Saturday, January 1, 2011

புத்தாண்டு நினைவுகள்

இந்த புத்தாண்டு தினத்தில் ஏனோ இந்த புத்தாண்டு மலரும் நினைவுகள்.

முன்பெல்லாம் ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, தமிழ்புத்தாண்டு இந்த மூன்று நாட்களும் நானும் என் நண்பர்களும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து அன்று மட்டும் வித்யாசமாக வேஷ்டி மற்றும் சட்டையில் எங்கள் ஊர்க்கோயில்களுக்கு செல்வது வழக்கம்.

முதலில் எங்கள் ஊர் நாகராஜா கோவில், பின்பு குமாரகோவில், அதன் பின்பு சுசீந்தரம் அல்லது கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில். எல்லாம் முதல் நாள் இரவே பிளான் போட்டு அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு எல்லாம் அவரவர் வண்டியில் குறித்த இடத்தில் கூடி சரியாய் 9 அல்லது 10 மணிக்கு இதை செய்து முடித்திருப்போம்.

நல்ல சைட் அடிக்கலாம் அதற்க்காக கோவிலுக்கு சென்றோம் என்றாலும் வெறும் சைட் அடிப்பதற்க்காக மட்டுமே என்று சொல்வதர்க்கில்லை. அதன் பின்னால் ஒண்ணாம் தேதி நல்ல விஷயங்களை பார்க்க வேண்டும், செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணமும் இருந்தது நிஜம் தான்.

இன்று துபாயில் நண்பர்கள் எல்லாம் காலையில் கோயிலுக்கு போகவேண்டும் என்று நேற்றே முடிவு செய்தார்கள், நான் வரலைங்க, நீங்க எல்லாம் போய்ட்டு வந்திருங்கன்னு நேற்றே சொல்லிவிட்டேன். நான் சோம்பேறி ஆகிவிட்டடேனா?

இங்கு கோவில் அதன் முழுமையான வடிவத்தில் இல்லை என்பது ஓரு பக்கம், அங்கேயும் ஒரு ஹாலில் தான் சாமியை வைத்திருக்கிறார்கள், நம் வீட்டிலும் அப்படித்தான் வைத்திருக்கிறோம், பொறவு ஏன் அங்க வர என்று தான் நினைக்கிறேன்.

எல்லோரும் கோவிலுக்கு போய்விட்டு பதினொன்றரை மணிக்கு வந்துவிட்டார்கள், வீட்டில் என்னுடனிருந்த மற்ற நண்பர்கள் காலையிலேயெ எழுந்து இட்லியும் சட்னியும் ரெடி பண்ணியிருந்தார்கள். நான் வழக்கம் போல் கடைசியில் எழுந்து குளித்துவிட்டு வந்து டிபன் சாப்பிட்டேன்.

ஒன்றாம் தேதி நல்ல விசயங்களை பார்ப்பது, நல்லவிசயங்களைப்பேசுவது என்ற எங்கள் நண்பர் வட்டத்து அந்தகாலப்பழக்கம், எங்களுக்கு நல்லதையே தந்திருக்கிறது, இன்று எனக்கும் என் நண்பர்களுக்கும் எந்த குறையும் இல்லை, எல்லோரும் நிறைவாகவே இருக்கிறோம், அந்த நாகராஜர், தாணுமாலையன் அல்லது முருகன் அருளால். அனைவருக்கும் நன்றி கூறி என் புத்தாண்டு வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன், வசந்தா நடேசன்.

2 comments:

  1. Yes you are right.......Just cherising the days, when we use to travel by bi-cycles from Nagercoil to Kumaracoil....and then by scooters....

    ReplyDelete
  2. Thanks for the visit & for your call dear, just remembering the golden Days. Warning : MORE TO COME!

    ReplyDelete