Sunday, April 10, 2011

அன்னா ஹஸாரே/ரஜினி/கமல்/விஜய்/அஜித்..



சமீபத்தில் படித்ததில் மனதை கவர்ந்தது.. உங்களுக்காக அப்படியே இங்கே....


கடந்த 5 நாட்களாக இந்தியாவே ஒரு புதிய புரட்சிக்காக ஆயத்தமானது, அன்னா ஹஸாரே என்ற 73 வயது காந்தியவாதியின் தலைமையில். ஆனால் இது ஆட்சி மாற்றத்துக்கான புரட்சி அல்ல. ஊழலுக்கு எதிரான புரட்சி.

'India against corruption' என்ற முழக்கம் மாநிலம், மொழிகள், இனங்கள் போன்ற அனைத்து தடைகளையும் தாண்டி இந்தியா முழுக்க எதிரொலித்தது. அனைத்துத் துறை சார்ந்தவர்களும் அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவுக் குரல் கொடுக்கத் தவறவில்லை.

குறிப்பாக இளைஞர்கள் அத்தனை துடிப்புடனும் ஆர்வத்துடனும் அந்த முதியவருடன் தோளொடு தோள் நிற்க ஓடி வந்தனர்.

பாலிவுட் எனப்படும் மும்பை திரையுலகமே ஹஸாரேவுக்கு ஆதரவாக ஓடிவந்தது. அமிதாப், ஆமீர்கான், ஷாரூக்கான், அனுபம்கெர், விவேக் ஓபராய், ப்ரியங்கா சோப்ரா, தீபிகா, தெலுங்கு நடிகர் மோகன்பாபு.... இப்படி ஏராளமானோர் அவருக்கு ஆதரவு கொடுத்து ஊழலை ஒழிக்க வேண்டும் என்று முழக்கமிட்டார்கள்.

ஆனால் தென்னிந்தியாவின் முக்கிய கவன ஈர்ப்பாகத் திகழும் தமிழ்த் திரையுலகம் மட்டும் கப் சிப்பென்று இருந்தது இந்த 5 நாட்களும். சூப்பர் ஸ்டார் தொடங்கி சுள்ளான் ஸ்டார்கள் வரை யாரும் இதுகுறித்துப் பேசவே இல்லை.

குறிப்பாக சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள், தங்கள் தலைவர் தேர்தலுக்கு வாய்ஸ் தராவிட்டாலும், ஹஸாரேவுக்கு ஆதரவாக குரல் கொடுப்பார் என்று எதிர்ப்பார்த்தனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

எனக்கு அரசியல் வேண்டாம், சாதி வேண்டாம், சாமியும் வேண்டாம், குடிமகனாக நின்று அரசியலை சுத்தப்படுத்த முடியும் என்று மேடை தோறும் பேசி வரும் கமல்ஹாஸனும் கூட அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சரி, அப்படிக் குரல் கொடுத்தால் அரசியலாகிவிடுமோ என இவர்கள்தான் யோசித்துக் கொண்டிருந்தார்கள்... ஊழலுக்கு எதிரான கட்சி என்று பெரிதாக விளம்பரப் படுத்திக் கொள்ளும் விஜயகாந்த் என்ன செய்து கொண்டிருந்தார்? நாளொரு வேண்டாத பரபரப்புகளை பிரச்சாரத்தில் கிளப்பிக் கொண்டிருந்தாரே தவிர, ஹஸாரேவுக்கு மறந்தும் கூட குரல் கொடுக்க முன்வரவில்லை.

சரி... புதிதாக கட்சி தொடங்குவேன், ஆட்சியைப் பிடிப்பேன் எனக் கூறிவரும் இளம் நடிகரான விஜய், அரசியலில் குதிக்க நாள் பார்த்துக் கொண்டிருக்கும் அஜீத், காற்றில் பஞ்ச் டயலாக் அடிக்கும் அசகாய சூரர்கள் தனுஷ், சிம்பு, ஓங்கிடிச்சா ஒன்றரை டன் எடை என்று சினிமாவில் வீரம் பேசும் சூர்யா, நான்கு படங்களில் நடித்து முடிப்பதற்குள் 100 பேரை அடிக்கும் ஆக்ஷன் ஹீரோவாகிவிட்ட கார்த்தி... சீஸனுக்கு சீஸன் நிறம் மாறும் சத்யராஜ்.... ம்ஹூம்.. ஒருவரும் ஊழலுக்கு எதிராக ஒரு சின்ன அசைவைக் கூட காட்டவில்லை.

'இதானா இந்த அட்டைக் கத்திகளின் நேர்மையும் வீரமும்' என நக்கலாய்ச் சிரிக்கிறது, ஊழலை வாழ்க்கையின் அங்கமாக ஏற்றுக் கொண்ட தமிழகம்!

நன்றி...தமிழ்.ஒன்இந்தியா

அன்புடன், வசந்தா நடேசன்.

டிஸ்கி :- எப்டியாது நாடு திருந்துனா சரிதாம்ப்பூ... இனி என் வேலை நெருக்கடிகள் தீரும்வரை காப்பி/பேஸ்ட்தாம்பூ..

Saturday, April 2, 2011

இப்ப காஷ்மீரை குடு??



இந்த படத்திற்கு விளக்கம் தேவையில்லை!!!

அன்புடன், வசந்தா நடேசன்.

Monday, March 28, 2011

விடுமுறை..

நண்பர்களே..

உடன் இருந்த ஒரு நண்பரை ஹார்ட் அட்டாக்கிற்க்கு பலி கொடுத்துவிட்டு சோகத்தில் இருப்பதால், நான் எழுத வருவதற்கு இன்னும் கொஞ்சம் நாட்கள் ஆகும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் வரும் இரண்டாம் தியதி (02.04.2011) என் குடும்பத்தினர் இங்கே துபாய் வந்து விடுவர், பள்ளி விடுமுறையை கழிப்பதற்க்காக. நானும் அதை மிக எதிர்பார்த்திருக்கிறேன்.. இப்போது நண்பரை இழந்த சோகத்திலிருந்து விடுபட...

அலுவலகத்திலும் வேலை நெருக்கடி அதிகம், வருடக்கடைசி என்பதால் (அக்கவுண்டிங் இயர் எண்ட்).. அனேகமாய் ஏப்ரில் கடைசியில் அலுவல் நெருக்கடிகள் முடியும், மே மாதம் என் பதிவுகளை மீண்டும் துவங்க முடியும் என எண்ணுகிறேன்.

இது வரை தொடர் வருகை புரிந்து ஆதரவழித்த அனைத்து நண்பர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்ள கடமை பட்டுள்ளேன். நெருங்கிய நண்பர்கள் கைபேசி வழியாக கால் பண்ணி தேட ஆரம்பித்துவிட்டதால் இதனை எழுத வந்தேன். கிட்டதட்ட ஏழு ஆண்டுகள் உடன் வசித்த நண்பரை இழப்பது மிக துயரம், வேறு ஏழுதுவதற்கு இப்போதைக்கு ஏதுமில்லை.. வருகிறேன், இரண்டு மாதங்கள் கழித்து இன்னொரு சமயம் சந்திப்போம். மீண்டும் நன்றி.

அன்புடன், வசந்தா நடேசன்.

Wednesday, March 23, 2011

டும், டும், டும்..












ரகு சிக்கன் பிரியாணி சாப்பிட்டுக்கொண்டிருந்தார், நான் மண்டை காய்ந்து போய் இருந்தேன்.. நிமிடத்திற்கு நிமிடம் என் பிரஷர் ஏறிக்கொண்டிருந்த சமயம் அது. ரகுவின் மகள் கல்யாணம் குறித்த கவலை அவரை விட எனக்குத்தான் அதிகம்.

ரகுவின் மகள் கல்யாணம் பற்றி நினைத்து அவரது நண்பனாகிய நான் ஏன் உழன்று கொண்டிருந்தேன். பெண்ணுக்கு மாப்பிள்ளையை பிடித்து விட்டது, மாப்பிள்ளைக்கு பெண்ணை பிடித்து விட்டது, பணப்பிரச்னை இல்லை.. என்பதையும் சொல்ல வேண்டும்.. வேறு என்ன அவ்வளவு பிரச்னை என்று நீங்கள் மண்டை காயலாம்.. அதற்குத்தான் இந்த கதை, தொடரவும்!

அதுக்கு முன்னால ரகுவை பற்றி கொஞ்சம் முன்னுரை கதையின் போக்குக்கு மிக அவசியமாய் இருப்பதால் கொஞ்சம், வாங்க பழகலாம். அப்டியே கதைக்குள்ள நுழைஞ்சிரலாம் கவலை வேண்டாம்.

ரகு இப்போது 50 வயது ஆசாமி. இளமையிலேயே துபாய் வந்துவிட்ட துபாய் வாசி.. ஆரம்ப காலங்களில் சிறு வேலையில் சேர்ந்து பின்னர் படிப்படியாய் உயர்ந்தவர். ஆரம்ப காலங்களில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறையும் இப்போதெல்லாம் ஆண்டுக்கு இரண்டு முறையும் ஊர் சென்று வரும்போது மட்டும் குடும்பஸ்தன் மற்றபடி என்னை போன்று துபாயில பேச்சுலரு.

ரகுவுக்கு ஒரு மகள் மட்டும், மனைவி 15 ஆண்டுக்கு முன் விவாகரத்து வாங்கி விட்டார்.. இருவரும் மகளின் நலனுக்காக வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை. மகள் இப்போது ஊரில் அம்மாவிடம். ரகு வருடத்துக்கிரு முறை ஊருக்கு சென்று மகளுடன் பொழுதை கழித்து வருவார். மகள் இப்போது டாக்டருக்கு படித்து கடைசி வருடம் பரீச்சையை எழுதிக்கொண்டிருக்கிறார்..

என்ன காரணத்தால் விவாகரத்து என்று தெரிந்து கொள்ள உங்களைப்போல் எனக்கும் ஆசை தான், என்ன செய்வது மனுஷன் அது குறித்து பேச்சு வந்தாலே மூட் அவுட் ஆகி விடுவதால் சத்தியமா எனக்கு தெரியாது.. பின்னர் தெரிய வந்தால் அவசியம் சொல்கிறேன்.

ரகுவின் சமூகத்தை சேர்ந்த ஒரு துபாய் நண்பர் அமெரிக்காவில் வேலை செய்யும் தன் மகனுக்கு இவர் மகளை திருமணம் செய்து வைக்க பெண் கேட்டதில் ஆரம்பித்தது இந்த கதையின் ஆரம்பம். அந்த பையன் ஒரு முறை துபாய் வந்தபோது ரகு பார்த்து பழகி இவருக்கும் பிடித்து விட்டது.

இருவரும் முதலில் பையனுக்கு போட்டோவை காண்பித்து சம்மதமா என்று கேட்டு, பையனும் விரும்பி உடனே பெண் மொபைல் நம்பர் வேண்டும் என்று கேட்டதால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அதிரடியாய் ஆரம்பம் ஆனது..

ரகு மனைவியிடம் நேரில் இதை விளக்க முடியாது, இவர் சம்பந்தப்பட்டது தெரிந்தாலே மனைவி மறுத்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் வந்து விட்டது அவருக்கு, இருவரும் பேசியே பல வருடங்கள் ஆகி விட்டதாம். மகள் விஷயத்தில் இவர் வடக்கு என்றால் அவர் தெற்கு என்பதே வழக்கம். இதை நன்கு உணர்ந்திருந்ததால் ரகுவின் டெல்லி நண்பரை வைத்து அவரின் நண்பர் தான் அமெரிக்க மாப்பிள்ளையின் அப்பா என்பது போல் ஒரு திரைக்கதை உருவாக்கி கல்யாணம் வரை எப்படி கொண்டு செல்வது என்பது பற்றி கதைவசனம் எல்லாம் ரெடியாக்கி ஒரு வெற்றிக்கதையாக்கிய (கல்யணமாக்கிய) வெற்றி இயக்குனர் அடியேன் தான்.. எல்லாம் பக்கா பிளான். ம்ம்ம், பிச்சு புடுவம்ல பிச்சு....

ரகுவின் டெல்லி நண்பருக்கு ஒரு கெஸ்ட் ரோல் கொடுத்து கதையில் அறிமுகம் செய்யப்பட்டார். கதைப்படி அவர் இதற்காகவே ஊர் சென்று தற்செயலாய் மம்மியை பார்ப்பது போல் பார்த்து வேறு விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டு இடையில் சாணக்கியத்தனமாய் இந்த வரண் குறித்து பேசிவிட வசனம் எழுதிக்கொடுக்கப்பட்டது.

சும்மா சொல்லக்கூடாது, சொல்லிக்கொடுத்தது போல் கெஸ்ட் ரோலில் அசத்தி விட்டார். எல்லாம் பேசி விட்டு கடைசியில் கிளம்புவதற்கு முன் ஏதோ ஞாபகம் வந்தது போல் அவருடைய(?) நண்பரின் அமெரிக்க மகன் குறித்தும், அவனுக்கு வரண் பார்க்க வேண்டும் என்றும் உங்கள் மகளை பேசிமுடித்தால் என்ன என்று கேட்டு, யோசித்து சொன்னால் அவர்களை வரண் பார்க்க வரச்சொல்வதாய் ஒரு பிட்டை போட்டு விட்டு சென்றுவிட்டார்.

மம்மிக்கு முதலில் ஒரு தயக்கம் நாம் சொன்னால் இந்த மனுஷன் சம்மதிப்பானோ?? என்று ரகுவை குறித்து. என்ன இருந்தாலும் ரகு மகளின் தந்தை அல்லவா? என்று யோசிக்க ஆரம்பித்து விரைவிலேயே நான் எதிர்பார்த்தது போல் ஆணவம் தலைக்கேறி என் மகள், நான் தான் முடிவெடுக்க வேண்டும், அவரை கேட்க அவசியம் இல்லை.. மகளிடம் கேட்கலாம் அவள் சரியென்றால் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று மகள் வந்ததும் இது குறித்து கேட்டிருக்கிறார்.

மகளிடம் இது குறித்து ரகு ஏற்கெனவே சொல்லி நம் கதையை ஏற்கெனவே அவுட் ஆக்கி விட்டதால், திட்டம் அனைத்தும் தெரிந்த மகள், இப்படியாவது இவர்கள் சேர்கிறார்களா பார்க்கலாம் என்று, ம்ம்ம், பார்க்கலாம் என்றதும் மம்மிக்கு அடுத்து என்ன செய்வது என்ற கவலை ஆரம்பித்தது. பையன் போட்டோ வாங்கலாம் பார்த்து மகளுக்கு பிடித்து ஜாதகமும் பொருந்தியிருந்தால் பின்னர் ரகு குறித்து கவலைப்படலாம் என்று அடுத்த நாளே டெல்லி நண்பருக்கு போன் வந்தது, கதைப்படி வரவேண்டும், நாம யாரு?

பையன் போட்டோவும், ஜாதகமும் கேட்டு கால் வந்ததும், ஏற்கெனவே ரகுவினால் பொருத்தம் பார்க்கப் பட்டு ஜாதகம் பொருந்திய பின்பே நம் கதை ரெடியாகி இருந்ததால் நோ ப்ராப்ளம். நண்பர் ஊரிலேயே இருந்ததால் அடுத்த நாளே போட்டோ மற்றும் ஜாதகம் கொடுக்கப்பட்டது.

ஜாதகம் நல்ல பொருத்தம், மகளுக்கு பையனை பிடித்து விட்டது எனக்கு டென்ஷனும் கூடவே. ரகு சிக்கன் சாப்பிட்டுக்கொண்டு பல் குத்திக்கொண்டிருந்த போது ஊரிலிருந்து போன் வந்தது. நண்பர் பேசினார், ஆல் ஓகே.. அப்புறம் என்ன?

கல்யாணத்தை பொருத்த வரை ரகுவின்/அப்பாவின் முக்கியத்துவம் குறித்து மம்மிக்கு புரியும் படி எடுத்துரைக்கப்பட்டது, டெல்லி நண்பர் நான் வேண்டுமானால் இப்படி பேசிப்பார்க்கவா என்று நம் திட்டப்படி கேட்கவும், மம்மியிடம் இருந்து எதிர்பார்த்த தகவல் வந்தது. அதாவது பெண் பார்க்க வரும்போது ரகு துபாயில் இருந்து வேலை அதிகம் என்பதால் வரமுடியாது ஆனால் திருமணத்திற்கு வருவார் என்பது போல் மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லிவிடலாம், பையனுக்கு பெண்ணை பிடித்து பெண்ணுக்கும் பையனை பிடித்தால் பின்னர் ரகுவை திருமணத்திற்கு அழைத்து வர டெல்லி பொருப்பேற்றுக்கொண்டது நம் திட்டப்படி!

மாப்பிள்ளை மற்றும் அவர் அப்பா அம்மா தவிர அவர் உறவினர் யாருக்கும் என் திட்டம் தெரியாது என்பதும் இந்த கதையை படிப்பவர்களுக்கு ஆர்வத்தை அதிகப்படுத்தும் கூடுதல் செய்தி!

பெண் பார்த்து பேசி முடித்து கல்யாணத்திற்கு குறித்திருந்த நாளும் வந்தது. ரகு திட்டப்படி கல்யாணத்தன்று காலை பெண் அழைப்பிற்கு முன் பதினைந்து வருடத்திற்கு பின் அந்த வீட்டிற்குள் நுழைந்தார், பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி, மம்மியின் முகத்தில் பெருமிதம் அவர் நினைத்தபடி கதை நடக்கிறதாம்.. டயலாக் உதவிக்காக உடனிருந்த எனக்கு இன்னும் டென்ஷன் ஏறிக்கொண்டிருந்தது..

பெண் அழைப்பு முடிந்து நல்லபடியாய் பெண் கழுத்தில் தாலி ஏறியது. ஆக நம் திரைக்கதை, டைரக்ஷ்ன் எல்லாம் நல்லபடியாய் முடிந்து ‘டும், டும், டும்‘ வெற்றிகரமாய் நடந்து முடிந்தது.

ஆள உடுரா சாமி ன்னு தாலி ஏறியதும் எனக்கு வந்த ஒரு மூச்சு இருக்கிறதே, நிம்மதிப்பெருமூச்சு.. செம ரிலாக்ஸ், வாழ்க்கையில் இதற்குமுன் அதை அனுபவித்ததில்லை!

என்ன எனக்கு ஒரு சிறு வருத்தம், நான் பிரிந்தவர் கூடிட விரும்பி கொஞ்சம் அதிகமாய் வசனம், திரைக்கதை ரெடி பண்ணி வைத்திருந்தேன். அதற்கு வேலை இருக்கவில்லை. எல்லாம் எடிட் ஆகி விட்டது?

ரகுவும், மம்மியும் சேர்ந்து நின்று போட்டோ எடுத்துக்கொண்டதும், புன்னகைத்ததும் தான் நடந்தது, கடைசி வரை பேசிக்கொள்ளாமலேயே சமாளித்து விட்டார்கள், நான் ஆர்வத்துடன் பார்க்க, பார்க்க?? ம்ம், காலம் இனி அவர்களை சேர்த்துவைக்கக்கூடும்.

அன்புடன், வசந்தா நடேசன்.

படங்கள் கூகிளில் திருடப்பட்டது, சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பார்ளாக!

மதிமுக முத்து

கடலுக்குள் முக்குழித்து
முத்துக்கள் எடுத்து வந்தேன்.
எடுத்து வந்த அத்தனையும்
என்ன சொல்ல? சொத்தை முத்து!

கெட்டதென் விதியென்று
சுற்று முற்றும் தேடிப்பார்த்தால்..
ஒற்றை முத்து நல்முத்து,
கண்களுக்கு நல்விருந்தாய்.

ஆசையுடன் அள்ளி அதை
ஆதரித்து வைத்திருந்தேன்.
கழுத்தினிலே கோர்த்திடலாம்,
கைவளையில் பதித்திடலாம்,

மோதிரத்தில் பதித்து வைத்து,
விரல்களுக்கு அளித்திடலாம்!
காலம் அது கனிந்து வர
காத்திருந்தேன் தேர்ந்தெடுக்க.

பம்பரமாய் அது சுழன்று
ட்சுனாமியாய் சுற்றியது.
முடிந்து போன முன் ஜென்மத்தில்
ஜெயித்து வந்த கூட்டத்தில்
போர்வாளாய் இருந்ததுவாம்!

பெருமைக்கு மாவிடித்து,
புலி, எலியென்று...
சிங்கத்திடம் கதைசொல்லி
சீரழிந்து போனதுவோ!

என் செய்வேன், ஐயய்யோ!
ஆதரித்து அரவணைத்து
தோள் கொடுக்க முனைகையிலே
ஆர்பரித்த கடலுக்குள்
தவறியது விழுந்ததுவோ?

இருக்கும் இடம் நினைத்து
அவர் இஷ்டப்படி வாழ்ந்திராமல்
தன்னிலை பெரிதென்று
தண்ணீரில் மூழ்கியதோ?

தன்மானம் பெரிதென்று
தனித்து போட்டியிட்டு
வெற்றியென்ன, தோல்வியென்ன..
வீரம் தேவை தானே?

தமிழகம் பெருமை கொள்ள
தமிழர்கள் பெருமை போற்ற
அடுத்தவர் நலமாய் வாழ
ஆவலாய் விளைந்த முத்தே!

வந்திடல் வேண்டும் இங்கு,
தந்திடல் வேண்டும் வாக்கு.
புறக்கணிப்பு வேண்டாம் முத்தே,
கனிந்தழைக்கின்றோம் வாராய்!

மனம் கனத்து அழைக்கின்றோம் வா!


அன்புடன், வசந்தா நடேசன்.

டிஸ்கி :- நான் மதிமுக அனுதாபி இல்லை.. மக்கள் கூட்டணி நாமல்லாம்.. மக்களுடனும், கடவுளுடனும் தான் கூட்டணி. (மக்களுடனும், ஜெயலலிதா அம்மாவுடனும் அல்ல..) ஹே, இவன் தே.மு.தி.க/அ.தி.மு.க ன்னு நினைச்சுராதீங்க?? அப்புறம் நான் மஞ்ச துண்டை தலையில் போட்டபடி போகவேண்டியது தான். ம்ம்ம், இவன் திமுக வா?? அந்த அழுகின மாம்பழத்தை எடுத்து தலைல போடுறா.. அப்டீன்னு வராதீங்க, நான் அப்புறம் அறுவா, சுத்தின்னு எடுத்துருவேன். நீங்க அப்புறம் தாமரைக்குழத்தில் போய் விழ வேண்டியது தான்!

மண்டை காஞ்சி நான் எந்த கட்சி என்று நினைத்து எதையும் மனதில் வைத்து யாரும் கும்மிடாதீங்கோ, நான் ஒரு நடுநிலை வாக்காளன்.. அப்டீன்னு சொல்ல வந்தேன். வைகோ தனித்து நின்றிருந்தால் நிச்சயம் அவருக்குத்தான் இந்த முறை என் வாக்கு, (புலிகளை பற்றியும், ஸ்டெர்லைட் பற்றியும் அரைத்த மாவையே அரைக்காமல் புதிதாய் பிறந்து வந்தது போல் அதிமுக மற்றும் திமுக வை எதிர்த்தும் தமிழக மக்கள் பிரச்னைகளை வைத்தும் மாத்திரம் பிரச்சாரம் செய்தால்!) ம்ம்ம்ம்... பாவம், வைகோவின் இப்போதைய நிலையை நினைக்கும் போது இப்படி ஒரு கவிதை(?) சிக்கியது.. என்ன செய்ய? அப்படியே நம்ம தஞ்சாவூர் கல்வெட்டுல குறித்து வைத்திருக்கிறேன். எதிர்கால சந்ததிக்கு தெரியவேண்டும் அல்லவா??

Wednesday, March 16, 2011

காளீஸ்வரன் கதை.. [4]

ஒரு நாள் அலுவல் முடிந்து அறைக்கு வந்தபோது காளீஸ்வரன் படு சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். கேட்டபோது வேலை போய்விட்டதாகவும், டிக்கட்டும் கொஞ்சம் பணமும் கொடுத்து ஒரு வாரத்தில் ஊருக்கு போக ரெடியாகுமாறு கம்பெனியில் சொல்லிவிட்டதாக சொன்னான்.

எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.. அது நான் வந்து ஒரு 6 மாதம் ஆன புதிது.. இங்குள்ள நடைமுறைகள் அப்போது நிறைய தெரிந்திருக்கவில்லை. பின்னர் நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். காளீஸ்வரன் வந்து ஒரு இரண்டு அல்லது இரண்டரை ஆண்டுகள் ஆகியிருக்கும். இது வரை ஊருக்கு போகவில்லை, ஊர் விட்டு வந்ததிலிருந்து. வீட்டிற்கு மூத்த பிள்ளை. ஒரு முறையோ இரண்டு முறையோ ஊர் போகும் பிறரிடம் அவனுடைய தங்கைக்கும், தம்பிக்கும், அப்பா, அம்மாவிற்கும் கொஞ்சம் நகைகளும், வாட்ச், ஸ்ப்ரே போன்ற சமாச்சாரங்களும் கொஞ்சம் சாக்லேட்களும் அவ்வப்போது கொஞ்சம் பணமும் அனுப்பியிருப்பதாக சொல்லியிருக்கிறான்.

நிறைய யோசித்து ‘கல்லிவல்லி‘ ஆகி விடுவது என்று முடிவெடுத்தான். கல்லிவல்லி அல்லது கல்லிவெல்லி என்றால் இங்கு தங்கி வேலை பார்ப்பதற்கான விசா எதுவும் இல்லாமல் என்ன வேலை வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். இது போல் தங்கி இருப்பவர்களை கல்லிவெல்லிகள் என்பார்கள்.

நம் ஊரில் காந்தி பிறந்த நாள் மற்றும் அண்ணா பிறந்த நாள் போன்ற சமயங்களில் சிறைகளில் கைதிகளுக்கு மன்னிப்பு கொடுத்து அனுப்புவது போல் இங்கும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுமாப்பு என்று ஒன்று கொடுப்பார்கள் அப்போது இந்தியா செல்லலாம் சிறைக்கு போகாமல். நடுவில் மாட்டிக்கொண்டால் சிறை தண்டனை, தண்டனை முடிந்து யாராவது நண்பர்கள் டிக்கெட் எடுத்துக்கொடுத்தால் சிறையிலிருந்து நேரே ஏர்போர்ட் கொண்டு ப்ளைட் ஏற்றி அனுப்பி விடுவார்கள். தண்டனையை வேண்டும் என்றே அதிகம் விளக்காமல் விட்டிருக்கிறேன் ம்ம்ம், அதெல்லாம் வேண்டாம் இங்கு.

பொதுமாப்பிற்கு காத்திருக்க வேண்டும்.. காளீஸ்வரன் இந்த நிலைக்கு துணிவாக முடிவெடுத்ததற்கு தம்பியின் படிப்பு, தங்கையின் திருமணம், வீட்டுக்கடன் என்று ஏதாவது இருக்கும், அது ஏழை இந்தியர்களின் சோகம். அங்கு எல்லோரும் ஒன்றும் ராசா அல்லவே.

பின்னர் ஒருநாள் அவன் அலுவலகம் சென்று கிடைக்கவேண்டிய பணத்தை வாங்கிக்கொண்டு அலுவலகத்திலிருந்து விமான நிலையம் அழைத்துப்போய் பாஸ்போர்ட்டை கையில் கொடுத்து எக்ஸிட் ஆகிறானா என்று பி.ஆர்.ஓ கவனித்துக்கொண்டிருக்கும் போது அவன் கண்ணைத்தப்பி வெளியே வந்து விட்டான், இது எல்லாம் நம் மக்களுக்கு சர்வ சாதாரணம். பி.ஆர்.ஓ கண்ணில் காணாத உடன் சரி பயபுள்ளை உள்ள போயிடிச்சி என்று போய் விடுவான்.

இப்படி ஆள் வெளியேறாமல் உள்தங்கிவிட்டால் ஸ்பான்சர் பாடு திண்டாட்டம், அதை விளக்கி அவன் புகைப்படத்துடன் ‘காணவில்லை‘ என்று இங்குள்ள ஒரு நாளிதழில் விளம்பரம் கொடுத்து அவனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று முடித்து விட்டு அவன் வேலையை பார்ப்பான்.

காளீஸ்வரன் இப்படி கல்லிவெல்லியாய் வேலையை தொடங்கினான், முன்பு சொன்னது போல் இவனுக்கு திறமை இருந்ததால் எங்கும் வேலை கிடைத்தது, என்ன... அரசு அலுவலகங்கள், மற்றும் free zone பகுதிகளுக்குள் சென்று வேலை செய்ய முடியாது.. எப்போதும் லேபர் அலுவலகத்திலிருந்து செக்கிங் வருகிறானா என்று கவனத்துடன் வேலை செய்ய வேண்டும். அவ்வளவுதான்.

நல்ல வேலை செய்து பின்னர் ஒரு மலையாளியுடன் சேர்ந்து அவன் கம்பெனியில் பார்ட்னர்ஷிப் வைத்து காண்ட்ராக்ட் எடுக்கும் அளவுக்கு சென்று விட்டான், கையில் பணம் புரள ஆரம்பித்தது. அந்த மலையாளி இவனை வைத்து வேலை வாங்கி அவன் அதிகம் எடுத்துக்கொண்டு இவனுக்கும் இவன் திருப்திக்கு கொடுத்து நல்லபடியாய் நடந்தது, மலையாளிக்கு கம்பெனி இருந்தது ஆனால் வேலை தெரியாது.. இவனுக்கு வேலை தெரியும் ஆனால் விசா கிடையாது.. அவன் ஆட்களை வைத்து இவன் வேலை வாங்கி நல்ல சம்பாதித்தான்.

அந்த மலையாளிக்கு இவனை காலையில் வந்து அழைத்துச் செல்ல வேண்டும், பில்கள் பாஸ் பண்ணி வாங்குவதற்காக வேலை செய்த இடங்களுக்கு அலைய வேண்டும், பின்னர் மாலையில் இவனை வீட்டிற்கு கொண்டு வந்து விடவேண்டும், இதுதான் வேலை. எப்போதும் ட்ராயிங் பார்த்து கொட்டேஷன் போடுவது, ஆட்களை வேலை வாங்குவதும் இவன் வேலை. அப்போதே இந்த வசதிகளுக்காக ரூமில் ஒரு டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் வாங்கி வைத்திருந்தான். மலையாளிக்கு வேறு வழியில்லை என்பதால் இவனை அட்ஜஸ்ட் பண்ணி போய்க் கொண்டிருந்தான்.

இப்படி போய்க்கொண்டிருக்கும் போது தான் துபாயில் வேலை செய்யும் நம் நண்பர்கள் எந்த பாதையில் செல்லக் கூடாது என்று நான் சொல்ல நினைத்தேனோ அந்த பாதையில் காளீஸ்வரன் செல்ல ஆரம்பித்தான், அது என்ன பாதை அது அவனை எங்கு வரை கொண்டு சென்று விட்டது என்பது இன்னொரு நாள்.

அன்புடன், வசந்தா நடேசன்.

காளீஸ்வரன் கதை..[1] [2] [3]

Monday, March 14, 2011

குழந்தை தொழிலாளர்கள்!

இன்று சன் டிவியில் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன், மிகவும் மனதை பாதித்ததால் அதை பற்றிய ஒரு பதிவு இங்கே. நிகழ்ச்சியை பார்த்தவர்கள் மேலே தொடரவேண்டாம், சன் டிவியை விட நான் அதிகம் சொல்லப்போவதில்லை.. இது என் பாணியில், என் பார்வையில். (நம்ம கடைக்கு வார ஒரு முப்பது கஷ்டமருக்காக??)

நம் சமூகம் இன்னும் எத்தனை விஷயங்களில் மறுமலர்ச்சி அடையவேண்டியதிருக்கிறது என்பதை நினைத்தால் ஒரு வித திகைப்பே மிஞ்சுகிறது.. இத்தனைக்கும் இதை தடுக்க பல சட்டங்களும் பல அரசு அதிகாரிகளும் இதற்க்காக நம் நாட்டில் வேலை செய்கிறார்கள்.

சிவகாசி போன்ற தொழில்வழம் மிக்க நகரங்களில் இந்த அதிகாரிகள் கொஞ்சம் வேலை பார்த்து சில வற்றை கண்டு தடுத்திருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.. பிற நகரங்களில் இவர்களுக்கு வியாபார நிறுவனங்களை மிரட்டி காசு வாங்குவதற்கே நேரம் சரியாக இருக்கிறது போலும்!

ஆனாலும் இன்று நான் பார்த்தது தொழில் சார்ந்ததில்லை.. சொல்லப்போனால் பல வருடங்களுக்கு முன் இது போல் ஒரு சம்பவம் நம் தமிழ்நாட்டிலும் நடந்தது நினைவு இருக்கிறது.. பத்து வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இன்று பார்த்தது, தமிழ்நாட்டிலிருந்து இரண்டு பதினாலு வயதுக்கும் குறைந்த பருவம் கொண்ட சிறுமிகளை கேரளாவுக்கு வேலை செய்ய அனுப்பியிருக்கிறார்கள், ஒரு ஏழை தாயும், தகப்பனும். பள்ளியில் படித்தவர்களின் படிப்பையும் நிறுத்தி. மிக குறைந்த அளவு பணம் வாங்கிக்கொண்டு. பண ஆசையா?? இல்லை, படித்துக்கொண்டிருந்த குழந்தைகளை என்னுடன் கேரளாவுக்கு வேலைக்கு அனுப்பி வை, மாதம் நல்ல சம்பளம் தருவார்கள் என்று வற்புருத்தி தாயின் அண்ணன் முறையிலான ஒருவரே அழைத்துச்சென்றிருக்கிறார்.. அழைத்துச்சென்றவருக்கும் அவர் மலையாளி பெண் பார்ட்டனுருக்கும் இதில் கிடைத்தது 15000 ரூபாய்கள்.

அங்கே போனதிலிருந்தே ஒரு குழந்தையை நாய் கூண்டில் அடைத்து வைத்து சாப்பாடு கொடுக்காமல் வேலை வாங்கி, சிகரட் சூடு, அடுப்பிலிருந்து எரியும் நெருப்பை வைத்து சூடு போட்ட காயங்கள் இத்யாதி, இத்யாதி... முடிவில் குழந்தை 15 நாட்களிலேயே கொடுமை தாங்காமல் இறந்து விட்டது.

இன்று அந்த மலையாளி தம்பதியை கைதுபண்ணியிருக்கிறார்கள், எல்லாம் நடக்கிறது, தண்டனை கிடைக்கும் என்று நம்புவோம், நான் சொல்ல வந்தது இனி என்ன நடக்க வேண்டும், எப்படி இதை தடுப்பது என்பதை பற்றி சிறிது அலசவே.

கேட்ட இன்னொரு அதிர்ச்சி தகவல், கேரளத்தில் இதுபோல் கிட்டதட்ட 5000 குழந்தைகள் வேலை செய்கிறார்களாம், இதற்கான நெட்ஒர்க் பல வருடங்களாய் நடந்து கொண்டிருக்கிறது. கிட்டதட்ட ஒரு வேனில் பல குழந்தைகளை அடைத்து வைத்து கொண்டு போய் வேண்டியவர்களுக்கு பணத்தை வாங்கிக்கொண்டு விற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்று இதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த தன்னார்வ தொண்டர் பேசினார். என்ன கொடுமை சார் இது??

சரி, இனி என்ன பண்ணலாம் என்று என் பார்வையில்.. (சன் டிவியில் சொல்லாதது!!)

தமிழகத்தில் இது பற்றிய ஒரு விழிப்புணர்ச்சியை உடனே கொண்டுவரவேண்டும், பத்திரிகை விளம்பரங்கள் மற்றும் டிவி விளம்பரங்கள் மூலம் இது சாத்தியமாகலாம், அஃப்கோர்ஸ் அரசு தான் இதில் தலையிடவேண்டும். இப்போது இதற்காக இருக்கும் அரசு அலுவலர்களுக்கு இது குறித்த விழிப்பணர்வு பயிற்ச்சி வகுப்புகள் எடுத்து கொஞ்சம் வேலை செய்ய சொல்லலாம்.

பள்ளிகளில் படிக்கும் பதினைந்து வயதுக்கு குறைவான குழந்தைகள் படிப்பை திடுதிப்பென்று நிப்பாட்டினாலோ அல்லது அடுத்த வருடம் படிப்பை தொடராவிட்டாலோ அது குறித்து பள்ளிகள் உடனடியாக பக்கத்தில் இருக்கும் தொழிலாளர் துறை அலுவலகத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும். அவர்கள் இது குறித்து விசாரித்து ஒரு அறிக்கை தயாராக்க வேண்டும். இதுவும் அரசின் கைகளில்.. சட்டமாக்கப்பட வேண்டும். பின்னாளில் காணாமல் போன குழந்தைகள் என்றால் நேராக தொழிலாளர் துறைக்கு மக்கள் நடக்கும் நிலை வரவேண்டும்.

சரி எல்லாம் அரசிற்கே விட்டால் பொதுஜனத்திற்கு என்ன வேலை?? நமக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் விழிப்பணர்வு தேவை மக்களே!! நீங்கள் ஒரு ஆசிரியராக இருந்தால் இது குறித்து உடனே குழந்தைகளின் பெற்றோரை அழைத்து விசாரிக்கலாம் நம் அரசு விழித்துக்கொள்ளும் வரை.

நீங்கள் ஒரு வாடிக்கையாளராக எங்காவது குழந்தை தொழிலாளர்களைக்கண்டால் உடனே இது குறித்து தொழிலாளர் துறைக்கு ஒரு புகார் அனுப்பலாம்.

முக்கியமாக உங்கள் பக்கத்து வீட்டிலோ அல்லது உங்கள் பார்வையிலோ ஏதும் இது போல் கொடுமை நடக்கிறது அல்லது குழந்தை காணாமல் போகிறது என்றால் உடனே உடனே இது குறித்து தொழிலாளர் துறைக்கு ஒரு புகார் அனுப்பலாம். அட்லீஸ்ட் காவல் நிலையத்துக்கு ஒரு அனானி கால் பண்ணியாவது சொல்லுங்கள் பொதுஜனமே!

இது குறித்து பல விவாதங்களும், விழிப்புணர்சியும் பரவலாக வேண்டும் என்பதே என் ஆசை..

அன்புடன், வசந்தா நடேசன்.