Saturday, January 29, 2011

மோகத்தீ!

மோகத்தீ எறிகிறதே..
என் செய்வேன், என் செய்வேன்?
காமத்தீ அணைத்திடவே
காதலியும் இங்கில்லை..

ஐம்பதுக்கு ஆள்கிடைக்கும்
கூடவே நோய்கிடைக்கும்!
ரஷ்யாவா? சைனாவா?
சுந்தரத்தெலுங்கா? சுவைமிகு மலையாளமா?

கன்னடத்து பைங்கிளியா? கல்கத்தா மேங்கோவா?
எல்லாமே ஐம்பது தான்..
எந்த மொழி எந்த நாடு?
எல்லாமே ஐம்பது தான்!

போகாதே போகாதே..
இது எதற்க்கும் போகாதே!

நோய் வந்து மடிந்திடுவாய்,
நொடியிலே மாறிவிடும்
உந்தன் குடும்பமும்
சொந்தப் பிள்ளைகளும்...

தேவையா மானிடனே?
தேவ(ர)டியா வேண்டாமே.

தேவையென்று நீ நினைத்தால்
லீவெடுத்து சென்றுவிடு
ஜல்லிக்கட்டு காளையென...
ஜில்லிட்டு வந்து சேர்பின்!

வந்த வேலை முடியுமுன்னே
நொந்துபோய் திரும்பிடாதே.
எல்லாமும் மாற்றிவிடு..
இல்லாமை மாற்றிவிடு.

பணத்திற்க்காக தானே
பாலையில் உழைக்கின்றோம்
சோலை, சுகமெல்லாம்
நம் தலையில் இல்லை போலும்.

சின்ன மழலையையும்,
சிங்காரச் சிறுக்கியையும்,
சிந்தனையில் வைத்துவிட்டு..
சீர்கெட்டு போய்விடாதே!

கால்பந்து விளையாடு
கோல் நோக்கி முன்னேரு,,
வீரநடை போட்டு
வீழ்ந்தவற்றை மீட்டெடுப்போம்!

தாழ்ந்து நின்றிடாதே..
எப்போதும் தலை நிமிர்ந்து,
உயர்ந்த சிந்தனையால்
உலகையே மாற்றிவிடு!

நியாயமாய், நீதியாய்
நித்தமும் நாம் உழைத்தால்,
முத்தங்கள் ஒன்றென்ன
ஒரு நூறு அவள் தருவாள்!

ஓராண்டு மோகத்தையும்
ஓரே மாதம் முடித்துவிட்டு
நேர்வந்து சேர் மகனே
சோர்வற்று உழைத்திடுவோம்...

அன்புடன், வசந்தா நடேசன்.

1 comment: