Monday, February 14, 2011

பீர் கடை

முஸ்கி:- இது என் நண்பனால் எழுதப்பட்டது, பையன் ப்ளாக் எழுத நல்ல ஆர்வமாக இருக்கிறான், எல்லாம் நம்ம கடைய பாத்துதான். ஆனால் பிள்ளையார் சுழிபோட நேரம் கூடிவரவில்லை இன்னும். அவசர வேலைகள் காரணமாக, நான் இன்று பிஸி என்றதும் அவனே மெனக்கெட்டு எழுதி இதை நீ எழுதியதாக போடு என்று இப்போதுதான் வேறு தலைப்புடன் ஈமெயில் வந்தது.. (நன்பேண்டா..) கொஞ்சம் திருத்தங்களுடன் அப்படியே கீழே..

நாங்கள் அனைவரும் கல்லூரியை முடித்து பின்னர் / /course ஐ நான் முடித்திருந்த நேரம். துடிப்புள்ள நான்கு இளைஞர்களாகிய நாங்கள் சொந்தமாக தொழில் செய்யலாம் என்று முடிவு எடுத்தோம். எராளமான சிகரட்டுகளை துவம்சம் செய்த பிறகு ஒரு directorial board முடிவு செய்யப்பட்டது. அதன் படி முதல் board of director's மீட்டிங் ஒரு சுப யோக ஞாயிற்று கிழமையில் கன்னியாகுமரி கடற்கரையில் கூட்டுவது என்றும் மேலும் அந்த மீட்டிங்கில் நம் கம்பனியின் பெயரும் mode of operation உம் முடிவு செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

ஒரு தொழில் நிறுவனம் என்றால் அதற்கு முதலீடு தேவை அல்லவா. அதனால் ஒவ்வருவரும் ருபாய் 100 முதலீடு செய்வது என்று / / படித்த மூத்த அறிவாளியான என்னால் முடிவு எடுக்க பட்டது. (நம்மள பத்தி சொல்லதுல பயபுள்ளைக்கு சந்தோசத்த பாருங்களேன்!) அந்த ஞாயிற்று கிழமையும் வந்தது. நாங்கள் பஸ்சில் ஏறி டிக்கெட் எடுக்கும் பொழுதே ஒருவன் சொன்னான் "பஸ் டிக்கெட் கூட நாமல்லாம் போர்டு மெம்பரானதால கம்பெனி கணக்கு தான், அதனால் நீ நம் முதலீட்டில் இருந்தே செலவு செய்" என்று. அங்கு தான் ஆரம்பித்தது சனி.

பஸ் நிறுத்தத்தை அடுத்தது தான் நம்ம ரெகுலர் பீர் கடை, வாரா வாரம் தவறாமல் ஆஜர் போடும் இடம். நம்மலாம் கடைக்கு ரெகுலர் customer வேறு. பஸ்ஸில் இருந்து இறங்கிய உடன் ஒரு கிராதகன் சொன்னான் நம்ம போர்டு மீடிங்க பீர் சாப்பிட்டுட்டே ஆரம்பிக்கலாமே என்று. பொதுவாக இந்த மாதிரி நலல ஐடியா ஒருவன் சொன்னால் அதை மறுக்கும் கெட்ட பழக்கம் எங்க நட்பு வட்டாரத்தில் என்றுமே இருந்தது இல்லை. எனெவே ஓசியிலே conference ரூம் கிடைத்தது என்ற சந்தோஷத்தில் நேராக நம்ம கடைக்கு சென்று நம்ம போர்டு மீட்டிங் ஆரம்பம் ஆனது.

பஸ்சுக்கே கம்பெனி கணக்கு என்று சொன்ன நம்ம கிராதகர்கள் பீருக்கு தனியா காசு கொடுககவா போறாங்க, அப்படி இப்படி போர்டு மீடிங்கில் இருந்த எல்லா agenda points discuss பண்ணி முடித்து நம்ம ரெகுலர் பாட்டி கடைக்கு போய் வடையும் டீயும் தின்று நாகர்கோயில் பஸ் ஏறும் பொது கம்பெனி கணக்கில் பாக்கி இருந்தது 50 ருபாய் என்று நினைவு. அந்த பணத்தில் ஒரு பொது visiting கார்டும் லெட்டர் padum எங்களால் அடிக்க முடிந்தது. (நல்ல வேளை நம்ம பய புள்ளைக ஒரு பீரோடு நிருத்திக்கிட்டானுங்க). அப்படி ஆரம்பிச்சது தானுங்கோ M.S.Pharma Chem (மூணு பேரோட பெயர் M ல அரம்பிக்குமுங்கோ ஒருத்தர் மட்டும் S ங்கோ).

ஒரு வாரத்திலேயே அந்த கம்பெனி போர்டுல இருந்து மூணு பேர் விலகுனதும், அந்த லெட்டர் பேட வைச்சு நம்ம நண்பர் ஒருவர் பெருங்காய கம்பெனி ஆரம்பிச்சு, மாட்டு மருந்து டீலர் ஷிப் எடுத்து அப்புறம் சாக்லேட் டீலர் எடுத்து ஓஹோன்னு வியாபாரம் பண்ணினார் என்பது வேறு கதை.

நாங்கள் இப்பொழுதும் ஒன்றாக சேரும் பொழுது கன்னியாகுமரி செல்கிறோம் (ஆனால் ஒவ்வருவரும் இப்போது ஒவ்வொரு ஊரில், நாட்டில் இருக்கிறோம்), பாட்டிக்கு இப்பொழுதும் எங்களை நினைவு இருக்கிறது. அதே கவனிப்புடன் சூடாக வடை தருகிறார்.

பஸ்ஸில் சென்ற நாங்கள் இப்போதெல்லாம் காரில் செல்கிறோம். வெகு சமீபத்தில் பீர்கடைக்குப்பதில் ஹோட்டல் தமிழ்நாடு பார் கடைக்கு போனோம், Gold Flake Cigarette இப்பொழுது ரோத்மன்ஸ் ஆகவும் Benson & Hedges அகவும் மாறி உள்ளது. ஆனால் அந்த குதூகலம் இல்லை... கவலையே இல்லாத அந்த வாழ்கை இல்லை...

இதுவெல்லாம் போக சென்ற ஒரு மணி நேரத்தில் வீட்டில் இருந்து போன் வருகிறது (நான்கு பயல்களும் சேர்ந்து ஒரு இடத்திற்கு போனால் என்ன செய்வார்களோ என்ற பயம் தான் காரணம்). பழைய பீர் கடை இப்பொழுது அங்கு இருக்கிறதா என்று தெரிய வில்லை. அடுத்தமுறை அதை ஆராய்ந்து கண்டிப்பாய் சொல்கிறேன். மனைவியை விட்டு (இவனுகளோட போக விட்டால்?) நம் மக்களுடன் தனியே செல்லும்போது.

பய ரசனையாய்தான் எழுதியிருக்கான், நான் ரசித்தேன்.. நீங்கள்??

அன்புடன், வசந்தா நடேசன்.

2 comments:

  1. ம்ம்ம் ரசித்தேன்... சீக்கிரம் வரச் சொல்லுங்க... பதிவுலகம் அவருக்காக காத்துக்கொண்டு இருக்கிறது...

    ReplyDelete
  2. ஹோட்டல் தமிழ்நாடு பார் கடைக்கு போனோம்,

    //

    மறக்க முடியாத இடம்.. கூட்டம் கூட்டமாய் ஆயிரக்கனக்கில காலேஜ் பீஸ் தொலைத்த இடம்..

    ReplyDelete