Tuesday, March 1, 2011

காளீஸ்வரன் கதை.. [3]

திறமைகள் வாய்த்த காளீஸ்வரனுக்கும் கஷ்ட காலம் வந்தது.. வெளிநாடுகளை பொருத்தவரை, யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டுத்தூக்கலாம், எந்த கம்பெனியை எப்போது வேண்டுமானாலும் மூடலாம், அவை அந்த அந்த முதலாளியின் மூடை பொருத்தது. அதுவும் அரபு நாடுகளில் இதுபோன்ற தருணங்கள் அதிகம் வரும். நல்ல நடக்கும் கம்பெனிகளில் திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே வசதி மற்றும் வாய்ப்பு.

காளீஸ்வரன் திறமை உள்ளவன் தான், அவனுக்கு ஏன் என்ற கேள்வி வரலாம். அவன் வேலை பார்த்த நிறுவனத்தை ஒரு நாள் மூடிவிடுவது என்று அதன் உரிமையாளர்கள் முடிவெடுத்தனர். ஏன், எதற்க்கு என்பதை அவனால் விளக்க முடியவில்லை.. பொதுவாய் இந்த நிலை எப்படி வரும் என்பதை நான் பார்த்த, கேள்விப்பட்ட வரை சொல்லிவிடுகிறேன்.

லோக்கல் நபர்களுடன் (ஹபிபிகள்) சேர்ந்தே இங்கே வெளிநாட்டவர்கள் தொழில் தொடங்கமுடியும். அவர்களுக்கு முதலீடு ஏதும் இல்லாமல் 51 சதவீதம் லாபத்தில் பங்கு, வெளிநாட்டவருக்கு 49 சதவீதம் தான். லாபத்தை கணக்கு பார்த்து யாரும் கொடுப்பது இல்லை, மாதம்தோரும் ஸ்பான்சர் பீஸ் என்று குறிப்பிட்ட தொகையை கொடுத்துவிடுவார்கள், பிடி, ஒழி என்று. இல்லையேல் ஃபிரீ சோன் என்று சொல்லப்படுவதில் ஸ்பான்சர் இல்லாமல் தொடங்கலாம், ஆனால் அங்கே எல்லாவற்றிர்க்கும் கட்டணம் அதிகம் (துபாயை பொருத்தவரை).

ஸ்பான்சர் நல்ல அமவுன்ட் வாங்கிக்கொண்டு அந்த நிறுவனத்தின் வங்கிக்கணக்குகளை நடத்தவும் அனுமதி கொடுத்துவிடுவான், கம்பெனியை நிர்வகித்து நடத்துபவனிடம். ஆனாலும் அந்த ஹபிபி தான் அந்த நிறுவனத்துக்கு முழுப்பொருப்பு, அவன் கையெழுத்து இல்லாமல் புது விசா, லைசன்ஸ் ரினீவல் ஏதும் செய்யமுடியாது. அதற்க்கு அரசாங்கத்துக்கு மேலும் பணம் கொடுத்து பெர்மிஷன் வாங்கவேண்டும். நிறைய பேர் இதை செய்வதில்லை..

நடத்தும் நம் நபர்கள் (முக்கியமாய் மலையாளிகள்) முடிந்த வரை லாபம் பார்ப்பார்கள், ஒரு நிலையில் அப்படியே விட்டுவிட்டு ஓடி விடுவார்கள், அவர்களை தேடிப்பிடிப்பது முடியாத காரியம், அவர்கள் இந்த கம்பெனியை வைத்து இன்னும் இரண்டு, மூன்று ஜென்மத்திற்கு சம்பாதித்திருப்பார்கள், பின் அநியாயமாய் நடையைக்கட்டிவிடுவார்கள்.. எல்லா நேஷனாலிட்டியும் இதில் அடக்கம், இருந்தாலும் நம்ம மலையாளிக்கு இதில் திறமை அதிகம் என்பதை இங்கே கண்கூடாக பார்க்கலாம். அரபி ஒதுங்கி விடுவான், எல்லாம் அவன் தான் பொருப்பு என்றாலும், அந்த பருப்பெல்லாம் இங்கே வேகாது, அவர்கள் நாடு இது, இங்கே சட்டங்களும் முதலாளிகளை சார்ந்தே இருக்கும்.

ஓனர் சமயத்தில் அப்பாவியாக இருப்பான், ஆனால் முக்கியமான தருணத்தில் கையில் சிக்கும் பெரும் பணத்தை ஆட்டைய போட்டுக்கொண்டு அதில் வேலைபார்க்கும் நபரே ஓடிவிடுவான், மன்னிக்கவும் இதிலும் மலையாளியின் திறமையை யாரும் மிஞ்சியதாய் தெரியவில்லை.. ஸ்பான்சரும், முதலாளியும் மலங்க, மலங்க விழித்துக்கொண்டிருப்பார்கள் என்ன செய்வது என்று, சில அரபிகளே இதில் ஆடிப்போனது உண்டு, அதனால் தான் இங்கு சட்டங்களும் பெரும்பாலும் அவர்கள் சார்ந்து இருக்கும். கம்பெனியே தடுமாறிவிடும் அளவுக்கு பெரும்பணம் என்றால், கம்பெனி திவாலாவதை தவிர வேறு வழி கிடையாது. வேலைபார்த்தவனுக்கு கிடைக்க வேண்டிய சேமிப்பு, Gratuity எல்லாம் கோவிந்தா தான்.

அடிப்படை தொளிலாளர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதே தெரியாது, நாளை சரியாகிவிடும், நாளை சரியாகிவிடும் என்று மூடிய கதவுகளை தினம் சென்று பார்த்து வருவார்கள்.

இது போன்ற நிலைமைகளில் அந்த அரபியும், ஓனரும் தொழிலாளர்களின் நிலைமையை மனதில் வைத்து, அந்த கம்பெனியில் அதற்க்குமுன் சம்பாதித்த பணத்தை கணக்கு வைத்து, சரி ஊருக்கு செல்ல டிக்கெட் எடுத்து தருகிறேன், செல்கிறாயா என்பார்கள், ஏனென்றால் பிளாக் மார்க் ஆகிவிட்டால் அந்த ஸ்பான்சர் நடத்தும் பிற நிறுவனங்களுக்கும் பல சிக்கல்கள் வந்துவிடும். சிலர் சில சொற்பத்தொகையையும் கொடுப்பார்கள், தொழிலாளர்களின் திறமை மற்றும் மதிப்பு போன்றவற்றை கணக்கிட்டு.

அதுபோல் ஒரு நிலை காளீஸ்வரனுக்கு வந்து தொலைத்தது.. இதில் காளீஸ்வரன் என்ன முடிவெடுத்தான், அதன் பின் என்ன நடந்தது என்பது இன்னொரு நாள்.

அன்புடன், வசந்தா நடேசன்.

காளீஸ்வரன் கதை..[1] [2]

2 comments:

  1. காளீஸ்வரன் கதையை வைத்து
    துபாயின் அனைத்து உள்விஷயங்களையும்
    மிகத் தெளிவாக விளக்கிப் போகிறீர்கள்
    தெரியாத பல புதிய தகவல்கள்
    தெரிந்து கொண்டோம்
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அறிய தகவல்களை தந்ததற்கு நன்றிகள்..

    ReplyDelete