சமீபத்திய நிகழ்வுகளை பார்க்கும் போது மனதில் ஒரு சிறு சந்தேகம், பாகிஸ்தான் உண்மையிலேயே பலமான ராணுவ வசதிகள் கொண்ட நாடா அல்லது நம்ம ஊர் வடிவேல் தனமாய் 'கைப்புள்ள' ஆட்டம் ஆடுகிறதா என்று?
அமெரிக்கா ஒரு சுக்கும் இல்லாமல், விசா, ஸ்டாம்பிங் ஒரு புண்ணாக்கும் இல்லை, குறைந்தபட்சம் ஒரு முன்அனுமதி கூட இல்லாமல் 4 ஹெலிகாப்டர்களில் வந்திறங்கி ஒரு தாக்குதலை நடத்தி, பின்லேடனை சுட்டுக்கொன்று,அவர் உடலை கடலில் வீசிவிட்டு போகமுடியுமென்றால் உண்மையிலேயே பாக் ராணுவம் என்ன செய்தது அப்போது என்பது கேள்விக்குறி.
நான் அணுகுண்டு வச்சிருக்கேன், ஏவுகணை வச்சிருக்கேன், அது வச்சிருக்கேன், இது வச்சிருக்கேன் என்று பாகிஸ்தான் கூறியதெல்லாம் வெறும் வாய்சவடால் தானோ?
இப்போது கேட்டால் 'அது போனவாரம்' என்பது போல் இருக்கும் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் பல சந்தேகங்களை கிளப்புகிறது.
இவர்களை 'நம்பி' நாமும் எக்கச்சக்கமாய் ராணுவத்திற்கு செலவழிக்கிறோம், இந்தியாவில் நமக்கு உண்டான கஞ்சிக்கு வழியில்லை, ராணுவம் அணுகுண்டு என்று நம்மை வரவுக்கு மேல் செலவு செய்ய வைத்து விட்டு வேடிக்கை பார்க்கிறார்களோ?? பாகிஸ்தானுக்காக இல்லாவிட்டாலும் நாம் சீனாவுக்கு பயந்து ராணுவச்செலவு செய்து தான் ஆகவேண்டும் என்பது வேறு கதை, இருந்தாலும்?
டேய் எதுன்னாலும் சொல்லிட்டு செய்ங்கடா என்று மன்மோகன் பரிதாபமாய் கேட்பது போல் கனவு வந்து தொலைக்கிறது சமீப நாட்களாய்!
ரேடார் என்று ஒரு சாதனம் பாகிஸ்தானில் இருக்கிறதா, இல்லையா?? இல்லேன்னா சொல்லுங்கடா, நாங்கதான் இருக்கோம்ல? தந்து உதவுகிறோம் என்று நம் காங்கிரஸ் சொன்னாலும் சொல்லலாம், இலங்கைக்கே கொடுத்து தமிழர்களை கொல்ல உதவியவர்களாயிற்றே நாம்.
பாக் அதிபரும், பிரதமரும் தினம் ஒன்றை சொன்னாலும் அவர்களின் கையாலாகாத்தனம் தான் உலகின் கண்களுக்கு தெரிகிறது, இதற்கிடையில் ஐ எஸ் ஐ தலைவர் இந்தா, அமெரிக்கா வரை போயிட்டு வர்ரேன்னு சொல்லிட்டு இப்ப, சவுதிக்கு போயிட்டார், சீனாவுக்கு போயிருப்பாரோ?? என்று சப்பை கட்டு கட்டுவது என்ன நாடகம் நடக்கிறதென்றே உலகுக்கு தெரியாமல் இன்னொரு மழுப்பல்ஸ் போல் தான் தெரிகிறது.
இதைப்பார்த்து நம் சிதம்பரம் வேறு அமெரிக்கா நினைத்தால் பாகிஸ்தானில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் நாமல்லாம் செய்யமுடியாது என்பது இன்னொரு கையாலாகாத்தனம். வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்து தொலைச்சிருக்கலாம் நம்ப RAW ஆளுங்க மாதிரி அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு!
ம்ம்ம், என்னதான் நடக்குதுனு பாப்போம் என்று இருப்பதை தவிர நம்மைப்போல் அப்பாவி இந்தியனுக்கு வேறு வழி?
அன்புடன், வசந்தா நடேசன்.
பாக்கிஸ்தான் கோயபல்ஸ் ஆட்டம்தான் ஆடுதுன்னு நல்லா தெரியுது பாஸ்....
ReplyDelete//சமீபத்திய நிகழ்வுகளை பார்க்கும் போது மனதில் ஒரு சிறு சந்தேகம், பாகிஸ்தான் உண்மையிலேயே பலமான ராணுவ வசதிகள் கொண்ட நாடா அல்லது நம்ம ஊர் வடிவேல் தனமாய் 'கைப்புள்ள' ஆட்டம் ஆடுகிறதா என்று?//
ReplyDelete:)
//இதைப்பார்த்து நம் சிதம்பரம் வேறு அமெரிக்கா நினைத்தால் பாகிஸ்தானில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் நாமல்லாம் செய்யமுடியாது என்பது இன்னொரு கையாலாகாத்தனம். வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்து தொலைச்சிருக்கலாம் நம்ப RAW ஆளுங்க மாதிரி அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு!//
என்னா செய்வார், சுழி சும்மா இருக்கா மாட்டேங்குது
நீங்கள் சொல்வது மிகச் சரி
ReplyDeleteஇந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும்போது
ஒன்றுமில்லாதே நமக்கு பூச்சாண்டி
காட்டுகிறார்களோ எனத்தான் தோன்றுகிறது
சிந்தனையை தூண்டிச்செல்லும் பதிவு
Welcome back sir...
ReplyDelete