Monday, March 28, 2011

விடுமுறை..

நண்பர்களே..

உடன் இருந்த ஒரு நண்பரை ஹார்ட் அட்டாக்கிற்க்கு பலி கொடுத்துவிட்டு சோகத்தில் இருப்பதால், நான் எழுத வருவதற்கு இன்னும் கொஞ்சம் நாட்கள் ஆகும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் வரும் இரண்டாம் தியதி (02.04.2011) என் குடும்பத்தினர் இங்கே துபாய் வந்து விடுவர், பள்ளி விடுமுறையை கழிப்பதற்க்காக. நானும் அதை மிக எதிர்பார்த்திருக்கிறேன்.. இப்போது நண்பரை இழந்த சோகத்திலிருந்து விடுபட...

அலுவலகத்திலும் வேலை நெருக்கடி அதிகம், வருடக்கடைசி என்பதால் (அக்கவுண்டிங் இயர் எண்ட்).. அனேகமாய் ஏப்ரில் கடைசியில் அலுவல் நெருக்கடிகள் முடியும், மே மாதம் என் பதிவுகளை மீண்டும் துவங்க முடியும் என எண்ணுகிறேன்.

இது வரை தொடர் வருகை புரிந்து ஆதரவழித்த அனைத்து நண்பர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்ள கடமை பட்டுள்ளேன். நெருங்கிய நண்பர்கள் கைபேசி வழியாக கால் பண்ணி தேட ஆரம்பித்துவிட்டதால் இதனை எழுத வந்தேன். கிட்டதட்ட ஏழு ஆண்டுகள் உடன் வசித்த நண்பரை இழப்பது மிக துயரம், வேறு ஏழுதுவதற்கு இப்போதைக்கு ஏதுமில்லை.. வருகிறேன், இரண்டு மாதங்கள் கழித்து இன்னொரு சமயம் சந்திப்போம். மீண்டும் நன்றி.

அன்புடன், வசந்தா நடேசன்.

2 comments:

  1. உங்களோடு,உங்கள் நண்பருக்காய் நாங்களும் துயரினைப் பகிர்ந்து கொள்கிறோம்.

    ReplyDelete
  2. நண்பருக்காக நானும் வருந்துகிறேன் மக்கா....
    நம் வாழ்க்கை ரயில் பயணம் மாதிரி, அவரவர் ஸ்டேசன் வந்ததும் இறங்கியே ஆகணும், மற்றவர்கள் பிரயாணத்தை தொடரத்தான் செய்யணும் அவரவர் ஸ்டேசனை நோக்கி. கலங்காதீர்கள் மக்கா...

    ReplyDelete