Wednesday, March 2, 2011

தோசையுடன் முட்டைகறி..

இன்னைக்கி வைச்ச தலைப்பே வேற, இது மேட்ச் இல்லையே என்பவர்கள் என்ன நடந்தது என்பதை மேலே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

என்னை கேட்டால் சமைப்பது தான் உலகில் மிக கஷ்டமான வேலை என்பேன், நம் ஊர் பெண்களை இதற்க்காகவாவது கொஞ்சம் மதிக்க நாம் கற்றுக்கொள்ளவேண்டும். ஏற்கெனவே கொஞ்சம் பயந்து மதிப்பது போல் நடிக்கிறோம் தான், நான் சொல்வது என் நெஞ்சை தொட்டு.. (என்னா வில்லத்தனம்??) அஞ்சாமல், அசராமல் தினமும் இதை ஒரு கடமையாக செய்கிறார்கள் பாருங்கள், சல்யூட்!

சரி, இனி நம்ம கதை. தலைப்பை பார்த்தாலே இது எப்படி சரி வரும் என்று சிலருக்கு தோன்றலாம், நீங்களே சமைத்து நீங்களே சாப்பிட்டு பாருங்கள்.. தக்காளி, இதன் அருமை புரியும்.

தனிமை கிடைத்ததும் கொஞ்சம் கெத்தாய் நான் எங்கே சமைப்பது, நமக்கு எவ்ளோவ் வேலை?? தினமும் எழுதணும், படிக்கணும். சமையலும், புடலங்காயும் என்று ஹோட்டலை நோக்கி தினமும் நடக்க ஆரம்பித்தேன். இரண்டு நாளிலேயே அங்கு சென்று சப்ளையர் முகத்தை பார்த்ததும்.. என்ன இருக்கு?? இட்லி, தோசை, பூரி என்று அடுக்கும் போதே ஒரு வெருப்பு எட்டிப்பார்க்கும், என்ன கண்றாவிடா இதென்று.. மறுபக்கம், பிஸ்ஸா, பர்கர் என்று ஒரே நாளில் முகத்தில் அடித்தது..

எனக்கு சமையல் பண்ண தெரியும் இருந்தாலும் சமைக்காமலிருந்தேன் கொழுப்பெடுத்துப் போய்தான், நண்பர்கள் செய்வார்கள், சமீப காலமாய் நான் அப்படியே நோகாமல் நோம்பு கும்பிட்டுக் கொண்டு இருந்து தொலைத்துவிட்டேன், அதுவும் கம்ப்யூட்டர் வாங்கியதும் கொஞ்சம் தெம்பு அதிகம் ஆகிவிட்டது, முன்பு பொழுதுபோக்கிற்காவது சமையல் செய்தது போய்.

இப்போது யாரும் இல்லாத நிலையில், ஒருநாள் காலை அலுவல் பிரஷரில் கிட்டத்தட்ட மயக்கம் வரும்போல் இருந்ததால், சரி இது சரிப்படாது மக்ளே ன்னு முந்தாநாள்ல இருந்து மீண்டும் ஆரம்பம், சரி நம்ம வரலாற்றை கொஞ்சம் சொல்லிவைப்போம்னு தான் இன்று இவ்வளவும்.

முதல் நாள் சப்பாத்தியும் உருளைகறியும், பிரமாதம் போங்கள். சொந்த சமையலின் மகிமை இதுதான், நமக்கு பிடித்தது, நாம் நினைக்கும் போது, முழுமையாய் ரசித்து சாப்பிட முடியும். ஒவ்வொரு முறை பண்ணும் போதும் இரண்டுநாள் பத்து எண்ணம் வரும்படி செய்துகொள்வது என் வழக்கம். முதல் நாள் ஐந்து, மூன்று இரவுக்கு, இரண்டு அடுத்த நாள் ப்ரேக் ஃபாஸ்ட். அடுத்த நாள் அதே மாவை பிர்ட்ஜில் வைத்து மீண்டும் ஐந்து முந்தைய நாளில் மீதம் வைத்த இதே கறியுடன். மதியம் பாரிக் செட் ஒருநாள், இன்னொருநாள் சரவணபவன் மினி சாப்பாடு.

இன்று மூன்றாவது நாள், என்ன செய்வது என்று யோசிக்கையில் அன்னபூர்ணா இடியாப்பம் தான் முதலில் நினைவில் வந்தது. சட்னி வைக்க படிக்காமல் இருந்து தொலைத்துவிட்டேன், ரொம்ப ஈஸி, ஆனால் முதலில் இரண்டு, மூன்று முறை முயன்று என் மனைவி வைத்த டேஸ்ட் வராததால் நான் விட்டு விட்டேன், அறை நண்பன் ரொம்ப டேஸ்ட்டா வைப்பான்.. சரி என்று நான் அதை கண்டுக்காமல் விட்டுவிட்டேன்.

இன்று இடியாப்பம், ஆஹா சட்னி?? ஆபத்பாந்தவனாய் மாலை உடன் வந்த தஞ்சை நண்பன் முட்டைகறியை ஞாபகப்படுத்தினான்.. இடியாப்பம், முட்டை கறி ஆஹா சூப்பர்னு வந்து சேந்து பண்ணுன ஒரே தப்பு கடைக்கு போகாமல் அப்படியே டிவியில் இங்கிலாண்ட்/அயர்லாந்து பார்த்துக்கொண்டு இருந்தது தான். என்ன நடந்தது ஏன் என்று எல்லோருக்கும் இப்போது தெரிந்திருக்கும், அயர்லாந்து ஜெயித்தது, தக்காளி, இந்தியாவுக்கு டை போட்டிங்கல்ல, அனுபவிங்கடான்னு சந்தோஷம் தாங்கலை.

பின்னர் போய் இடியாப்பம் தேடினால் மதினாவில் ‘எல்லாம் விற்றண்ணா, இனி நாள..‘ என்றார்கள், ஆஹா, என்று அப்படியே அருகில் பார்த்தேன், சிவ்ஸ்டார் தோசை மாவு?? சரி வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.. இன்னைக்கி தோசையுடன் முட்டைகறி.

நாளை வீக் எண்ட், நண்பர்கள் வந்து கவனித்துக்கொள்வார்கள், கவலையில்லை.. ம்ம்ம், முடிந்த வரை சமாளிப்போம்!

அன்புடன், வசந்தா நடேசன்.

டிஸ்கி :-பதிவின் நீளம் கருதி செய்முறை தவிர்த்துள்ளேன், வேண்டுமென்றால் பேச்சிலர் நண்பர்ளுக்கு உதவுவதற்க்காக நான் அதை இன்னொருபதிவில் விளக்க ரெடி.

3 comments:

  1. நேற்றைக்கு நான் மொச்சை கொட்டை கூட்டு பன்னி வச்சிருக்கேன்....சூப்பரா இருக்கு ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  2. நம்ம ஊரு அவியல் இங்கே எப்பிடி பண்றதுன்னு சொல்லும் மக்கா....

    ReplyDelete