Tuesday, March 1, 2011

இலங்கை குறித்து...

ஒரு சென்சிட்டிவ் பதிவு..

சென்ற வாரத்திலேயே எழுதிவைத்ததை, ஆலோசித்துகொண்டிருந்தேன், வேண்டுமா வேண்டாமா என்று, இருந்தும் என் நிலை இதுதான் என்பதால் துணிந்துவிட்டேன்.

என்னை நிறைய அரசியல்வாதிகளுக்கு பிடிக்காமல் போகக்கூடும்.. இதை படித்தால்.. நான் அவர்களுக்கு என்னை பிடிக்கவேண்டும் என்று எழுதவும் வரவில்லை.. என்னைப்பொருத்தவரை எனக்கும், என் தாய்நாட்டுக்கும், என் சகோதர, சகோதரிகளுக்கும் உண்டான நியாயங்களும், தர்மங்களும் மட்டுமே முக்கியம். நான் குறிப்பிடப்போவது இலங்கை தமிழர்கள் குறித்த என் நிலை பற்றி மட்டுமே. பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற ஒரு சொல் உண்டு நம் தமிழ் மரபிடையே.. இது அதுபோல் ஒரு மணி கட்டும் முயற்சி தான்.. இது குறித்து நிறைய விவாதங்கள், விஷயங்கள் இருந்தாலும் இந்த பார்வை நம்மில் குறைவே.

தமிழ், தமிழர்கள் நிலை என்பது அப்போதைக்கப்போதைய காலம் சார்ந்து இருக்கவேண்டும் என்பது என் கனவு. இன்னும் நாம் அந்த கால அரசவம்ச வாழ்க்கை போலவோ அல்லது வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டிருந்த காலம் போலவோ இல்லை.. உலகம் மாறியிருக்கிறது. மனிதர்கள் மாறியிருக்கிறார்கள். நம் எண்ணங்களையும் நாம் காலத்திற்க்கேற்றவாறு மாற்றிக்கொள்ளவேண்டும்.

கண்களால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீரவிசாரிப்பதே மெய் என்ற பழைய மூன்று பொம்மை கதையும் மனதில் வராமலில்லை.

ஒரு காலத்தில் ராஜ ராஜ சோழன் படையெடுத்து சென்றான், இலங்கையை கைப்பற்றினான் (கவனிக்கவும்), மலேஷியாவைக் கைபற்றினான்.. என்று பல உண்மைகள்/கதைகள் நமக்கு சொல்லப்பட்டிருக்கின்றன.. என்னைப்பொருத்தவரை இது என்ன என்ன காலத்தில் நடந்தது, எப்படி நடந்தது என்பது தெரியாது.. நானும் உங்களைப்போல் கண்ணால் கண்டது இல்லை.. எல்லாம் யாராலோ, அல்லது எங்கேயோ எழுதிவைக்கப்பட்டது என்று வைத்துக்கொள்ளலாம்.

கடவுள் குறித்து எழுதிய பலவற்றையும் இப்போது கொஞ்சம் மறுத்து மற்ற நிலைகளில் யோசிக்க ஆரம்பித்திருக்கும் காலம் இது. ஆனால் இலங்கை தமிழர்களை நம் அரசியல் வாதிகள் இன்னும் விடுவதாய் இல்லை, என்ன செய்வது காலத்தின் கோலம்.

எழுத்து என்பது எழுதுபவன் கைபொம்மை. அதை எழுதியவனே அதில் நிபுணன்.. ஒத்துக்கொள்ள முடிகிறதா?? இல்லையென்றால் வேறு பதிவிற்க்கு இப்போதே சென்றுவிடுங்கள், யாரையும் காயப்படுத்தவேண்டும் என்பது என் நோக்கமல்ல..

ஒரு வேளை உங்களை என் எழுத்து காயப்படுத்தக்கூடும், இருந்தாலும் இது என் அளவிலான நியாயங்களை சொல்லும் ஒரு முயற்சி தான், நாளை நானே இதிலிருந்து வேறுபடக்கூடும், ஒருவேளை நான் உறுதியாக நம்பினால் மட்டும்..

என்னைப்பொருத்தவரை இலங்கைத்தமிழர்களுக்கான ஒரே நிரந்தர தீர்வு (யாருடா இப்ப தீர்வு கேட்டாங்கன்னு சொல்லாதீங்க, நம் மீனவர் பிரச்னை, வரும் தமிழக தேர்தலை கலக்கப்போகும் இப்போதைய தலைபோகும் ப்ரச்னை எல்லாம் இதுதான் என்று நினைக்கிறேன்), அவர்களை தாய்தமிழகத்திற்க்கு மறுகுடியேற்றம் செய்வதுதான். தமிழர்களே அங்கே வாழ முடியவில்லையா?? இங்கே எங்களுடன் தமிழகம் வந்துவிடுங்கள்.. அவர்களுக்கு ஓட்டுரிமை பெற்றுத்தந்து இங்குள்ள சக தமிழனுக்கு என்ன என்ன உரிமைகள் உண்டோ அதை அத்தனையும் பெற்றுத்தர தமிழர்கள் போராடவேண்டும்.. இதுவே அவர்களுக்கு நிரந்தர தீர்வாக இருக்கமுடியும்.

எப்படி இருந்தாலும் தமிழர்கள் பிற நாடுகளுக்கு பிழைக்க சென்றவர்கள் தான் என்பதை முதலில் நினைவில் கொள்ளவேண்டும்.. பிழைக்கமுடியவில்லையா, திரும்பி வந்து விடுங்கள் தாய்நாட்டுக்கு. ஏன் அடம் பிடிச்ச கழுதையாய் அங்கிருந்து செத்து மடிகிறீர்கள்?? நம் தமிழினம் நம் தமிழர்களுக்கு இந்த உரிமையை பெற்றுக்கொடுக்க போராடினால் நான் மகிழ்ச்சியடைவேன். நம்மைப்போல் அவர்களுக்கும் வாக்குரிமை, முக்கியமாக நீ இலங்கை தமிழன், நீ மலேசிய தமிழன் என்று பாகுபாடு பார்க்காமல் அவர்களுக்கு இந்த உரிமையை வழங்க, அவர்களுக்காக போராட எத்தனை தமிழ்நாட்டு தமிழர்கள் ரெடி இப்போது?? எனக்கு பரிபூர்ண சம்மதம். உங்களுக்கு, உங்கள் நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள்.

ஆனால் இதில் முக்கியமானது, இதற்க்கு பெரும்பாலான இலங்கை/மலேஷிய தமிழர்கள் ஒத்துக்கொள்ளமாட்டார்கள், அவர்களைப் பொருத்தவரை அவர்கள் நாடு இலங்கை அல்லது மலேஷியா?? சாதாரண கிரிக்கெட்டை எடுத்துக்கொள்ளுங்கள், இந்தியாவும் இலங்கையும் ஆடுகிறது, ஒரு இலங்கை தமிழன் யாருக்கு சப்போர்ட் பண்ணுவான் என்று நினைக்கிறீர்கள்?? கண்ணால் இதற்க்கு முன் இதை நேரில் பார்த்தவர்கள் நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள். அவர்களுக்கு அவர்கள் நாடு தான் பெரிது. இதை நான் குறை சொல்லவில்லை.. அவரவர்க்கு அவரவர் நாடு பெரிது.

சமீபத்திய பிரச்னைகளில் கூட, இலங்கை தமிழர்கள், அங்கிருந்து தவித்தபோது, மனிதாபிமானம் கொண்டு நாம் உதவிட நினைத்தது சரிதான், ஆனால் இதை நம்மவர்கள் அரசியலாக்கி அவரவர் அவரவர் வசதிக்கு வைத்துக்கொண்டிருக்கிறார்கள். என்றோ எதையோ சொன்னவர்கள் நேற்று மாற்றிச்சொன்னார்கள், நேற்று அப்படி சொன்னவர்கள் நாளை யார் ஆளுங்கட்சி, யார் எதிர்கட்சி என்பது பொருத்து மாறிக்கொண்டிருப்பார்கள், நாமும் அதனுடன் தலையாட்டிக்கொண்டிருப்போம், அது தான் நடந்து வருகிறது.

அதனால் ஏன் தமிழ்நாட்டு தமிழர்களே, நீங்கள் ஏன் தவிக்கிறீர்கள்? மனிதாபிமானம், எனக்கும் இருக்கிறது, அதனால் தான், தமிழர்களே வாருங்கள் என சொல்லவேண்டும் என்கிறேன். இன்று அகதிகளாய் வந்து நம் மண்ணில் கஷ்டப்படும் சகோதரர்களுக்காக எத்தனை பேர் நம் நாட்டில் போராடியிருக்கிறார்கள்? அவர்கள் படும் கஷ்டங்கள் எல்லாம் எத்தனையோ சினிமா எடுத்து நம் தமிழ் மக்கள் காசு சம்பாதித்துவிட்டார்கள் என்பேன் என்னைக்கேட்டால்??

மக்களே சிந்தியுங்கள், மாக்களாக இருக்காதீர்கள் என்று இன்னொரு பெரியாராகும் நினைப்பல்ல
எனக்கு.. காலத்திற்க்கு தகுந்தபடி நாம் மாறிக்கொள்ளவேண்டும் என்பதுதான் என் நிலை..

இது குறித்து நான் இலங்கை தமிழர்கள், இலங்கை தமிழ் முஸ்லீம்கள், கொழும்பு தமிழர்கள்(??) என்று பலரிடம் பேசியதுண்டு. எனக்கு தெரிந்து நல்ல தமிழ்பெயர் கொண்ட ஒரு கொழும்பு தமிழர் தன்னை தமிழர் என்றே கூறிக்கொள்ளமாட்டார், ஏன் என்று நானும் கேட்டிருக்கிறேன், அதற்க்கு அவர் அம்மா ஒரு மலையாளியாம், அவருடே நாடு கேரளமாம். எப்படி கதை??

இவர்கள் நாம் சென்று அழைத்தாலும் வரப்போவதில்லை.. வரநினைப்பவர்கள் எல்லாம் ஒருவேளை அங்கிருக்கும் ஏழைத்தமிழர்கள் தான், அவர்களும் முழுமனதுடன் வருவார்களா என்பது இன்றும் கேள்விக்குறி தான், ஏனென்றால் நாடு அமைதியாகி விட்டால் கஷ்ட்டமோ, நஷ்ட்டமோ.. அவர்கள் அங்கு வாழ்வதையே விரும்புவதாகக்தான் நான் பேசியவரை எனக்கு தோன்றுகிறது.

இலங்கை அமைதியாகிவிட்டால் அங்கு பணப்புழக்கம் அதிகரித்துவிடும். அதை இன்னொரு சிங்கப்பூர் அளவுக்கு கொண்டு செல்லமுடியும் (அங்கு ஒரு நல்ல அரசியல்வாதி வந்தால்) என்ற நிலையில் தமிழர்கள் வரமாட்டார்கள் என்பது இன்னொரு நிலை.. சொல்லப்போனால் இலங்கையை இந்த கதிக்கு ஆக்கியதே நம் அரசியல் வாதிகள் தான். இலங்கை முன்னேறக்கூடாது என்பதற்க்காக.

அது சின்ன நாடு, ஏற்றுமதி, இறக்குமதி என்று ஆரம்பித்துவிட்டால் இந்தியாவில்/குறிப்பாய் தமிழகத்தில் நம் சிறுவியாபாரிகள் முதல்கொண்டு பல குறு நிறுவனங்கள் வரை போட்டுத்தாக்கி விடும் வல்லமை அவர்களுக்கு இருந்தது(ஏர்செல் மற்றும் ஸ்டெர்லிங்/சிவா கம்ப்யூட்ர்ஸ் தொடங்கியது யாருன்னு உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்), இப்போதும் உள்ளது. ஒரு காலத்தில் இலங்கையிலிருந்து துணிகள் மற்றும் பிற எலக்ட்ராணிக் சாதனங்கள் என்று எத்தனையோ இந்தியாவிற்க்கு வந்து இங்கு விற்க்கப்பட்டது இன்னும் என் நினைவில் உள்ளது. அங்கிருந்து இங்கு கொண்டு வந்து வியாபாரம் செய்தவர்களையும் எனக்குத் தெரியும்.

கொழும்பு கோடீசுவரர்கள் அமைதிக்காக அமைதியாக காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இப்ப புரிகிறதா நம்ம பயபுள்ளைகள் எதற்க்கு இலங்கையை போட்டுத்தாக்கினார்கள் என்பது??

அனேகமாய் பொறாமைப்பட்டே இலங்கையில் அமைதியைக்காக்கிறேன் பேர்வழி என்று இந்தியா ஓரளவுக்கு உதவுவது போன்ற தோற்றத்தில் செய்த உதவிகளே இன்றைய இலங்கை நிலைக்கு காரணம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. மனிதர்களே திருந்துங்கள், மனதை திருத்துங்கள் என்று சொல்லமுயன்றுள்ளேன். நன்றி.

அன்புடன், வசந்தா நடேசன்.

1 comment:

  1. இந்த வழில நெறயபேறு பாக்க மறுக்கராங்களோ தெரியல சகோ..........உண்மை நிலை தெரியாம என்ன சொல்றதுன்னு தெரியல!

    ReplyDelete