Thursday, March 9, 2017

மீண்டும் பதிவுலகிற்கு..


வணக்கம், மிக மிக நீண்ண்ண்ண்ண்ண்ண்ட நாட்களுக்குப்பின் பதிவுலகிற்கு மீண்டும் வரலாம் என்று நினைக்கிறேன், நல்லதற்கோ, கெட்டதற்கோ, சத்தியமாய் இந்த ஆசை ஏன் வந்தது என்று தெரியவில்லை..

பயபுள்ளைக்கு என்ன ஆச்சோ என்று நினைத்துக்கொண்டிருக்கும் சக பதிவர்கள் மன்னிப்பார்களாக.. ஏனோ எழுதும் அந்த மூடே வரவில்லை, அதுதான் காரணம், நேரமின்மை, சோம்பேறித்தனம், வளர்ப்பு சரியில்லை என்று எதை வேண்டுமானாலும் காரணமாக தாராளமாக வைத்துக்கொள்ளுங்கள். கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்குப்பின் பொட்டி தட்ட உட்கார்ந்திருக்கிறேன். ம், பாக்கலாம்.. எத்தனை நாளைக்கின்னு.

மூட்டைப்பூச்சிக்கு மருந்து கேட்டு ஏகப்பட்ட மடல்கள், மன்னிச்சுக்குங்கய்ய, கமென்ட்ஸ் எல்லாம் ஆப்டிமைசேஷன்ல இருந்துச்சு, இன்னைக்கித்தான் பாத்தேன். மற்றும் பதிவிற்க்காக வைத்திருக்கும் பிரத்தியேக மெயிலை பார்ப்பதே இல்லை, தவறு தான்.

அதை ஏன் கேக்குறீங்க, நான் எழுதிய கடையில் இப்போது அந்த மருந்தெல்லாம் துபாய் முனிசிபாலிடி புண்ணியத்தில் கிடைப்பதில்லை. கரப்பானுக்கு நான் எழுதிய மருந்து கண்டிப்பாய் உபயோகமாய் இருக்கும், மூட்டைப்பூச்சி அனுபவம் சமீபமாய் எனக்கு இல்லை, கடவுள் புண்ணியம். முனிசிபாலிட்டியில் வேலை பார்க்கும் யாராவது தெரிந்தவர் இருந்தால் அவர்களிடம் இருந்து நன்கு வீரியமுள்ள பூச்சிமருந்து வாங்கி பயன்படுத்தலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மற்றும் அமேசான் ஆன்லைனிலும் ஏதோ மருந்து இருப்பதாய் கேள்விப்பட்டேன். விசாரித்துக்கொள்ளலாம், கூகிளாண்டவரிடமும் பதில் இருக்கக்கூடும்.

அப்புறம், இனி தினமும் அல்லது வாரத்திற்கொரு பதிவாவது எழுதவேண்டும் என்ற எண்ணமிருக்கிறது, பார்க்கலாம். தமிழுலகு புண்ணியம் செய்திருக்கிறதா என்று:-)

அன்புடன்.. வசந்தா நடேசன்.

No comments:

Post a Comment