற்சி செய்யுங்கள்.. என்பது தான்.
ஏதேனும் புரிந்ததா?? இல்லையேல் இன்னொரு நாள் இன்னும் விளக்குகிறேன், நண்பர் பற்றி..
அன்புடன், வசந்தா நடேசன்.
1972ல் நம் கோவை மாநகரில் ஒரு நாளைக்கு ரூபாய் 2.50 என்று வேலை செய்ய ஆரம்பித்து, வாழ்கையில் பல பகுதியை பார்த்து முன்னேறி வந்த ஒரு சாதாரண தமிழனின் கதை..
திறமை மட்டும் போதாது, வேலையிலிருந்த திறமையால் அந்த ஆணவம் வந்தது என்றாலும் ஆணவம் ஒரு மனிதனை எங்கு வரை கொண்டு செல்லும் என்பதற்கு இவர் வாழ்க்கையை தவிற வேறு உதாரணம் கண்டுபிடிப்பது கடினம்.
வெல்டிங் என்றால் இவர் அடிப்பதுதான் என்று அப்போதே இருந்தவர்.. இவர் வெல்டிங் என்றால் பெரிய பெரிய கம்பெனிகள் கூட ஒன்றும் சொல்லாமல் அந்த காலத்தில் ஏற்றுக்கொள்ளுமாம். வெறும் டிராயிங் மட்டும் கொடுத்து விட்டால்போதும், வேலை முடிந்திருக்கும்.
என்னைவிட 10 வயது அதிகம் அவருக்கு, என்றால் அவர் வயது அப்போது 16 இருக்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் வேலைக்கு சேர்ந்து வாழ்க்கை முழுவதும் வெல்டிங், வெல்டிங் என்று வாழ்க்கையை அற்பணித்தவர்.. ஒரு தேர்ந்த பிரபல வெல்டர் இன்று.
வாழ்கையின் அடிமட்டத்திலிருந்து மேலேறி வந்தவர், 1982ல் அவர் சம்பளம், ஒரு நாளைக்கு ரூபாய் 12.86 பைசா என்றால் அவருடைய உழைப்பின் வலிமை புரிகிறதா?? இளமையின் உக்கிரத்தை... வாழ்வின் வக்கிரத்தை என்னென்று சொல்ல??
இளம் ரத்தம், நம் நண்பர் அந்த காலத்தில் அந்த வேலையை (எவரெஸ்ட் இஞ்சினியரிங், கோவை) ஆணவத்துடன் தொலைத்தவர், காரணம் கேளுங்கள், அவரின் பின்னே அதே கம்பெனியில் சேர்ந்தவருக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 12.87?? ஆனால் நிர்வாகம் இவருக்கு அதே சம்பளத்தை கொடுக்க மறுத்து விட்டது. நம் நண்பர், கேட்டிருக்கிறார், ஏன் என்னை விட அவனுக்கு ஒரு பைசா அதிகம்?? எனக்கும் அதையே கொடு, வேலை செய்கிறேன், இல்லை வேண்டாம்.. என்று தினமும் கம்பெனிக்கு செல்வார் ஆனால் வேலை செய்ய மாட்டார், இவருடைய பஞ்சை அடித்து இவரின் ஹெல்பர்கள் வேலை செய்வர்.. பொருப்பு இவருக்குத்தான்.
அதை பார்க்கும் சூப்பர்வைசர்கள், ஏன், நீ வேலை செய்யவில்லையென இவரை கேட்கவும் முடியாது.. ஒரு கட்டத்தில் அந்த வேலையே விட்டு விட்டு வெளிநாடுகளில் வேலை செய்ய வர ஆரம்பித்து கஷ்டப்பட்டு அவரின் ஐம்பதாவது வயது வரை பல கஷ்டப்பட்டு, 50 வயதில் இங்குள்ள அரசு துரையொன்றில் வேலைக்கு சேர்ந்தவர்.. இங்கு அரசு துரையில் ஐம்பது வயதுக்கு மேலுள்ள ஒரு முஸ்லீமுக்கு வேலை கிடைப்பது கொஞ்சம் இன்ப்ளூயன்ஸ் இருந்தால் சாத்தியம் தான், ஆனால் இவர் ஒரு ஹிந்து?? அவருக்கு வேலை கிடைத்தது அவரின் திறமையால்.. ம்ம்ம், திறமை??
திறமை மட்டுமல்ல, அவர் அவரது ஆணவத்தை விட்டொழித்து, என்னால் இனி முடியாது, உன் கருணையிருந்தால் மனது வை என்று பல வெளிநாட்டு கஷ்டங்களுக்குப்பின் கடவுளை சரணடைந்தபோது..
இன்று அவரின் 55 வது வயதில், நன்றாக இருக்கிறார்.. சொந்த வீடு, வசதி, வாழ்கை என்ற பல நிறைவேறியிருக்கின்றன.. ஆனால் இன்று அவர் நினைத்து பார்ப்பது அவர் திறமையை அல்ல.. கடவுளை.
இன்று அவர் சொல்லும் ஒரே வார்த்தை தன் திறமையை பற்றிய ஆணவம் மட்டும் ஒருவனுக்கு இருந்தால் போதாது, அதிலும் மேலானது கடவுள் கருணை.., அதற்கு வேண்டிக்கொள்ளுங்கள், அதற்கு முயற்சி செய்யுங்கள்.. என்பது தான்.
ஏதேனும் புரிந்ததா?? இல்லையேல் இன்னொரு நாள் இன்னும் விளக்குகிறேன், நண்பர் பற்றி..
அன்புடன், வசந்தா நடேசன்.
Friday, March 4, 2011
சேம்சங் போற்றுதும்..
2009 ஏப்ரலில் ஒரு 32" எல்சிடி வாங்கினேன், இங்கே ரூமில் பார்ப்பதற்காக. எல்சிடி விலைகள் அப்போது குறைந்திருந்தது இங்கே, 1699க்கு சேம்சங். 2 வருடம் வாரண்டி என்றார்கள், மண்டைய மண்டைய ஆட்டிட்டு வாங்கி வைத்தாகிவிட்டது. அது இத்தனை நாளும் ப்ரச்னை இல்லாமல் சென்று கொண்டிருந்தது.
பின்னர் வீட்டுக்கு வந்த பல நண்பர்கள், சேம்சங்?? வேற வாங்கிருக்கலாமே என்று சொல்லிச்சென்றிருக்கிறார்கள். மொபைல் பொருத்தவரை நான் எப்போதும் நோக்கியா வாங்குவதே வழக்கம், படு யூசர் ப்ரெண்லி என்பதால், ஆனால் சேம்சங் மொபைல் வாங்கி முன்பே நொந்த கதையும் கைவசம் உண்டு. சேம்சங் மாத்ரம் வாங்கிராதடா.. ன்னு அன்பாய் சொன்னவர்கள் கொஞ்சம் அதிகம் தான்.
ம்ம்ம்ம், என் போதாதவேளை, விலை மலிவாக இருக்கிறதே என்று வாங்கி தொலைத்து விட்டேன். சென்ற வருடம் வரை நல்லாத்தான் சென்றது, இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஒரு கருப்பு லைன் மேலே வர ஆரம்பித்தது, கொஞ்சம் இறைச்சலும் வர ஆரம்பித்தது சில நாட்களிலேயே.. ' பெப்ருவரியில் அப்படியே டிவியின் மேல்பகுதி கால்பங்கு கருப்படித்து விட்டது.
அசராமல் அதிலும் பார்த்துக்கொண்டிருந்தேன், நம் வீட்டிற்கு வரும் ஒரு நண்பர் தாங்கமுடியாமல், தூக்குங்க சர்வீஸ் குடுத்துருவம் என்று ஒரு நாள் வலுக்கட்டாயமாய் காரில் வைத்து எடுத்து சென்று சேம்சங் சர்வீஸ் செய்யும் ஈராஸ் கொண்டு கொடுத்தாகிவிட்டது, அவர்கள் சீரியல் நம்பர் பார்த்து ஏப்ரல் வரை வாரண்டி உள்ளது, பில் கொண்டு வந்தால் சர்வீஸ் இலவசம் என்றார்கள், வாங்கிய கடையில் சென்று பில் காப்பி வாங்கினாலும் போதும் கொண்டு வாருங்கள் என்றார்கள்.
வீட்டில் பில் இல்லை.. அந்த நல்ல பழக்கம்லாம் நமக்கு ஏது?? ஷராப் டி ஜி யில் கேட்டால் நாங்கள் இப்போது தான் சிஸ்டம் எல்லாம் மாற்றியிருக்கிறோம், முயற்சி செய்கிறோம் என்று முயன்றுவிட்டு சாரி என்றார்கள். சரி, 600, 700 போயிற்று என்று பில் கிடைக்கவில்லை, சர்வீஸ் செய்யுங்கள் நான் பணம் கொடுத்துவிடுகிறேன் என்றேன், வேல்டுகப் கிரிக்கெட் ஆரம்பித்து பார்க்க முடியாமல் ஸ்கோர்கார்ட் மட்டும் கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நேரம்.
பின்னர் சேம்சங்கிற்கும், ஈரோஸிற்கும் தினமும் போன் பண்ணி கேட்டுக்கொண்டிருந்தேன் என்ன பிரச்னை, எப்ப டிவியை கொடுப்பீங்கன்னு. நம் நல்ல நேரத்துக்கு என் டீவியில் ஏதோ தீர்க்கமுடியாத ப்ரச்னை போல்இருக்கிறது?? நான் காசு குடுக்குறண்டா, சரி பண்ணி குடுடா ன்னு பிரஷர் போடப்போட சாம்சங் பின் வாங்கிக்கொண்டிருந்தது.
ஒரு நாள் சேம்சங் ஒரு முடிவெடுத்து, அந்த டிவியின் இப்போதைய விலை 1300, சரி நாங்கள் அதை கொடுத்து விடுகிறோம், எங்கள் ஷோரூம் சென்று ஏதேனும் புது சேம்சங் டிவி வாங்கிக்கொள்ளுங்கள், 1300 கழித்துவிட்டு மீதி பணம் கொடுத்து வாங்கிச்செல்லுங்கள் என்றதும் ஆஹா சேம்சங் வாழ்க, சேம்சங் வாழ்க என்று சொல்லிவிட்டு கடைக்கு சென்று மாடல் சூஸ் பண்ணினேன், எல் ஈ டி வாங்கிரலாமா?? இல்ல 42" ப்ளாஸ்மா வாங்கிரலாமா?? ன்னு தேடிக்கொண்டிருக்கும் போதே நண்பருக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னேன்..
சேம்சங்ல திரும்பவும் மாட்டவச்சுட்டானுங்களா?? ன்னு கேட்டுட்டே, எல்ஈடீ, கில்ஈடீ?? ல்லாம் வேண்டாம், ஒரு 50 அல்லது 100 குடுத்து ஏதாச்சும் வாங்குங்க?? எல்ஈடீல்லாம் அப்பறம் வேற நல்ல ப்ரான்ட்ல வாங்கலாம் எனவும் எனக்கும் சரி எனப்பட்டது.
நான் வைத்திருந்த அதே 32", ஆனால் 4 சீரிஸ் ஒன்று 1399 என்றார்கள், அதையே செலக்ட் பண்ணி ஈரோஸிடம் சொன்னால், சரிங்க சார் வந்து 99 கொடுத்துவிட்டு எடுத்து செல்லுங்கள் என்றார்கள்.
சென்ற சனிக்கிழமை சென்று எடுத்துவந்து ஆனந்தமாய் பார்த்துக்கொண்டிருக்கிறேன் இப்போது, டெலிவரி கொடுத்த பிலிப்பைனியிடம், கொஞ்சம் பேராசையாய், அப்பம் இன்னிலிருந்து இதுக்கு இன்னும் 2 வருஷம் வாரண்டி?? என்றேன். அவள், நோ.. நோ.. இதுக்கு ஒன் இயர் மட்டும்தான் என்றாள் கொஞ்சம் மிரண்டு.
சரி, சரி, தேங்யூ என்று எடுத்து வந்தேன். சேம்சங் வாழ்க.. கவனிக்க வேண்டியவை..
1) வாரண்டி காலம் முடிய மட்டும் பில்லை தொலைத்துவிடாதீர்கள், என் விஷயத்தில் வேறு வழியில்லாமல் கொடுத்து விட்டார்கள்.. அந்த ஸ்பேர் இப்போது அவர்களிடம் ஸ்டாக் இல்லை.. நான் காசு குடுக்குறேன், டீவி குடுன்னு ப்ரஷர் போட்டதால்.. சரி போய்தொலை என்று கொடுத்து விட்டார்கள், அந்த ஸ்பேர் இருந்திருந்தால், 800 குடுக்குறியா, சரி பண்றேன் என்றிருப்பார்கள்.. டிவி விலையே இப்போது 1300 தான்.
2) ஒரு பொருள் வாங்கியதும் அந்த பில்லை ஸ்கேன் பண்ணி உங்கள் ஈமெயிலில் ஒரு நியூ போல்டரில் வைத்துக்கொள்ளுங்கள், அது பிற்காலத்தில் உதவக்கூடும். எப்போதும், எல்லோரும் நல்லவனா இருக்கமாட்டாய்ங்கன்னா!!
வாழ்க்கை என்பதே படிப்பினை தானே!!
அன்புடன், வசந்தா நடேசன்.
பின்னர் வீட்டுக்கு வந்த பல நண்பர்கள், சேம்சங்?? வேற வாங்கிருக்கலாமே என்று சொல்லிச்சென்றிருக்கிறார்கள். மொபைல் பொருத்தவரை நான் எப்போதும் நோக்கியா வாங்குவதே வழக்கம், படு யூசர் ப்ரெண்லி என்பதால், ஆனால் சேம்சங் மொபைல் வாங்கி முன்பே நொந்த கதையும் கைவசம் உண்டு. சேம்சங் மாத்ரம் வாங்கிராதடா.. ன்னு அன்பாய் சொன்னவர்கள் கொஞ்சம் அதிகம் தான்.
ம்ம்ம்ம், என் போதாதவேளை, விலை மலிவாக இருக்கிறதே என்று வாங்கி தொலைத்து விட்டேன். சென்ற வருடம் வரை நல்லாத்தான் சென்றது, இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஒரு கருப்பு லைன் மேலே வர ஆரம்பித்தது, கொஞ்சம் இறைச்சலும் வர ஆரம்பித்தது சில நாட்களிலேயே.. ' பெப்ருவரியில் அப்படியே டிவியின் மேல்பகுதி கால்பங்கு கருப்படித்து விட்டது.
அசராமல் அதிலும் பார்த்துக்கொண்டிருந்தேன், நம் வீட்டிற்கு வரும் ஒரு நண்பர் தாங்கமுடியாமல், தூக்குங்க சர்வீஸ் குடுத்துருவம் என்று ஒரு நாள் வலுக்கட்டாயமாய் காரில் வைத்து எடுத்து சென்று சேம்சங் சர்வீஸ் செய்யும் ஈராஸ் கொண்டு கொடுத்தாகிவிட்டது, அவர்கள் சீரியல் நம்பர் பார்த்து ஏப்ரல் வரை வாரண்டி உள்ளது, பில் கொண்டு வந்தால் சர்வீஸ் இலவசம் என்றார்கள், வாங்கிய கடையில் சென்று பில் காப்பி வாங்கினாலும் போதும் கொண்டு வாருங்கள் என்றார்கள்.
வீட்டில் பில் இல்லை.. அந்த நல்ல பழக்கம்லாம் நமக்கு ஏது?? ஷராப் டி ஜி யில் கேட்டால் நாங்கள் இப்போது தான் சிஸ்டம் எல்லாம் மாற்றியிருக்கிறோம், முயற்சி செய்கிறோம் என்று முயன்றுவிட்டு சாரி என்றார்கள். சரி, 600, 700 போயிற்று என்று பில் கிடைக்கவில்லை, சர்வீஸ் செய்யுங்கள் நான் பணம் கொடுத்துவிடுகிறேன் என்றேன், வேல்டுகப் கிரிக்கெட் ஆரம்பித்து பார்க்க முடியாமல் ஸ்கோர்கார்ட் மட்டும் கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நேரம்.
பின்னர் சேம்சங்கிற்கும், ஈரோஸிற்கும் தினமும் போன் பண்ணி கேட்டுக்கொண்டிருந்தேன் என்ன பிரச்னை, எப்ப டிவியை கொடுப்பீங்கன்னு. நம் நல்ல நேரத்துக்கு என் டீவியில் ஏதோ தீர்க்கமுடியாத ப்ரச்னை போல்இருக்கிறது?? நான் காசு குடுக்குறண்டா, சரி பண்ணி குடுடா ன்னு பிரஷர் போடப்போட சாம்சங் பின் வாங்கிக்கொண்டிருந்தது.
ஒரு நாள் சேம்சங் ஒரு முடிவெடுத்து, அந்த டிவியின் இப்போதைய விலை 1300, சரி நாங்கள் அதை கொடுத்து விடுகிறோம், எங்கள் ஷோரூம் சென்று ஏதேனும் புது சேம்சங் டிவி வாங்கிக்கொள்ளுங்கள், 1300 கழித்துவிட்டு மீதி பணம் கொடுத்து வாங்கிச்செல்லுங்கள் என்றதும் ஆஹா சேம்சங் வாழ்க, சேம்சங் வாழ்க என்று சொல்லிவிட்டு கடைக்கு சென்று மாடல் சூஸ் பண்ணினேன், எல் ஈ டி வாங்கிரலாமா?? இல்ல 42" ப்ளாஸ்மா வாங்கிரலாமா?? ன்னு தேடிக்கொண்டிருக்கும் போதே நண்பருக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னேன்..
சேம்சங்ல திரும்பவும் மாட்டவச்சுட்டானுங்களா?? ன்னு கேட்டுட்டே, எல்ஈடீ, கில்ஈடீ?? ல்லாம் வேண்டாம், ஒரு 50 அல்லது 100 குடுத்து ஏதாச்சும் வாங்குங்க?? எல்ஈடீல்லாம் அப்பறம் வேற நல்ல ப்ரான்ட்ல வாங்கலாம் எனவும் எனக்கும் சரி எனப்பட்டது.
நான் வைத்திருந்த அதே 32", ஆனால் 4 சீரிஸ் ஒன்று 1399 என்றார்கள், அதையே செலக்ட் பண்ணி ஈரோஸிடம் சொன்னால், சரிங்க சார் வந்து 99 கொடுத்துவிட்டு எடுத்து செல்லுங்கள் என்றார்கள்.
சென்ற சனிக்கிழமை சென்று எடுத்துவந்து ஆனந்தமாய் பார்த்துக்கொண்டிருக்கிறேன் இப்போது, டெலிவரி கொடுத்த பிலிப்பைனியிடம், கொஞ்சம் பேராசையாய், அப்பம் இன்னிலிருந்து இதுக்கு இன்னும் 2 வருஷம் வாரண்டி?? என்றேன். அவள், நோ.. நோ.. இதுக்கு ஒன் இயர் மட்டும்தான் என்றாள் கொஞ்சம் மிரண்டு.
சரி, சரி, தேங்யூ என்று எடுத்து வந்தேன். சேம்சங் வாழ்க.. கவனிக்க வேண்டியவை..
1) வாரண்டி காலம் முடிய மட்டும் பில்லை தொலைத்துவிடாதீர்கள், என் விஷயத்தில் வேறு வழியில்லாமல் கொடுத்து விட்டார்கள்.. அந்த ஸ்பேர் இப்போது அவர்களிடம் ஸ்டாக் இல்லை.. நான் காசு குடுக்குறேன், டீவி குடுன்னு ப்ரஷர் போட்டதால்.. சரி போய்தொலை என்று கொடுத்து விட்டார்கள், அந்த ஸ்பேர் இருந்திருந்தால், 800 குடுக்குறியா, சரி பண்றேன் என்றிருப்பார்கள்.. டிவி விலையே இப்போது 1300 தான்.
2) ஒரு பொருள் வாங்கியதும் அந்த பில்லை ஸ்கேன் பண்ணி உங்கள் ஈமெயிலில் ஒரு நியூ போல்டரில் வைத்துக்கொள்ளுங்கள், அது பிற்காலத்தில் உதவக்கூடும். எப்போதும், எல்லோரும் நல்லவனா இருக்கமாட்டாய்ங்கன்னா!!
வாழ்க்கை என்பதே படிப்பினை தானே!!
அன்புடன், வசந்தா நடேசன்.
Thursday, March 3, 2011
டீம் வொர்க் [2]
டீம் வொர்க் என்று ஆரம்பிக்கும் போது இதை தொடராக எழுதும் உத்தேசம் இல்லை.. சும்மா ஒரு சுயசொறிதல் பாணியில் ஆரம்பித்ததுதான், ஆனால் கடைசியில் அதில் எனக்கு கொஞ்சம் அதிகம் சொல்லஇருப்பது போல் தோன்றி தொலைத்து விட்டது.. நல்லதுக்கா, கெட்டதுக்கா?? தெரியாது. ம்ம்ம்.
துபாயில் உள்ள ஒரு சிறு வெற்றிகரமான நிறுவனத்தின் ஒரு சிறு அங்கம் என்பதை தவிர வேறு தகுதிகள் ஏதும் எனக்கில்லை! ஊரில் சில பல தொழில்கள் செய்ததுண்டு, அங்குள்ள நடைமுறைகளுக்கும் இங்குள்ள நடைமுறைகளுக்குமுள்ள சில வியாபார வித்தியாசங்கள் மனதில் உருத்தியதால், சரி சொல்லி வைப்போம், யாருக்காவது பலன் இருந்தால் இருக்கட்டுமே என்ற நினைப்பில் மட்டுமே தொடருகிறேன்..
டீம் வொர்க்கின் வெற்றி என்பது புது விஷயமல்ல, இப்போது நம் தேசத்திலும் கண்கூடு, இருந்தாலும் அந்த நிலை சில அல்லது பல பெரிய நிறுவனங்களில் மட்டுமே தான் இருக்கிறது. பல சிறு நிறுவனங்கள் இப்போதும் அதைப்பற்றி நினைப்பதில்லை என்பது ஒரு குறைதான். இந்த ஒரு சின்ன விஷயம் கோயிங்கன்சேர்ன் என்ற நிலையிலிருந்து எங்களை எப்படி மீட்டுவந்தது என்பதுதான் கதை.
ஆடிட்டிங் தொடர்புடையவர்கள் முன்பே இந்த வார்த்தை பதத்தை கேட்டிருக்கக் கூடும், கோயிங்கன்சேன் என்றால் கம்பெனி முடிஞ்சி போச்சி என்று அர்த்தம், அதாவது தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது என்பது போல், நஷ்ட்டம் அதிகம் ஆகிவிட்டது ஆனாலும் ஓனர் நினைத்தால் தொடரலாம் என்பது போல் எங்கள் நிறுவனத்தின் அப்போதைய ஆடிட்டர்கள் கே.பி.எம்.ஜி ஒரு ரிப்போர்ட் கொடுத்தார்கள் நான் சேர்ந்து ஒரு 3 மாதத்தில் கொடுத்த ஆடிட் ரிப்போர்ட் அது.
அப்படி ஒரு ரிப்போர்ட்டை ஏன் கொடுத்தார்கள், அதை ஏன் ஓனர் சம்மதித்தார் என்பதெல்லாம் பெரிய கதை.. உங்களுக்கு தேவையும் இல்லை.. முடிந்தால் இன்னொருநான் அதையும் எழுதுகிறேன்.
சுருக்கமாய் சொல்வதென்றால், எங்கள் கம்பெனி ஐரோப்பாவிலுள்ள ஒரு பெரிய கம்பெனியின் மிடில் ஈஸ்ட் அங்கமாக இருந்தது அப்போது, அவர்கள் அங்கே தயாரிக்கும் பொருள்கள் மற்றும் சில சேம் லைன் புராடக்ட்களை மிடில் ஈஸ்ட்டில் மார்க்கெட்டிங் செய்வது. ஐரோப்பாவிலுள்ள ஒரு மல்டி மில்லினேயரின் சிறு துளி வடிவம் எங்கள் அப்போதைய கம்பெனி.. அங்குள்ள பெருங்குழுமத்தை ஒருநாள் அவர்கள் விற்றுவிடுவது என்று முடிவெடுத்தபோது இந்த மிடில் ஈஸ்ட் சிறு துளியை மட்டும் இப்போதைய முதலாளி விலைக்கு வாங்கிக்கொண்டு இங்கு வந்துவிட்டான். ஐரோப்பாவில் மைனஸ் நாலு டிகிரியில் நடுங்கும் ஐரோப்பியர்கள் சந்தோஷமாக இங்கே வருவார்கள் என்றாலும் இவர் வந்தது நாங்கள் விற்ற பொருட்களின் மேலிருந்த நம்பிக்கை மற்றும் இந்த பகுதியை பற்றி முன்பே அறிந்திருந்ததால்.
சொல்லப்போனால் இதை ஒரு லக்கி சான்ஸ் என்றுதான் சொல்லவேண்டும், பெருங்குழுமம் இதைவைத்து என்னசெய்வது என்று நினைக்கையில் அங்கே இருந்த ஒருவர் இதை வந்த விலைக்கு சல்லிசாய் வாங்கிக்கொள்வது எல்லோருக்கும் எப்போதும் அமையாது..
இங்கே வந்தது முதல் நிர்வாகமே மாறியது.. அப்போது ஒரு இந்தியனின் நிர்வாகத்தில் இருந்தது, அப்படியே தலைகீழ் மாற்றம் நான் சேர்ந்த ஆறாவது மாதத்தில்..
முதலில் இங்கே என்னை மலைக்க வைத்தது எல்லோரையும் அழைத்து மீட்டிங், மீட்டிங் என்று அடிக்கடி காய்ச்சுவது. கம்பெனியில் இருந்த எல்லோரையும் அழைத்து வாரம் ஒருமுறை ஒரு மீட்டிங் இருக்கும், நான் கணக்கு மற்றும் நிர்வாகத்தில் இருந்ததால் எனக்கு தினமும் மீட்டிங் இருக்கும். டீம் ஒர்க்கின் தொடக்கம் அங்குதான் ஆரம்பம்.
மீட்டிங்கில் பேசுவது அனேகமாய் ஒரே விஷயங்கள், சென்ற வாரம் என்னென்ன செய்தாய்? எவ்வளவு செய்தாய், வரும் வாரம் என்னென்ன செய்யப்போகிறாய், அதற்க்கு என்னென்ன வேண்டும். ஒரே விஷயமாய் இருந்தாலும் வாராவாரம் இது வேறு வேறு ரகமாய் இருக்கும். நாங்கள் அப்போது இந்த மீட்டிங்கிற்கு தேர்ந்தெடுத்தது ஞாயிற்றுக்கிழமை, இங்குள்ள நிறுவனங்களின் வாரத்தின் முதல் நாள் அது.
நான் மீட்டிங்கிற்கு முன் அதற்கான எல்லாம் ரெடி பண்ண வேண்டும். என்னென்ன செய்தார்கள், யார் யார் செய்தார்கள், அவரவர் டார்கெட் என்ன? இன்னும் மீதி என்ன? இப்படி எல்லாம் என் கையிலோ அல்லது தலையிலோ ரெடியாய் இருக்கவேண்டும்.
டார்கெட் என்றால் என்ன? அது சிறு நிறுவனங்களுக்கும் அவசியமா?? பி.இ.பி?? இவை எல்லாம் இன்னொரு நாளில்.
அன்புடன், வசந்தா நடேசன்.
துபாயில் உள்ள ஒரு சிறு வெற்றிகரமான நிறுவனத்தின் ஒரு சிறு அங்கம் என்பதை தவிர வேறு தகுதிகள் ஏதும் எனக்கில்லை! ஊரில் சில பல தொழில்கள் செய்ததுண்டு, அங்குள்ள நடைமுறைகளுக்கும் இங்குள்ள நடைமுறைகளுக்குமுள்ள சில வியாபார வித்தியாசங்கள் மனதில் உருத்தியதால், சரி சொல்லி வைப்போம், யாருக்காவது பலன் இருந்தால் இருக்கட்டுமே என்ற நினைப்பில் மட்டுமே தொடருகிறேன்..
டீம் வொர்க்கின் வெற்றி என்பது புது விஷயமல்ல, இப்போது நம் தேசத்திலும் கண்கூடு, இருந்தாலும் அந்த நிலை சில அல்லது பல பெரிய நிறுவனங்களில் மட்டுமே தான் இருக்கிறது. பல சிறு நிறுவனங்கள் இப்போதும் அதைப்பற்றி நினைப்பதில்லை என்பது ஒரு குறைதான். இந்த ஒரு சின்ன விஷயம் கோயிங்கன்சேர்ன் என்ற நிலையிலிருந்து எங்களை எப்படி மீட்டுவந்தது என்பதுதான் கதை.
ஆடிட்டிங் தொடர்புடையவர்கள் முன்பே இந்த வார்த்தை பதத்தை கேட்டிருக்கக் கூடும், கோயிங்கன்சேன் என்றால் கம்பெனி முடிஞ்சி போச்சி என்று அர்த்தம், அதாவது தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது என்பது போல், நஷ்ட்டம் அதிகம் ஆகிவிட்டது ஆனாலும் ஓனர் நினைத்தால் தொடரலாம் என்பது போல் எங்கள் நிறுவனத்தின் அப்போதைய ஆடிட்டர்கள் கே.பி.எம்.ஜி ஒரு ரிப்போர்ட் கொடுத்தார்கள் நான் சேர்ந்து ஒரு 3 மாதத்தில் கொடுத்த ஆடிட் ரிப்போர்ட் அது.
அப்படி ஒரு ரிப்போர்ட்டை ஏன் கொடுத்தார்கள், அதை ஏன் ஓனர் சம்மதித்தார் என்பதெல்லாம் பெரிய கதை.. உங்களுக்கு தேவையும் இல்லை.. முடிந்தால் இன்னொருநான் அதையும் எழுதுகிறேன்.
சுருக்கமாய் சொல்வதென்றால், எங்கள் கம்பெனி ஐரோப்பாவிலுள்ள ஒரு பெரிய கம்பெனியின் மிடில் ஈஸ்ட் அங்கமாக இருந்தது அப்போது, அவர்கள் அங்கே தயாரிக்கும் பொருள்கள் மற்றும் சில சேம் லைன் புராடக்ட்களை மிடில் ஈஸ்ட்டில் மார்க்கெட்டிங் செய்வது. ஐரோப்பாவிலுள்ள ஒரு மல்டி மில்லினேயரின் சிறு துளி வடிவம் எங்கள் அப்போதைய கம்பெனி.. அங்குள்ள பெருங்குழுமத்தை ஒருநாள் அவர்கள் விற்றுவிடுவது என்று முடிவெடுத்தபோது இந்த மிடில் ஈஸ்ட் சிறு துளியை மட்டும் இப்போதைய முதலாளி விலைக்கு வாங்கிக்கொண்டு இங்கு வந்துவிட்டான். ஐரோப்பாவில் மைனஸ் நாலு டிகிரியில் நடுங்கும் ஐரோப்பியர்கள் சந்தோஷமாக இங்கே வருவார்கள் என்றாலும் இவர் வந்தது நாங்கள் விற்ற பொருட்களின் மேலிருந்த நம்பிக்கை மற்றும் இந்த பகுதியை பற்றி முன்பே அறிந்திருந்ததால்.
சொல்லப்போனால் இதை ஒரு லக்கி சான்ஸ் என்றுதான் சொல்லவேண்டும், பெருங்குழுமம் இதைவைத்து என்னசெய்வது என்று நினைக்கையில் அங்கே இருந்த ஒருவர் இதை வந்த விலைக்கு சல்லிசாய் வாங்கிக்கொள்வது எல்லோருக்கும் எப்போதும் அமையாது..
இங்கே வந்தது முதல் நிர்வாகமே மாறியது.. அப்போது ஒரு இந்தியனின் நிர்வாகத்தில் இருந்தது, அப்படியே தலைகீழ் மாற்றம் நான் சேர்ந்த ஆறாவது மாதத்தில்..
முதலில் இங்கே என்னை மலைக்க வைத்தது எல்லோரையும் அழைத்து மீட்டிங், மீட்டிங் என்று அடிக்கடி காய்ச்சுவது. கம்பெனியில் இருந்த எல்லோரையும் அழைத்து வாரம் ஒருமுறை ஒரு மீட்டிங் இருக்கும், நான் கணக்கு மற்றும் நிர்வாகத்தில் இருந்ததால் எனக்கு தினமும் மீட்டிங் இருக்கும். டீம் ஒர்க்கின் தொடக்கம் அங்குதான் ஆரம்பம்.
மீட்டிங்கில் பேசுவது அனேகமாய் ஒரே விஷயங்கள், சென்ற வாரம் என்னென்ன செய்தாய்? எவ்வளவு செய்தாய், வரும் வாரம் என்னென்ன செய்யப்போகிறாய், அதற்க்கு என்னென்ன வேண்டும். ஒரே விஷயமாய் இருந்தாலும் வாராவாரம் இது வேறு வேறு ரகமாய் இருக்கும். நாங்கள் அப்போது இந்த மீட்டிங்கிற்கு தேர்ந்தெடுத்தது ஞாயிற்றுக்கிழமை, இங்குள்ள நிறுவனங்களின் வாரத்தின் முதல் நாள் அது.
நான் மீட்டிங்கிற்கு முன் அதற்கான எல்லாம் ரெடி பண்ண வேண்டும். என்னென்ன செய்தார்கள், யார் யார் செய்தார்கள், அவரவர் டார்கெட் என்ன? இன்னும் மீதி என்ன? இப்படி எல்லாம் என் கையிலோ அல்லது தலையிலோ ரெடியாய் இருக்கவேண்டும்.
டார்கெட் என்றால் என்ன? அது சிறு நிறுவனங்களுக்கும் அவசியமா?? பி.இ.பி?? இவை எல்லாம் இன்னொரு நாளில்.
அன்புடன், வசந்தா நடேசன்.
Wednesday, March 2, 2011
தோசையுடன் முட்டைகறி..
இன்னைக்கி வைச்ச தலைப்பே வேற, இது மேட்ச் இல்லையே என்பவர்கள் என்ன நடந்தது என்பதை மேலே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
என்னை கேட்டால் சமைப்பது தான் உலகில் மிக கஷ்டமான வேலை என்பேன், நம் ஊர் பெண்களை இதற்க்காகவாவது கொஞ்சம் மதிக்க நாம் கற்றுக்கொள்ளவேண்டும். ஏற்கெனவே கொஞ்சம் பயந்து மதிப்பது போல் நடிக்கிறோம் தான், நான் சொல்வது என் நெஞ்சை தொட்டு.. (என்னா வில்லத்தனம்??) அஞ்சாமல், அசராமல் தினமும் இதை ஒரு கடமையாக செய்கிறார்கள் பாருங்கள், சல்யூட்!
சரி, இனி நம்ம கதை. தலைப்பை பார்த்தாலே இது எப்படி சரி வரும் என்று சிலருக்கு தோன்றலாம், நீங்களே சமைத்து நீங்களே சாப்பிட்டு பாருங்கள்.. தக்காளி, இதன் அருமை புரியும்.
தனிமை கிடைத்ததும் கொஞ்சம் கெத்தாய் நான் எங்கே சமைப்பது, நமக்கு எவ்ளோவ் வேலை?? தினமும் எழுதணும், படிக்கணும். சமையலும், புடலங்காயும் என்று ஹோட்டலை நோக்கி தினமும் நடக்க ஆரம்பித்தேன். இரண்டு நாளிலேயே அங்கு சென்று சப்ளையர் முகத்தை பார்த்ததும்.. என்ன இருக்கு?? இட்லி, தோசை, பூரி என்று அடுக்கும் போதே ஒரு வெருப்பு எட்டிப்பார்க்கும், என்ன கண்றாவிடா இதென்று.. மறுபக்கம், பிஸ்ஸா, பர்கர் என்று ஒரே நாளில் முகத்தில் அடித்தது..
எனக்கு சமையல் பண்ண தெரியும் இருந்தாலும் சமைக்காமலிருந்தேன் கொழுப்பெடுத்துப் போய்தான், நண்பர்கள் செய்வார்கள், சமீப காலமாய் நான் அப்படியே நோகாமல் நோம்பு கும்பிட்டுக் கொண்டு இருந்து தொலைத்துவிட்டேன், அதுவும் கம்ப்யூட்டர் வாங்கியதும் கொஞ்சம் தெம்பு அதிகம் ஆகிவிட்டது, முன்பு பொழுதுபோக்கிற்காவது சமையல் செய்தது போய்.
இப்போது யாரும் இல்லாத நிலையில், ஒருநாள் காலை அலுவல் பிரஷரில் கிட்டத்தட்ட மயக்கம் வரும்போல் இருந்ததால், சரி இது சரிப்படாது மக்ளே ன்னு முந்தாநாள்ல இருந்து மீண்டும் ஆரம்பம், சரி நம்ம வரலாற்றை கொஞ்சம் சொல்லிவைப்போம்னு தான் இன்று இவ்வளவும்.
முதல் நாள் சப்பாத்தியும் உருளைகறியும், பிரமாதம் போங்கள். சொந்த சமையலின் மகிமை இதுதான், நமக்கு பிடித்தது, நாம் நினைக்கும் போது, முழுமையாய் ரசித்து சாப்பிட முடியும். ஒவ்வொரு முறை பண்ணும் போதும் இரண்டுநாள் பத்து எண்ணம் வரும்படி செய்துகொள்வது என் வழக்கம். முதல் நாள் ஐந்து, மூன்று இரவுக்கு, இரண்டு அடுத்த நாள் ப்ரேக் ஃபாஸ்ட். அடுத்த நாள் அதே மாவை பிர்ட்ஜில் வைத்து மீண்டும் ஐந்து முந்தைய நாளில் மீதம் வைத்த இதே கறியுடன். மதியம் பாரிக் செட் ஒருநாள், இன்னொருநாள் சரவணபவன் மினி சாப்பாடு.
இன்று மூன்றாவது நாள், என்ன செய்வது என்று யோசிக்கையில் அன்னபூர்ணா இடியாப்பம் தான் முதலில் நினைவில் வந்தது. சட்னி வைக்க படிக்காமல் இருந்து தொலைத்துவிட்டேன், ரொம்ப ஈஸி, ஆனால் முதலில் இரண்டு, மூன்று முறை முயன்று என் மனைவி வைத்த டேஸ்ட் வராததால் நான் விட்டு விட்டேன், அறை நண்பன் ரொம்ப டேஸ்ட்டா வைப்பான்.. சரி என்று நான் அதை கண்டுக்காமல் விட்டுவிட்டேன்.
இன்று இடியாப்பம், ஆஹா சட்னி?? ஆபத்பாந்தவனாய் மாலை உடன் வந்த தஞ்சை நண்பன் முட்டைகறியை ஞாபகப்படுத்தினான்.. இடியாப்பம், முட்டை கறி ஆஹா சூப்பர்னு வந்து சேந்து பண்ணுன ஒரே தப்பு கடைக்கு போகாமல் அப்படியே டிவியில் இங்கிலாண்ட்/அயர்லாந்து பார்த்துக்கொண்டு இருந்தது தான். என்ன நடந்தது ஏன் என்று எல்லோருக்கும் இப்போது தெரிந்திருக்கும், அயர்லாந்து ஜெயித்தது, தக்காளி, இந்தியாவுக்கு டை போட்டிங்கல்ல, அனுபவிங்கடான்னு சந்தோஷம் தாங்கலை.
பின்னர் போய் இடியாப்பம் தேடினால் மதினாவில் ‘எல்லாம் விற்றண்ணா, இனி நாள..‘ என்றார்கள், ஆஹா, என்று அப்படியே அருகில் பார்த்தேன், சிவ்ஸ்டார் தோசை மாவு?? சரி வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.. இன்னைக்கி தோசையுடன் முட்டைகறி.
நாளை வீக் எண்ட், நண்பர்கள் வந்து கவனித்துக்கொள்வார்கள், கவலையில்லை.. ம்ம்ம், முடிந்த வரை சமாளிப்போம்!
அன்புடன், வசந்தா நடேசன்.
டிஸ்கி :-பதிவின் நீளம் கருதி செய்முறை தவிர்த்துள்ளேன், வேண்டுமென்றால் பேச்சிலர் நண்பர்ளுக்கு உதவுவதற்க்காக நான் அதை இன்னொருபதிவில் விளக்க ரெடி.
என்னை கேட்டால் சமைப்பது தான் உலகில் மிக கஷ்டமான வேலை என்பேன், நம் ஊர் பெண்களை இதற்க்காகவாவது கொஞ்சம் மதிக்க நாம் கற்றுக்கொள்ளவேண்டும். ஏற்கெனவே கொஞ்சம் பயந்து மதிப்பது போல் நடிக்கிறோம் தான், நான் சொல்வது என் நெஞ்சை தொட்டு.. (என்னா வில்லத்தனம்??) அஞ்சாமல், அசராமல் தினமும் இதை ஒரு கடமையாக செய்கிறார்கள் பாருங்கள், சல்யூட்!
சரி, இனி நம்ம கதை. தலைப்பை பார்த்தாலே இது எப்படி சரி வரும் என்று சிலருக்கு தோன்றலாம், நீங்களே சமைத்து நீங்களே சாப்பிட்டு பாருங்கள்.. தக்காளி, இதன் அருமை புரியும்.
தனிமை கிடைத்ததும் கொஞ்சம் கெத்தாய் நான் எங்கே சமைப்பது, நமக்கு எவ்ளோவ் வேலை?? தினமும் எழுதணும், படிக்கணும். சமையலும், புடலங்காயும் என்று ஹோட்டலை நோக்கி தினமும் நடக்க ஆரம்பித்தேன். இரண்டு நாளிலேயே அங்கு சென்று சப்ளையர் முகத்தை பார்த்ததும்.. என்ன இருக்கு?? இட்லி, தோசை, பூரி என்று அடுக்கும் போதே ஒரு வெருப்பு எட்டிப்பார்க்கும், என்ன கண்றாவிடா இதென்று.. மறுபக்கம், பிஸ்ஸா, பர்கர் என்று ஒரே நாளில் முகத்தில் அடித்தது..
எனக்கு சமையல் பண்ண தெரியும் இருந்தாலும் சமைக்காமலிருந்தேன் கொழுப்பெடுத்துப் போய்தான், நண்பர்கள் செய்வார்கள், சமீப காலமாய் நான் அப்படியே நோகாமல் நோம்பு கும்பிட்டுக் கொண்டு இருந்து தொலைத்துவிட்டேன், அதுவும் கம்ப்யூட்டர் வாங்கியதும் கொஞ்சம் தெம்பு அதிகம் ஆகிவிட்டது, முன்பு பொழுதுபோக்கிற்காவது சமையல் செய்தது போய்.
இப்போது யாரும் இல்லாத நிலையில், ஒருநாள் காலை அலுவல் பிரஷரில் கிட்டத்தட்ட மயக்கம் வரும்போல் இருந்ததால், சரி இது சரிப்படாது மக்ளே ன்னு முந்தாநாள்ல இருந்து மீண்டும் ஆரம்பம், சரி நம்ம வரலாற்றை கொஞ்சம் சொல்லிவைப்போம்னு தான் இன்று இவ்வளவும்.
முதல் நாள் சப்பாத்தியும் உருளைகறியும், பிரமாதம் போங்கள். சொந்த சமையலின் மகிமை இதுதான், நமக்கு பிடித்தது, நாம் நினைக்கும் போது, முழுமையாய் ரசித்து சாப்பிட முடியும். ஒவ்வொரு முறை பண்ணும் போதும் இரண்டுநாள் பத்து எண்ணம் வரும்படி செய்துகொள்வது என் வழக்கம். முதல் நாள் ஐந்து, மூன்று இரவுக்கு, இரண்டு அடுத்த நாள் ப்ரேக் ஃபாஸ்ட். அடுத்த நாள் அதே மாவை பிர்ட்ஜில் வைத்து மீண்டும் ஐந்து முந்தைய நாளில் மீதம் வைத்த இதே கறியுடன். மதியம் பாரிக் செட் ஒருநாள், இன்னொருநாள் சரவணபவன் மினி சாப்பாடு.
இன்று மூன்றாவது நாள், என்ன செய்வது என்று யோசிக்கையில் அன்னபூர்ணா இடியாப்பம் தான் முதலில் நினைவில் வந்தது. சட்னி வைக்க படிக்காமல் இருந்து தொலைத்துவிட்டேன், ரொம்ப ஈஸி, ஆனால் முதலில் இரண்டு, மூன்று முறை முயன்று என் மனைவி வைத்த டேஸ்ட் வராததால் நான் விட்டு விட்டேன், அறை நண்பன் ரொம்ப டேஸ்ட்டா வைப்பான்.. சரி என்று நான் அதை கண்டுக்காமல் விட்டுவிட்டேன்.
இன்று இடியாப்பம், ஆஹா சட்னி?? ஆபத்பாந்தவனாய் மாலை உடன் வந்த தஞ்சை நண்பன் முட்டைகறியை ஞாபகப்படுத்தினான்.. இடியாப்பம், முட்டை கறி ஆஹா சூப்பர்னு வந்து சேந்து பண்ணுன ஒரே தப்பு கடைக்கு போகாமல் அப்படியே டிவியில் இங்கிலாண்ட்/அயர்லாந்து பார்த்துக்கொண்டு இருந்தது தான். என்ன நடந்தது ஏன் என்று எல்லோருக்கும் இப்போது தெரிந்திருக்கும், அயர்லாந்து ஜெயித்தது, தக்காளி, இந்தியாவுக்கு டை போட்டிங்கல்ல, அனுபவிங்கடான்னு சந்தோஷம் தாங்கலை.
பின்னர் போய் இடியாப்பம் தேடினால் மதினாவில் ‘எல்லாம் விற்றண்ணா, இனி நாள..‘ என்றார்கள், ஆஹா, என்று அப்படியே அருகில் பார்த்தேன், சிவ்ஸ்டார் தோசை மாவு?? சரி வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.. இன்னைக்கி தோசையுடன் முட்டைகறி.
நாளை வீக் எண்ட், நண்பர்கள் வந்து கவனித்துக்கொள்வார்கள், கவலையில்லை.. ம்ம்ம், முடிந்த வரை சமாளிப்போம்!
அன்புடன், வசந்தா நடேசன்.
டிஸ்கி :-பதிவின் நீளம் கருதி செய்முறை தவிர்த்துள்ளேன், வேண்டுமென்றால் பேச்சிலர் நண்பர்ளுக்கு உதவுவதற்க்காக நான் அதை இன்னொருபதிவில் விளக்க ரெடி.
Tuesday, March 1, 2011
காளீஸ்வரன் கதை.. [3]
திறமைகள் வாய்த்த காளீஸ்வரனுக்கும் கஷ்ட காலம் வந்தது.. வெளிநாடுகளை பொருத்தவரை, யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டுத்தூக்கலாம், எந்த கம்பெனியை எப்போது வேண்டுமானாலும் மூடலாம், அவை அந்த அந்த முதலாளியின் மூடை பொருத்தது. அதுவும் அரபு நாடுகளில் இதுபோன்ற தருணங்கள் அதிகம் வரும். நல்ல நடக்கும் கம்பெனிகளில் திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே வசதி மற்றும் வாய்ப்பு.
காளீஸ்வரன் திறமை உள்ளவன் தான், அவனுக்கு ஏன் என்ற கேள்வி வரலாம். அவன் வேலை பார்த்த நிறுவனத்தை ஒரு நாள் மூடிவிடுவது என்று அதன் உரிமையாளர்கள் முடிவெடுத்தனர். ஏன், எதற்க்கு என்பதை அவனால் விளக்க முடியவில்லை.. பொதுவாய் இந்த நிலை எப்படி வரும் என்பதை நான் பார்த்த, கேள்விப்பட்ட வரை சொல்லிவிடுகிறேன்.
லோக்கல் நபர்களுடன் (ஹபிபிகள்) சேர்ந்தே இங்கே வெளிநாட்டவர்கள் தொழில் தொடங்கமுடியும். அவர்களுக்கு முதலீடு ஏதும் இல்லாமல் 51 சதவீதம் லாபத்தில் பங்கு, வெளிநாட்டவருக்கு 49 சதவீதம் தான். லாபத்தை கணக்கு பார்த்து யாரும் கொடுப்பது இல்லை, மாதம்தோரும் ஸ்பான்சர் பீஸ் என்று குறிப்பிட்ட தொகையை கொடுத்துவிடுவார்கள், பிடி, ஒழி என்று. இல்லையேல் ஃபிரீ சோன் என்று சொல்லப்படுவதில் ஸ்பான்சர் இல்லாமல் தொடங்கலாம், ஆனால் அங்கே எல்லாவற்றிர்க்கும் கட்டணம் அதிகம் (துபாயை பொருத்தவரை).
ஸ்பான்சர் நல்ல அமவுன்ட் வாங்கிக்கொண்டு அந்த நிறுவனத்தின் வங்கிக்கணக்குகளை நடத்தவும் அனுமதி கொடுத்துவிடுவான், கம்பெனியை நிர்வகித்து நடத்துபவனிடம். ஆனாலும் அந்த ஹபிபி தான் அந்த நிறுவனத்துக்கு முழுப்பொருப்பு, அவன் கையெழுத்து இல்லாமல் புது விசா, லைசன்ஸ் ரினீவல் ஏதும் செய்யமுடியாது. அதற்க்கு அரசாங்கத்துக்கு மேலும் பணம் கொடுத்து பெர்மிஷன் வாங்கவேண்டும். நிறைய பேர் இதை செய்வதில்லை..
நடத்தும் நம் நபர்கள் (முக்கியமாய் மலையாளிகள்) முடிந்த வரை லாபம் பார்ப்பார்கள், ஒரு நிலையில் அப்படியே விட்டுவிட்டு ஓடி விடுவார்கள், அவர்களை தேடிப்பிடிப்பது முடியாத காரியம், அவர்கள் இந்த கம்பெனியை வைத்து இன்னும் இரண்டு, மூன்று ஜென்மத்திற்கு சம்பாதித்திருப்பார்கள், பின் அநியாயமாய் நடையைக்கட்டிவிடுவார்கள்.. எல்லா நேஷனாலிட்டியும் இதில் அடக்கம், இருந்தாலும் நம்ம மலையாளிக்கு இதில் திறமை அதிகம் என்பதை இங்கே கண்கூடாக பார்க்கலாம். அரபி ஒதுங்கி விடுவான், எல்லாம் அவன் தான் பொருப்பு என்றாலும், அந்த பருப்பெல்லாம் இங்கே வேகாது, அவர்கள் நாடு இது, இங்கே சட்டங்களும் முதலாளிகளை சார்ந்தே இருக்கும்.
ஓனர் சமயத்தில் அப்பாவியாக இருப்பான், ஆனால் முக்கியமான தருணத்தில் கையில் சிக்கும் பெரும் பணத்தை ஆட்டைய போட்டுக்கொண்டு அதில் வேலைபார்க்கும் நபரே ஓடிவிடுவான், மன்னிக்கவும் இதிலும் மலையாளியின் திறமையை யாரும் மிஞ்சியதாய் தெரியவில்லை.. ஸ்பான்சரும், முதலாளியும் மலங்க, மலங்க விழித்துக்கொண்டிருப்பார்கள் என்ன செய்வது என்று, சில அரபிகளே இதில் ஆடிப்போனது உண்டு, அதனால் தான் இங்கு சட்டங்களும் பெரும்பாலும் அவர்கள் சார்ந்து இருக்கும். கம்பெனியே தடுமாறிவிடும் அளவுக்கு பெரும்பணம் என்றால், கம்பெனி திவாலாவதை தவிர வேறு வழி கிடையாது. வேலைபார்த்தவனுக்கு கிடைக்க வேண்டிய சேமிப்பு, Gratuity எல்லாம் கோவிந்தா தான்.
அடிப்படை தொளிலாளர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதே தெரியாது, நாளை சரியாகிவிடும், நாளை சரியாகிவிடும் என்று மூடிய கதவுகளை தினம் சென்று பார்த்து வருவார்கள்.
இது போன்ற நிலைமைகளில் அந்த அரபியும், ஓனரும் தொழிலாளர்களின் நிலைமையை மனதில் வைத்து, அந்த கம்பெனியில் அதற்க்குமுன் சம்பாதித்த பணத்தை கணக்கு வைத்து, சரி ஊருக்கு செல்ல டிக்கெட் எடுத்து தருகிறேன், செல்கிறாயா என்பார்கள், ஏனென்றால் பிளாக் மார்க் ஆகிவிட்டால் அந்த ஸ்பான்சர் நடத்தும் பிற நிறுவனங்களுக்கும் பல சிக்கல்கள் வந்துவிடும். சிலர் சில சொற்பத்தொகையையும் கொடுப்பார்கள், தொழிலாளர்களின் திறமை மற்றும் மதிப்பு போன்றவற்றை கணக்கிட்டு.
அதுபோல் ஒரு நிலை காளீஸ்வரனுக்கு வந்து தொலைத்தது.. இதில் காளீஸ்வரன் என்ன முடிவெடுத்தான், அதன் பின் என்ன நடந்தது என்பது இன்னொரு நாள்.
அன்புடன், வசந்தா நடேசன்.
காளீஸ்வரன் கதை..[1] [2]
காளீஸ்வரன் திறமை உள்ளவன் தான், அவனுக்கு ஏன் என்ற கேள்வி வரலாம். அவன் வேலை பார்த்த நிறுவனத்தை ஒரு நாள் மூடிவிடுவது என்று அதன் உரிமையாளர்கள் முடிவெடுத்தனர். ஏன், எதற்க்கு என்பதை அவனால் விளக்க முடியவில்லை.. பொதுவாய் இந்த நிலை எப்படி வரும் என்பதை நான் பார்த்த, கேள்விப்பட்ட வரை சொல்லிவிடுகிறேன்.
லோக்கல் நபர்களுடன் (ஹபிபிகள்) சேர்ந்தே இங்கே வெளிநாட்டவர்கள் தொழில் தொடங்கமுடியும். அவர்களுக்கு முதலீடு ஏதும் இல்லாமல் 51 சதவீதம் லாபத்தில் பங்கு, வெளிநாட்டவருக்கு 49 சதவீதம் தான். லாபத்தை கணக்கு பார்த்து யாரும் கொடுப்பது இல்லை, மாதம்தோரும் ஸ்பான்சர் பீஸ் என்று குறிப்பிட்ட தொகையை கொடுத்துவிடுவார்கள், பிடி, ஒழி என்று. இல்லையேல் ஃபிரீ சோன் என்று சொல்லப்படுவதில் ஸ்பான்சர் இல்லாமல் தொடங்கலாம், ஆனால் அங்கே எல்லாவற்றிர்க்கும் கட்டணம் அதிகம் (துபாயை பொருத்தவரை).
ஸ்பான்சர் நல்ல அமவுன்ட் வாங்கிக்கொண்டு அந்த நிறுவனத்தின் வங்கிக்கணக்குகளை நடத்தவும் அனுமதி கொடுத்துவிடுவான், கம்பெனியை நிர்வகித்து நடத்துபவனிடம். ஆனாலும் அந்த ஹபிபி தான் அந்த நிறுவனத்துக்கு முழுப்பொருப்பு, அவன் கையெழுத்து இல்லாமல் புது விசா, லைசன்ஸ் ரினீவல் ஏதும் செய்யமுடியாது. அதற்க்கு அரசாங்கத்துக்கு மேலும் பணம் கொடுத்து பெர்மிஷன் வாங்கவேண்டும். நிறைய பேர் இதை செய்வதில்லை..
நடத்தும் நம் நபர்கள் (முக்கியமாய் மலையாளிகள்) முடிந்த வரை லாபம் பார்ப்பார்கள், ஒரு நிலையில் அப்படியே விட்டுவிட்டு ஓடி விடுவார்கள், அவர்களை தேடிப்பிடிப்பது முடியாத காரியம், அவர்கள் இந்த கம்பெனியை வைத்து இன்னும் இரண்டு, மூன்று ஜென்மத்திற்கு சம்பாதித்திருப்பார்கள், பின் அநியாயமாய் நடையைக்கட்டிவிடுவார்கள்.. எல்லா நேஷனாலிட்டியும் இதில் அடக்கம், இருந்தாலும் நம்ம மலையாளிக்கு இதில் திறமை அதிகம் என்பதை இங்கே கண்கூடாக பார்க்கலாம். அரபி ஒதுங்கி விடுவான், எல்லாம் அவன் தான் பொருப்பு என்றாலும், அந்த பருப்பெல்லாம் இங்கே வேகாது, அவர்கள் நாடு இது, இங்கே சட்டங்களும் முதலாளிகளை சார்ந்தே இருக்கும்.
ஓனர் சமயத்தில் அப்பாவியாக இருப்பான், ஆனால் முக்கியமான தருணத்தில் கையில் சிக்கும் பெரும் பணத்தை ஆட்டைய போட்டுக்கொண்டு அதில் வேலைபார்க்கும் நபரே ஓடிவிடுவான், மன்னிக்கவும் இதிலும் மலையாளியின் திறமையை யாரும் மிஞ்சியதாய் தெரியவில்லை.. ஸ்பான்சரும், முதலாளியும் மலங்க, மலங்க விழித்துக்கொண்டிருப்பார்கள் என்ன செய்வது என்று, சில அரபிகளே இதில் ஆடிப்போனது உண்டு, அதனால் தான் இங்கு சட்டங்களும் பெரும்பாலும் அவர்கள் சார்ந்து இருக்கும். கம்பெனியே தடுமாறிவிடும் அளவுக்கு பெரும்பணம் என்றால், கம்பெனி திவாலாவதை தவிர வேறு வழி கிடையாது. வேலைபார்த்தவனுக்கு கிடைக்க வேண்டிய சேமிப்பு, Gratuity எல்லாம் கோவிந்தா தான்.
அடிப்படை தொளிலாளர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதே தெரியாது, நாளை சரியாகிவிடும், நாளை சரியாகிவிடும் என்று மூடிய கதவுகளை தினம் சென்று பார்த்து வருவார்கள்.
இது போன்ற நிலைமைகளில் அந்த அரபியும், ஓனரும் தொழிலாளர்களின் நிலைமையை மனதில் வைத்து, அந்த கம்பெனியில் அதற்க்குமுன் சம்பாதித்த பணத்தை கணக்கு வைத்து, சரி ஊருக்கு செல்ல டிக்கெட் எடுத்து தருகிறேன், செல்கிறாயா என்பார்கள், ஏனென்றால் பிளாக் மார்க் ஆகிவிட்டால் அந்த ஸ்பான்சர் நடத்தும் பிற நிறுவனங்களுக்கும் பல சிக்கல்கள் வந்துவிடும். சிலர் சில சொற்பத்தொகையையும் கொடுப்பார்கள், தொழிலாளர்களின் திறமை மற்றும் மதிப்பு போன்றவற்றை கணக்கிட்டு.
அதுபோல் ஒரு நிலை காளீஸ்வரனுக்கு வந்து தொலைத்தது.. இதில் காளீஸ்வரன் என்ன முடிவெடுத்தான், அதன் பின் என்ன நடந்தது என்பது இன்னொரு நாள்.
அன்புடன், வசந்தா நடேசன்.
காளீஸ்வரன் கதை..[1] [2]
Thursday, February 24, 2011
டீம் வொர்க் [1]
நான் என் அலுவலகத்தில் சேர்ந்த போது என்னுடைய கம்பெனி கோயிங் கன்சேர்ன் என்றநிலையில் தான் இருந்தது.. சேர்ந்தபோது தெரியாது, சேக்கமுன்னால பேலன்ஸ்ஷீட் லாம் காட்டமாட்டாங்கல்ல. இந்த கம்பெனி அந்த கம்பெனினின்லாம் அப்ப பாக்குற பக்குவமில்லை. ஏதோ ஃப்ரீ விசா கொடுக்றியா சரின்னு சேந்ததுதான்.
நான் விசிட் விசாவில் வந்து வேலை தேடியவன் ஒரு காலத்தில்.. வந்து ஒரு 21 நாளிலேயே எனக்கு 3 கம்பெனிகளில் ஓக்கே ஆனது.. அதில் நான் சம்பளம் குறைவாக இருந்தபோதும் இது போதும் என்று செலக்ட் பண்ணியது தான் நான் இன்றுவரை வேலை செய்யும் இந்த இடம்.
மற்ற இரண்டில் ஒன்றை மலையாளி கம்பெனி என்றதால் மனமில்லை சேர்வதற்க்கு, இன்னொன்று ரொம்ப சில்லரைத்தனமாய் இன்டர்வியூ நடத்தி தேர்ந்தெடுத்தார்கள்.. இந்த நாட்டில் வரி என்பதே கிடையாது, ஆனால் அங்கிருந்த மலையாளி மேனேஜர் (எல்லா எடத்துலயும் அவனுகதான் சார் இங்க) ப்ராபிட் அன்ட் லாஸ் அக்கௌவுன்டை கொடுத்து, நீ இதில் வருமானத்தை குறைத்து எப்படி கணக்கெழுதுவாய் என்றான்?? எனக்கு அது எல்லாம் அத்துபடி என்றாலும், டேய், அது தான் இங்கே தேவையே இல்லையேடா?? எதற்க்கு கேட்கிறாய் என்று கேட்க நினைத்தேன் மனதுக்குள், ஆனாலும் சொன்னேன், இப்படி, இப்டி செய்யலாம் என்று, கருமம் இந்தியால அந்த எழவை தானே செஞ்சிகிட்டு வந்துருக்கோம் இங்க.
அவன் இன்டர்வீயு முடிந்து அவன் அரபியிடம் அரபியில் பேசினான், பேசிமுடித்து இங்க இப்ளவ்தான் சம்பளம் தருவோம் சேருரேன்னா சேந்துக்க, இது இதெல்லாம் கண்டிஷன், (டைம் பாக்க கூடாது, கம்பெனி ரூம்ல தான் தங்கணும், கம்பெனி மெஸ்லதான் சாப்டணும் இப்படி சில.. எல்லாம் அவனுக்கு சைட் வருமானத்துக்கு தான்) என்றான், ஆனால் அதற்க்கு முன்பே நான் இது வேண்டாம் என்ற ஒரு முடிவுக்கு வந்திருந்தேன் என்றாலும் ரொம்ப நன்றிங்க ஐய்யா, நான் போன் பண்ணிட்டு வாரேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன், அன்றைய நிலைமை வேறு.
பின்னர் இந்த கம்பெனியில் சேர்ந்து, எனக்கு முன்ன, பின்ன தெரியாத ஒரு ஐரோப்பிய அக்கவுன்டிங் சாப்ட்வேர் அங்கு?? என்னை இப்போதைய கம்பெனியில் தேர்வு செய்தது, கே பீ எம் ஜி, உலகின் முன்னணி ஆடிட்டிங் நிறுவனம், சேர்ந்து இரண்டொருநாளில் கணக்கு வழக்குகளை படித்துமுடித்து பார்த்தால் அது ஒரு கோயிங் கன்சேர்ன்?? எனக்கு எப்படி இருந்திருக்கும்??
ஆனால் நான் தளரவில்லை, மனதில் ஒரு வெறி இருந்தது, நாமளும் வரணும்டான்னு. அதற்க்கான சூழ்நிலைகளும் இருந்தன, நான் சொல்லவந்ததே அதைத்தான். டீம் வொர்க். இந்த கம்பெனி அப்படி இருந்ததற்க்கு காரணமே அங்கு ஒரு சரியான அக்கவுன்டன்ட் அமையாதது தான், அக்கவுன்டன்ட் மாத்திரமே ஒரு கம்பெனியை சீர்தூக்கிவிட முடியுமா என்றால் அதுவும் முடியாது.
எனக்கு அமைந்தது ஒரு நல்ல டீம்.. நானும் உடன் சேர்ந்து உழைத்தோம்.. நான் சேரும்போது இருந்ததை விட இப்போது சேர்ந்து ஒரு எட்டு வருடங்களில் பல மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளோம். நான் சேர்ந்தபோது வாங்கியதை விட என் சம்பளம் இப்போது கிட்டதட்ட எட்டுமடங்குக்கு மேல் அதிகம்.
இது சாத்தியமானது டீம் வொர்க்கால் தான், எல்லோருக்கும் தெரிந்தது தான், டீம் வொர்க் என்றால் என்னவென்று. எளிதாக சொல்லவேண்டுமென்றால், ஒரு டைரக்டர் படம் எடுப்பது போல் வைத்துக்கொள்ளுங்கள்.. அந்த டைரக்டர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு அந்த ஹீரோவும் முக்கியம், இசையமைப்பாளர் முக்கியம், ஏன் லைட்பாய் வரை முக்கியம் தான் சொல்லப்போனால், கிட்டத்தட்ட அதுபோல்.
இன்னும் விபரமாய் டீம் வொர்க் குறித்து இன்னொரு நாளில்..
அன்புடன், வசந்தா நடேசன்.
நான் விசிட் விசாவில் வந்து வேலை தேடியவன் ஒரு காலத்தில்.. வந்து ஒரு 21 நாளிலேயே எனக்கு 3 கம்பெனிகளில் ஓக்கே ஆனது.. அதில் நான் சம்பளம் குறைவாக இருந்தபோதும் இது போதும் என்று செலக்ட் பண்ணியது தான் நான் இன்றுவரை வேலை செய்யும் இந்த இடம்.
மற்ற இரண்டில் ஒன்றை மலையாளி கம்பெனி என்றதால் மனமில்லை சேர்வதற்க்கு, இன்னொன்று ரொம்ப சில்லரைத்தனமாய் இன்டர்வியூ நடத்தி தேர்ந்தெடுத்தார்கள்.. இந்த நாட்டில் வரி என்பதே கிடையாது, ஆனால் அங்கிருந்த மலையாளி மேனேஜர் (எல்லா எடத்துலயும் அவனுகதான் சார் இங்க) ப்ராபிட் அன்ட் லாஸ் அக்கௌவுன்டை கொடுத்து, நீ இதில் வருமானத்தை குறைத்து எப்படி கணக்கெழுதுவாய் என்றான்?? எனக்கு அது எல்லாம் அத்துபடி என்றாலும், டேய், அது தான் இங்கே தேவையே இல்லையேடா?? எதற்க்கு கேட்கிறாய் என்று கேட்க நினைத்தேன் மனதுக்குள், ஆனாலும் சொன்னேன், இப்படி, இப்டி செய்யலாம் என்று, கருமம் இந்தியால அந்த எழவை தானே செஞ்சிகிட்டு வந்துருக்கோம் இங்க.
அவன் இன்டர்வீயு முடிந்து அவன் அரபியிடம் அரபியில் பேசினான், பேசிமுடித்து இங்க இப்ளவ்தான் சம்பளம் தருவோம் சேருரேன்னா சேந்துக்க, இது இதெல்லாம் கண்டிஷன், (டைம் பாக்க கூடாது, கம்பெனி ரூம்ல தான் தங்கணும், கம்பெனி மெஸ்லதான் சாப்டணும் இப்படி சில.. எல்லாம் அவனுக்கு சைட் வருமானத்துக்கு தான்) என்றான், ஆனால் அதற்க்கு முன்பே நான் இது வேண்டாம் என்ற ஒரு முடிவுக்கு வந்திருந்தேன் என்றாலும் ரொம்ப நன்றிங்க ஐய்யா, நான் போன் பண்ணிட்டு வாரேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன், அன்றைய நிலைமை வேறு.
பின்னர் இந்த கம்பெனியில் சேர்ந்து, எனக்கு முன்ன, பின்ன தெரியாத ஒரு ஐரோப்பிய அக்கவுன்டிங் சாப்ட்வேர் அங்கு?? என்னை இப்போதைய கம்பெனியில் தேர்வு செய்தது, கே பீ எம் ஜி, உலகின் முன்னணி ஆடிட்டிங் நிறுவனம், சேர்ந்து இரண்டொருநாளில் கணக்கு வழக்குகளை படித்துமுடித்து பார்த்தால் அது ஒரு கோயிங் கன்சேர்ன்?? எனக்கு எப்படி இருந்திருக்கும்??
ஆனால் நான் தளரவில்லை, மனதில் ஒரு வெறி இருந்தது, நாமளும் வரணும்டான்னு. அதற்க்கான சூழ்நிலைகளும் இருந்தன, நான் சொல்லவந்ததே அதைத்தான். டீம் வொர்க். இந்த கம்பெனி அப்படி இருந்ததற்க்கு காரணமே அங்கு ஒரு சரியான அக்கவுன்டன்ட் அமையாதது தான், அக்கவுன்டன்ட் மாத்திரமே ஒரு கம்பெனியை சீர்தூக்கிவிட முடியுமா என்றால் அதுவும் முடியாது.
எனக்கு அமைந்தது ஒரு நல்ல டீம்.. நானும் உடன் சேர்ந்து உழைத்தோம்.. நான் சேரும்போது இருந்ததை விட இப்போது சேர்ந்து ஒரு எட்டு வருடங்களில் பல மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளோம். நான் சேர்ந்தபோது வாங்கியதை விட என் சம்பளம் இப்போது கிட்டதட்ட எட்டுமடங்குக்கு மேல் அதிகம்.
இது சாத்தியமானது டீம் வொர்க்கால் தான், எல்லோருக்கும் தெரிந்தது தான், டீம் வொர்க் என்றால் என்னவென்று. எளிதாக சொல்லவேண்டுமென்றால், ஒரு டைரக்டர் படம் எடுப்பது போல் வைத்துக்கொள்ளுங்கள்.. அந்த டைரக்டர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு அந்த ஹீரோவும் முக்கியம், இசையமைப்பாளர் முக்கியம், ஏன் லைட்பாய் வரை முக்கியம் தான் சொல்லப்போனால், கிட்டத்தட்ட அதுபோல்.
இன்னும் விபரமாய் டீம் வொர்க் குறித்து இன்னொரு நாளில்..
அன்புடன், வசந்தா நடேசன்.
Wednesday, February 23, 2011
தனிமை..
என்னுடன் இருக்கும் இரண்டு நபர்களும்
இப்போது விடுமுறையில்..
நான் மட்டும் நாளை முதல் தனியே இங்கு தனிமையில்!
தனிமை எனக்கும் பிடிக்கும் தான்..இல்லையென்று சொல்வதற்க்கில்லை,
இருந்தாலும் வேளை நெருங்க, நெருங்க
கொஞ்சம் உதரல்தான், மறுப்பதற்க்கில்லை..
இப்படியாய் இதற்குமுன் ஆனதில்லை எப்போதும்,
வேண்டுமென்றே இருவரும் போகவில்லை இப்போதும்..
ஒருவர் நீண்டுபோன மகள் திருமணம், இனிதாய் நடத்திடவும்,
இன்னொருவன் புதிய மகன் வரவை,
கையில் அள்ளிவைத்து ரசிப்பதற்க்கும்.
வெளிநாட்டு விகிதங்கள் புறிகிறதா இப்போது?
பதினைந்தே நாட்கள் தான், இருந்தாலும்
பதருகிறாள் மனைவி - ஒரு விசா கொடு வருகிறேன் என்றாள்??
என்னடா இது, எழுத்துக்கடைக்கே சோதனையாவென்று..
எனக்கு தனிமை பிடிக்கும் என்று உதார்விட்ட உடனேயே..
அதுதான் 'தெரியுமே' என்றவளும், கொஞ்(சி)சம் அடங்கினாள்!
காலை, மதியம் என்று தினம் இருவேளையுடன்,
இனி ‘ராத்திரியும்“ பேச வேண்டுமாம்,
ஏதோ அவள் ரசனைக்கு ஒரு புது உத்தரவு.
உதரலுடன் நானும் ‘ம்ம்‘ என்றேன், அதைத்தானே செய்யமுடியும்?
கைக்கெட்டும் தூரத்தில் பதிவுலகம் உண்டெனெக்கு
திக்கெட்டும் புகழ் பரப்பும் தூங்காத புற உலகம்!
மாலை முழுவதுமே அதுதானே துணையிப்பம்,
காலை வரும் வரைக்கும் ‘பொட்டி தட்ட‘ நான் ரெடிதான்.
என்னென்ன செய்யவேண்டும் - மனதில்
திட்டமிட்டு வைத்துவிட்டேன், பழக்க தோஷம்!
இனி அறைக்குள் இருக்கும் நேரம் கொஞ்சம் குறைத்திடணும்,
வெளியே விட்டு விட்ட வேலைகளை
ஒண்ணொண்ணாய் தொடங்கிடணும்.
முடிந்தவரை மாலை வாக்கிங் தொடங்கிடணும் நாளைமுதல்,
ஹோட்டலில் தான் உணவு இனி, நண்பர்கள் வரும் வரைக்கும்!
இரண்டு மணி நேரம் இப்படி செலவழித்தால்
தனிமை கொஞ்சம் குறையும் தானே??
விட்டு விட்ட ‘தியான‘ தோஷம்
தொட்டுப்பார்க்கும் முடிவும் உண்டு..
நண்பர்கள் கலகலப்பில் தியானத்தை தொலைத்துவிட்டேன்
விட்டதை பிடிப்பதற்கு கடவுளாய் கொடுத்ததுவோ?
கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பித்ததில்லை இந்த பதிவு. 15 நாள் தனிமை கிடைக்கப்போகிறது இத்தனை நாட்களில் இப்போது தான். 12, 13 பேருடன் 2 பெட்ரூம் ஹாலில் ஒரு காலத்தில் முன்னர் தங்கிய போது, ஏங்கியதுண்டு தனிமைக்காக.
இப்போது 2 பேர் மட்டும் உடன் இருக்கிறார்கள், இதோ தனிமை அருகில் வரும்போதே மனதுக்குள் ஒரு புரியாத ஒரு உதரல் வந்தது உண்மை.
சரி என்னென்ன செய்யலாம் என்று யோசித்து வைத்திருந்தேன். எல்லாவற்றையும் நம்ம டைரியில் எழுதிப்புடலாம் என்று ஆரம்பித்த பதிவுதான். ஆனால் தலைப்பை எழுதியதும் கொஞ்சம் கவித்துவமாய் தெரிந்தது (நம்ம குத்தம் இல்ல சார்)
முயன்று பார்ப்போம் என்று சுரத்தே இல்லாமல் ஆரம்பித்தேன். இதை யாரேனும் ரசித்திருந்தால் அது நம் தமிழின் உள்ளடங்கிய அற்புதம் தான். இதில் எனக்கு பங்கேதும் இல்லை.
சத்தியமா, ஏதோ சின்ன வயதில், பன்னெண்டாப்பு படிக்கும் போதும், கல்லூரி நாட்களிலும் நான் கொஞ்சம் கவிதை மழை கொட்டியதுண்டு. அதை எல்லாம் ஆவணம் ஆக்கிப்புடணும்டான்னு கழிந்த முறை ஊருக்கு போனபோது தேடிப்பார்த்தேன், என் பழைய பொட்டியில், என் மனைவிக்கும் தெரியும் பழைய கிறுக்கல்கள் பற்றி. அது என்ன எழவுக்கு இப்ப? என்று என் ஆர்வத்தை பார்த்து பயந்து, அவளும் தேடுவது போல் நடித்தாளா அல்லது தேடினாளா? தெரியாது, பதிவுலகம் குடுத்து வைச்சது அவ்ளோவ் தான், வேற என்னத்த சொல்ல? எல்லாம் போய்விட்டது, ஒன்றும் கிடைக்க வில்லை.
சரி, அன்றைய காதல் கவிதைகைள், அதை இப்ப நாம எழுதியும் பிரயோஜனம் இல்ல என்று விட்டு விட்டேன், ஆனா பாருங்க, தலை எழுத்த மாத்த முடியுமா?? அன்றைய காதல் கவிதைகள் இப்ப அனுபவக்கவிதையா கொட்டணும்னு விதி(?) இருந்தா யாரால மாத்த முடியும்!
அன்புடன், வசந்தா நடேசன்.
இப்போது விடுமுறையில்..
நான் மட்டும் நாளை முதல் தனியே இங்கு தனிமையில்!
தனிமை எனக்கும் பிடிக்கும் தான்..இல்லையென்று சொல்வதற்க்கில்லை,
இருந்தாலும் வேளை நெருங்க, நெருங்க
கொஞ்சம் உதரல்தான், மறுப்பதற்க்கில்லை..
இப்படியாய் இதற்குமுன் ஆனதில்லை எப்போதும்,
வேண்டுமென்றே இருவரும் போகவில்லை இப்போதும்..
ஒருவர் நீண்டுபோன மகள் திருமணம், இனிதாய் நடத்திடவும்,
இன்னொருவன் புதிய மகன் வரவை,
கையில் அள்ளிவைத்து ரசிப்பதற்க்கும்.
வெளிநாட்டு விகிதங்கள் புறிகிறதா இப்போது?
பதினைந்தே நாட்கள் தான், இருந்தாலும்
பதருகிறாள் மனைவி - ஒரு விசா கொடு வருகிறேன் என்றாள்??
என்னடா இது, எழுத்துக்கடைக்கே சோதனையாவென்று..
எனக்கு தனிமை பிடிக்கும் என்று உதார்விட்ட உடனேயே..
அதுதான் 'தெரியுமே' என்றவளும், கொஞ்(சி)சம் அடங்கினாள்!
காலை, மதியம் என்று தினம் இருவேளையுடன்,
இனி ‘ராத்திரியும்“ பேச வேண்டுமாம்,
ஏதோ அவள் ரசனைக்கு ஒரு புது உத்தரவு.
உதரலுடன் நானும் ‘ம்ம்‘ என்றேன், அதைத்தானே செய்யமுடியும்?
கைக்கெட்டும் தூரத்தில் பதிவுலகம் உண்டெனெக்கு
திக்கெட்டும் புகழ் பரப்பும் தூங்காத புற உலகம்!
மாலை முழுவதுமே அதுதானே துணையிப்பம்,
காலை வரும் வரைக்கும் ‘பொட்டி தட்ட‘ நான் ரெடிதான்.
என்னென்ன செய்யவேண்டும் - மனதில்
திட்டமிட்டு வைத்துவிட்டேன், பழக்க தோஷம்!
இனி அறைக்குள் இருக்கும் நேரம் கொஞ்சம் குறைத்திடணும்,
வெளியே விட்டு விட்ட வேலைகளை
ஒண்ணொண்ணாய் தொடங்கிடணும்.
முடிந்தவரை மாலை வாக்கிங் தொடங்கிடணும் நாளைமுதல்,
ஹோட்டலில் தான் உணவு இனி, நண்பர்கள் வரும் வரைக்கும்!
இரண்டு மணி நேரம் இப்படி செலவழித்தால்
தனிமை கொஞ்சம் குறையும் தானே??
விட்டு விட்ட ‘தியான‘ தோஷம்
தொட்டுப்பார்க்கும் முடிவும் உண்டு..
நண்பர்கள் கலகலப்பில் தியானத்தை தொலைத்துவிட்டேன்
விட்டதை பிடிப்பதற்கு கடவுளாய் கொடுத்ததுவோ?
கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பித்ததில்லை இந்த பதிவு. 15 நாள் தனிமை கிடைக்கப்போகிறது இத்தனை நாட்களில் இப்போது தான். 12, 13 பேருடன் 2 பெட்ரூம் ஹாலில் ஒரு காலத்தில் முன்னர் தங்கிய போது, ஏங்கியதுண்டு தனிமைக்காக.
இப்போது 2 பேர் மட்டும் உடன் இருக்கிறார்கள், இதோ தனிமை அருகில் வரும்போதே மனதுக்குள் ஒரு புரியாத ஒரு உதரல் வந்தது உண்மை.
சரி என்னென்ன செய்யலாம் என்று யோசித்து வைத்திருந்தேன். எல்லாவற்றையும் நம்ம டைரியில் எழுதிப்புடலாம் என்று ஆரம்பித்த பதிவுதான். ஆனால் தலைப்பை எழுதியதும் கொஞ்சம் கவித்துவமாய் தெரிந்தது (நம்ம குத்தம் இல்ல சார்)
முயன்று பார்ப்போம் என்று சுரத்தே இல்லாமல் ஆரம்பித்தேன். இதை யாரேனும் ரசித்திருந்தால் அது நம் தமிழின் உள்ளடங்கிய அற்புதம் தான். இதில் எனக்கு பங்கேதும் இல்லை.
சத்தியமா, ஏதோ சின்ன வயதில், பன்னெண்டாப்பு படிக்கும் போதும், கல்லூரி நாட்களிலும் நான் கொஞ்சம் கவிதை மழை கொட்டியதுண்டு. அதை எல்லாம் ஆவணம் ஆக்கிப்புடணும்டான்னு கழிந்த முறை ஊருக்கு போனபோது தேடிப்பார்த்தேன், என் பழைய பொட்டியில், என் மனைவிக்கும் தெரியும் பழைய கிறுக்கல்கள் பற்றி. அது என்ன எழவுக்கு இப்ப? என்று என் ஆர்வத்தை பார்த்து பயந்து, அவளும் தேடுவது போல் நடித்தாளா அல்லது தேடினாளா? தெரியாது, பதிவுலகம் குடுத்து வைச்சது அவ்ளோவ் தான், வேற என்னத்த சொல்ல? எல்லாம் போய்விட்டது, ஒன்றும் கிடைக்க வில்லை.
சரி, அன்றைய காதல் கவிதைகைள், அதை இப்ப நாம எழுதியும் பிரயோஜனம் இல்ல என்று விட்டு விட்டேன், ஆனா பாருங்க, தலை எழுத்த மாத்த முடியுமா?? அன்றைய காதல் கவிதைகள் இப்ப அனுபவக்கவிதையா கொட்டணும்னு விதி(?) இருந்தா யாரால மாத்த முடியும்!
அன்புடன், வசந்தா நடேசன்.
Thursday, February 17, 2011
போட்டு தாக்குறாளுங்கண்ணா!
தலைப்பு எழுதும் போதே தவறிப்போய் இது பப்ளிஷ் ஆகிவிட்டது, சத்தியமாய் என் தவறல்ல..
சரி நேரா பாயிண்டுக்கு வருகிறேன்.
தினமும் காலை ஒரு ஐந்து நிமிடம் மதியம் ஒரு 10 பத்து நிமிடம் குடும்பத்திடம் பேசிவிடும் வழக்கம் எனக்கு. எடிஸலாட்லயா, டூ லயா ன்னு கேக்காதிங்க, இது வேற சமாச்சாரம்.
இன்னும் ஒரு வாரத்தில் உடனிருக்கும் ஒருவன் ஊருக்கு போகிறான். சரி அவன் வரும்போது இது வாங்கி கொடுத்துவிடு, அது வாங்கிக்கொடுத்து விடு என்பதெல்லாம் வழக்கமான தொல்லைகள் தான்.
ஆனால் அந்த தொல்லைகளை எப்படி நாங்கள் சமாளிக்கிறோம் அல்லது ஊரிலிருக்கும் சொந்தங்கள் எப்படி அனலைஸ் பண்ணி சரியாய் எங்களை பயன் படுத்துகிறார்கள் என்பது தான் இந்த பதிவின் கதை.
இதை சொல்லும் போது என் குடும்பத்தை பற்றியும் கொஞ்சம் சொல்லவேண்டும் உங்கள் புறிதலுக்காக. நானும் என் பெற்றோர்களும் சேர்ந்து ஒரே குடும்பமாய் வாழ்கிறோம் இன்று வரை, என் மனைவியின் சாமர்த்தியமும் இதில் உண்டு. அக்கா பக்கத்து தெருவில் வசிக்கிறாள்.. எனக்கு ஒரு பையன் இப்போது பிளஸ் டூ வில், ஒரு மகள் சிக்ஸ்த் ஸ்டேண்டர்டு. பதிவுலகில் என் பெயர் என் பெற்றோர்களின் கூப்பிடு பெயர்களே, அவர்களின் சர்டிபிகேட் பெயர் வேறு.. இந்த கட்டுரைக்கு இது போதும் என நினைக்கிறேன்.
இந்த முறை முதல் கோரிக்கை என் பையனுக்கு ஒரு வாட்ச் வேண்டுமென்று வந்தது. டைட்டனின் ஃபாஸ்ட் ட்ராக், மாடல் பெயர் எல்லாம் சொல்லி வாங்கிக்கொடுத்து விடுங்கள் என்று மனைவி (மகன் பேச/கேட்க வில்லை.. நோட் பண்ணிக்கொள்ளவும்) கொஞ்ச நாளாய் நச்சரிப்பு.
நானும் சொன்ன அந்த வாரத்திலேயே டைட்டனின் ஃபாஸ்ட் ட்ராக் வாங்கி வைத்து விட்டேன் ஊர் செல்பவனிடம் கொடுப்பதற்க்காக. அவன் பர்ச்சேஸ் செய்யும் போது அவனே தான் வாங்கி வந்தான், எனக்கு பொட்டி தட்டும் வேலை இருப்பதால். என் எண்ணம், அவனும் பர்ச்சேஸ் செய்யும் போது நம்மால் ஓவர் லக்கேஜ் ஆகிவிடக் கூடாது என்பதுதான்.
ஒவ்வொரு நாளும் கேட்கும்போது இன்னும் வாங்கவில்லை என்றே சொல்லிக்கொண்டிருந்தேன் இதன் அரசியல் கொஞ்சம் அத்துப்படி ஆகியிருந்த காரணத்தால். விட்டிருந்தால் உடனிருப்பவன் ஊர்போகும் வரை இதைத்தான் சொல்லியிருப்பேன்.
இன்று என் மகனுடன் பேசும் ஒரு சந்தர்ப்பத்தில் அவன் டாடி வாங்கினீங்களா எனும் போது பொய் சொல்ல மனம் வரவில்லை. ம்ம், வாங்கிருக்கென், டைட்டனின் ஃபாஸ்ட் ட்ராக் ஆனால் மாடல் எல்லாம் எனக்கு தெரியாது, ... அண்ணன் தான் வாங்கிட்டு வந்தான், அவனைக்கேட்டுக்க என்றேன்.
உடனே என் மனைவி போனை வாங்கி என்ன வாங்கிட்டீங்களா, எனட்ட வாங்கல ன்னு சொன்னீங்க?? சரி மகளுக்கும் வாட்ச் வேண்டுமாம், என் வாட்ச்சும் மாற்ற வேண்டியதுதான் இப்ப, எங்களுக்கும் வாங்கிக்கொடுத்து விடுங்க என்றாள்.
நான் இதை எதிர்பார்த்துதான் இத்தனை நாளும் சொல்லாமல் இருந்தேன். இன்னும் இரண்டு மாதத்தில் எல்லோருமே இரண்டு மாதம் பள்ளி விடுமுறைக்கு இங்கே வந்துவிடுவார்கள், ‘நான் துபாய்ல குடும்பஸ்தன்ங்க‘ என்று ஒரு பதிவு எழுதிவிட்டு நான் 2 மாதம் உங்களிடம் லீவு வாங்கிச்செல்லவேண்டும்.
நான் சொல்லவந்தது குடும்ப அரசியல் குறித்து, என் மகள் எனக்கு ரொம்ப செல்லம், அதற்க்காக மகன் செல்லமில்லை என அர்த்தமில்லை. அவன் இன்னும் நேரடியாய் எதுவும் கேட்கமாட்டான், எல்லாம் அம்மா வழியாய் தான். ஆனால் மகள், டாடி, நான் டூர் போறேன், போறதா, வேண்டாமான்னு சொல்லுங்க, போறதுன்னா எனக்கு இவ்வளவு வேணும் என்று நேரடியாய் என்னிடம் கேட்டு விடுவாள், என் மனைவி பின்னாலிருந்து அலர, அலர.. அவள் அது குறித்து அறிந்திருக்கவே மாட்டாள் அதுவரை?
இன்னும் ரெண்டு மாதத்தில் இங்கே வரப்போகும் இவர்கள், இங்கு வந்து வகை, தொகை தெரியாமல் கண்ணில் கண்டதையெல்லாம் வாங்கி நான் எக்ஸ்ட்ரா லக்கேஜ் கட்டித்தான் அவர்களை ஒருவழியாய் அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் பதிவுலகிற்க்கு வரவேண்டும். ஆனால் அவர்கள் தேவைகளை எப்படி நிறைவேற்றுகிறார்கள் பாருங்கள்.
எனக்கு வாட்ச் வேண்டும் வாங்கி கொடுத்து விடுங்க என்று சொல்வதில் கூச்சம் என் மனைவிக்கு, மகள் கண்டு கொள்ளவே மாட்டாள், அவள் தேவையை நிறைவேற்றிக்கொள்ள அவளுக்கு தெரியும்?? இருவரும் சேர்ந்து என் மகனை வைத்து கேம் ஆடிவிட்டு கடைசியில் எனக்கும் வேணும், எனக்கும் வேணும் என்று கத்தியதை புரிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
வேறு வழி, இனி நான் இன்னும் இரண்டு வாட்ச் வாங்கவேண்டும்.. ம்ம்ம்ங்ங்ங்.
அன்புடன், வசந்தா நடேசன்.
சரி நேரா பாயிண்டுக்கு வருகிறேன்.
தினமும் காலை ஒரு ஐந்து நிமிடம் மதியம் ஒரு 10 பத்து நிமிடம் குடும்பத்திடம் பேசிவிடும் வழக்கம் எனக்கு. எடிஸலாட்லயா, டூ லயா ன்னு கேக்காதிங்க, இது வேற சமாச்சாரம்.
இன்னும் ஒரு வாரத்தில் உடனிருக்கும் ஒருவன் ஊருக்கு போகிறான். சரி அவன் வரும்போது இது வாங்கி கொடுத்துவிடு, அது வாங்கிக்கொடுத்து விடு என்பதெல்லாம் வழக்கமான தொல்லைகள் தான்.
ஆனால் அந்த தொல்லைகளை எப்படி நாங்கள் சமாளிக்கிறோம் அல்லது ஊரிலிருக்கும் சொந்தங்கள் எப்படி அனலைஸ் பண்ணி சரியாய் எங்களை பயன் படுத்துகிறார்கள் என்பது தான் இந்த பதிவின் கதை.
இதை சொல்லும் போது என் குடும்பத்தை பற்றியும் கொஞ்சம் சொல்லவேண்டும் உங்கள் புறிதலுக்காக. நானும் என் பெற்றோர்களும் சேர்ந்து ஒரே குடும்பமாய் வாழ்கிறோம் இன்று வரை, என் மனைவியின் சாமர்த்தியமும் இதில் உண்டு. அக்கா பக்கத்து தெருவில் வசிக்கிறாள்.. எனக்கு ஒரு பையன் இப்போது பிளஸ் டூ வில், ஒரு மகள் சிக்ஸ்த் ஸ்டேண்டர்டு. பதிவுலகில் என் பெயர் என் பெற்றோர்களின் கூப்பிடு பெயர்களே, அவர்களின் சர்டிபிகேட் பெயர் வேறு.. இந்த கட்டுரைக்கு இது போதும் என நினைக்கிறேன்.
இந்த முறை முதல் கோரிக்கை என் பையனுக்கு ஒரு வாட்ச் வேண்டுமென்று வந்தது. டைட்டனின் ஃபாஸ்ட் ட்ராக், மாடல் பெயர் எல்லாம் சொல்லி வாங்கிக்கொடுத்து விடுங்கள் என்று மனைவி (மகன் பேச/கேட்க வில்லை.. நோட் பண்ணிக்கொள்ளவும்) கொஞ்ச நாளாய் நச்சரிப்பு.
நானும் சொன்ன அந்த வாரத்திலேயே டைட்டனின் ஃபாஸ்ட் ட்ராக் வாங்கி வைத்து விட்டேன் ஊர் செல்பவனிடம் கொடுப்பதற்க்காக. அவன் பர்ச்சேஸ் செய்யும் போது அவனே தான் வாங்கி வந்தான், எனக்கு பொட்டி தட்டும் வேலை இருப்பதால். என் எண்ணம், அவனும் பர்ச்சேஸ் செய்யும் போது நம்மால் ஓவர் லக்கேஜ் ஆகிவிடக் கூடாது என்பதுதான்.
ஒவ்வொரு நாளும் கேட்கும்போது இன்னும் வாங்கவில்லை என்றே சொல்லிக்கொண்டிருந்தேன் இதன் அரசியல் கொஞ்சம் அத்துப்படி ஆகியிருந்த காரணத்தால். விட்டிருந்தால் உடனிருப்பவன் ஊர்போகும் வரை இதைத்தான் சொல்லியிருப்பேன்.
இன்று என் மகனுடன் பேசும் ஒரு சந்தர்ப்பத்தில் அவன் டாடி வாங்கினீங்களா எனும் போது பொய் சொல்ல மனம் வரவில்லை. ம்ம், வாங்கிருக்கென், டைட்டனின் ஃபாஸ்ட் ட்ராக் ஆனால் மாடல் எல்லாம் எனக்கு தெரியாது, ... அண்ணன் தான் வாங்கிட்டு வந்தான், அவனைக்கேட்டுக்க என்றேன்.
உடனே என் மனைவி போனை வாங்கி என்ன வாங்கிட்டீங்களா, எனட்ட வாங்கல ன்னு சொன்னீங்க?? சரி மகளுக்கும் வாட்ச் வேண்டுமாம், என் வாட்ச்சும் மாற்ற வேண்டியதுதான் இப்ப, எங்களுக்கும் வாங்கிக்கொடுத்து விடுங்க என்றாள்.
நான் இதை எதிர்பார்த்துதான் இத்தனை நாளும் சொல்லாமல் இருந்தேன். இன்னும் இரண்டு மாதத்தில் எல்லோருமே இரண்டு மாதம் பள்ளி விடுமுறைக்கு இங்கே வந்துவிடுவார்கள், ‘நான் துபாய்ல குடும்பஸ்தன்ங்க‘ என்று ஒரு பதிவு எழுதிவிட்டு நான் 2 மாதம் உங்களிடம் லீவு வாங்கிச்செல்லவேண்டும்.
நான் சொல்லவந்தது குடும்ப அரசியல் குறித்து, என் மகள் எனக்கு ரொம்ப செல்லம், அதற்க்காக மகன் செல்லமில்லை என அர்த்தமில்லை. அவன் இன்னும் நேரடியாய் எதுவும் கேட்கமாட்டான், எல்லாம் அம்மா வழியாய் தான். ஆனால் மகள், டாடி, நான் டூர் போறேன், போறதா, வேண்டாமான்னு சொல்லுங்க, போறதுன்னா எனக்கு இவ்வளவு வேணும் என்று நேரடியாய் என்னிடம் கேட்டு விடுவாள், என் மனைவி பின்னாலிருந்து அலர, அலர.. அவள் அது குறித்து அறிந்திருக்கவே மாட்டாள் அதுவரை?
இன்னும் ரெண்டு மாதத்தில் இங்கே வரப்போகும் இவர்கள், இங்கு வந்து வகை, தொகை தெரியாமல் கண்ணில் கண்டதையெல்லாம் வாங்கி நான் எக்ஸ்ட்ரா லக்கேஜ் கட்டித்தான் அவர்களை ஒருவழியாய் அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் பதிவுலகிற்க்கு வரவேண்டும். ஆனால் அவர்கள் தேவைகளை எப்படி நிறைவேற்றுகிறார்கள் பாருங்கள்.
எனக்கு வாட்ச் வேண்டும் வாங்கி கொடுத்து விடுங்க என்று சொல்வதில் கூச்சம் என் மனைவிக்கு, மகள் கண்டு கொள்ளவே மாட்டாள், அவள் தேவையை நிறைவேற்றிக்கொள்ள அவளுக்கு தெரியும்?? இருவரும் சேர்ந்து என் மகனை வைத்து கேம் ஆடிவிட்டு கடைசியில் எனக்கும் வேணும், எனக்கும் வேணும் என்று கத்தியதை புரிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
வேறு வழி, இனி நான் இன்னும் இரண்டு வாட்ச் வாங்கவேண்டும்.. ம்ம்ம்ங்ங்ங்.
அன்புடன், வசந்தா நடேசன்.
Sunday, February 13, 2011
காளீஸ்வரன் கதை..[2]
//துபாய் வந்ததும் தான் ‘ரிலீஸ்‘ கிடைச்சுது சார்..//
ஒரு வழியாய் துபாய் வந்து தனியாய் ஒரு அறையில் சேர்ந்ததும், ஊரிலிருந்து வரும்போது முடிவெடுத்து வந்த இனி ட்ரிங்ஸ் வாழ்க்கையில் ‘வேண்டவே வேண்டாம்‘ என்ற முதல் முடிவை, முக்கிய முடிவை சந்தர்ப்பவசத்தால் தனியாய் வந்த அன்றே கைவிடவேண்டியதாகிப்போனது.
என் மனைவி இப்போதும் யார் சென்று சொன்னாலும் நம்பமாட்டாள், நான் ட்ரிங்ஸ் பண்ணுகிறேன் என்பதை என்றால் நான் எவ்வளவு நல்லவன் என்று பார்த்துக்கொள்ளுங்கள். அதுவுமில்லாமல் சொல்பவர்கள் நிலைமை சற்று சங்கடமாகலாம், எஸ் எம் எஸ் பண்ணிவிடுவேன் என்று மிரட்டும் நண்பர்கள் கவனிக்கவும்.. (ஹி.. ஹி..)
இங்குள்ள வாழ்க்கை முறையில் ஏனோ அதுவும் ஒன்றாய்ப்போனது?? வெள்ளையர்களுடன் கம்பெனி பார்ட்டிகளுக்கு போகும் போது நான் குடிக்கமாட்டேன் என்றால் அப்படியே மேலும், கீழும் பார்ப்பார்கள்?? எந்த ஊரிலிருந்து வந்த ஜந்து இதுவென்று..(தமிழனுக்கு இதுவிஷயத்தில் ஒரு மரியாதைக்குறைவு வரலாமா?? நீங்களே சொல்லுங்க சார்??)
குடி என்பது அதன் எல்லையில் இருந்தால் குடிப்பழக்கம் தவறில்லைதான் என்னைப்பொருத்தவரை. குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடக்கும் அளவுக்கு இதுவரை குடித்ததில்லை, இத்தனை சுதந்திரங்கள் இருந்தும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
சரி, இதை ஒரு குடிபுராணமாக்காமல், கதைக்கு வருவோம்..
காளீஸ்வரன், ஒரு அற்புத திறமை வாய்ந்த தமிழ் இளைஞன் என்று சொல்லலாம், ஊரில் ஐ.டி படித்துவிட்டு இங்கே ஏதோ அப்போது பிரபலமாய் இருந்த கொரியன் கம்பெனியில் எலக்ட்ரிகல் துரையில் வேலைபார்த்தான். அவனுடைய அப்பா ஊரில் பெரிய சென்டரிங் கான்ட்ராக்டர் என்று சொல்லியிருக்கிறான்.
பொதுவாகவே நம்ஊரில் எலக்ட்ரிகல் வேலை பார்ப்பதற்க்கும் இங்கே உள்ளவைகளுக்கும் பெருத்த வித்தியாசம் உண்டு, என் வேலையைப்போல் உலகெங்கும் பொதுவாய் உள்வருவனவற்றை பற்றெழுதி, வெளிசெல்வதுதை வரவெழுதும் சொத்துக்கணக்கு வேலையல்ல அது. நான் ஏதோபதிவில் சொன்னது போல் எந்தவேலைக்கும் அதற்க்கான தனித்திறமை வேண்டும் என்பது காளீஸ்வரன் வேலைசெய்வதை பார்த்தால் தெரியும்.
இங்கே எல்லாமே லேட்டஸ்ட், உலகில் எந்த நாட்டில் எப்போது புதிய ஒரு டெக்னாலஜி வந்திருந்தாலும் முதலில் அறிமுகம் ஆவது துபாயில்தான். இங்கே வாழும் பல நாடுகளைச் சேர்ந்த மனிதர்கள் அதனை பயன்படுத்தி, யார்யாருக்கு இந்தவகை பிடிக்கிறது என்ற சர்வேக்களெல்லாம் எடுத்து, இந்த புராடக்ட் சக்ஸஸ் ஆகுமா ஆகாதா, எந்தெந்த நாடுகளில் சக்ஸஸ் ஆகும் என்பதை பல முன்னணி எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ராணிக்ஸ் நிறுவனங்கள் கணிப்பது துபாய் மார்க்கெட்டிங் முடிவுகளைப் பொருத்தே அமையும்.
காளீஸ்வரன் இது அத்தனையும் வந்த சிலமாதங்களிலேயே கற்று சிறந்த எலக்ட்ரீஸியன் என்று பெயர் வாங்கி அவனோடு வந்த அத்தனை நபர்களிலும் முன்னணியில் இருந்தான்.
இந்த ஊரில் மனித திறமைகளுக்கு கிடைக்கும் வரவேற்பு அபரிமிதமானது, திறமையிருப்பவர்களை அந்ததந்த கம்பெனிகள் அதற்க்கு தருந்தபடி கவனித்து, ஊதிய உயர்வு வந்து ஆறுமாதத்திலேயே வாங்கியிருக்கும் பல தமிழர்கள் இருக்கிறார்கள்.. (என்னையும் சேர்த்து.. ஹி.. ஹி..)
மேனேஜ்மென்ட்டில் இருப்பவர்கள் அதனை கவனித்துக் கொண்டே இருப்பார்கள், அவர்களுக்கு வேலை நடக்கவேண்டும், வேறு எந்த பாலிடிக்ஸ்ம் அதிகம் இல்லாத நாடு. ஏனென்றால் திறமையானவர்கள் இந்த நாட்டில் இல்லை.. இந்த நாட்டின் உள்ளுர் ஜனத்தொகை வெரும் 2 லட்சம் தான் என்று எதிலோ படித்த ஞாபகம். அவர்களுக்கும் வேலைசெய்யவேண்டிய அவசியம் இல்லை.. இந்தியா மற்றும் பல நாடுகளிலிருந்து முட்டிமோதி வருபவர்களில் திறமையானவர்கள் பிழைத்துக்கொள்வார்கள். ஏனென்றால் இங்கே திறமையை நிரூபிக்க வாய்ப்புகள் அதிகம்.. அங்கே 110 கோடியுடன் போட்டியிடவேண்டும் என்றால் இங்கோ ஒரு இருபது லட்சம் பேருக்குள் தான் போட்டி என்றால் நீங்கள் ஒருவாறு யூகிக்கமுடியும்.
நம் கதாநாயகன் நல்ல கருகரு தமிழன், அப்போது வயது 24 அல்லது 25 இருக்கும், நல்ல களையான முகம், நாங்கள் அவனுக்கு வைத்த பட்டப்பெயரே அழகன் என்பதுதான்.
சரியாக முடிவெடுத்து வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்பது போல்தான் வார்த்தைகள் விழும். ஒரு எலக்ட்ரிகல் பேனலில் ப்ராப்ளம் என்று தெரிந்து பார்த்தவுடன் அந்த பிரச்னையை கிரகிக்க தெரிந்த திறமைசாலி.. நான் எலக்ட்ரீசியன் அல்ல அதனால் அதனை இன்னும் சிறப்பாக விளக்கமுடியவில்லை..
வேறு லேபர்களையெல்லாம் ஒரு கூண்டில் அடைத்தது போல் ஏ.ஸி இல்லாத பஸ்ஸில் அழைத்துப்போகும் அவன் கம்பெனி நிர்வாகம் இவனை அழைத்துச்செல்ல பக்கத்தில் தங்கியிருந்த எஞ்சினியரை பணித்திருந்ததென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
எஞ்சினியர் வந்து காத்துக்கொண்டிருப்பார் இவன் அவன் சவுகரியம் போல் எழுந்து குளித்துமுடித்து கிளம்பிப்போவான், திறமைக்கு கிடைத்த மரியாதை அது. நான் அவன் அறையில் சேர்ந்தபோது அவன் துபாய் வந்து இரண்டு வருடம் ஆகியிருந்தது.
நான் வந்த புதிது, காலை ஆறுமணிக்கு எழுந்து, குளித்து இரண்டு பஸ் மாறி 8 மணிக்குள் நான் வேலைசெய்யும் இடம் செல்லவேண்டும். வந்த புதிதாகையால் நண்பர்ளும் அப்போது யாரும் இல்லை காளீஸ்வரனையும், துரையண்ணனையும் தவிர்த்து. இங்கே பொதுவாகவே அவரவர் வேலையை அவரவர் கவனித்துக்கொள்ளவேண்டும், காய்ச்சல் வந்து விட்டது,வேறு ஏதோ பிரச்னை என்றால் அவரவரே கவனித்துக்கொள்ள வேண்டும், ஏனென்றால் அவரவருக்கு அன்றன்றைக்கு அவரவர் வேலைகளே தலைக்கு மேலே இருக்கும்.
நண்பனுக்கு காய்ச்சல், சரி ஒரு நாள் லீவு போட்டு ஹாஸ்பிட்டல் போவோம் என்றால் அங்கே வேலை போய்விடும்?? அதனை இங்கே வேலை செய்பவர்கள் எல்லோருமே உணர்ந்திருப்பார்கள், வெகு அத்தியாவசிய தேவை, உயிர் போகும் அவசரம் என்றால் மட்டுமே இங்கே லீவு சமாச்சாரமெல்லாம். அவரவர்களை கவனித்துக்கொள்ள நன்கு பழகிக்கொண்டோம்.
காலையில் இங்குள்ள அறைகளில் ஆளுக்கு அரைமணிநேரம் அளந்து பாத்ரூம் டைம் வைத்திருப்பார்கள், அரைமணிக்குள் எல்லாம் முடித்து வந்துவிடவேண்டும், லேட்டானால் கதவை டொக்குவார்கள், அவரவர் வேலை அவரவருக்கு.. துரையண்ணன் ஜெபல் அலி என்று ஒரு ப்ரீசோன் இருக்கிறது துபாய் நகரிலிருந்து ஒரு 70 கிலோமீட்டர் தொலைவில், ட்ராபிக் குறைவென்றால் அரைமணி நேரத்தில் காரில் அல்லது பஸ்ஸில் பறந்து விடலாம் இங்கே.
ஆனால் துபாய் அப்போது கன்ஸ்ட்ரக்ஷனில் அங்கிங்கெனாதபடி எங்கும் பரந்து விரிந்து கொண்டிருந்தது,, அமெரிக்காவின் மன்ஹாட்டனை மனதில் வைத்து ஒரு ரியல் எஸ்டேட் சொர்க்கபுரியாக துடித்து முன்னேறிக் கொண்டிருந்த வேளை அது. பீக் அவரில் சாலையில் போக்குவரத்து நெருக்கடி அப்படி பிரபலம் அப்போது. துரையண்ணண் ஆறு மணிக்கு கிளம்பினால் தான் 8 மணிக்கு அலுவலகத்தில் இருக்கலாம், அதனால் அவர் டைம் அப்போது 5.30 முதல் 6.00 வரை.
இப்போது ட்ராபிக் குறைவென்றால் 15 நிமிடத்திலும் கொஞ்சம் ஓவர் என்றால் 25 நிமடத்திலும் நான் என் அலுவலகம் போய்விடுவேன் அத்தனை சிக்னல்களையும் கடந்து, ஆனால் அப்போது குறைந்த பட்சம் 50 நிமிடங்கள் ஆகும் இதே 13 கிலோமீட்டரை கடக்க என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நான் வந்தபுதிது அப்போது, என்னிடம் கார் இல்லை, மெட்ரோ வந்திருக்கவில்லை, பஸ்தான் ஒரே வழி..
ஏதோ அந்த திறமையானவன் பாக்யம், அடுத்த அரைமணி நேரத்தை காளீஸ்வரன் என் அவசரம் கருதி விட்டுக்கொடுத்திருந்தான்.
இது இன்னொரு லேட் பிக்அப் இன்றைய சில சொந்த வேலைகள் காரணமாய், நாளை கொஞ்சம் அலுவல்கள் அதிகம், சில ரிப்போர்ட்களை நாளை மறுநாள் தந்துவிடுவேன் என்று அல்ரெடி ப்ராமிஸ் பண்ணியிருப்பதால், நாளை எப்ப வீட்டுக்கு வருவேன்னே தெரியலை சார்??. கண்டிப்பாய் நாளை மறுநாளுக்குள் வர முயற்ச்சிப்பேன்.. நீங்க எழுதுவதற்க்கெல்லாம் இடைஇடையே வந்து சந்துல சிந்து பாடுவது போல் கமென்ட் போட்டுவிடுவேன் அது வேறு விஷயம்!!
அன்புடன், வசந்தா நடேசன்.
காளீஸ்வரன் கதை..[1] [3]
ஒரு வழியாய் துபாய் வந்து தனியாய் ஒரு அறையில் சேர்ந்ததும், ஊரிலிருந்து வரும்போது முடிவெடுத்து வந்த இனி ட்ரிங்ஸ் வாழ்க்கையில் ‘வேண்டவே வேண்டாம்‘ என்ற முதல் முடிவை, முக்கிய முடிவை சந்தர்ப்பவசத்தால் தனியாய் வந்த அன்றே கைவிடவேண்டியதாகிப்போனது.
என் மனைவி இப்போதும் யார் சென்று சொன்னாலும் நம்பமாட்டாள், நான் ட்ரிங்ஸ் பண்ணுகிறேன் என்பதை என்றால் நான் எவ்வளவு நல்லவன் என்று பார்த்துக்கொள்ளுங்கள். அதுவுமில்லாமல் சொல்பவர்கள் நிலைமை சற்று சங்கடமாகலாம், எஸ் எம் எஸ் பண்ணிவிடுவேன் என்று மிரட்டும் நண்பர்கள் கவனிக்கவும்.. (ஹி.. ஹி..)
இங்குள்ள வாழ்க்கை முறையில் ஏனோ அதுவும் ஒன்றாய்ப்போனது?? வெள்ளையர்களுடன் கம்பெனி பார்ட்டிகளுக்கு போகும் போது நான் குடிக்கமாட்டேன் என்றால் அப்படியே மேலும், கீழும் பார்ப்பார்கள்?? எந்த ஊரிலிருந்து வந்த ஜந்து இதுவென்று..(தமிழனுக்கு இதுவிஷயத்தில் ஒரு மரியாதைக்குறைவு வரலாமா?? நீங்களே சொல்லுங்க சார்??)
குடி என்பது அதன் எல்லையில் இருந்தால் குடிப்பழக்கம் தவறில்லைதான் என்னைப்பொருத்தவரை. குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடக்கும் அளவுக்கு இதுவரை குடித்ததில்லை, இத்தனை சுதந்திரங்கள் இருந்தும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
சரி, இதை ஒரு குடிபுராணமாக்காமல், கதைக்கு வருவோம்..
காளீஸ்வரன், ஒரு அற்புத திறமை வாய்ந்த தமிழ் இளைஞன் என்று சொல்லலாம், ஊரில் ஐ.டி படித்துவிட்டு இங்கே ஏதோ அப்போது பிரபலமாய் இருந்த கொரியன் கம்பெனியில் எலக்ட்ரிகல் துரையில் வேலைபார்த்தான். அவனுடைய அப்பா ஊரில் பெரிய சென்டரிங் கான்ட்ராக்டர் என்று சொல்லியிருக்கிறான்.
பொதுவாகவே நம்ஊரில் எலக்ட்ரிகல் வேலை பார்ப்பதற்க்கும் இங்கே உள்ளவைகளுக்கும் பெருத்த வித்தியாசம் உண்டு, என் வேலையைப்போல் உலகெங்கும் பொதுவாய் உள்வருவனவற்றை பற்றெழுதி, வெளிசெல்வதுதை வரவெழுதும் சொத்துக்கணக்கு வேலையல்ல அது. நான் ஏதோபதிவில் சொன்னது போல் எந்தவேலைக்கும் அதற்க்கான தனித்திறமை வேண்டும் என்பது காளீஸ்வரன் வேலைசெய்வதை பார்த்தால் தெரியும்.
இங்கே எல்லாமே லேட்டஸ்ட், உலகில் எந்த நாட்டில் எப்போது புதிய ஒரு டெக்னாலஜி வந்திருந்தாலும் முதலில் அறிமுகம் ஆவது துபாயில்தான். இங்கே வாழும் பல நாடுகளைச் சேர்ந்த மனிதர்கள் அதனை பயன்படுத்தி, யார்யாருக்கு இந்தவகை பிடிக்கிறது என்ற சர்வேக்களெல்லாம் எடுத்து, இந்த புராடக்ட் சக்ஸஸ் ஆகுமா ஆகாதா, எந்தெந்த நாடுகளில் சக்ஸஸ் ஆகும் என்பதை பல முன்னணி எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ராணிக்ஸ் நிறுவனங்கள் கணிப்பது துபாய் மார்க்கெட்டிங் முடிவுகளைப் பொருத்தே அமையும்.
காளீஸ்வரன் இது அத்தனையும் வந்த சிலமாதங்களிலேயே கற்று சிறந்த எலக்ட்ரீஸியன் என்று பெயர் வாங்கி அவனோடு வந்த அத்தனை நபர்களிலும் முன்னணியில் இருந்தான்.
இந்த ஊரில் மனித திறமைகளுக்கு கிடைக்கும் வரவேற்பு அபரிமிதமானது, திறமையிருப்பவர்களை அந்ததந்த கம்பெனிகள் அதற்க்கு தருந்தபடி கவனித்து, ஊதிய உயர்வு வந்து ஆறுமாதத்திலேயே வாங்கியிருக்கும் பல தமிழர்கள் இருக்கிறார்கள்.. (என்னையும் சேர்த்து.. ஹி.. ஹி..)
மேனேஜ்மென்ட்டில் இருப்பவர்கள் அதனை கவனித்துக் கொண்டே இருப்பார்கள், அவர்களுக்கு வேலை நடக்கவேண்டும், வேறு எந்த பாலிடிக்ஸ்ம் அதிகம் இல்லாத நாடு. ஏனென்றால் திறமையானவர்கள் இந்த நாட்டில் இல்லை.. இந்த நாட்டின் உள்ளுர் ஜனத்தொகை வெரும் 2 லட்சம் தான் என்று எதிலோ படித்த ஞாபகம். அவர்களுக்கும் வேலைசெய்யவேண்டிய அவசியம் இல்லை.. இந்தியா மற்றும் பல நாடுகளிலிருந்து முட்டிமோதி வருபவர்களில் திறமையானவர்கள் பிழைத்துக்கொள்வார்கள். ஏனென்றால் இங்கே திறமையை நிரூபிக்க வாய்ப்புகள் அதிகம்.. அங்கே 110 கோடியுடன் போட்டியிடவேண்டும் என்றால் இங்கோ ஒரு இருபது லட்சம் பேருக்குள் தான் போட்டி என்றால் நீங்கள் ஒருவாறு யூகிக்கமுடியும்.
நம் கதாநாயகன் நல்ல கருகரு தமிழன், அப்போது வயது 24 அல்லது 25 இருக்கும், நல்ல களையான முகம், நாங்கள் அவனுக்கு வைத்த பட்டப்பெயரே அழகன் என்பதுதான்.
சரியாக முடிவெடுத்து வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்பது போல்தான் வார்த்தைகள் விழும். ஒரு எலக்ட்ரிகல் பேனலில் ப்ராப்ளம் என்று தெரிந்து பார்த்தவுடன் அந்த பிரச்னையை கிரகிக்க தெரிந்த திறமைசாலி.. நான் எலக்ட்ரீசியன் அல்ல அதனால் அதனை இன்னும் சிறப்பாக விளக்கமுடியவில்லை..
வேறு லேபர்களையெல்லாம் ஒரு கூண்டில் அடைத்தது போல் ஏ.ஸி இல்லாத பஸ்ஸில் அழைத்துப்போகும் அவன் கம்பெனி நிர்வாகம் இவனை அழைத்துச்செல்ல பக்கத்தில் தங்கியிருந்த எஞ்சினியரை பணித்திருந்ததென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
எஞ்சினியர் வந்து காத்துக்கொண்டிருப்பார் இவன் அவன் சவுகரியம் போல் எழுந்து குளித்துமுடித்து கிளம்பிப்போவான், திறமைக்கு கிடைத்த மரியாதை அது. நான் அவன் அறையில் சேர்ந்தபோது அவன் துபாய் வந்து இரண்டு வருடம் ஆகியிருந்தது.
நான் வந்த புதிது, காலை ஆறுமணிக்கு எழுந்து, குளித்து இரண்டு பஸ் மாறி 8 மணிக்குள் நான் வேலைசெய்யும் இடம் செல்லவேண்டும். வந்த புதிதாகையால் நண்பர்ளும் அப்போது யாரும் இல்லை காளீஸ்வரனையும், துரையண்ணனையும் தவிர்த்து. இங்கே பொதுவாகவே அவரவர் வேலையை அவரவர் கவனித்துக்கொள்ளவேண்டும், காய்ச்சல் வந்து விட்டது,வேறு ஏதோ பிரச்னை என்றால் அவரவரே கவனித்துக்கொள்ள வேண்டும், ஏனென்றால் அவரவருக்கு அன்றன்றைக்கு அவரவர் வேலைகளே தலைக்கு மேலே இருக்கும்.
நண்பனுக்கு காய்ச்சல், சரி ஒரு நாள் லீவு போட்டு ஹாஸ்பிட்டல் போவோம் என்றால் அங்கே வேலை போய்விடும்?? அதனை இங்கே வேலை செய்பவர்கள் எல்லோருமே உணர்ந்திருப்பார்கள், வெகு அத்தியாவசிய தேவை, உயிர் போகும் அவசரம் என்றால் மட்டுமே இங்கே லீவு சமாச்சாரமெல்லாம். அவரவர்களை கவனித்துக்கொள்ள நன்கு பழகிக்கொண்டோம்.
காலையில் இங்குள்ள அறைகளில் ஆளுக்கு அரைமணிநேரம் அளந்து பாத்ரூம் டைம் வைத்திருப்பார்கள், அரைமணிக்குள் எல்லாம் முடித்து வந்துவிடவேண்டும், லேட்டானால் கதவை டொக்குவார்கள், அவரவர் வேலை அவரவருக்கு.. துரையண்ணன் ஜெபல் அலி என்று ஒரு ப்ரீசோன் இருக்கிறது துபாய் நகரிலிருந்து ஒரு 70 கிலோமீட்டர் தொலைவில், ட்ராபிக் குறைவென்றால் அரைமணி நேரத்தில் காரில் அல்லது பஸ்ஸில் பறந்து விடலாம் இங்கே.
ஆனால் துபாய் அப்போது கன்ஸ்ட்ரக்ஷனில் அங்கிங்கெனாதபடி எங்கும் பரந்து விரிந்து கொண்டிருந்தது,, அமெரிக்காவின் மன்ஹாட்டனை மனதில் வைத்து ஒரு ரியல் எஸ்டேட் சொர்க்கபுரியாக துடித்து முன்னேறிக் கொண்டிருந்த வேளை அது. பீக் அவரில் சாலையில் போக்குவரத்து நெருக்கடி அப்படி பிரபலம் அப்போது. துரையண்ணண் ஆறு மணிக்கு கிளம்பினால் தான் 8 மணிக்கு அலுவலகத்தில் இருக்கலாம், அதனால் அவர் டைம் அப்போது 5.30 முதல் 6.00 வரை.
இப்போது ட்ராபிக் குறைவென்றால் 15 நிமிடத்திலும் கொஞ்சம் ஓவர் என்றால் 25 நிமடத்திலும் நான் என் அலுவலகம் போய்விடுவேன் அத்தனை சிக்னல்களையும் கடந்து, ஆனால் அப்போது குறைந்த பட்சம் 50 நிமிடங்கள் ஆகும் இதே 13 கிலோமீட்டரை கடக்க என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நான் வந்தபுதிது அப்போது, என்னிடம் கார் இல்லை, மெட்ரோ வந்திருக்கவில்லை, பஸ்தான் ஒரே வழி..
ஏதோ அந்த திறமையானவன் பாக்யம், அடுத்த அரைமணி நேரத்தை காளீஸ்வரன் என் அவசரம் கருதி விட்டுக்கொடுத்திருந்தான்.
இது இன்னொரு லேட் பிக்அப் இன்றைய சில சொந்த வேலைகள் காரணமாய், நாளை கொஞ்சம் அலுவல்கள் அதிகம், சில ரிப்போர்ட்களை நாளை மறுநாள் தந்துவிடுவேன் என்று அல்ரெடி ப்ராமிஸ் பண்ணியிருப்பதால், நாளை எப்ப வீட்டுக்கு வருவேன்னே தெரியலை சார்??. கண்டிப்பாய் நாளை மறுநாளுக்குள் வர முயற்ச்சிப்பேன்.. நீங்க எழுதுவதற்க்கெல்லாம் இடைஇடையே வந்து சந்துல சிந்து பாடுவது போல் கமென்ட் போட்டுவிடுவேன் அது வேறு விஷயம்!!
அன்புடன், வசந்தா நடேசன்.
காளீஸ்வரன் கதை..[1] [3]
Tuesday, February 8, 2011
காளீஸ்வரன் கதை..[1]
வணக்கம், இது ஒரு புதிய முயற்ச்சி.. ஒரு முறை முன்பே சொல்லியிருக்கிறேன், துபாயில் எப்படி வாழலாம், எப்படி வாழக்கூடாது என்பதைப்பற்றி பின்னர் எழுதுவேன் என்று. எப்படி வாழலாம் என்பதை நிறைய படித்திருப்போம் நாம் அதைப்பற்றி பின்னர் பார்க்கலாம், எப்படி வாழக்கூடாது என்பதை இனி சொல்லவருபவை ஓரளவுக்கு விளங்க வைக்கும் என நம்கிறேன். கொஞ்சம் சுயசொறிதலும் வரக்கூடும் இது பெரும்பாலும் என் வாழ்வில் கடந்து போன சம்பவங்கள் குறித்து எழுதப்போவதால். இனி காளீஸ்வரன் கதைக்குள் நுழைவோம்.
துபாயில் நான் வந்து இறங்கியதும் என் சொந்த பந்தங்களின் வீட்டில்தான் ஒரு இருபது நாட்கள் வரை தங்கி இருந்தேன். வந்து இருபது நாளிலேயே எனக்கு நான் இன்று வரை வேலை செய்யும் இடத்தில் வேலை கிடைத்துவிட்டது. பின்னர் வந்த ஒரு சுப நாளிகையில் நல்லதற்க்கோ கெட்டதற்க்கோ என்னை தனியே இருக்கச்சொல்லி கழற்றிவிட்டன என் சொந்தபந்தங்கள். அவர்களும் பாசக்காரப்பய புள்ளைகளாகத்தான் இருந்தார்கள் என்னைப்போல் ஏழையாக இருந்த என் சிறுவயது காலங்களில், பின்னர் துபாய் வந்து சம்பாதித்து வசதி, வாய்ப்புகள் வந்தபின்பு பாசம் குறைந்துவிட்டது போலும், சரி சொல்லவந்த கதையை பார்ப்போம்.
அன்று பெட்ஸ்பேஸ் வாழ்க்கை ஆரப்பித்த துவக்க காலம். நான் இருக்க இடம் தேடிக்கொண்டிருந்தேன், அப்போது துபாய் காலவட்டத்தின் அரைபகுதியை தாண்டி மேல் நோக்கி ஏறிக்கொண்டிருந்த காலம். ஆண்டுக்கு, ஆண்டு வளர்ச்சி என்று வட்டத்தின் உயரத்தை நோக்கியே போய்க்கொண்டிருந்த காலம், நம் ஊர் வேலையற்ற இளைஞர்களின் கனவுதேசம். 2009ம் ஆண்டின் கடைசி காலாண்டில் நடந்ததை யாரிடம் அப்போது சொல்லியிருந்தாலும், ‘போடாங்கொய்யாலே‘ ன்னு நம்ப ஆளில்லாத நேரங்கள்.
நான் வந்து இறங்கிய பர்துபாயிலேயே நான் இருக்க/படுக்க இடம் தேடிக்கொண்டிருந்த போது அறிமுகமானவர்கள் தான் காளீஸ்வரனும் (உண்மைப்பெயரே), துரையண்ணனும் (கற்பனை பெயர்). இங்கே பெட்ஸ்பேஸ் இருக்கிறது என்று பிட்நோட்டீஸ் அடித்து முக்கியமான சாலை ஓரங்களில் ஒட்டியிருப்பார்கள் அவரவர் மொபைல் நம்பருடன். சில பல கண்டீஷன்களும் இருக்கும். ‘தமிழ் முஸ்லீம்கள் மட்டும்‘ ‘தென்னிந்தியர்களுக்கு மட்டும்‘ ‘வட இந்தியர்கள் மட்டும்‘ இப்படி பல இருக்கும்.
நான் புதிதாக வந்து இறங்கியிருந்ததால் இந்த அரசியல் எல்லாம் அப்போது தெரியவில்லை, பின்னர் அதற்க்கான காரணங்களை தெரிந்து கொண்டேன், முஸ்லீம்கள் அவர்களுக்கான கடுமையான ஒருமாத நோண்பு காலங்களில் இந்துக்களும் அவர்களுடன் சேர்ந்து இருந்தால் அவர்கள் முன் சாப்பிடுவது அநாகரீகமாக இருக்கும், நம்ம ஆளுங்க சாப்பிட மட்டுமா செய்வார்கள், பாட்டில், சிகரட் என்று இஷ்ட்டப்படி வாழ்க்கைதானே இங்கே.
அந்த சிக்கல்களில் இருந்து தப்புவதற்க்கே பிட்நோட்டீஸ்கள் அவரவர் தேவைகளுக்கு தகுந்தது போல் இருக்கும். இந்துக்கள் அவரவர் பெயரைப்போட்டிருப்பார்கள். நானும் ஒரு பிட்நோட்டீஸில் பார்த்த காளீஸ்வரன், துரை என்ற பெயர்களைப்பார்த்து சரிடா, நம்மள இவுகளாவது சேத்துக்கிறாங்களா பாப்போம்னு போன் செய்தேன்.
நம் கதாநாயகன், காளீஸ்வரன் தான் போனை எடுத்து வாங்க சார், 375 மாத வாடகை, ஒருமாச அட்வான்ஸ். இங்கதான் பர்துபாய் மீயூசியம் பக்கத்துல வந்து பாத்துக்குங்க என்றான்.
போய்பார்த்ததில் அது ஒரு பழைய கட்டிடத்தில் ஒரு 10க்கு 10 ரூம், அட்டாச்டு பாத்ரூம். அதில் அவர்கள் ஏற்கெனவே இருகட்டில்கள் போட்டிருந்தார்கள், அது அவர்கள் இருவருக்கும், ‘நானு‘ என்றபோது ‘நீங்க தான் கட்டில் வாக்கிக்கிரணும் என்றார்கள். அவர்கள் சொன்ன ரூம் மொத்த வாடகைக்கு மூன்று பேருக்கு அது கட்டுபடியாகாது, நாலுபேர் இருந்தாக வேண்டும். கேட்டபோது நீங்கள் பாதிகாசு போட்டு ஒரு பங்கர் கட்டில்(கீழும்/மேலும் இருவர் படுக்கவேண்டும், எனக்கு கீழ்பகுதிதான் வேண்டும் என்று அவசரமாய் ரிசர்வ் செய்தேன். இடம் கிடைப்பது அப்போது குதிரைக்கொம்பு) வாங்கிக்கொள்ளுங்கள் மேலே ஆள் வந்ததும் நாங்கள் அவரிடம் பாதி காசு வாங்கிக்கொள்வோம் என்றார்கள்.
காளீஸ்வரன் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவன், துரையண்ணன் கோவை. காளீஸ்வரனுக்கு என்னைவிட பத்து வயது கம்மி, துரையண்ணன் என்னைவிட பத்து வயது அதிகம். அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த ரூமை எடுத்திருந்தார்கள்.
சரி என்று அட்வான்ஸ் கொடுத்து புக் பண்ணி வியாழக்கிழமை பெட்டியுடன் வருவதாய் சொல்லிவிட்டு வந்தேன.
வியாழக்கிழமை பெட்டியுடன் சென்றபோது அங்கே அவர்கள் வீக்எண்ட் துவங்கி இருந்தார்கள், என்னைக்கண்டதும் அவசரமாய் சரக்குகளை கட்டிலுக்கு அடியில் தள்ளிக்கொண்டு ‘வாங்க, வாங்க‘ என்றனர்.
நானும் ரொம்ப நல்லவன் இல்ல, கல்லூரியிலேயே மற்றவர்கள் குடிக்கும் போது மூடியில் ஊற்றிக்கொடுப்பார்கள், அதை குடித்துவிட்டு அழும்பு பண்ணியவன் தான். பின்னர் கல்யாணம் ஆவது வரை கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து அது தொடர்ந்தது, அதனால் தான் எனக்கு 27லியே கல்யாணம் நடந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள்.. (நம்மள திருத்தருதுக்காமா..) கல்யாணத்துக்கு பின், ‘பிச்சுபுடுவேன் பிச்சி‘ன்னதும் விட்டுவிட்டு, பொண்டாட்டி ஊருக்கு போயிட்டான்னு (சாதாரணமா போவான்னா நினைக்கறீங்க, எனக்கு சாப்பாடு கஷ்டம் ஆகிவிடுமாம்) ஆனிக்கொரு முறை, ஆவணிக்கொரு முறை வாய்ப்பு கிடைத்தால் குடிப்பேன், இல்லையென்றால் ‘விதியேன்னு‘ 9 ஆண்டுகளாக போய்க்கொண்டிருந்தேன்.
துபாய் வந்ததும் தான் ‘ரிலீஸ்‘ கிடைச்சுது சார்..
இது இன்றைக்கு முடியப்போகும் கதை அல்ல கண்டிப்பாய், இன்று ஆபிஸ்விட்டு வரும்போதே ஏழு தாண்டிவிட்டது, இதுவே லேட் பிக்அப். நாளை வருகிறேனே..
அன்புடன், வசந்தா நடேசன்.
காளீஸ்வரன் கதை..[2]
துபாயில் நான் வந்து இறங்கியதும் என் சொந்த பந்தங்களின் வீட்டில்தான் ஒரு இருபது நாட்கள் வரை தங்கி இருந்தேன். வந்து இருபது நாளிலேயே எனக்கு நான் இன்று வரை வேலை செய்யும் இடத்தில் வேலை கிடைத்துவிட்டது. பின்னர் வந்த ஒரு சுப நாளிகையில் நல்லதற்க்கோ கெட்டதற்க்கோ என்னை தனியே இருக்கச்சொல்லி கழற்றிவிட்டன என் சொந்தபந்தங்கள். அவர்களும் பாசக்காரப்பய புள்ளைகளாகத்தான் இருந்தார்கள் என்னைப்போல் ஏழையாக இருந்த என் சிறுவயது காலங்களில், பின்னர் துபாய் வந்து சம்பாதித்து வசதி, வாய்ப்புகள் வந்தபின்பு பாசம் குறைந்துவிட்டது போலும், சரி சொல்லவந்த கதையை பார்ப்போம்.
அன்று பெட்ஸ்பேஸ் வாழ்க்கை ஆரப்பித்த துவக்க காலம். நான் இருக்க இடம் தேடிக்கொண்டிருந்தேன், அப்போது துபாய் காலவட்டத்தின் அரைபகுதியை தாண்டி மேல் நோக்கி ஏறிக்கொண்டிருந்த காலம். ஆண்டுக்கு, ஆண்டு வளர்ச்சி என்று வட்டத்தின் உயரத்தை நோக்கியே போய்க்கொண்டிருந்த காலம், நம் ஊர் வேலையற்ற இளைஞர்களின் கனவுதேசம். 2009ம் ஆண்டின் கடைசி காலாண்டில் நடந்ததை யாரிடம் அப்போது சொல்லியிருந்தாலும், ‘போடாங்கொய்யாலே‘ ன்னு நம்ப ஆளில்லாத நேரங்கள்.
நான் வந்து இறங்கிய பர்துபாயிலேயே நான் இருக்க/படுக்க இடம் தேடிக்கொண்டிருந்த போது அறிமுகமானவர்கள் தான் காளீஸ்வரனும் (உண்மைப்பெயரே), துரையண்ணனும் (கற்பனை பெயர்). இங்கே பெட்ஸ்பேஸ் இருக்கிறது என்று பிட்நோட்டீஸ் அடித்து முக்கியமான சாலை ஓரங்களில் ஒட்டியிருப்பார்கள் அவரவர் மொபைல் நம்பருடன். சில பல கண்டீஷன்களும் இருக்கும். ‘தமிழ் முஸ்லீம்கள் மட்டும்‘ ‘தென்னிந்தியர்களுக்கு மட்டும்‘ ‘வட இந்தியர்கள் மட்டும்‘ இப்படி பல இருக்கும்.
நான் புதிதாக வந்து இறங்கியிருந்ததால் இந்த அரசியல் எல்லாம் அப்போது தெரியவில்லை, பின்னர் அதற்க்கான காரணங்களை தெரிந்து கொண்டேன், முஸ்லீம்கள் அவர்களுக்கான கடுமையான ஒருமாத நோண்பு காலங்களில் இந்துக்களும் அவர்களுடன் சேர்ந்து இருந்தால் அவர்கள் முன் சாப்பிடுவது அநாகரீகமாக இருக்கும், நம்ம ஆளுங்க சாப்பிட மட்டுமா செய்வார்கள், பாட்டில், சிகரட் என்று இஷ்ட்டப்படி வாழ்க்கைதானே இங்கே.
அந்த சிக்கல்களில் இருந்து தப்புவதற்க்கே பிட்நோட்டீஸ்கள் அவரவர் தேவைகளுக்கு தகுந்தது போல் இருக்கும். இந்துக்கள் அவரவர் பெயரைப்போட்டிருப்பார்கள். நானும் ஒரு பிட்நோட்டீஸில் பார்த்த காளீஸ்வரன், துரை என்ற பெயர்களைப்பார்த்து சரிடா, நம்மள இவுகளாவது சேத்துக்கிறாங்களா பாப்போம்னு போன் செய்தேன்.
நம் கதாநாயகன், காளீஸ்வரன் தான் போனை எடுத்து வாங்க சார், 375 மாத வாடகை, ஒருமாச அட்வான்ஸ். இங்கதான் பர்துபாய் மீயூசியம் பக்கத்துல வந்து பாத்துக்குங்க என்றான்.
போய்பார்த்ததில் அது ஒரு பழைய கட்டிடத்தில் ஒரு 10க்கு 10 ரூம், அட்டாச்டு பாத்ரூம். அதில் அவர்கள் ஏற்கெனவே இருகட்டில்கள் போட்டிருந்தார்கள், அது அவர்கள் இருவருக்கும், ‘நானு‘ என்றபோது ‘நீங்க தான் கட்டில் வாக்கிக்கிரணும் என்றார்கள். அவர்கள் சொன்ன ரூம் மொத்த வாடகைக்கு மூன்று பேருக்கு அது கட்டுபடியாகாது, நாலுபேர் இருந்தாக வேண்டும். கேட்டபோது நீங்கள் பாதிகாசு போட்டு ஒரு பங்கர் கட்டில்(கீழும்/மேலும் இருவர் படுக்கவேண்டும், எனக்கு கீழ்பகுதிதான் வேண்டும் என்று அவசரமாய் ரிசர்வ் செய்தேன். இடம் கிடைப்பது அப்போது குதிரைக்கொம்பு) வாங்கிக்கொள்ளுங்கள் மேலே ஆள் வந்ததும் நாங்கள் அவரிடம் பாதி காசு வாங்கிக்கொள்வோம் என்றார்கள்.
காளீஸ்வரன் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவன், துரையண்ணன் கோவை. காளீஸ்வரனுக்கு என்னைவிட பத்து வயது கம்மி, துரையண்ணன் என்னைவிட பத்து வயது அதிகம். அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த ரூமை எடுத்திருந்தார்கள்.
சரி என்று அட்வான்ஸ் கொடுத்து புக் பண்ணி வியாழக்கிழமை பெட்டியுடன் வருவதாய் சொல்லிவிட்டு வந்தேன.
வியாழக்கிழமை பெட்டியுடன் சென்றபோது அங்கே அவர்கள் வீக்எண்ட் துவங்கி இருந்தார்கள், என்னைக்கண்டதும் அவசரமாய் சரக்குகளை கட்டிலுக்கு அடியில் தள்ளிக்கொண்டு ‘வாங்க, வாங்க‘ என்றனர்.
நானும் ரொம்ப நல்லவன் இல்ல, கல்லூரியிலேயே மற்றவர்கள் குடிக்கும் போது மூடியில் ஊற்றிக்கொடுப்பார்கள், அதை குடித்துவிட்டு அழும்பு பண்ணியவன் தான். பின்னர் கல்யாணம் ஆவது வரை கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து அது தொடர்ந்தது, அதனால் தான் எனக்கு 27லியே கல்யாணம் நடந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள்.. (நம்மள திருத்தருதுக்காமா..) கல்யாணத்துக்கு பின், ‘பிச்சுபுடுவேன் பிச்சி‘ன்னதும் விட்டுவிட்டு, பொண்டாட்டி ஊருக்கு போயிட்டான்னு (சாதாரணமா போவான்னா நினைக்கறீங்க, எனக்கு சாப்பாடு கஷ்டம் ஆகிவிடுமாம்) ஆனிக்கொரு முறை, ஆவணிக்கொரு முறை வாய்ப்பு கிடைத்தால் குடிப்பேன், இல்லையென்றால் ‘விதியேன்னு‘ 9 ஆண்டுகளாக போய்க்கொண்டிருந்தேன்.
துபாய் வந்ததும் தான் ‘ரிலீஸ்‘ கிடைச்சுது சார்..
இது இன்றைக்கு முடியப்போகும் கதை அல்ல கண்டிப்பாய், இன்று ஆபிஸ்விட்டு வரும்போதே ஏழு தாண்டிவிட்டது, இதுவே லேட் பிக்அப். நாளை வருகிறேனே..
அன்புடன், வசந்தா நடேசன்.
காளீஸ்வரன் கதை..[2]
Sunday, January 30, 2011
பாஸ்போர்ட்டை பாத்துக்குங்க எசமான்!
வீட்டிற்க்கு வந்தும் கொஞ்சம் சொந்தவேலைகள் தொடர்வதால் இனி இந்த வாரம் கொஞ்சம் இதுபோல் சில மொக்கைகள் தான்.. தாங்கிக்கொள்ளுங்கள் நண்பர்களே.
கீழ்வரப்போவது வெளிநாடுகளில் வாழ்பவர்கள் கண்டிப்பாய் தெரிந்திருக்கவேண்டியது. எப்டில்லாம் ஏமாத்துரனுக பாருங்க சார்? இது கொஞ்சநாள் முன்பு வந்த ஈமெயில், பதிவு எழுதப்போவதை உத்தேசித்து பதுக்கி வைத்திருந்தது. இன்னும் கொஞ்சம் கைவசம் உள்ளது, இன்று இது மட்டும்.. ஒரு நாளைக்கு ஒரு மொக்கை போராதோ? ஆங்கிலத்தில் வந்ததை அப்படியே கொடுத்துள்ளேன்! ஸ்பெல்லிங் மிஸ்டேக், கிராமர் மிஸ்டேக்லாம் பாக்கலீங்ணா..
=============================================
Be Careful At the Indian Airports,
This is a well-organized conspiracy by Indian Immigration, Police,
Customs and Air India staff with networking at all the Indian
International Airports. Be watchful whenever you give your passport to
Immigration/ Customs/Air India staff.. The passport can be easily
tampered and can create trouble to you. They have found easy way of
making money from NRIs.
This is the way it works. At the time of the passenger's departure, if
the passenger is not looking at the officer while he is stamping the
exit, the officer very cleverly tears away one of the page from the
passport. When the passenger leaves the immigration counter, the case
is reported on his computer terminal with full details. Now all over
India they have got full details of the passenger with Red Flag
flashing on the Passport number
entered by the departure immigration officer. They have made their
money by doing above.
On arrival next time, he is interrogated. Subject to the passenger's
period of stay abroad, his income and standing etc., the price to get
rid of the problem is settled by the Police and Immigration people. If
someone argues, his future is spoiled because there are always some
innocent fellows who think the honesty is the basis of getting justice
in India ... Which is wrong...Please advise every passenger to be
careful at the airport.
Whenever they hand over the passport to the counters of Air India , or
immigration or the customs, they must be vigilant, should not remove
eyes from the passport even if the officer in front tries to divert
their attention. Also, please pass this information to all friends,
media men and important politicians.
Every month 20-30 cases are happening all over India to rob the NRIs
the minute he lands. Similar case has happened with Armco¢s Arifuddin.
He was traveling with his family. They had six passports. They got the
visa of America and decided to go via Hyderabad from Jeddah. They
reached Hyderabad ..Stayed about a month and left for the States. When
they reached the States,the page of the American visa on his wife's
passport was missing. At the time of departure from Hyderabad it was
there, the whole family had to return to Hyderabad helplessly.
On arrival at Bombay back, the police caught them and now it is over 2
months, they are running after the Police, Immigration officers and
the Courts. On going in to details with him, he found out the
following: Onecannot imagine, neither can believe, that the Indian
Immigration dept canplay such a nasty game to harass the innocent
passengers.All the passengers traveling to & fro India via Bombay and
Hyderabad must be aware of this conspiracy. Every month 15 to 20 cases
are taking place, at each mentioned airport, of holding the passengers
in the crime of tearing away the passport pages.. On interviewing some
of them, none of them was aware of what had happened..
They don't know why, when and who tore away the page from the middle
of the passport. One can imagine the sufferings of such people at the
hands of the immigration, police and the court procedures in India
after that.. The number of cases is increasing in the last 2-3 years.
People who are arriving at the immigration, they are questioned and
their passports are being held and they have to go in interrogations.
Obviously, the conspiracy started about 2 to 3 years ago, now the
results are coming. Some of the Air India counter staff too is
involved in this conspiracy.
KINDLY SEND THIS TO AS MANY AS YOUR FRIENDS ACROSS THE WORLD AND ALSO
REQUEST THEM TO CHECK THE PASSPORT AT THE CHECKING COUNTERS AND BEFORE
LEAVING THE AIRPORT.
====================================================================
உஷார இருந்துக்கோங்க சார், சொல்லுரத சொல்லிப்புட்டேன், பாஸ்போர்ட்டை கையில கொடுத்துட்டு காஞ்சமாடு கம்புல பாஞ்சது போல், பொண்டாட்டிய பாக்கப்போர சந்தோஷத்துல ஓவரா மெய்மறந்துராதீங்க.. சம்பாதிப்பதுக்காக பயபுள்ளைகள் எதுக்கும் துணிஞ்சிருச்சி போல இருக்கு..
அன்புடன், வசந்தா நடேசன்.
கீழ்வரப்போவது வெளிநாடுகளில் வாழ்பவர்கள் கண்டிப்பாய் தெரிந்திருக்கவேண்டியது. எப்டில்லாம் ஏமாத்துரனுக பாருங்க சார்? இது கொஞ்சநாள் முன்பு வந்த ஈமெயில், பதிவு எழுதப்போவதை உத்தேசித்து பதுக்கி வைத்திருந்தது. இன்னும் கொஞ்சம் கைவசம் உள்ளது, இன்று இது மட்டும்.. ஒரு நாளைக்கு ஒரு மொக்கை போராதோ? ஆங்கிலத்தில் வந்ததை அப்படியே கொடுத்துள்ளேன்! ஸ்பெல்லிங் மிஸ்டேக், கிராமர் மிஸ்டேக்லாம் பாக்கலீங்ணா..
=============================================
Be Careful At the Indian Airports,
This is a well-organized conspiracy by Indian Immigration, Police,
Customs and Air India staff with networking at all the Indian
International Airports. Be watchful whenever you give your passport to
Immigration/ Customs/Air India staff.. The passport can be easily
tampered and can create trouble to you. They have found easy way of
making money from NRIs.
This is the way it works. At the time of the passenger's departure, if
the passenger is not looking at the officer while he is stamping the
exit, the officer very cleverly tears away one of the page from the
passport. When the passenger leaves the immigration counter, the case
is reported on his computer terminal with full details. Now all over
India they have got full details of the passenger with Red Flag
flashing on the Passport number
entered by the departure immigration officer. They have made their
money by doing above.
On arrival next time, he is interrogated. Subject to the passenger's
period of stay abroad, his income and standing etc., the price to get
rid of the problem is settled by the Police and Immigration people. If
someone argues, his future is spoiled because there are always some
innocent fellows who think the honesty is the basis of getting justice
in India ... Which is wrong...Please advise every passenger to be
careful at the airport.
Whenever they hand over the passport to the counters of Air India , or
immigration or the customs, they must be vigilant, should not remove
eyes from the passport even if the officer in front tries to divert
their attention. Also, please pass this information to all friends,
media men and important politicians.
Every month 20-30 cases are happening all over India to rob the NRIs
the minute he lands. Similar case has happened with Armco¢s Arifuddin.
He was traveling with his family. They had six passports. They got the
visa of America and decided to go via Hyderabad from Jeddah. They
reached Hyderabad ..Stayed about a month and left for the States. When
they reached the States,the page of the American visa on his wife's
passport was missing. At the time of departure from Hyderabad it was
there, the whole family had to return to Hyderabad helplessly.
On arrival at Bombay back, the police caught them and now it is over 2
months, they are running after the Police, Immigration officers and
the Courts. On going in to details with him, he found out the
following: Onecannot imagine, neither can believe, that the Indian
Immigration dept canplay such a nasty game to harass the innocent
passengers.All the passengers traveling to & fro India via Bombay and
Hyderabad must be aware of this conspiracy. Every month 15 to 20 cases
are taking place, at each mentioned airport, of holding the passengers
in the crime of tearing away the passport pages.. On interviewing some
of them, none of them was aware of what had happened..
They don't know why, when and who tore away the page from the middle
of the passport. One can imagine the sufferings of such people at the
hands of the immigration, police and the court procedures in India
after that.. The number of cases is increasing in the last 2-3 years.
People who are arriving at the immigration, they are questioned and
their passports are being held and they have to go in interrogations.
Obviously, the conspiracy started about 2 to 3 years ago, now the
results are coming. Some of the Air India counter staff too is
involved in this conspiracy.
KINDLY SEND THIS TO AS MANY AS YOUR FRIENDS ACROSS THE WORLD AND ALSO
REQUEST THEM TO CHECK THE PASSPORT AT THE CHECKING COUNTERS AND BEFORE
LEAVING THE AIRPORT.
====================================================================
உஷார இருந்துக்கோங்க சார், சொல்லுரத சொல்லிப்புட்டேன், பாஸ்போர்ட்டை கையில கொடுத்துட்டு காஞ்சமாடு கம்புல பாஞ்சது போல், பொண்டாட்டிய பாக்கப்போர சந்தோஷத்துல ஓவரா மெய்மறந்துராதீங்க.. சம்பாதிப்பதுக்காக பயபுள்ளைகள் எதுக்கும் துணிஞ்சிருச்சி போல இருக்கு..
அன்புடன், வசந்தா நடேசன்.
Thursday, January 27, 2011
மூட்டை பூச்சி, கரப்பான் தொல்லையா?
இந்தியாவில் இப்போது கரப்பான் மற்றும் மூட்டை பூச்சிகள் பெரும்பாலும் ஒளிக்கப்பட்டு விட்டது என்று நினைக்கிறேன். ஒன்றிரண்டு கரப்பான்களை அங்கங்கே பார்த்திருந்தாலும் மூட்டை பூச்சிகள் இந்தியாவில் வழக்கொழிந்து விட்டதாகவே நினைக்கிறேன். மற்ற நாடுகளைப்பற்றி தெரியவில்லை.. இருந்தாலும் இதைப்பற்றி பெரிதாக நினைக்காதவர்கள் அப்படியே அப்பீட் ஆகிக் கொள்ளலாம். இது அரபு நாடுகளில் உள்ள ஒரு தொல்லையை பற்றியது..
இங்கே வாழ்பவர்கள் கரப்பான்களுடனும், மூட்டை பூச்சிகளுடனும் தான் இன்றும் பெரும்பாலும் வாழ்ந்து வருகிறோம். கரப்பான்களை நிரந்தரமாக இங்கே அழிக்கவே முடிவதில்லை, மூட்டை பூச்சிகள் தியேட்டர் (தமிழ் மற்றும் மலையாள மொழி படங்கள் வரும் தியேட்டர்கள் மட்டும், பெங்காலி தியேட்டர்லாம் போனதில்லைங்க சார்!) போனாலோ அல்லது மற்ற ரூம்களில் தங்கிவிட்டு வரும் நண்பர்களாலோ வந்துவிடும்.
மூட்டைக்கு நான் ஒருவழியாய் மருந்து கண்டுபிடித்து வைத்திருக்கிறேன், ரூம் காலி செய்யவேண்டியதில்லை, மாஸ்க் எதுவும் தேவையில்லை, அப்படியே ஸ்ப்ரே செய்து விட்டால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு வருவதில்லை. துபாய்வாசிகள் தேவையென்றால் ஈமெயில் அனுப்பவும் அதை வாங்குவதற்க்கு சீக்ரெட் கோடெல்லாம் இருக்கிறது, அனுப்பித்தருகிறேன். 90 திர்கம் ஒருபாட்டில் விலை, ஒரு ரூமிற்க்கு அடிக்கலாம். எனக்கு கமிஷன்லாம் வேண்டாம் சார், இது ஒரு இலவச சேவை, கடை விலாசம் அனுப்பித்தருகிறேன் பாஸ்வேர்டுடன், போய் வாங்கிக்கொள்ளலாம்.
இருக்கும் ஃப்ளாட்டின் கீழே ஒரு மலையாளி ஹோட்டல் இருக்கிறதென்றால் கரப்பான் தொல்லை இன்னும் அதிகம்.. தமிழ் ஹோட்டல்லாம் கொஞ்சம் இல்ல இங்க துபாயில் ரொம்ப நீட்டாதான் இருக்கு சார்..
கரப்பானுக்கும் சமீபத்தில் ஒரு மருந்து கண்டுபிடித்து விட்டேன் ஒரு வழியாக.. இது ரொம்ப ஈஸி சார், வெரும் 8 திர்கம் தான் செலவு..
எச்சரிக்கை! (WARNING!)


குடும்பத்துடன் இருக்கும் புண்ணியவான்களோ, குழந்தைகளுடன் அரபுநாடுகளில் வசிக்கும் தாய்க்குலங்களோ இதை தயவுசெய்து டிரைசெய்யவேண்டாம்.. மீறி செய்தால் விளைவுகள் எதற்க்கும் நம் நிர்வாகம் பொருப்பல்ல! சிறுகுழந்தைகள் கீழே விளக்க இருக்கும் பொருளை (Product?) ‘ஏதோ ஜெம்ஸ் (Gems)என்று நினைத்து வாயில் போட்டுவிடும் ஆபத்து இருக்கிறது..‘ எச்சரிக்கை.
பக்கத்தில் இருக்கும் பார்மஸிக்கு போய் போரிக் ஆசிட் பவுடர் என்று கேளுங்கள், அங்கிருக்கும் மலையாளி கேரம் போர்ட் கழிக்கான் வேண்டியா? என்பான் உங்கள் ஆரோக்யத்தை பார்த்துவிட்டு, இது புண்ணிற்க்கு போடும் மருந்து! மண்டைய, மண்டைய ஆட்டிட்டு ஒங்கபாட்டு வாங்கிட்டு வாங்க, அதை பூராவும் ஒரு சின்ன பாத்திரத்தில் கொட்டி அதனுடன் சிறிதளவு கோதுமை மாவு (பசைத்தன்மை வருவதற்க்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டும்), சுகர் மற்றும் சிறிதளவு பால் (கரப்பானைக் கவர்வதற்க்காக), கொஞ்சம் தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து சிறு, சிறு உருண்டைகளாக செய்து கரப்பான் நடமாடும் எல்லா இடத்திலும் தரையில் போட்டுவிடுங்கள்.
பாத்ரூமில் கதவு நிலை மற்றும் ஜன்னல்கள் மேல்,வாஷ்பேசின் அடியில் மற்றும் தண்ணீர் படாத இடங்களில் வைக்கலாம்.
தினமும் இருக்கும் கரப்பான் ஸ்டாக்குக்கு தகுந்தபடி கரப்பான்கள் ஒழிய ஆரம்பிக்கும்.. ஒரு 15 நாள் கழித்து மீண்டும் ஒருமுறை இதேபோல் செய்யுங்கள். சுத்தமாக ஒழிந்துவிடும்.
நான் இப்போது கரப்பான் பூச்சி செகண்ட் டிரையலில் இருக்கிறேன் (very happy with the first trial! எங்காவது ஒழிந்திருக்கும் முட்டைகளிலிருந்து வந்துவிடக்கூடாது என்பதற்க்காக இந்த செகண்ட் டிரையல்!). இருந்தாலும் ஒரு பொதுசேவை செய்து வைப்போமே என்று எழுதியிருக்கிறேன், தொல்லையிருப்பவர்கள் தப்பித்துக்கொள்ளுங்கள் நான் விடுதலையடைந்தது போல்.. நான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக..
அன்புடன், வசந்தா நடேசன்.
இங்கே வாழ்பவர்கள் கரப்பான்களுடனும், மூட்டை பூச்சிகளுடனும் தான் இன்றும் பெரும்பாலும் வாழ்ந்து வருகிறோம். கரப்பான்களை நிரந்தரமாக இங்கே அழிக்கவே முடிவதில்லை, மூட்டை பூச்சிகள் தியேட்டர் (தமிழ் மற்றும் மலையாள மொழி படங்கள் வரும் தியேட்டர்கள் மட்டும், பெங்காலி தியேட்டர்லாம் போனதில்லைங்க சார்!) போனாலோ அல்லது மற்ற ரூம்களில் தங்கிவிட்டு வரும் நண்பர்களாலோ வந்துவிடும்.
மூட்டைக்கு நான் ஒருவழியாய் மருந்து கண்டுபிடித்து வைத்திருக்கிறேன், ரூம் காலி செய்யவேண்டியதில்லை, மாஸ்க் எதுவும் தேவையில்லை, அப்படியே ஸ்ப்ரே செய்து விட்டால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு வருவதில்லை. துபாய்வாசிகள் தேவையென்றால் ஈமெயில் அனுப்பவும் அதை வாங்குவதற்க்கு சீக்ரெட் கோடெல்லாம் இருக்கிறது, அனுப்பித்தருகிறேன். 90 திர்கம் ஒருபாட்டில் விலை, ஒரு ரூமிற்க்கு அடிக்கலாம். எனக்கு கமிஷன்லாம் வேண்டாம் சார், இது ஒரு இலவச சேவை, கடை விலாசம் அனுப்பித்தருகிறேன் பாஸ்வேர்டுடன், போய் வாங்கிக்கொள்ளலாம்.
இருக்கும் ஃப்ளாட்டின் கீழே ஒரு மலையாளி ஹோட்டல் இருக்கிறதென்றால் கரப்பான் தொல்லை இன்னும் அதிகம்.. தமிழ் ஹோட்டல்லாம் கொஞ்சம் இல்ல இங்க துபாயில் ரொம்ப நீட்டாதான் இருக்கு சார்..
கரப்பானுக்கும் சமீபத்தில் ஒரு மருந்து கண்டுபிடித்து விட்டேன் ஒரு வழியாக.. இது ரொம்ப ஈஸி சார், வெரும் 8 திர்கம் தான் செலவு..
எச்சரிக்கை! (WARNING!)


குடும்பத்துடன் இருக்கும் புண்ணியவான்களோ, குழந்தைகளுடன் அரபுநாடுகளில் வசிக்கும் தாய்க்குலங்களோ இதை தயவுசெய்து டிரைசெய்யவேண்டாம்.. மீறி செய்தால் விளைவுகள் எதற்க்கும் நம் நிர்வாகம் பொருப்பல்ல! சிறுகுழந்தைகள் கீழே விளக்க இருக்கும் பொருளை (Product?) ‘ஏதோ ஜெம்ஸ் (Gems)என்று நினைத்து வாயில் போட்டுவிடும் ஆபத்து இருக்கிறது..‘ எச்சரிக்கை.
பக்கத்தில் இருக்கும் பார்மஸிக்கு போய் போரிக் ஆசிட் பவுடர் என்று கேளுங்கள், அங்கிருக்கும் மலையாளி கேரம் போர்ட் கழிக்கான் வேண்டியா? என்பான் உங்கள் ஆரோக்யத்தை பார்த்துவிட்டு, இது புண்ணிற்க்கு போடும் மருந்து! மண்டைய, மண்டைய ஆட்டிட்டு ஒங்கபாட்டு வாங்கிட்டு வாங்க, அதை பூராவும் ஒரு சின்ன பாத்திரத்தில் கொட்டி அதனுடன் சிறிதளவு கோதுமை மாவு (பசைத்தன்மை வருவதற்க்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டும்), சுகர் மற்றும் சிறிதளவு பால் (கரப்பானைக் கவர்வதற்க்காக), கொஞ்சம் தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து சிறு, சிறு உருண்டைகளாக செய்து கரப்பான் நடமாடும் எல்லா இடத்திலும் தரையில் போட்டுவிடுங்கள்.
பாத்ரூமில் கதவு நிலை மற்றும் ஜன்னல்கள் மேல்,வாஷ்பேசின் அடியில் மற்றும் தண்ணீர் படாத இடங்களில் வைக்கலாம்.
தினமும் இருக்கும் கரப்பான் ஸ்டாக்குக்கு தகுந்தபடி கரப்பான்கள் ஒழிய ஆரம்பிக்கும்.. ஒரு 15 நாள் கழித்து மீண்டும் ஒருமுறை இதேபோல் செய்யுங்கள். சுத்தமாக ஒழிந்துவிடும்.
நான் இப்போது கரப்பான் பூச்சி செகண்ட் டிரையலில் இருக்கிறேன் (very happy with the first trial! எங்காவது ஒழிந்திருக்கும் முட்டைகளிலிருந்து வந்துவிடக்கூடாது என்பதற்க்காக இந்த செகண்ட் டிரையல்!). இருந்தாலும் ஒரு பொதுசேவை செய்து வைப்போமே என்று எழுதியிருக்கிறேன், தொல்லையிருப்பவர்கள் தப்பித்துக்கொள்ளுங்கள் நான் விடுதலையடைந்தது போல்.. நான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக..
அன்புடன், வசந்தா நடேசன்.
Wednesday, January 26, 2011
குடியரசாம்ல..
இந்திய பிரஜைகள் அனைவருக்கும் குடியரசுதின வாழ்துக்கள்..
சின்ன வயதில் வடசேரி கிரவுண்ட் பள்ளிக்கூடத்தில் லைனில் நின்று இதை கொண்டாடிய ஞாபகம் இருக்கிறது.. இப்போது அந்த உணர்ச்சியே மறத்துப் போய்விட்டது. கீழ்வரும் என் நண்பனுடனான இமெயிலை படித்துப்பாருங்கள், கவனமாக பெர்சனல் இன்பர்மேஷனை அழித்திருக்கிறேன், விட்டிருந்தால் சொல்லுங்க சார்.
===================================================================================
Dai.....................Republic Dayda.......
On Tue, Jan 25, 2011 at 10:36 PM, Xxxx wrote:
நாளைக்கு ஏண்டா லீவு, அநியாயமா இருக்கு..
From: Xxxxxxxxxxxx
Sent: Tuesday, January 25, 2011 8:52 PM
To: xxxxxxxxxx
Subject: Re: Laptop is ready
Tomorrow is a holiday...hope you know....let us try to leverage the most.....
In my opinion...xxxxxxxx itself is going to take atleast another 10days...
Regards
xxxxxxxx
On Tue, Jan 25, 2011 at 8:35 PM, xxxxxx wrote:
DVD?? can’t you buy and download online?
From: xxxxxxxxxxxx
Sent: Tuesday, January 25, 2011 6:55 PM
To: xxxxxxxxx
Subject: Re: Laptop is ready
Thanks....but it may not be required...I will get the dvd by tomorrow....
==============================================================================
தமிழ் டைப்பிங் கற்றதும் நான் இப்படி இடையிடையே தமிழில் நண்பர்களிடம் லொள்ளு பண்ணுவது உண்டு.. நேற்று இரவு பதில் ஏதும் வரவில்லை,இங்க இரவு 10.30, சரி ஊருல மணி 12 ஆச்சு, பயபுள்ளை தூங்கிடிச்சு போலஇருக்குன்னு உட்டுட்டேன்.
இன்னிக்கு காலைல பாத்தா குடியரசு தினமாம்?? இப்போதும் பள்ளிகளில் மிட்டாய் குடுக்கறாங்களா சார்?
அன்புடன்
வசந்தா நடேசன்.
சின்ன வயதில் வடசேரி கிரவுண்ட் பள்ளிக்கூடத்தில் லைனில் நின்று இதை கொண்டாடிய ஞாபகம் இருக்கிறது.. இப்போது அந்த உணர்ச்சியே மறத்துப் போய்விட்டது. கீழ்வரும் என் நண்பனுடனான இமெயிலை படித்துப்பாருங்கள், கவனமாக பெர்சனல் இன்பர்மேஷனை அழித்திருக்கிறேன், விட்டிருந்தால் சொல்லுங்க சார்.
===================================================================================
Dai.....................Republic Dayda.......
On Tue, Jan 25, 2011 at 10:36 PM, Xxxx
நாளைக்கு ஏண்டா லீவு, அநியாயமா இருக்கு..
From: Xxxxxxxxxxxx
Sent: Tuesday, January 25, 2011 8:52 PM
To: xxxxxxxxxx
Subject: Re: Laptop is ready
Tomorrow is a holiday...hope you know....let us try to leverage the most.....
In my opinion...xxxxxxxx itself is going to take atleast another 10days...
Regards
xxxxxxxx
On Tue, Jan 25, 2011 at 8:35 PM, xxxxxx
DVD?? can’t you buy and download online?
From: xxxxxxxxxxxx
Sent: Tuesday, January 25, 2011 6:55 PM
To: xxxxxxxxx
Subject: Re: Laptop is ready
Thanks....but it may not be required...I will get the dvd by tomorrow....
==============================================================================
தமிழ் டைப்பிங் கற்றதும் நான் இப்படி இடையிடையே தமிழில் நண்பர்களிடம் லொள்ளு பண்ணுவது உண்டு.. நேற்று இரவு பதில் ஏதும் வரவில்லை,இங்க இரவு 10.30, சரி ஊருல மணி 12 ஆச்சு, பயபுள்ளை தூங்கிடிச்சு போலஇருக்குன்னு உட்டுட்டேன்.
இன்னிக்கு காலைல பாத்தா குடியரசு தினமாம்?? இப்போதும் பள்ளிகளில் மிட்டாய் குடுக்கறாங்களா சார்?
அன்புடன்
வசந்தா நடேசன்.
Tuesday, January 25, 2011
நான் துபாய்ல பேச்சிலர்ங்க!
துபாய் வாழ் பேச்சிலர்களைப்பற்றி ஒரு பதிவு எழுத நினைத்திருந்தேன், ஓயாத வேலை நெருக்கடிகளின் இடையில் இன்று தான் நேரம் வாய்த்தது. எங்கே முன்னாள் பதிவர் லிஸ்ட்டில் சேர்த்து விடுவார்களோ என்று அடித்து பிடித்து வந்திருக்கிறேன் சார்!
இங்கு இந்தியாவின் எல்லாமாநிலத்தை சேர்ந்த மக்களும் வசிக்கிறார்கள். கேரளத்தவர்கள் அதிகம். அதற்க்கு அடுத்த இடத்தில் தமிழர்களும், தெலுங்கர்களும் இருக்கக்கூடும். கேரளத்தவர்கள் அதிகம் இருக்கும் இடங்களில் தமிழர்களுக்கு கடும் நெருக்கடி இருக்கும், அதேபோல் தமிழர்கள் அதிகம் வேலை செய்யும் கம்பெனிகளில் மலையாளியின் பல் பிடுங்கப்பட்டிருக்கும். இதைப்பற்றி தனியே ஒரு பதிவு எழுதலாம், அதை அப்புறம் வச்சிக்கிறேன்.
திருமணம் ஆனவரும், ஆகாதவரும் குடும்பத்தை ஊரில் விட்டு வந்துவிட்டாலே எல்லோரும் இங்கே பேச்சிலர்தான். அதிக சம்பளத்துடன் பேமிலிவிசாவில் மனைவியுடன் இங்கே வருபவர்கள் அனைவரும் பாக்யசாலிகளே! நம்ம தலையெழுத்து வேறங்க..
திருமணம் முடிந்து 9 வருடங்கள் நான் குடும்பத்துடன் தான் ஊரில் வசித்தேன், பின்னர் வந்த ஒரு போதாத வேளை (நல்ல நேரமோ? பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டான்னு ஜனகராஜ் போல் அலராமல் வருடத்தில் பெரும்பாலும் இஷ்ட்டம் போல் வாழ்க்கை, நினைத்தபோது, நினைத்தபடி, நான் ரொம்ப நல்லவன் சார்!) இங்க வந்து மாட்டிக்கிட்டேன்.
இன்றே கம்பெனியில் திடீர்னு வீட்டுக்கு போடான்னு சொன்னா ஊருக்கு வந்தா ஒரு பொழப்பும் இல்லை. இப்ப லீவுல வந்தாலே நேரம் போவதில்லை, உடன் படித்த நண்பர்கள் எல்லாமே வேறு வேறு ஊரில் செட்டில் ஆகி விட்டனர். ஆகா, சுயசொறிதல் ஆரம்பித்து விட்டேனே.. மன்னிக்கவும், மீண்டும் கதைக்கு வருவோம்.
வந்த புதிதில் பெட் ஸ்பேஸ் தேடும் போது தான் ‘நான் பேச்சிலரா‘ன்னு ஒரு நிமிஷம் ஷாக்காகி ஒரு வழியாய் நானும் இங்க ஒரு பேச்சிலரானேன்.
புதிதாக வருபவர் எல்லோருக்கும் இங்கு பெட் ஸ்பேஸ் வாழ்க்கைதான். பெட் ஸ்பேஸ் வாடகை பல ரேஞ்சில் இருக்கும். குறைந்த பட்சம் 300 திர்கம் அதிகபட்சம் 1500 திர்கம். ஒரு பெட் ஸ்பேசுக்கு மட்டும் தான் சார்.
யாருடனும் எனக்கு ஒத்துப்போகாது, தனியே தான் வசிப்பேன் என்று அடம் பிடிச்ச கழுதையானால் 1500க்கு மேலும் கொடுக்க வேண்டியதிருக்கும். நான் 375க்கு பெட்ஸ்பேஸ் வாழ்க்கை ஆரம்பித்து இப்போது ஏதோ கிரைஸிஸ் புண்ணியத்தில் ஒரு சின்ன ஒன்பெட்ரூம் ஹாலில் பெட்ரூமை எனக்கு மட்டும் தனியே வைத்துக்கொண்டு ஹாலை வேறு நண்பர்கள் இருவருடன் பகிர்ந்துகொண்டு வாழ்ந்து வருகிறேன். (இது தேவையாடா மக்களுக்குன்னு கேக்காதிங்க சார், கொஞ்சம் இடையே சுயசொறிதலும் வந்துவிடுகிறது)
இங்குள்ள பேச்சிலர் வாழ்வு எப்படி இருக்கும் என்பது அவரவர்க்கு கிடைக்கும் சம்பளத்தை பொருத்து மாறுபடும். சம்பளம் அவரவர் படிப்பும், எக்ஸ்ப்பீரியன்சும், தகுதியும் பொருத்தது என்று எல்லோருக்கும் தெரியும். புதிதாக இங்கே வருபவர்களுக்கு 2000 திர்கம் முதல் 10000 வரை கிடைக்கும். வாடகை குறைவென்றால் குறைந்தது 10பேருடன் தங்க வேண்டியதிருக்கும், வாடகை கூடக்கூட நபர்களின் எண்ணிக்கை குறையும். இங்கே கொடுக்கும் வாடகையை பத்து வருடம் ஊரில் முதலீடு செய்தால் சொந்த வீடாகிவிடும்.
துபாயில் தான் வீட்டு வாடகை இப்படி அநியாயத்துக்கு அதிகம், இப்படி அதிகமாக இருப்பதால் கம்பெனிகளும் வீடு பற்றி இங்கே அதிகம் தலையிடுவதில்லை.. இவ்வளவு தருகிறேன், எங்க வேண்ணாலும் இருந்துக்கன்னுட்டு அவுக ஒதுங்கிருவாங்க.
இப்போது நிறைய புதிய வீடுகள் காலியாக இருந்தாலும் பர்துபாய் போன்ற நான் அதிகம் பழகிய இடங்களில் கிரைஸிஸ் தொடங்கிய நாட்களில் கொஞ்சம் குறைத்தார்கள், பின்னர் ‘வாடகை இவ்ளோ தான்ம்பூ, இருக்கறன்னனா இரு, இல்லன்னா நடைய கட்டு‘ கதைதான் சார்.
ஆனால் சவுதி, ஓமன் போன்ற அரபுநாடுகளில் வீட்டு வாடகை குறைவென்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதானல் அங்கே கம்பெனிகளே அவரவர் தகுதிக்கேற்ப்ப வீட்டைக்கொடுத்து விடுகிறார்கள்.
குடும்பத்தை ஊரில் வைத்து இங்கு தனிமரமாய் கழிந்தால் தான் ஏதோ கொஞ்சம் காசு வீட்டிற்க்கு அனுப்பி கொஞ்சம் மிச்சம் பார்க்கலாம்.
பல நண்பர்களுடன் இங்கே வசிப்பதால் நட்புக்கு பஞ்சமில்லை.. ரயில் பயணம் போல் எத்தனையோ பேர் 6 மாதம் 1 வருடம் வீட்டில் ஒன்றாய் வசித்துக்கொண்டு பின்னர் வேறு ஜாகைக்கு அல்லது வேறு ஊருக்கு சென்றுவிடுவார்கள். நிரந்தர நட்பு கொஞ்சம் குறைவுதான்.
சாப்பாடு மற்றும் இதர செலவுகள் சொந்தமாய் சமைத்தால் 300 முதல் 400க்குள் முடிந்து விடும். இதுவும் நபர்களின் எண்ணிக்கை பொருத்ததே, நபர் கூடக்கூட செலவு குறையலாம். ஹோட்டல் என்றால் 750 முதல் 800 ஆகலாம், நாமல்லாம் சொந்த சமையல்ங்க.. (ஈஸியாய் சமைப்பது எப்படி, என்னென்ன சமைக்கலாம்னு பதிவெழுதணும்னு ஒரு ஐடியா இருக்கு, பார்க்கலாம்)
பெரும்பாலும் அலுவலகமே போக்குவரத்தை கவனித்துக்கொள்ளும் இல்லையென்றால் அதற்க்கு இப்போதைய நிலவரப்படி 250 ஆகலாம்.
ஆக, வீட்டுவாடகை பற்றி சொல்லிவிட்டேன், சாப்பாட்டுச்செலவைப்பற்றி சொல்லி விட்டேன் இருக்கும் மற்ற சில பல பழக்கங்களையும் இந்த ரீதியில் கணக்கு பண்ணி (சிகரட் 90 முதல் 180 வரை பிராண்ட் பொருத்து, தண்ணி?? வீக் எண்ட் மட்டும் என்றால் 100, தினமும்னா 300) வீட்டுக்கு எவ்வளவு அனுப்ப வேண்டும் என்பதும் போக மீதியை வைத்து எங்கள் வாழ்க்கை இங்கே எப்படி இருக்கும் என்பதை ஒரு திர்கத்துக்கு ரூபாய் 12.50 என்று உத்தேசமாக ஒரு கணக்கு வைத்து ஒருவாறு நீங்களே கற்பனை செய்யலாம் என நினைக்கிறேன்.
இதைதவிர இங்கே எப்படி வாழவேண்டும், எப்படி வாழக்கூடாது என்பதையும் ஒரளவுக்கு அனுபவசாலி என்ற முறையில் தனிப்பதிவாக எழுதுகிறேன். இப்போதைக்கு நன்றி, வணக்கம்.
வசந்தா நடேசன்.
இங்கு இந்தியாவின் எல்லாமாநிலத்தை சேர்ந்த மக்களும் வசிக்கிறார்கள். கேரளத்தவர்கள் அதிகம். அதற்க்கு அடுத்த இடத்தில் தமிழர்களும், தெலுங்கர்களும் இருக்கக்கூடும். கேரளத்தவர்கள் அதிகம் இருக்கும் இடங்களில் தமிழர்களுக்கு கடும் நெருக்கடி இருக்கும், அதேபோல் தமிழர்கள் அதிகம் வேலை செய்யும் கம்பெனிகளில் மலையாளியின் பல் பிடுங்கப்பட்டிருக்கும். இதைப்பற்றி தனியே ஒரு பதிவு எழுதலாம், அதை அப்புறம் வச்சிக்கிறேன்.
திருமணம் ஆனவரும், ஆகாதவரும் குடும்பத்தை ஊரில் விட்டு வந்துவிட்டாலே எல்லோரும் இங்கே பேச்சிலர்தான். அதிக சம்பளத்துடன் பேமிலிவிசாவில் மனைவியுடன் இங்கே வருபவர்கள் அனைவரும் பாக்யசாலிகளே! நம்ம தலையெழுத்து வேறங்க..
திருமணம் முடிந்து 9 வருடங்கள் நான் குடும்பத்துடன் தான் ஊரில் வசித்தேன், பின்னர் வந்த ஒரு போதாத வேளை (நல்ல நேரமோ? பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டான்னு ஜனகராஜ் போல் அலராமல் வருடத்தில் பெரும்பாலும் இஷ்ட்டம் போல் வாழ்க்கை, நினைத்தபோது, நினைத்தபடி, நான் ரொம்ப நல்லவன் சார்!) இங்க வந்து மாட்டிக்கிட்டேன்.
இன்றே கம்பெனியில் திடீர்னு வீட்டுக்கு போடான்னு சொன்னா ஊருக்கு வந்தா ஒரு பொழப்பும் இல்லை. இப்ப லீவுல வந்தாலே நேரம் போவதில்லை, உடன் படித்த நண்பர்கள் எல்லாமே வேறு வேறு ஊரில் செட்டில் ஆகி விட்டனர். ஆகா, சுயசொறிதல் ஆரம்பித்து விட்டேனே.. மன்னிக்கவும், மீண்டும் கதைக்கு வருவோம்.
வந்த புதிதில் பெட் ஸ்பேஸ் தேடும் போது தான் ‘நான் பேச்சிலரா‘ன்னு ஒரு நிமிஷம் ஷாக்காகி ஒரு வழியாய் நானும் இங்க ஒரு பேச்சிலரானேன்.
புதிதாக வருபவர் எல்லோருக்கும் இங்கு பெட் ஸ்பேஸ் வாழ்க்கைதான். பெட் ஸ்பேஸ் வாடகை பல ரேஞ்சில் இருக்கும். குறைந்த பட்சம் 300 திர்கம் அதிகபட்சம் 1500 திர்கம். ஒரு பெட் ஸ்பேசுக்கு மட்டும் தான் சார்.
யாருடனும் எனக்கு ஒத்துப்போகாது, தனியே தான் வசிப்பேன் என்று அடம் பிடிச்ச கழுதையானால் 1500க்கு மேலும் கொடுக்க வேண்டியதிருக்கும். நான் 375க்கு பெட்ஸ்பேஸ் வாழ்க்கை ஆரம்பித்து இப்போது ஏதோ கிரைஸிஸ் புண்ணியத்தில் ஒரு சின்ன ஒன்பெட்ரூம் ஹாலில் பெட்ரூமை எனக்கு மட்டும் தனியே வைத்துக்கொண்டு ஹாலை வேறு நண்பர்கள் இருவருடன் பகிர்ந்துகொண்டு வாழ்ந்து வருகிறேன். (இது தேவையாடா மக்களுக்குன்னு கேக்காதிங்க சார், கொஞ்சம் இடையே சுயசொறிதலும் வந்துவிடுகிறது)
இங்குள்ள பேச்சிலர் வாழ்வு எப்படி இருக்கும் என்பது அவரவர்க்கு கிடைக்கும் சம்பளத்தை பொருத்து மாறுபடும். சம்பளம் அவரவர் படிப்பும், எக்ஸ்ப்பீரியன்சும், தகுதியும் பொருத்தது என்று எல்லோருக்கும் தெரியும். புதிதாக இங்கே வருபவர்களுக்கு 2000 திர்கம் முதல் 10000 வரை கிடைக்கும். வாடகை குறைவென்றால் குறைந்தது 10பேருடன் தங்க வேண்டியதிருக்கும், வாடகை கூடக்கூட நபர்களின் எண்ணிக்கை குறையும். இங்கே கொடுக்கும் வாடகையை பத்து வருடம் ஊரில் முதலீடு செய்தால் சொந்த வீடாகிவிடும்.
துபாயில் தான் வீட்டு வாடகை இப்படி அநியாயத்துக்கு அதிகம், இப்படி அதிகமாக இருப்பதால் கம்பெனிகளும் வீடு பற்றி இங்கே அதிகம் தலையிடுவதில்லை.. இவ்வளவு தருகிறேன், எங்க வேண்ணாலும் இருந்துக்கன்னுட்டு அவுக ஒதுங்கிருவாங்க.
இப்போது நிறைய புதிய வீடுகள் காலியாக இருந்தாலும் பர்துபாய் போன்ற நான் அதிகம் பழகிய இடங்களில் கிரைஸிஸ் தொடங்கிய நாட்களில் கொஞ்சம் குறைத்தார்கள், பின்னர் ‘வாடகை இவ்ளோ தான்ம்பூ, இருக்கறன்னனா இரு, இல்லன்னா நடைய கட்டு‘ கதைதான் சார்.
ஆனால் சவுதி, ஓமன் போன்ற அரபுநாடுகளில் வீட்டு வாடகை குறைவென்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதானல் அங்கே கம்பெனிகளே அவரவர் தகுதிக்கேற்ப்ப வீட்டைக்கொடுத்து விடுகிறார்கள்.
குடும்பத்தை ஊரில் வைத்து இங்கு தனிமரமாய் கழிந்தால் தான் ஏதோ கொஞ்சம் காசு வீட்டிற்க்கு அனுப்பி கொஞ்சம் மிச்சம் பார்க்கலாம்.
பல நண்பர்களுடன் இங்கே வசிப்பதால் நட்புக்கு பஞ்சமில்லை.. ரயில் பயணம் போல் எத்தனையோ பேர் 6 மாதம் 1 வருடம் வீட்டில் ஒன்றாய் வசித்துக்கொண்டு பின்னர் வேறு ஜாகைக்கு அல்லது வேறு ஊருக்கு சென்றுவிடுவார்கள். நிரந்தர நட்பு கொஞ்சம் குறைவுதான்.
சாப்பாடு மற்றும் இதர செலவுகள் சொந்தமாய் சமைத்தால் 300 முதல் 400க்குள் முடிந்து விடும். இதுவும் நபர்களின் எண்ணிக்கை பொருத்ததே, நபர் கூடக்கூட செலவு குறையலாம். ஹோட்டல் என்றால் 750 முதல் 800 ஆகலாம், நாமல்லாம் சொந்த சமையல்ங்க.. (ஈஸியாய் சமைப்பது எப்படி, என்னென்ன சமைக்கலாம்னு பதிவெழுதணும்னு ஒரு ஐடியா இருக்கு, பார்க்கலாம்)
பெரும்பாலும் அலுவலகமே போக்குவரத்தை கவனித்துக்கொள்ளும் இல்லையென்றால் அதற்க்கு இப்போதைய நிலவரப்படி 250 ஆகலாம்.
ஆக, வீட்டுவாடகை பற்றி சொல்லிவிட்டேன், சாப்பாட்டுச்செலவைப்பற்றி சொல்லி விட்டேன் இருக்கும் மற்ற சில பல பழக்கங்களையும் இந்த ரீதியில் கணக்கு பண்ணி (சிகரட் 90 முதல் 180 வரை பிராண்ட் பொருத்து, தண்ணி?? வீக் எண்ட் மட்டும் என்றால் 100, தினமும்னா 300) வீட்டுக்கு எவ்வளவு அனுப்ப வேண்டும் என்பதும் போக மீதியை வைத்து எங்கள் வாழ்க்கை இங்கே எப்படி இருக்கும் என்பதை ஒரு திர்கத்துக்கு ரூபாய் 12.50 என்று உத்தேசமாக ஒரு கணக்கு வைத்து ஒருவாறு நீங்களே கற்பனை செய்யலாம் என நினைக்கிறேன்.
இதைதவிர இங்கே எப்படி வாழவேண்டும், எப்படி வாழக்கூடாது என்பதையும் ஒரளவுக்கு அனுபவசாலி என்ற முறையில் தனிப்பதிவாக எழுதுகிறேன். இப்போதைக்கு நன்றி, வணக்கம்.
வசந்தா நடேசன்.
Monday, January 10, 2011
அயல்நாட்டு முரண்கள் (முடிவு பகுதி)
ஒரு வழியாய் இன்று முடித்திருக்கிறேன்
ஃபைன்கட்ட சென்றவன், இன்னா வாரேன்னு சொல்லிட்டு வெளியே வந்து திரும்பவும் போன் செய்தான், நான் இதை எதிர்பார்த்தேன். சரி, முக்காலிஃபா யாரு கையில இருக்கு? என்று கேட்டேன், நான் தான் வைச்சிருக்கேன்னான், அப்டியே திரும்பிப்பாக்காம வண்டிய கொண்டு வந்துரு, 2 நாள் கழித்து பார்த்துக்கொள்ளலாம் என்றேன்.
2 நாள் கழித்து முதலாளியிடம் சொன்னதும் அவனால் இதை நம்ப முடியவில்லை, its not fair, disgracing அப்டி, இப்டினு புலம்பிட்டு சரி நான் நாளை போகிறேன், வேனை எனக்கு முன்னால அங்க அனுப்பிச்சிருன்னான்.
எதிர்பார்த்தது போலவே அடுத்தநாள் வண்டி உள்ளே விடாமல் வெரும் ஃபைன் கட்டி வந்துவிட்டது.
நான் இதை எழுத வந்தது, இந்தியர்கள் வெளிநாடுகளில் எப்படி வாழ்கிறார்கள் என்பதை கொஞ்சம் ஆவணப்படுத்தும் பொருட்டே. அவமரியாதைகள் இங்கே சர்வ சாதாரணம். சில நல்ல ஹபிபிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை மறுப்பதர்க்கில்லை.
ஒருமுறை நான் சிக்னல் கிராஸ் செய்யும் போதே லைன் சேஞ்ச் பண்ணினேன், சில வருடங்களுக்கு முன் நான் இங்கே கஷ்டப்பட்டு டிரைவிங் லைசன்ஸ் எடுத்த சமயத்தில், அடுத்த லைனில் வந்த ஹபிபி நிதானமாக என்னை கடந்து போகையில் இனி இப்படி செய்யாதே என்று அழகாக ரிக்வெஸ்ட் செய்வது போல் கை மற்றும் தலையை ஆட்டி சைகை செய்துகொன்டு சென்றார் ஆனால் பலர் டிரைவிங்கின் போது மிரட்டல் சைகையும் செய்திருக்கிறார்கள்.
என்னைப்பொருத்தவரை வெளியே செல்லும் வேலை அதிகம் இல்லை, ஆனால் உடன்வேலை செய்யும் மற்றவர்கள் சொல்லும் போது மிகவும் கஷ்டமாக இருக்கும். இதையும் சகித்து கொண்டு இங்கே ஏன் வாழ்கிறோம் என்பதை மீண்டும் ஒரு முறை சொல்வதை விட சென்றமாதம் அறிமுகமில்லா ஒரு நண்பர் எழுதிய அயல்நாட்டு அகதிகள் என்கிற கவிதையை நம்ம பொஸ்தகத்தில் தேடிப் படித்துக்கொள்ளுங்கள்.
உள்ளூரிலேயே உழைத்து கந்தலாயிருந்தாலும் கசக்கி கட்டிக்கொண்டு கஞ்சி குடிப்பது உன்னதமானது, நான் பாவம் உள்ளூரில் விலைபோகாமல் வெளியூரில் இருக்கிறேன் என்பது தான் உண்மை, பணம் இன்று இருக்கிறது நாளை வேறொருவரிடம் இருக்கலாம் ஆனால் நல்லது, கெட்டது இரண்டும் இல்லாமல் வாழ்கிறோம். உள்ளூரில் இருப்பவர்களுக்கு இருக்கும் பல சௌகர்யங்கள் எங்களுக்கு இல்லை என்பதே நிதர்சனம். பொறாமை என்று சில நண்பர்கள் புலம்பியதால் கொஞ்சம் திசைமாறிவிட்டேனோ தெரியவில்லை. நேரமும் காலமும் கூடிவந்தால் அனைவருக்கும் இந்த வாய்ப்பு விரும்பும் போது கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதை தவிர வேறு வழி இல்லை.
இதை எழுத தூண்டியது சமீபத்தில் நான் இன்டர்நெட் கனெக்ஷ்னுக்காக எடிசலாட் அலைந்தபோது பார்த்தது. அங்கே ஒரு காலத்தில் மெஜாரிட்டியாய் வேலை செய்தவர்கள் இந்தியர்கள், இப்போது சென்றபோது ஒரு அலுவலகத்தில் வேலைபார்த்த அனைவருமே ஹபிபிகள் இரு பிலிப்பைனிகளைத்தவிர. பிலிப்பைனிகள் அவர்கள் நாட்டவர்களுக்கு கொஞ்சம் உதவிசெய்து கொண்டே பரபரப்பாக மற்றவர்களையும் கவனித்துக்கொண்டிருந்தார்கள். நானும் ஒரு இந்தியன் கூட இல்லையா என்று சுற்று முற்றும் பார்த்தேன், கடைசியில் ஒரு மலையாளி காஃபிபாயாக டீ கொடுத்துக்கொன்று வந்தார், எத்தனை நாளைக்கோ என்று நினைத்துக்கொண்டு அவர் ஃப்ரீ ஆவாரா என்ற கவனித்துக்கொண்டு இருந்தேன்.
அதுவோ வாடிக்கையாளர் அதிகமாக வரும் முக்கியமான ஒரு செண்டர், டோக்கன் நம்பர் எடுத்து நானும் வரிசையில் காத்திருந்தேன். சேவைக்காக காத்திருந்தவர்களில் என்னைப்போல் ஆசியாவை சேர்ந்தவர்கள் 95 சதவீதம், மற்றவர்கள் 5 சதவீதம். இந்தகிளை இருக்கும் ஏரியா இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் இடம் வேறு.
டோக்கன், வரிசை எல்லாம் அங்கு வரும் மற்றவர்களுக்கு மட்டுமே, வரும் ஹபிபிகளுக்கு எல்லாம் இது கிடையாது, அவர்கள் நேரிடையாக கவுண்டருக்கே சென்று தங்கள் வேலைகளை முடித்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். சரி அவர்கள் நாடு, அவர்கள் பாடு.
இந்தியர் மற்றும் மற்றவர்களை அட்டெண்ட் செய்யும் மற்றவர்கள் பெரும்பாலும் போனிலும், பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசுவதிலுமே நேரம் கடத்திக்கொண்டுருந்தார்கள். என்னுடைய நம்பர் 334லோ ஏதோ, நானும் ஒரு மணிநேரம் பார்க்கிங் போட்டுக்கொண்டு வழக்கம் போல் காத்திருந்தேன். 281 ஓடிக்கொண்டிருந்தது நான் சென்று அங்குள்ள ஒரு வேலை முடிந்து அதன்பின் செய்யவேண்டிய அதன் தொடர்ச்சிக்காக காத்திருந்தேன்.
45 நிமிடம் கழித்து பொருமையிழந்து ஒருவழியாய் மலையாளி ஃப்ரீ ஆனதும், இதை வேறு கிளையில் சென்று முடிக்கலாமா என்று கேட்டேன், என்னிடம் இருந்த பேப்பர்களை பார்த்துக்கொண்டு, ‘இனி அவிட போய்க்கோண்ணா, இது இனி எவிட வேணங்கிலும் சப்மிட் செய்யாம்‘ என்றார்.
அடுத்த செண்டரில் இருந்தது மும்பையை சேர்ந்த ஒரு முஸ்லீம் பெண் மற்றும் ஒரு ஹபிபி, அலுவலகமே காலியாய் இருந்தது, மும்பை பெண்ணிடம் கொண்டு கொடுத்ததுமே வந்தவேலை 5 நிமிடத்தில் முடிந்தது.
இந்தியர்கள் பெரும்பான்மையாய் இருந்தும், இந்த நாட்டின் முன்னேற்றத்திர்க்கு முக்கியமானவர்களாக இருந்தும் புறக்கணிக்கப்படுகிறார்களே என்பதுவே இதை எழுத தூண்டியது, நான் எப்போதும் நினைப்பது போல் இது அவர்கள் நாடு, அவர்கள் பாடு.
பாவம் நாங்க, எங்களையும் கொஞ்சம் கண்டுக்குங்க சார்.
அன்புடன்
வசந்தா நடேசன்.
ஃபைன்கட்ட சென்றவன், இன்னா வாரேன்னு சொல்லிட்டு வெளியே வந்து திரும்பவும் போன் செய்தான், நான் இதை எதிர்பார்த்தேன். சரி, முக்காலிஃபா யாரு கையில இருக்கு? என்று கேட்டேன், நான் தான் வைச்சிருக்கேன்னான், அப்டியே திரும்பிப்பாக்காம வண்டிய கொண்டு வந்துரு, 2 நாள் கழித்து பார்த்துக்கொள்ளலாம் என்றேன்.
2 நாள் கழித்து முதலாளியிடம் சொன்னதும் அவனால் இதை நம்ப முடியவில்லை, its not fair, disgracing அப்டி, இப்டினு புலம்பிட்டு சரி நான் நாளை போகிறேன், வேனை எனக்கு முன்னால அங்க அனுப்பிச்சிருன்னான்.
எதிர்பார்த்தது போலவே அடுத்தநாள் வண்டி உள்ளே விடாமல் வெரும் ஃபைன் கட்டி வந்துவிட்டது.
நான் இதை எழுத வந்தது, இந்தியர்கள் வெளிநாடுகளில் எப்படி வாழ்கிறார்கள் என்பதை கொஞ்சம் ஆவணப்படுத்தும் பொருட்டே. அவமரியாதைகள் இங்கே சர்வ சாதாரணம். சில நல்ல ஹபிபிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை மறுப்பதர்க்கில்லை.
ஒருமுறை நான் சிக்னல் கிராஸ் செய்யும் போதே லைன் சேஞ்ச் பண்ணினேன், சில வருடங்களுக்கு முன் நான் இங்கே கஷ்டப்பட்டு டிரைவிங் லைசன்ஸ் எடுத்த சமயத்தில், அடுத்த லைனில் வந்த ஹபிபி நிதானமாக என்னை கடந்து போகையில் இனி இப்படி செய்யாதே என்று அழகாக ரிக்வெஸ்ட் செய்வது போல் கை மற்றும் தலையை ஆட்டி சைகை செய்துகொன்டு சென்றார் ஆனால் பலர் டிரைவிங்கின் போது மிரட்டல் சைகையும் செய்திருக்கிறார்கள்.
என்னைப்பொருத்தவரை வெளியே செல்லும் வேலை அதிகம் இல்லை, ஆனால் உடன்வேலை செய்யும் மற்றவர்கள் சொல்லும் போது மிகவும் கஷ்டமாக இருக்கும். இதையும் சகித்து கொண்டு இங்கே ஏன் வாழ்கிறோம் என்பதை மீண்டும் ஒரு முறை சொல்வதை விட சென்றமாதம் அறிமுகமில்லா ஒரு நண்பர் எழுதிய அயல்நாட்டு அகதிகள் என்கிற கவிதையை நம்ம பொஸ்தகத்தில் தேடிப் படித்துக்கொள்ளுங்கள்.
உள்ளூரிலேயே உழைத்து கந்தலாயிருந்தாலும் கசக்கி கட்டிக்கொண்டு கஞ்சி குடிப்பது உன்னதமானது, நான் பாவம் உள்ளூரில் விலைபோகாமல் வெளியூரில் இருக்கிறேன் என்பது தான் உண்மை, பணம் இன்று இருக்கிறது நாளை வேறொருவரிடம் இருக்கலாம் ஆனால் நல்லது, கெட்டது இரண்டும் இல்லாமல் வாழ்கிறோம். உள்ளூரில் இருப்பவர்களுக்கு இருக்கும் பல சௌகர்யங்கள் எங்களுக்கு இல்லை என்பதே நிதர்சனம். பொறாமை என்று சில நண்பர்கள் புலம்பியதால் கொஞ்சம் திசைமாறிவிட்டேனோ தெரியவில்லை. நேரமும் காலமும் கூடிவந்தால் அனைவருக்கும் இந்த வாய்ப்பு விரும்பும் போது கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதை தவிர வேறு வழி இல்லை.
இதை எழுத தூண்டியது சமீபத்தில் நான் இன்டர்நெட் கனெக்ஷ்னுக்காக எடிசலாட் அலைந்தபோது பார்த்தது. அங்கே ஒரு காலத்தில் மெஜாரிட்டியாய் வேலை செய்தவர்கள் இந்தியர்கள், இப்போது சென்றபோது ஒரு அலுவலகத்தில் வேலைபார்த்த அனைவருமே ஹபிபிகள் இரு பிலிப்பைனிகளைத்தவிர. பிலிப்பைனிகள் அவர்கள் நாட்டவர்களுக்கு கொஞ்சம் உதவிசெய்து கொண்டே பரபரப்பாக மற்றவர்களையும் கவனித்துக்கொண்டிருந்தார்கள். நானும் ஒரு இந்தியன் கூட இல்லையா என்று சுற்று முற்றும் பார்த்தேன், கடைசியில் ஒரு மலையாளி காஃபிபாயாக டீ கொடுத்துக்கொன்று வந்தார், எத்தனை நாளைக்கோ என்று நினைத்துக்கொண்டு அவர் ஃப்ரீ ஆவாரா என்ற கவனித்துக்கொண்டு இருந்தேன்.
அதுவோ வாடிக்கையாளர் அதிகமாக வரும் முக்கியமான ஒரு செண்டர், டோக்கன் நம்பர் எடுத்து நானும் வரிசையில் காத்திருந்தேன். சேவைக்காக காத்திருந்தவர்களில் என்னைப்போல் ஆசியாவை சேர்ந்தவர்கள் 95 சதவீதம், மற்றவர்கள் 5 சதவீதம். இந்தகிளை இருக்கும் ஏரியா இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் இடம் வேறு.
டோக்கன், வரிசை எல்லாம் அங்கு வரும் மற்றவர்களுக்கு மட்டுமே, வரும் ஹபிபிகளுக்கு எல்லாம் இது கிடையாது, அவர்கள் நேரிடையாக கவுண்டருக்கே சென்று தங்கள் வேலைகளை முடித்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். சரி அவர்கள் நாடு, அவர்கள் பாடு.
இந்தியர் மற்றும் மற்றவர்களை அட்டெண்ட் செய்யும் மற்றவர்கள் பெரும்பாலும் போனிலும், பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசுவதிலுமே நேரம் கடத்திக்கொண்டுருந்தார்கள். என்னுடைய நம்பர் 334லோ ஏதோ, நானும் ஒரு மணிநேரம் பார்க்கிங் போட்டுக்கொண்டு வழக்கம் போல் காத்திருந்தேன். 281 ஓடிக்கொண்டிருந்தது நான் சென்று அங்குள்ள ஒரு வேலை முடிந்து அதன்பின் செய்யவேண்டிய அதன் தொடர்ச்சிக்காக காத்திருந்தேன்.
45 நிமிடம் கழித்து பொருமையிழந்து ஒருவழியாய் மலையாளி ஃப்ரீ ஆனதும், இதை வேறு கிளையில் சென்று முடிக்கலாமா என்று கேட்டேன், என்னிடம் இருந்த பேப்பர்களை பார்த்துக்கொண்டு, ‘இனி அவிட போய்க்கோண்ணா, இது இனி எவிட வேணங்கிலும் சப்மிட் செய்யாம்‘ என்றார்.
அடுத்த செண்டரில் இருந்தது மும்பையை சேர்ந்த ஒரு முஸ்லீம் பெண் மற்றும் ஒரு ஹபிபி, அலுவலகமே காலியாய் இருந்தது, மும்பை பெண்ணிடம் கொண்டு கொடுத்ததுமே வந்தவேலை 5 நிமிடத்தில் முடிந்தது.
இந்தியர்கள் பெரும்பான்மையாய் இருந்தும், இந்த நாட்டின் முன்னேற்றத்திர்க்கு முக்கியமானவர்களாக இருந்தும் புறக்கணிக்கப்படுகிறார்களே என்பதுவே இதை எழுத தூண்டியது, நான் எப்போதும் நினைப்பது போல் இது அவர்கள் நாடு, அவர்கள் பாடு.
பாவம் நாங்க, எங்களையும் கொஞ்சம் கண்டுக்குங்க சார்.
அன்புடன்
வசந்தா நடேசன்.
Thursday, January 6, 2011
அயல்நாட்டு முரண்கள்
என்ன தலைப்பு இதற்க்கு வைப்பது என்று மண்டை காய்ந்துவிட்டது. சமீபத்தில் கவனித்த சில முரணைப்பற்றி எழுத உட்க்கார்ந்திருக்கிறேன். நான் வசிக்கும் துபாயில் பார்த்தது, இங்கோ பத்திரிகை சுதந்திரம் மருந்துக்கு கூட கிடையாது, உள்ள வைச்சி காய்ச்சிருவாங்களோன்னு கொஞ்சம் பயம் தான், இருந்தாலும் சொல்ல வந்ததை நாசூக்காய் சொல்லிவிடலாம் என்று துணிந்துவிட்டேன். (நாமல்லாம் பத்திரிகை தான் எழுதுரோமா சார்?)
உங்களில் அனேகம் பேருக்கு தெரிந்திருக்கும், இந்த நாட்டில் வசிப்பவர்கள் 80 சதவீதம் வெளிநாட்டினர்களே! அந்த வெளிநாட்டு 80 சதவீதத்தில் 70 சதவீதம் ஆசியாவை சேர்ந்தவர்கள், மீதி 30 சதவீதம் தான் மற்றவர்கள். எதிலோ படித்த ஒரு கமென்ட் ஞாபகம் வருகிறது. 'if they continue this then the locals will become foreigners in their own country' என்று எழுதியிருந்தார்கள், வேறு வழி இல்லை, அதுதான் உண்மை.
அது உண்மை என்பது இங்குள்ள லார்ஜெஸ்ட், பிக்கஸ்ட் மால்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், பஸ், மெட்ரோ இதையெல்லாம் பயன்படுத்துபவர்களைப் பார்த்தால் தெரியும். அதுவும் இங்குள்ள பர் துபாய் மீனா பஜார், க்ரீக் ரோடு, ஓல்டு பாகிஸ்தானி கவுன்ஸலேட் ஏரியாவிலெல்லாம் பார்த்தால் அது ஏதோ இந்தியாவில் ஒரு பெருநகரத்தின் தெருக்களில் நடப்பது போலவே இருக்கும். தப்பித்தவறி கண்ணில் படும் ஒரு சில ஹபிபிகள் வெளிநாட்டினர் போல் கண்ணுக்கு தெரிவார்கள்.
என்ன செய்வது, நாம் பிழைக்க வந்திருக்கிறோம் என்பதை அடிக்கடி ஞாபகம் வைத்துக்கொண்டு நாம் தான் இங்கே foreigner என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இங்குள்ள ஆசியர்களை எல்லாம் ஒரு நாள் ‘போங்கடா, உங்க விசா காலம் எல்லாம் முடிந்தது, எல்லோரும் ஊருக்கு போகலாம்‘ என்று சொல்லிவிட்டால் இங்கு பல பகுதிகள் வெகு சீக்கிரம் பாழடைந்து விடும். ஆசியர்களின் கடும் உழைப்பிலேயே இந்த நாடு வளர்ந்திருக்கிறது என்பது அப்பட்டமான உண்மை. அவர்களிடம் பெட்ரோல் இருந்தாலும் அதை எடுத்து மார்க்கெட் செய்து பணமாக்கிக்கொடுப்பது பெரும்பான்மையாய் ஆசியர்கள் தான்.
ஆனால் அந்த ஆசியர்களுக்கு இங்கே மரியாதை என்பது துளி கூட கிடையாது. நான் ஒரு ஹிந்து என்பதால் இதை சொல்வதாய் நினைக்கவேண்டாம், நம் நாட்டு முஸ்லீம்களுக்கும் இங்கே இதே நிலைதான்.
எப்போது ஆசியர்களின் மரியாதை குறைவு தெரியும் என்றால், இங்குள்ள அரசு அலுவலகங்களுக்கு சென்றால் தெரியும் ஆசியர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது. ஒரு காலத்தில் இந்தியர்களால் டாமினேட் செய்யப்பட்ட போஸ்ட் ஆபிஸ், வங்கிகள் எல்லாவற்றிலும் இப்போது Front Deskல் ஹபிபிகள் தான். சரியப்பா உங்கள் நாடு, உங்கள் பாடு என்று விட்டுவிடலாம். நீண்டு செல்லும் போல் தெரிவதால் இரண்டு உதாரணம் மட்டும் சொல்கிறேன்.
இப்போதெல்லாம் இங்குள்ள வங்கிகளில் எல்லாம் 30 வரைவோலைகளுக்கு (தமிழ்ங்க) மேலே இருந்தால் தான் கவுண்டரில் வாங்கிக்கொள்வார்கள், 29 என்றால் போ, போய் மெஷினில் போடு என்று சொல்லிவிடுவார்கள். எங்கள் அலுவலகத்தில் சராசரியாக மாதம் 300 செக் களுக்கு மேல் ரெமிட் செய்ய வேண்டியிருக்கும், வாரம் ஒருமுறை அல்லது இருமுறை வங்கிக்கு நம் ஆட்கள் செல்வார்கள். 29 செக் என்றால் அதை கொண்டு செல்வது இந்தியன் அல்லது பிலிப்பைனி அல்லது பாகிஸ்தானி போன்ற ஆசியர்கள் என்றால் அவனை ஓட ஓட மெஷினுக்கு துரத்துவார்கள், ஸ்டேட்மென்ட்டில் அது ஒரே நாளில் 29 லைன்கள் வரும், ஸ்டேஷனரி செலவு அதிகம் இப்படி பல இருந்தாலும் இதை ஒரு ஐரோப்பியன், வெள்ளை தோல் அல்லது ஒரு ஹபிபி என்றால் கேட்பதற்க்கு ஒரு நாதியும் இருக்காது, அவர்கள் 2 செக் என்றாலும் கவுண்டரில் கொடுத்துவிட்டு போய் கொண்டே இருப்பார்கள்.
நம்ம ஆளுக என்றால் 29 செக்கையும் மெஷினில் வைத்து அழுத்துவதை தவிர நமக்கு வேறு வழி இல்லை. இவன் வங்கி வேலை முடித்து அடுத்து பல வேலைகளை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருப்பான், அதெல்லாம் அவர்கள் பிரச்னை இல்லை என்பது போல் பார்த்துக்கொண்டேயிருப்பார்கள், ஆசியர்கள் அவர்களை பொருத்தவரை பிழைக்க வந்த நாதாரிகள் என்பது போல் இருக்கும், வெள்ளையர்கள் அப்படி அல்ல. ஆனால் உண்மையில் கொள்ளையடிப்பது யார் என்று தெரியாது. இன்னொரு அநியாயத்தை கேளுங்கள்.
இதே மரியாதை தான் கார்களுக்கு ஃபைன் கட்ட சென்றாலும். 2004அல்லது 2002ல் இங்கு ஒரு சட்டம் வந்ததாம். சொந்தமாய் தனிநபர் பெயரில் டெலிவரி வேன் வைத்திருந்தால் அதற்க்கு சன் பிலிம் ஒட்டிக்கொள்ளலாம், ஆனால் கம்பெனி பெயரில் உள்ள வண்டி என்றால் ஒட்டக்கூடாது. இது பலருக்கு தெரியாது, எங்களுக்கும் தெரியாது.
அடிக்கும் 50 டிகிரி வெயிலில் சன்பிலிம் ஒட்டாமல் டெலிவரி வேனில் உள்ளே இருப்பது ரொம்ப கஷ்டம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இது தெரியாமல் நம்ம பய புள்ள ஒண்ணு சமீபத்தில் அஜ்மான் சென்றுவிட்டது, சன்பிலிம் ஒட்டிக்கொண்டு. அதைப்பிடித்து முக்காலிஃபா கொடுத்து விட்டார்கள். 500 திர்கம் ஃபைன்.
எங்கள் அலுவலகத்தில் சன்பிலிம் ஒட்டுவது கம்பெனி செலவு வராது. எங்கள் முதலாளி அதை ஒட்ட ஏனோ விரும்புவதில்லை, அவன் வைத்திருக்கும் காரிலும் ஒட்டமாட்டான். அவன் டிரைவ் செய்வது குறைவு, ஆனால் டெலிவரி வேன் நாள் முழுவதும் வெளியில் அலைய வேண்டியது இருக்கும், கொஞ்சம் கஷ்டம். யார் வேண்டுமானாலும் அவரவர் வைத்திருக்கும் கம்பெனி வண்டியில் ஒட்டிக்கொள்ளலாம் சொந்த செலவில். நம்ம பய சமீபத்தில் வாங்கிய புது வேனில் எல்லாம் சொந்த சிலவிலேயே ஒட்டி வைத்திருந்தான். ஆக ஃபைன் பையன் தலையில் விழுந்தது.
சரி, இந்தமாச சம்பளத்துல கொஞ்சம் போயிற்று என்று அவனும் தண்டம் கட்ட சென்றான், அங்க போனால் இது சிவியர் குற்றம், இதற்க்கு ஒரு மாசம் வண்டிய உள்ள வைக்கணும், தோ, அங்க கொண்டு உட்டுட்டு போ, 1 மாசம் கழிந்து வந்து தண்டம் கட்டிட்டு வண்டிய எடுத்துக்க என்று சொல்லவும் பய அலரி அடித்து போன் செய்தான், பிலிம் ஒட்டினேன், இது குற்றமா என்றான். சரி 2 நாள் கழித்து வந்து விடுறேன்னு சொல்லிட்டு வந்து சேரு என்றேன்.
எனக்கு தெரியும் ஹபிபிகள் வெள்ளையர்களுக்கு பயப்படுவார்கள் என்பது, நம்ம முதலாளி தான் வெள்ளையனாயிற்றே. சொன்னேன் அவனிடம், என்ன செய்வது வண்டிய உள்ள உட்ரலாமா? அல்லது நீ போய் பேசிப்பார்க்கிறாயா என்றேன்.
உள்ள வுட்ரதா? நம்ம டெலிவரி எல்லாம் என்ன ஆறது? சரி நான் போகிறேன் என்று போனான். அவனுக்கு ராஜ மரியாதை கொடுத்து, வண்டி ஒன்னுதா, சரி சரி, பரவால்லை, சன்பிலிம் எடுத்திட்டு வண்டியைக்காட்டு, ஃபைன் மாத்திரம் கட்டிட்டு வண்டிய கொன்டு போ என்று விட்டார்கள். அவன் அவனது ரேஞ்ச்ரோவரில் சென்றிருந்தான், வண்டியை எங்க காட்ரது, சரி நாளை வண்டிய அனுப்பறேன்னு வந்துவிட்டான்.
என்னிடம் வந்து சொன்னதும், சரி முக்காலிஃபால எதும் எழுதி, கையெழுத்து வாங்கினாயா? என்றேன். (நம்ம ஆளுங்க இதிலெல்லாம் கரெக்ட்டா இருப்பாங்க, சரி மக்கா, மை ஃப்ரெண்ட், இதுல ஒரு கையெழுத்து போட்ருன்னு நாம வாங்கிட்டு தான் வருவோம்) இல்ல, அங்க நல்லா பேசினாங்க, ரொம்ப நல்லவங்க, ஹி ஈஸ் நவ் மை ஃப்ரண்ட், நீ நாளைக்கு அனுப்பு, எல்லாம் சரியாயிரும் என்று சொல்லி விட்டு நான் 2 நாள் பஹ்ரைன் விசிட் போரேன்னு சொல்லிட்டு போயிட்டான். எனக்கு நன்றாகத் தெரிந்தது, இது நடக்கப் போவதில்லையென்று, சரி போ என்று விட்டுவிட்டேன்.
அடுத்த நாள் நம்ம பய போனான் அங்கே, போனஉடனேயே முக்காலிஃபாவை வாங்கி டேட் ஸ்டாம்ப் வைத்து, சரி அங்கே கொண்டு வுட்டுட்டு போ எனவும், பய ஆடிப்போய், இல்ல, எங்க பாஸ் நேத்து வந்தாரு, அவுரு ஃப்ரண்ட்ன்னு ஏதேதோ சொல்லியும் ஒன்றும் நடக்கவில்லை, இவனை அந்த அலுவலகத்தின் உள்ளே இருந்த அதிகாரியைப்பார்க்கவே அனுமதிக்கவில்லை.
சாரிங்கோவ், இனி நாளை வருகிறேன், 2 பக்கம் ஆகிவிட்டது. சத்தியமாய் நாளை வருவேன், கிட்டத்தட்ட முடித்துவிட்டேன், ஆனால் பாருங்கள் முடியலை, நாளை சந்திப்போமா?
அன்புடன், வசந்தா நடேசன்.
உங்களில் அனேகம் பேருக்கு தெரிந்திருக்கும், இந்த நாட்டில் வசிப்பவர்கள் 80 சதவீதம் வெளிநாட்டினர்களே! அந்த வெளிநாட்டு 80 சதவீதத்தில் 70 சதவீதம் ஆசியாவை சேர்ந்தவர்கள், மீதி 30 சதவீதம் தான் மற்றவர்கள். எதிலோ படித்த ஒரு கமென்ட் ஞாபகம் வருகிறது. 'if they continue this then the locals will become foreigners in their own country' என்று எழுதியிருந்தார்கள், வேறு வழி இல்லை, அதுதான் உண்மை.
அது உண்மை என்பது இங்குள்ள லார்ஜெஸ்ட், பிக்கஸ்ட் மால்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், பஸ், மெட்ரோ இதையெல்லாம் பயன்படுத்துபவர்களைப் பார்த்தால் தெரியும். அதுவும் இங்குள்ள பர் துபாய் மீனா பஜார், க்ரீக் ரோடு, ஓல்டு பாகிஸ்தானி கவுன்ஸலேட் ஏரியாவிலெல்லாம் பார்த்தால் அது ஏதோ இந்தியாவில் ஒரு பெருநகரத்தின் தெருக்களில் நடப்பது போலவே இருக்கும். தப்பித்தவறி கண்ணில் படும் ஒரு சில ஹபிபிகள் வெளிநாட்டினர் போல் கண்ணுக்கு தெரிவார்கள்.
என்ன செய்வது, நாம் பிழைக்க வந்திருக்கிறோம் என்பதை அடிக்கடி ஞாபகம் வைத்துக்கொண்டு நாம் தான் இங்கே foreigner என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இங்குள்ள ஆசியர்களை எல்லாம் ஒரு நாள் ‘போங்கடா, உங்க விசா காலம் எல்லாம் முடிந்தது, எல்லோரும் ஊருக்கு போகலாம்‘ என்று சொல்லிவிட்டால் இங்கு பல பகுதிகள் வெகு சீக்கிரம் பாழடைந்து விடும். ஆசியர்களின் கடும் உழைப்பிலேயே இந்த நாடு வளர்ந்திருக்கிறது என்பது அப்பட்டமான உண்மை. அவர்களிடம் பெட்ரோல் இருந்தாலும் அதை எடுத்து மார்க்கெட் செய்து பணமாக்கிக்கொடுப்பது பெரும்பான்மையாய் ஆசியர்கள் தான்.
ஆனால் அந்த ஆசியர்களுக்கு இங்கே மரியாதை என்பது துளி கூட கிடையாது. நான் ஒரு ஹிந்து என்பதால் இதை சொல்வதாய் நினைக்கவேண்டாம், நம் நாட்டு முஸ்லீம்களுக்கும் இங்கே இதே நிலைதான்.
எப்போது ஆசியர்களின் மரியாதை குறைவு தெரியும் என்றால், இங்குள்ள அரசு அலுவலகங்களுக்கு சென்றால் தெரியும் ஆசியர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது. ஒரு காலத்தில் இந்தியர்களால் டாமினேட் செய்யப்பட்ட போஸ்ட் ஆபிஸ், வங்கிகள் எல்லாவற்றிலும் இப்போது Front Deskல் ஹபிபிகள் தான். சரியப்பா உங்கள் நாடு, உங்கள் பாடு என்று விட்டுவிடலாம். நீண்டு செல்லும் போல் தெரிவதால் இரண்டு உதாரணம் மட்டும் சொல்கிறேன்.
இப்போதெல்லாம் இங்குள்ள வங்கிகளில் எல்லாம் 30 வரைவோலைகளுக்கு (தமிழ்ங்க) மேலே இருந்தால் தான் கவுண்டரில் வாங்கிக்கொள்வார்கள், 29 என்றால் போ, போய் மெஷினில் போடு என்று சொல்லிவிடுவார்கள். எங்கள் அலுவலகத்தில் சராசரியாக மாதம் 300 செக் களுக்கு மேல் ரெமிட் செய்ய வேண்டியிருக்கும், வாரம் ஒருமுறை அல்லது இருமுறை வங்கிக்கு நம் ஆட்கள் செல்வார்கள். 29 செக் என்றால் அதை கொண்டு செல்வது இந்தியன் அல்லது பிலிப்பைனி அல்லது பாகிஸ்தானி போன்ற ஆசியர்கள் என்றால் அவனை ஓட ஓட மெஷினுக்கு துரத்துவார்கள், ஸ்டேட்மென்ட்டில் அது ஒரே நாளில் 29 லைன்கள் வரும், ஸ்டேஷனரி செலவு அதிகம் இப்படி பல இருந்தாலும் இதை ஒரு ஐரோப்பியன், வெள்ளை தோல் அல்லது ஒரு ஹபிபி என்றால் கேட்பதற்க்கு ஒரு நாதியும் இருக்காது, அவர்கள் 2 செக் என்றாலும் கவுண்டரில் கொடுத்துவிட்டு போய் கொண்டே இருப்பார்கள்.
நம்ம ஆளுக என்றால் 29 செக்கையும் மெஷினில் வைத்து அழுத்துவதை தவிர நமக்கு வேறு வழி இல்லை. இவன் வங்கி வேலை முடித்து அடுத்து பல வேலைகளை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருப்பான், அதெல்லாம் அவர்கள் பிரச்னை இல்லை என்பது போல் பார்த்துக்கொண்டேயிருப்பார்கள், ஆசியர்கள் அவர்களை பொருத்தவரை பிழைக்க வந்த நாதாரிகள் என்பது போல் இருக்கும், வெள்ளையர்கள் அப்படி அல்ல. ஆனால் உண்மையில் கொள்ளையடிப்பது யார் என்று தெரியாது. இன்னொரு அநியாயத்தை கேளுங்கள்.
இதே மரியாதை தான் கார்களுக்கு ஃபைன் கட்ட சென்றாலும். 2004அல்லது 2002ல் இங்கு ஒரு சட்டம் வந்ததாம். சொந்தமாய் தனிநபர் பெயரில் டெலிவரி வேன் வைத்திருந்தால் அதற்க்கு சன் பிலிம் ஒட்டிக்கொள்ளலாம், ஆனால் கம்பெனி பெயரில் உள்ள வண்டி என்றால் ஒட்டக்கூடாது. இது பலருக்கு தெரியாது, எங்களுக்கும் தெரியாது.
அடிக்கும் 50 டிகிரி வெயிலில் சன்பிலிம் ஒட்டாமல் டெலிவரி வேனில் உள்ளே இருப்பது ரொம்ப கஷ்டம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இது தெரியாமல் நம்ம பய புள்ள ஒண்ணு சமீபத்தில் அஜ்மான் சென்றுவிட்டது, சன்பிலிம் ஒட்டிக்கொண்டு. அதைப்பிடித்து முக்காலிஃபா கொடுத்து விட்டார்கள். 500 திர்கம் ஃபைன்.
எங்கள் அலுவலகத்தில் சன்பிலிம் ஒட்டுவது கம்பெனி செலவு வராது. எங்கள் முதலாளி அதை ஒட்ட ஏனோ விரும்புவதில்லை, அவன் வைத்திருக்கும் காரிலும் ஒட்டமாட்டான். அவன் டிரைவ் செய்வது குறைவு, ஆனால் டெலிவரி வேன் நாள் முழுவதும் வெளியில் அலைய வேண்டியது இருக்கும், கொஞ்சம் கஷ்டம். யார் வேண்டுமானாலும் அவரவர் வைத்திருக்கும் கம்பெனி வண்டியில் ஒட்டிக்கொள்ளலாம் சொந்த செலவில். நம்ம பய சமீபத்தில் வாங்கிய புது வேனில் எல்லாம் சொந்த சிலவிலேயே ஒட்டி வைத்திருந்தான். ஆக ஃபைன் பையன் தலையில் விழுந்தது.
சரி, இந்தமாச சம்பளத்துல கொஞ்சம் போயிற்று என்று அவனும் தண்டம் கட்ட சென்றான், அங்க போனால் இது சிவியர் குற்றம், இதற்க்கு ஒரு மாசம் வண்டிய உள்ள வைக்கணும், தோ, அங்க கொண்டு உட்டுட்டு போ, 1 மாசம் கழிந்து வந்து தண்டம் கட்டிட்டு வண்டிய எடுத்துக்க என்று சொல்லவும் பய அலரி அடித்து போன் செய்தான், பிலிம் ஒட்டினேன், இது குற்றமா என்றான். சரி 2 நாள் கழித்து வந்து விடுறேன்னு சொல்லிட்டு வந்து சேரு என்றேன்.
எனக்கு தெரியும் ஹபிபிகள் வெள்ளையர்களுக்கு பயப்படுவார்கள் என்பது, நம்ம முதலாளி தான் வெள்ளையனாயிற்றே. சொன்னேன் அவனிடம், என்ன செய்வது வண்டிய உள்ள உட்ரலாமா? அல்லது நீ போய் பேசிப்பார்க்கிறாயா என்றேன்.
உள்ள வுட்ரதா? நம்ம டெலிவரி எல்லாம் என்ன ஆறது? சரி நான் போகிறேன் என்று போனான். அவனுக்கு ராஜ மரியாதை கொடுத்து, வண்டி ஒன்னுதா, சரி சரி, பரவால்லை, சன்பிலிம் எடுத்திட்டு வண்டியைக்காட்டு, ஃபைன் மாத்திரம் கட்டிட்டு வண்டிய கொன்டு போ என்று விட்டார்கள். அவன் அவனது ரேஞ்ச்ரோவரில் சென்றிருந்தான், வண்டியை எங்க காட்ரது, சரி நாளை வண்டிய அனுப்பறேன்னு வந்துவிட்டான்.
என்னிடம் வந்து சொன்னதும், சரி முக்காலிஃபால எதும் எழுதி, கையெழுத்து வாங்கினாயா? என்றேன். (நம்ம ஆளுங்க இதிலெல்லாம் கரெக்ட்டா இருப்பாங்க, சரி மக்கா, மை ஃப்ரெண்ட், இதுல ஒரு கையெழுத்து போட்ருன்னு நாம வாங்கிட்டு தான் வருவோம்) இல்ல, அங்க நல்லா பேசினாங்க, ரொம்ப நல்லவங்க, ஹி ஈஸ் நவ் மை ஃப்ரண்ட், நீ நாளைக்கு அனுப்பு, எல்லாம் சரியாயிரும் என்று சொல்லி விட்டு நான் 2 நாள் பஹ்ரைன் விசிட் போரேன்னு சொல்லிட்டு போயிட்டான். எனக்கு நன்றாகத் தெரிந்தது, இது நடக்கப் போவதில்லையென்று, சரி போ என்று விட்டுவிட்டேன்.
அடுத்த நாள் நம்ம பய போனான் அங்கே, போனஉடனேயே முக்காலிஃபாவை வாங்கி டேட் ஸ்டாம்ப் வைத்து, சரி அங்கே கொண்டு வுட்டுட்டு போ எனவும், பய ஆடிப்போய், இல்ல, எங்க பாஸ் நேத்து வந்தாரு, அவுரு ஃப்ரண்ட்ன்னு ஏதேதோ சொல்லியும் ஒன்றும் நடக்கவில்லை, இவனை அந்த அலுவலகத்தின் உள்ளே இருந்த அதிகாரியைப்பார்க்கவே அனுமதிக்கவில்லை.
சாரிங்கோவ், இனி நாளை வருகிறேன், 2 பக்கம் ஆகிவிட்டது. சத்தியமாய் நாளை வருவேன், கிட்டத்தட்ட முடித்துவிட்டேன், ஆனால் பாருங்கள் முடியலை, நாளை சந்திப்போமா?
அன்புடன், வசந்தா நடேசன்.
Tuesday, January 4, 2011
நண்டு கறி
விடுமுறை நாட்கள் துபாயில் கொஞ்சம் விஷேசமானவை. நான் துபாயில் இருப்பதால் துபாய் என்கிறேன், இந்தியாவை விட்டு வெளியே வாழும் எல்லா இடங்களிலும் இப்படியே இருக்கக்கூடும். அதுவும் என்போல் குடும்பத்தை பிரிந்து பிழைப்பிற்க்காக பிரிந்து வாழ்பவர்களுக்கு இந்த இடையிடையே வரும் விடுமுறை நாட்கள் குதூகலமானவை.
நண்பர்கள் எல்லாம் ஓரிடத்தில் கூடி பேசி மகிழ்ந்து அரட்டைக்கச்சேரி நடத்தும் நாட்கள். தினமும் பாத்த மூஞ்சியையே பார்த்துக்கொண்டிருப்போம், ஒவ்வொரு வீட்டிலும் ஸ்டேண்டர்டாக ஒரு 7 நாள் மெனு இருக்கும். சனிக்கிழமை இது, ஞாயிற்றுக்கிழமை இது.. இப்படி எப்போதும் ஒரே ஃபுட். புதிதாக செய்வதற்க்கு நேரம் இருந்தாலும் மனம் வராது. இதுவே போதுமென்று ஒரே பாணியில் போய்க்கொண்டிருக்கும் .
என்னைப்பொருத்தவரை இங்கே இரண்டு நாள் சேர்ந்தார் போல் லீவு வருவது கொஞ்சம் அபூர்வம், அரசு துரைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு வெள்ளி. சனி இரண்டு நாட்களும் விடுமுறை. மற்றும் சிலபல ஸ்டேண்டர்டு பெரிய கம்பெனிகளுக்கும் அப்படியே.
நான் வேலை பார்ப்பதும் ஸ்டேண்டர்டு கம்பெனி தான், இருந்தாலும் எங்களுக்கு அப்படி இல்லை. வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை அரை நாள் வேலை எனக்கு. வெள்ளி விடுமுறை.
போனவாரம் கிறிஸ்மஸ் என்பதால், சனிக்கிழமை விடுமுறை, இந்தவாரம் புத்தாண்டு என்பதால் சனிக்கிழமை விடுமுறை.
போனவாரம் தஞ்சை மற்றும் கோவையைச்சேர்ந்த நண்பர்கள் இருவர் வீட்டிற்க்கு வந்திருந்தனர். தஞ்சைக்காரர் சிறந்த கைப்பக்குவம் கொண்டவர். நெய்ச்சோறும், மட்டன் குருமாவும் அவரது ஸ்பெஷாலிட்டி.
நேற்று நண்டு வைப்போமா? என்றார். நான் இதுவரை நண்டு சாப்பிட்டதில்லை. எங்கள் வீட்டிலோ அல்லது எங்கள் சொந்தபந்தங்களோ யாரும் இதுவரை வைத்ததில்லை, என் மனைவிக்கும் சமைக்கத்தெரியாது என்றே நினைக்கிறேன்.
ஸ்டார் ஹோட்டல்களில் நடக்கும் ஆபிஸ் டின்னர்களில் உடன் வேலைசெய்பவர்கள் எடுத்து சாப்பிடுவதை பார்த்திருக்கிறேன். நான் ஒதுங்கி விடுவேன், நான்வெஜ் என்றால் என்னைப்பொருத்தவரை, மட்டன், சிக்கன், மீன் மட்டுமே.
சரி வித்யாசமாக இருக்கட்டுமே என்று எல்லோரும் ஓகே என்றதால் இன்றைய ஸ்பெஷல் நண்டுகறியென முடிவாயிற்று. முடிவானதும் பரபரவென எல்லாம் வாங்கிவந்து மணக்க மணக்க நண்டு கறியும், நெய்ச்சோரும் ரெடியானது.
எல்லாம் முடிந்ததும் எல்லோரும் சுற்றி அமர்ந்து ஒரு வெட்டு வெட்டினோம். சும்மா சொல்லக்கூடாது, சூப்பர் என்று தான் சொல்லவேண்டும், ஓட்டை உடைத்து எப்படி சாப்பிடுவது என்பதும் கற்றுக்கொண்டேன். அருமை, அருமை என நீண்ட நாட்களுக்குப்பிறகு மிக அருமையான ஒரு சாப்பாடு.
அது ஏனோ நண்டு வாங்குவதென்றால் பௌர்ணமிக்கு பின்பு வளர்பிறையில் தான் வாங்க வேண்டுமாம், நண்டு கொழுத்து நன்கு வளர்ந்து இருக்குமாம்.., தேய்பிறையில் வாங்கினால் நண்டு தேய்ந்து மெலிந்து போய் இருக்குமாம், (தாய்குலம்லாம் நோட் பண்ணிக்கோங்க) என்ன லாஜிக்கோ புரியவில்லை ஆனால் நாங்கள் வாங்கிய நண்டுகள் எல்லாம் நன்கு கொழுத்திருந்ததாகவே நினைக்கிறேன். எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும் நண்டு ஓடுகள் ஓட்டை ஒடிசல் மலை போல் குமிந்திருந்தது!
அப்படியே நியூஇயர் பிளான்களும், எங்கு செல்வது என்ன செய்வது எல்லாம் முடிவாகி நியூஇயர் அன்று மதியம் சிக்கன்பிரியாணி என்றும் முடிவாகி அதுவும் அருமையாக கழிந்து விட்டது, (தப்பிச்சீங்க, பிரியாணி கதை படிக்கவேண்டி வராது!)
இனி ஒரு நீண்ட விடுமுறையில்லா காலத்திர்க்குள் கால் வைத்தது போல் உள்ளது. ஆம் இனி இங்கே நோண்புப்பெருநாள் வரும்வரை ஒரு நீண்ட நெடிய பயணம் போகவேண்டும். விடுமுறை இல்லா பெரும்பயணம். இப்போதே ஆபிஸில் ஆப்படிக்க ஆரம்பித்து விட்டார்கள்,
இரண்டு நாட்களாய் உங்களுடன் பேசக்கூட நேரமில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். லீவு எடுத்தில்ல, வீட்டுக்கு கொண்டுபோய் வேலைபாப்பியோ என்ன செய்வியோ எனக்கு இப்ப ரிப்போர்ட் வேணும்னு அடம் புடிக்கிராய்ங்க சார், அதுல வேர ஐரோப்பிர்களெல்லாம் ஜாலியாக அவர்களின் நீண்ட விடுமுறையைக் கொண்டாடிவிட்டு இன்று தான் திரும்பி வந்து விட்டதெல்லாம் இன்னைக்கே புடிக்கணும்னு பறக்கிறாங்க, அஞ்சமாட்டோம்ல வந்த அத்தனை ஈமெயில்களுக்கும் ஆப்படித்தாகிவிட்டது. நேற்று எங்கடா போனீங்கன்னா, பயபிள்ளைகளுக்கு சனிகிழமை நியூஇயர் வந்ததால் திங்கள் லீவாம், இந்த வயித்தெரிச்சலை எங்கபோயி சொல்வது?
யாரவது ஒரு லண்டன் விசா குடுங்க சார், நல்லா இருப்பீங்க.
அன்புடன், வசந்தா நடேசன்.
நண்பர்கள் எல்லாம் ஓரிடத்தில் கூடி பேசி மகிழ்ந்து அரட்டைக்கச்சேரி நடத்தும் நாட்கள். தினமும் பாத்த மூஞ்சியையே பார்த்துக்கொண்டிருப்போம், ஒவ்வொரு வீட்டிலும் ஸ்டேண்டர்டாக ஒரு 7 நாள் மெனு இருக்கும். சனிக்கிழமை இது, ஞாயிற்றுக்கிழமை இது.. இப்படி எப்போதும் ஒரே ஃபுட். புதிதாக செய்வதற்க்கு நேரம் இருந்தாலும் மனம் வராது. இதுவே போதுமென்று ஒரே பாணியில் போய்க்கொண்டிருக்கும் .
என்னைப்பொருத்தவரை இங்கே இரண்டு நாள் சேர்ந்தார் போல் லீவு வருவது கொஞ்சம் அபூர்வம், அரசு துரைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு வெள்ளி. சனி இரண்டு நாட்களும் விடுமுறை. மற்றும் சிலபல ஸ்டேண்டர்டு பெரிய கம்பெனிகளுக்கும் அப்படியே.
நான் வேலை பார்ப்பதும் ஸ்டேண்டர்டு கம்பெனி தான், இருந்தாலும் எங்களுக்கு அப்படி இல்லை. வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை அரை நாள் வேலை எனக்கு. வெள்ளி விடுமுறை.
போனவாரம் கிறிஸ்மஸ் என்பதால், சனிக்கிழமை விடுமுறை, இந்தவாரம் புத்தாண்டு என்பதால் சனிக்கிழமை விடுமுறை.
போனவாரம் தஞ்சை மற்றும் கோவையைச்சேர்ந்த நண்பர்கள் இருவர் வீட்டிற்க்கு வந்திருந்தனர். தஞ்சைக்காரர் சிறந்த கைப்பக்குவம் கொண்டவர். நெய்ச்சோறும், மட்டன் குருமாவும் அவரது ஸ்பெஷாலிட்டி.
நேற்று நண்டு வைப்போமா? என்றார். நான் இதுவரை நண்டு சாப்பிட்டதில்லை. எங்கள் வீட்டிலோ அல்லது எங்கள் சொந்தபந்தங்களோ யாரும் இதுவரை வைத்ததில்லை, என் மனைவிக்கும் சமைக்கத்தெரியாது என்றே நினைக்கிறேன்.
ஸ்டார் ஹோட்டல்களில் நடக்கும் ஆபிஸ் டின்னர்களில் உடன் வேலைசெய்பவர்கள் எடுத்து சாப்பிடுவதை பார்த்திருக்கிறேன். நான் ஒதுங்கி விடுவேன், நான்வெஜ் என்றால் என்னைப்பொருத்தவரை, மட்டன், சிக்கன், மீன் மட்டுமே.
சரி வித்யாசமாக இருக்கட்டுமே என்று எல்லோரும் ஓகே என்றதால் இன்றைய ஸ்பெஷல் நண்டுகறியென முடிவாயிற்று. முடிவானதும் பரபரவென எல்லாம் வாங்கிவந்து மணக்க மணக்க நண்டு கறியும், நெய்ச்சோரும் ரெடியானது.
எல்லாம் முடிந்ததும் எல்லோரும் சுற்றி அமர்ந்து ஒரு வெட்டு வெட்டினோம். சும்மா சொல்லக்கூடாது, சூப்பர் என்று தான் சொல்லவேண்டும், ஓட்டை உடைத்து எப்படி சாப்பிடுவது என்பதும் கற்றுக்கொண்டேன். அருமை, அருமை என நீண்ட நாட்களுக்குப்பிறகு மிக அருமையான ஒரு சாப்பாடு.
அது ஏனோ நண்டு வாங்குவதென்றால் பௌர்ணமிக்கு பின்பு வளர்பிறையில் தான் வாங்க வேண்டுமாம், நண்டு கொழுத்து நன்கு வளர்ந்து இருக்குமாம்.., தேய்பிறையில் வாங்கினால் நண்டு தேய்ந்து மெலிந்து போய் இருக்குமாம், (தாய்குலம்லாம் நோட் பண்ணிக்கோங்க) என்ன லாஜிக்கோ புரியவில்லை ஆனால் நாங்கள் வாங்கிய நண்டுகள் எல்லாம் நன்கு கொழுத்திருந்ததாகவே நினைக்கிறேன். எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும் நண்டு ஓடுகள் ஓட்டை ஒடிசல் மலை போல் குமிந்திருந்தது!
அப்படியே நியூஇயர் பிளான்களும், எங்கு செல்வது என்ன செய்வது எல்லாம் முடிவாகி நியூஇயர் அன்று மதியம் சிக்கன்பிரியாணி என்றும் முடிவாகி அதுவும் அருமையாக கழிந்து விட்டது, (தப்பிச்சீங்க, பிரியாணி கதை படிக்கவேண்டி வராது!)
இனி ஒரு நீண்ட விடுமுறையில்லா காலத்திர்க்குள் கால் வைத்தது போல் உள்ளது. ஆம் இனி இங்கே நோண்புப்பெருநாள் வரும்வரை ஒரு நீண்ட நெடிய பயணம் போகவேண்டும். விடுமுறை இல்லா பெரும்பயணம். இப்போதே ஆபிஸில் ஆப்படிக்க ஆரம்பித்து விட்டார்கள்,
இரண்டு நாட்களாய் உங்களுடன் பேசக்கூட நேரமில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். லீவு எடுத்தில்ல, வீட்டுக்கு கொண்டுபோய் வேலைபாப்பியோ என்ன செய்வியோ எனக்கு இப்ப ரிப்போர்ட் வேணும்னு அடம் புடிக்கிராய்ங்க சார், அதுல வேர ஐரோப்பிர்களெல்லாம் ஜாலியாக அவர்களின் நீண்ட விடுமுறையைக் கொண்டாடிவிட்டு இன்று தான் திரும்பி வந்து விட்டதெல்லாம் இன்னைக்கே புடிக்கணும்னு பறக்கிறாங்க, அஞ்சமாட்டோம்ல வந்த அத்தனை ஈமெயில்களுக்கும் ஆப்படித்தாகிவிட்டது. நேற்று எங்கடா போனீங்கன்னா, பயபிள்ளைகளுக்கு சனிகிழமை நியூஇயர் வந்ததால் திங்கள் லீவாம், இந்த வயித்தெரிச்சலை எங்கபோயி சொல்வது?
யாரவது ஒரு லண்டன் விசா குடுங்க சார், நல்லா இருப்பீங்க.
அன்புடன், வசந்தா நடேசன்.
Subscribe to:
Posts (Atom)